Feeds:
Posts
Comments

Archive for the ‘இந்து மதம்’ Category

சர்வ சமயப் பேரவையில்

சர்வ சமயப் பேரவையில்:

சுவாமிஜி பாஸ்டனிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்னர் சர்வ சமயப் பேரவை குழுத்தலைவரின் முகவரியுடன் இருந்த அறிமுக கடிதத்தைத் தொலைத்துவிட்டார். சுவாமிஜிக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். எனவே சிகாகோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டி ஒன்றில் படுத்து உறங்கிவிட்டார். அடுத்த நாள் காலை இந்திய நாட்டின் சன்னியாசிகளைப் போல் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தார். அவரை மக்கள் எகத்தாளமாக நடத்தினர். மேலை நாடுகளில் பிச்சை எடுப்பது குற்றம் எனக் கூறினார்கள். என்ன செய்வது என்றறியாமல் இறைவன் விட்ட வழி என ஒரு தெரு ஒரத்தில் அமர்ந்து விட்டார். இறைவன் அருளால் எதாவது நடக்கும் என எண்ணி அதுவரைக் காத்திருப்பதாக முடிவு செய்தார். அப்பொழுது எதிர் வீட்டின் கதவு திறக்கப்பட்ட்து. ஒரு பெண்மனி வெளியே வந்தாள். அவள் சுவாமிஜியை நோக்கி “ஐயா, தாங்கள் சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்களா? என வினாவினாள். மிஸஸ். ஜார்ஜ் ஹேல் என்ற அந்தப் பெண்மணியின் உதவியுடன் சர்வ சமயப் பேரவையில் கலந்துக் கொள்ள சுவாமிஜிக்கு வாய்ப்புக் கிடைத்தது.

1233560_590718274319052_45925771_n

சர்வ சமயப் பேரவை— செப்டம்பர் 1893:

1893ம் வருடம், செப்டம்பர் 11ம் நாள் திங்கள் கிழமை சர்வ சமயப் பேரவைக் கூடியது. அந்தக் குழுத்தலைவர் சுவாமிஜியைப் பேச பலமுறை அழைத்தார். ஆனால் சுவாமிஜி அங்கு கூடியிருந்த 7000 பேர்களைப் பார்த்தும் சிறிது அச்சமடைந்து பேச எழவில்லை. மதிய வேளையில் “அமெரிக்க சகோதரி சகோதரர்களே” எனக் கூறி தன் உரையைத் துவங்கினார். அவர் அன்போடு அழைத்ததும் இடி இடிப்பது போல் பார்வையாளர்களிடமிருந்து 2 நிமிடம் கைதட்டல் தொடர்ந்தது. சுவாமிஜி தன் காவி உடையில் 7000 பேர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் கம்பீரமாக மேடைமேல் நின்றிருந்தார். அரங்கத்தில் அமைதி எற்பட்டதும் தன் உரையைத் தொடர்ந்தார். இந்த பேரவையில் இந்து மதத்தர்மத்தின்படி அனைத்து மதங்களும் உண்மையே, அனைத்து மதங்களையும் நாம் எற்றுக் கொள்ள வேண்டும் என்று முழுங்கினார். சுவாமிஜின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்தவையாக இருந்தது. இறைவனின் வார்த்தைகளாக வெளி வந்தது. இதுவே அனைத்துப் பார்வையாளர்களின் இதயத்தைத் தொட்டது.

Read Full Post »

வர்ணம்

ர்மம்தான் நான்கு வர்ண அமைப்புகளாக பிரித்து ஒழுங்குமுறைப்படுத்தப் பட்டுள்ளது. எல்லோரும்தான் ஆன்ம சிந்தனையில் ஈடுபடுகிறார்கள். ஆனால்,ஒரு சிலரே, உள்மூச்சு, வெளிமூச்சு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுகிறார்கள். மற்றவர்களோ, ஆரம்ப நிலையில் இரண்டு மணி நேரம் உட்கார்ந்தால் கூட பத்து நிமிடம் கூட அவர்களால் தாங்கள் நினைத்தபடி, மனதை ஒருமுகப்படுத்த முடிவதில்லை. அத்தகைய குறைந்த அளவு சாதனை அறிவுடைய சாதகர் சூத்திர சாதனைப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தன்னுடைய சுபாவத்தில் இருந்து தோன்றிய கர்மத்திறனுக்கு ஏற்ப, சேவை புரிவதில் இருந்தே தன்னுடைய கர்மத்தைத் தொடங்க வேண்டும். படிப்படியாக வைசியர், சத்திரியர், மற்றும் பிராம்மணப் பிரிவுகளில் அடையப்படுகின்ற உயர் கர்மத் திறன் அவருடைய சுபாவத்தில் பெருகிக் கொண்டே செல்லும். அவர் தனது பாதையில் உயர்ந்து கொண்டே செல்வார். மிகவும் உயர்வானது என்று கருதப்படுகின்ற பிராம்மண சாதனைப் பிரிவும்கூட தன்னில் குறைவுடையதுதான். ஏனெனில், இந்த நிலையிலும் கூட அந்த பிரம்மம் என்னவோ இன்னும் அடையப்படாத நிலையில் தனித்தே இருக்கிறது. பிரம்மத்தில் நுழைவு பெற்றுவிட்டால், அந்த பிராம்மணப் பிரிவு என்பதும் கூட இல்லாமல் போய்விடுகிறது.

“வர்ணம்” என்றால் “தோற்றம்” என்று பொருள். இந்த உடல் உங்களுடைய உணமையான தோற்றம் அல்ல. உங்களுடைய அக எண்ணவோட்டம் எதுவோ, அதுவே உங்களுடைய உண்மையான தோற்றம் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: “அர்ஜுனா! மனிதன் நம்பிக்கைமயமானவன். எனவேதான் அவனுக்கு எதிலாவது நம்பிக்கை அவசியம் இருக்கவே செய்கிறது. அவனுடைய நம்பிக்கை எவ்விதமோ, அவ்விதமே அவனும் இருக்கிறான். எண்ணம் எவ்வாறோ, அவ்வாறே மனிதன்”.

Varnam

வர்ணம் என்பது கர்மத்திறனை மதிப்பிடுகின்ற அக அளவியல் குறீயிடு ஆகும். ஆனால், மக்கள் அனைவரும் இந்த நிச்சியக்கப்பட்டுள்ள கர்மத்தை விட்டுவிட்டு, வெளியில் உள்ள சமுதாயத்தில் பிறப்பை அடிப்படையாக கொண்டு, சாதிகளை உருவாகிக் கொண்டு, அவற்றையே ‘வர்ண அமைப்பு’ அல்லது ‘சாதி அமைப்பு’ என்று ஏற்றுக் கொள்வதுடன் நிற்காமல் அவற்றிற்கான சட்டதிட்டங்கள். ஒழுங்குமுறைகள் என்று எதை எல்லாமோ உண்டாக்கிக் கொண்டுள்ளனர். அவை அனைத்தும் வெறும் சமுதாய அமைப்புகளே தவிர, வேறொன்றுமில்லை. அவர்கள் கர்மத்தின் உள்ளது உள்ளபடியான யதார்த்த உருவத்தைத் தங்கள் இஷ்டப்படியெல்லாம் வளைத்தும் முறுக்கியும் மாற்றி மாற்றி அமைத்தும் கொள்கின்றனர். அதன்மூலம், அவர்களுக்குக் கிடைக்கின்ற போலித்தனமான சமுதாய மரியாதை மற்றும் சலுகைகளுக்கு எந்தத் தடங்கலும் ஏற்படாமல் தற்காத்து கொள்கின்றனர். காலப்போக்கில் வர்ணத்தை நிச்சியம் செய்வது பிறப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அமைந்துவிட்டது. ஆனால், உண்மையில் அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. ஸ்ரீ கிருஷ்ணர், “நான்கு வர்ணங்களையும் நானே உருவாக்கினேன்” என்கிறார். அப்படியென்றால் இந்த பாரத தேசத்திற்கு வெளியில் படைப்பு என்ற பெயரில் ஒன்றுமே இல்லையா என்ன? ஆனால் அங்கெல்லாம் இந்த தேசத்தில் காணபடுவதைப் போன்று, “சாதிகள்” என்ற பெயரில் எந்த அமைப்புமுறையும் இல்லையே ஏன்? இந்த பாரத தேசத்தில் மட்டும் லட்சக்கணக்கான சாதிகள் மற்றும் அதற்குள் அடங்கிய கிளை சாதிகள் என்றொரு நிலை இருக்கிறதே! ஸ்ரீ கிருஷ்ணர் சாதியின் பெயரால் மனிதர்களை எல்லாம் பிரித்தாளும் வேளையில் ஈடுபட்டிருந்தாரா? இல்லை இல்லவே இல்லை. “குணகர்ம விபாகச”:– குணத்தை அடிப்படையாக கொண்டு, இந்த நிச்சியக்கப்பட்டுள்ள கர்மத்தையே நான்கு சாதனை பிரிவுகளில் ஒழுங்குமுறைப்படுத்தியுள்ளேன்” என்கிறார் அவர்.

“கர்மாணி ப்ரவி பக்தானி”:- “கர்மமே பிரிக்கப்பட்டு உள்ளது.” கர்மம் என்றால் என்ன? என்பது புரிந்துவிட்டால், “வர்ணம் என்றால் என்ன?” என்பது புரிந்துவிடும். “வர்ணம் புரிந்துவிட்டால், வர்ணக் கலப்பு எனபதையும் உள்ளது உள்ளவாரே புரிந்து கொண்டு விடுவீர்கள்.

வர்ணக் கலப்பு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம் …….

Read Full Post »

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்

ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணரைக் காண நரேன் தட்சனேசுவரம் சென்றான். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு அவனைக் கண்டதில் கொள்ளை மகிழ்ச்சி. உடனேயே உள்ளே சென்று இனிப்புகளைக் கொண்டு வந்து, அவனை ஒரு சிறு குழந்தையாகக் கருதி அவனுக்கு ஊட்ட ஆரம்பித்துவிட்டார். அவன்மீது பேரன்பு கொண்ட அன்னையானார் அவர்.

பிறகு நரேன் தான் இதுவரைப் பல குருமார்களிடம் கேட்ட அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டான்:

‘ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’

‘ஆம், உண்மையில் தரிசித்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் ஸ்ரீ ராமகிருஷனர். ‘உன்னைப் பார்பதைப் போலவே, அவரையும் தெளிவாகப் பார்க்கிறேன். உன்னைக் கண்டு பேசுவது போலவே, ஒருவரால் கடவுளைக் காணவும் பேசவும் முடியும்’ என்றும் கூறினார்.

Ramakrishnarin Pathil

இந்த பதிலைக் கேட்டு நரேன் ஆச்சரியமடைந்தான். அவன் உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய அனைத்தையும் அவன் கவனமாகக் கேட்டான்.

‘நான் தேடிக் கொண்டிருந்த குரு இவரே!’ என்று நரேனின் மனம் கூறியது. நரேன் அவருடைய சீடன் ஆனான்.

ஸ்ரீ ராமகிருஷனர் கடவுளைக் கண்டவர் என்று நரேன் அறிந்திருந்தான். இருப்பினும், கேள்விகள் கேட்காமல் எதையும் அவன் ஒப்புக் கொள்வதில்லை. இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் விரும்பினார். தன்னிடம் வந்த இளைஜர்கள் சுயமாக சிந்திப்பதையும், கேள்விகள் கேட்பதையும் அவர் வரவேற்றார்.

தொடரும் …….

Read Full Post »

கடவுள் நமக்குத் தேவையா?

 

Kadavul part 5

பாகம் 4:

பாகம் 4 இன் தொடர்ச்சி:

அன்பு, அன்பையே பிரதியாகத் தருகிறது. நீங்கள என்னை வெறுக்கீரிகள், நான் உங்களை நேசிக்கத் தொடங்கினாலும் நீங்கள் என்னை வெறுக்கலாம். ஆனால் நான் தொடர்ந்து அன்பு செலுத்தினால், ஒரு மாதத்திலோ ஓராண்டிலோ கண்டிப்பாக நீங்கள் என்னிடம் அன்பு காட்டவே செய்வீர்கள். இது மனஇயல் கண்ட உண்மை. மறைந்த கணவனை அன்புமிக்க மனைவி நேசிப்பதுபோல், நாம் இறைவனை நேசிக்க வேண்டும். அப்போது நாம் அவனைக் காண்போம். நூல்களும் சரி, விஞ்ஞானங்களும் சரி நமக்கு எதையும் கற்பிக்காது. நூல்களைப் படித்தால் கிளிப்பிள்ளைகள் ஆவோம்; நூல்களைப் படித்தால் யாரும் அறிஞராவதில்லை.அன்பைப் பற்றிய ஒரு வார்த்தையின் பொருளை ஒருவன் அறிந்தால் போதும், அவன் அறிஞானாகிறான். எனவே அன்பைப் பெரும் ஆசையை முதலில் வளர்க்க வேண்டும்.

‘கடவுள் நமக்கு தேவையா?’ இதனை நாள்தோறும் நம்மை நாம் கேட்டுக்கொள்வோம். மதத்தைப்பற்றிப் பேசும்போது, குறிப்பாக உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களுக்கு கற்பிக்கும்போது, இந்தக் கேள்வியைக் கேட்போம். பல நேரங்களில் நமக்கு நாமே, ‘கடவுள் எனக்குத் தேவை இல்லை, உணவுதான் தேவை’ என்றுதான் உணர்கிறோம். சிறிது உணவு கிடைக்காவிட்டால் நான் பைத்தியமாகிவிடுவேன். ஒரு வைரமாலை கிடைக்கவில்லை என்றால் பெண்களுள் பலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும். ஆனால் அதே ஆசையை, கடவுளை அடைவதற்கு அவர்கள் கொள்வதில்லை; உலகில் உள்ளதான ஒரே உண்மையை அவர்கள் உணர்வதில்லை. எங்கள் நாட்டில் ஒரு பழமொழி உண்டு—– ‘நான் வேடனாக இருந்தால், காண்டாமிருகத்தை வேட்டையாடுவேன். கொள்ளைக்கரானாக இருந்தால் அரசனின் பொக்கிஷத்தை கொள்ளையடிப்பேன். பிச்சைக்காரர்களிடம் களவாடுவதாலும், எறும்புகளை வேட்டையாடுவதாலும் என்ன பயன்?’ எனவே அன்பு செலுத்த விரும்பினால் இறைவனிடம் அன்பு செலுத்துங்கள். இந்த உலகைப் பற்றி நமக்கென்ன கவலை?

நான் ஒளிவுமறைவின்றிப் பேசுவேன், ஆனால் எல்லோருக்கும் நன்மையை விரும்புபவன். உங்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். நான் உங்களைப் புகழ்ந்து பேச விரும்பவில்லை. அது என் வேலையும் அல்ல. நீங்கள் என் குழந்தைகள்  போன்றவர்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகமே முழுப்பொய். உலகின் ஆச்சாரியர்கள் அனைவரும் இதை உணர்ந்துள்ளனர். கடவுளின் வழியாக அல்லாமல் இந்தப் பொய்யான உலகத்திலிருந்து தப்ப வேறு வழி இல்லை. அவரே நமது வாழ்க்கை லட்சியம். மாறாக இந்த உலகத்தை நமது லட்சியமாகக் காட்டுகின்ற கருத்துகள் அழிவையே தருபவை. இந்த உலகத்திற்கும், இந்த உடலுக்கும் உரிய பயனுண்டு; அதாவது இறைவனை அடைய ஒரு  சாதனம் என்கிற இரண்டாம் பட்சச் சிறப்பு உண்டு. ஆனால் உலகமே லட்சியமாகிவிடக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக, அடிக்கடி நாம் உலகை லட்சியமாகக் கொண்டு , கடவுளைச் சாதனமாக கொள்கிறோம். மக்கள் கோயிலுக்கு சென்று ‘இறைவா! எனக்கு இவற்றையெல்லாம் தருவாய்! எம்பெருமானே, என் நோயைத் தீர்ப்பாய்!’ என்றெல்லாம் முறையிடுவதைக் காண்கிறோம். அவர்கள் ஆரோக்கியமான நல்ல உடலை விரும்புகின்றனர். அதைக் கொடுப்பதற்காக யாரோ ஒருவர் எங்கோ உட்கார்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவரிடம் சென்று பிரார்த்திக்கின்றனர். மதம் என்பதைபற்றி இத்தகைய கருத்தைக் கொண்டிருப்பதைவிட நாத்திகனாக இருப்பதே சிறந்தது.

நான் கூறியதுபோல் இந்த பக்திதான் மிக உயர்ந்த லட்சியம். பலகோடி ஆண்டுகளுக்குப் பிறகாவது நாம் இதை அடைவோமா, மாட்டோமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நமது மிக உயர்ந்த லட்சியமாக அதையே கொள்ள வேண்டும்; நமது புலன்களும் அந்த மிக உயர்ந்ததையே நாடும்படிச் செய்ய வேண்டும். அந்த அறுதி நிலையை அடைய முடியவில்லை என்றாலும் அதன் அருகிலாவது செல்ல வேண்டும். உலகின் வாயிலாகவும், புலன்கள் மூலமாகவும் படிப்படியாக நாம் இறைவனை அடையப் பாடுபட வேண்டும்.

 -சுவாமி விவேகானந்தர்……..

 

~~கடவுள் நமக்கு தேவையா?  என்ற தலைப்பு  முற்றிலும் முடிந்தது .~~

Read Full Post »

கடவுள் நமக்குத் தேவையா?

 

Kadavul part 4

 

பாகம் 3:

பாகம் 3 இன் தொடர்ச்சி:

கடவுள் உண்டு என்றோ இல்லை என்றோ நூல்களை எழுதுவதால் என்ன பயன்? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி பெரும்பாலோர் கவலைப் படுவதே இல்லையே.

இங்குள்ள மக்களுள் பெரும்பாலோர் காலையில் எழுந்ததும் சிற்றுண்டி அருந்தச் செல்கின்றனர். அதை உண்ணவோ, உடை அணிந்துகொள்ளவோ கடவுள் வந்து உதவி செய்வதில்லை. பின்னர் வேலைக்குச் சென்று நாள்முழுவதும் உழைத்துப் பணம் சம்பாதிக்கிறான். இரவில் சாப்பிடுகிறான். பிறகு உறங்கச் செல்கிறான். கடவுளைப் பற்றியே சிந்திக்காமல் ஒரு எந்திரம்போல் செயல்படுகிறான். அப்படி ஒருவர் தேவை என்றும் அவன் உணர்வதில்லை. பின்பு ஒரு நாள் மரணம், ‘வா’ என்று அழைக்கின்றது. அப்போது, ‘சிறிது காத்திரு. எனக்கு இன்னும் சிறிது காலம் தேவை; என் மகன் இன்னும் சற்று பெரியவனாகட்டும்’ என்கிறான். ஆனால் மரணமோ, ‘உடனே வா’ என்று கூவுகிறது. இப்படியே எல்லோம் போய்க் கொண்டிருகின்றன. பாவம், மனிதனும் இப்படியே வாழ்கிறான் அவனுக்கு நாம் என்ன சொல்ல முடியும்? இறைவனே அனைத்திலும் மிக மேலானவன் என்று அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை அவன் முற்பிறவியில் ஒரு பன்றியாக  இருந்து இப்போது சற்று உயர்ந்து மனிதனாகப் பிறந்திருக்ககூடும்.

ஆனால் இத்தகையோர் மட்டுமே உலகில் இருகிறார்கள என்றில்லை. சிறிது விழிப்புணர்வு பெற்ற சிலரும் இருக்கவே செய்கிறார்கள். துன்பம் வருகிறது, நாம் மிகவும் நேசிக்கின்ற ஒருவர் இறக்கிறார்; எதைப் பெறுவதற்காக நம் ஆற்றல் அனைத்தையும் செலவிட்டோமோ, எதற்காக உலகனைத்தையும் வஞ்சித்தோமோ உலகனைத்தையும் என்றல்ல, சொந்த சகோதரனைக்கூட வஞ்சிக்கத் துணிந்தோமோ, எத்தனையோ கொடிய இன்னல்களையும் அவருக்கு இழைக்கத் துணிந்தோமோ அது திடிரென்று மறைந்துவிடுகிறது; நம்மீது பேரிடிவிழந்தது போலாகிறது. அப்போது நம் இதய ஆழத்திலிருந்து ஒரு குரல் எழுகிறது; ‘இதற்கு பின் என்ன?’ என்று அது கேட்கிறது. எந்த மகனுக்காகத் தானும் பட்டினி கிடந்து, பிறரையும் ஏமாற்றி வந்தானோ, அந்த மகன் ஒருவேளை இறந்துவிடுகிறான். அந்தப் பேரிடியால் அவன் விழிப்புணர்வு பெறுகிறான். எந்த மனைவியை அடைய அவன் வெறிபிடித்த காளையைப் போல் எல்லோரிடமும் முட்டிமோதிப் போனானோ, யாருக்காகப் புது ஆடைகளும், நகைகளும் வாங்கப் பணம் சேர்த்து வைத்தானோ, அவள் ஒருநாள் திடிரென்று இறந்து போகிறாள். பிறகு என்ன? சில வேளைகளில் மரணம் வருகிறது. அது எவ்வித அதிர்ச்சியையும் தராமலே போகிறது. ஆனால் மிகவும் அரிதாகவே அவ்வாறு நிகழ்கிறது.

நம் பொருள் கைவிட்டு நழுவும்போது, நம்முள் பெரும்பாலோர், ‘இனி என்ன?’ என்று பதறி ஓலமிடுகிறோம். நாம் புலன்களை எப்படி பற்றிக்கொள்கிறோம்! இதனால்தான்  துன்பபடுகிறோம். ஆற்றில் முழ்கும் ஒருவன், பிடித்துக்கொள்ள வேறு ஒன்றும் கிடைக்காதபோது ஒரு துரும்பைப் பற்றிக்கொண்டு தன்னைக் காப்பற்றிக் கொள்ள முயல்கிறான். சாதாரணமாக மனிதனும் இவ்வாறே தனுக்கு எதிரில் முதலில் எது கிடைக்கிறதோ அதைப் பற்றிக்கொள்கிறான். அது காப்பற்றாதபோது யாரவது தனக்கு உதவி புரிய வேண்டுமென கெஞ்சுகிறான். எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான் உயர் விஷயங்களைப்பற்றி நினைக்கிறான். இந்த பக்திதான் ஆன்மிகம்.

ஆனால் இது பெரும்பான்மையோருக்கு உரியது அல்ல. அது முடியாத காரியம். முழுங்காலிடுவதும் எழுவதும் அமர்வதும் பெரும்பாலோருக்கு தக்கனவாக இருக்கலாம். ஆனால் ஆன்மிகம் என்பது ஒரு சிலருக்கே. ஒவ்வொரு நாட்டிலும் எதோ ஒருசிலரே ஆன்மிகவாதிகளாக இருக்க முடியும். பிறரால் முடியாது. அவர்கள விழிப்புணர்வு பெறாதவர்களாக இருப்பது தான் அதற்கு காரணம். அதை அவர்கள் விரும்பவதும் இல்லை. முதலில் தேவையானது இறைநாட்டம். ஆனால் பொதுவாக நாம் கடவுளை தவிர மற்ற எல்லாவற்றையும் நாடுகிறோம். ஏனெனில் நமது சாதாரண தேவைகளைப் புற உலகம்தான் நமக்குத் தந்துகொண்டிருகிறது. நமது தேவைகள் புற உலகைத் தாண்டி செல்லும்போது தான் உள்ளேயிருந்து, அதாவது இறைவனிடமிருந்து நாம் உதவியை எதிர்ப்பார்க்கிறோம். நமது தேவைகள் இந்த பிரபஞ்சத்தின் குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்வரையில் கடவுளின் தேவை நமக்கு இருப்பதில்லை. இந்த உலகில் உள்ளவற்றை அனுபவித்து சலிப்படைந்த பிறகுதான், இதனை கடந்த ஒன்றின் உதவியை எதிர்பார்க்கிறோம். தேவை இருந்தால்தான் உதவி கிடைக்கும். இந்த உலகமாகிய குழந்தை-விளையாட்டை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்துவிடு. அதன் பிறகுதான் இதற்கு அப்பால் இருக்கின்ற ஒன்றின் தேவை உனக்கு ஏற்படும்.அதுதான் ஆன்மிகத்தின் முதற்படி.

வெறும் நாகரிகமான ஒருவகை மதம் தோன்றியுள்ளது. என் நண்பரின் விருந்தினர் அறையில் மற்ற பொருட்களுடன் ஜப்பானிய ஜாடி ஒன்றும் உள்ளது. அது நாகரிகமாக இருப்பதால் பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ளதாக இருந்தாலும், நானும் அதுபோல் ஒன்று வாங்கியாக வேண்டும். அவ்வாறே நாகரிகத்திற்காக மதத்தைப் பின்பற்றிக் கோவிலுக்கு செல்கிறேன். பக்தி இத்தகையோருக்கானது அல்ல. உண்மையான ‘தேவை’யிலிருந்துதான் பக்தி பிறக்கிறது. எது இல்லாமால் நாம் உயிர் வாழ முடியாதோ, அதுதான் ‘தேவை’. மூச்சு தேவை, உணவு தேவை, உடை தேவை. இவை இல்லாமல் உயிர்வாழ முடியாது. ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது கூட அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று சிலவேளைகளில் நினைக்கிறான்—அது தவறு. கணவன் இறந்துவிட்டால், அவனில்லாமல் தான் வாழ இயலாது என்று மனைவி கருதுகிறாள்; ஆனால் அவள் வாழ்வே செய்கிறாள். இதுதான் ‘தேவை’ என்பதன் ரகசியம்; அது இல்லாமல் நாம் வாழ முடியாது, அது நம்குக் கிடைக்க வேண்டும், அல்லது நாம் இறந்துவிடுவோம்.

உரிய கால வரும்போது கடவுளைப் பற்றியும் நாம் இப்படி நினைக்கிறோம். அதாவது இந்த உலகிற்கு அப்பாற்ப்பட்ட ஒன்றை, ஜட சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றின் தேவையை நாம் உணர்கிறோம். அப்போதுதான் நாம் பக்தர்கள் ஆகிறோம். ஒரு நொடிப் பொழுதாயினும் சரி, மேகங்கள் மறைந்து பரம்பொருளைப் பற்றிய காட்சி கிடைக்கும்போது, அற்ப இன்பங்களெல்லாம் கடலின் சிறு துளியாக தோன்றும்போது, ‘என்ன இந்த அற்ப வாழ்க்கை !’ என்ற எண்ணம் பிறக்கிறது. அப்போதுதான் ஆன்மா வளர்கிறது; கடவுளின் தேவையை உணர்கிறது; அவனை அடைந்தே தீர வேண்டும் என்று துடிக்கிறது.

எனவே ‘நமக்கு வேண்டியது என்ன? எனபதே முதற்படி. இறைவன் நமக்கு வேண்டுமா ?’ இந்தக் கேள்வியை தினமும் நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம். பிரபஞ்சத்திலுள்ள எல்லா நூல்களையும் நாம் படிக்கலாம். ஆனால் பேச்சுத் திறமையினலோ, மதி நுட்பத்தினலோ, பற்பல கலைகளைக் கற்பதலோ இந்த அன்பு மலர்வதில்லை. இறைவனின் தேவையை உணர்பவர்களுக்கே இந்த அன்பு கிடைக்கும். இறைவன் அவர்களுக்கே காட்சி அளிக்கிறான்.

—சுவாமி விவேகானந்தர்….

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும் …..

Read Full Post »

கடவுள் நமக்குத் தேவையா?

 

Kadavul part 3

பாகம் 2:

பாகம் 2 இன் தொடர்ச்சி:

நம்மை நேசிக்கும் ஒரே ஒருவரான ஆண்டவனிடம் நாம் வருகிறோம். அவனது அன்பு ஒருபோதும் மாறாதது. எப்போதும் நம்மை அரவணைக்கத் தயாராக இருப்பது.

நான் உங்களைத் துன்புறுத்தினால் எவ்வளவு காலம் என்னை  நீங்கள் பொறுத்துக் கொள்வீர்கள்? யாரிடம் கோபம், வெறுப்பு, பொறாமை எதுவும் இல்லையோ, யார் எப்போதும் சமநிலையில் இருப்பாரோ, யாருக்குப் பிறப்பு இறப்பு இல்லையோ அவரால் மட்டுமே அது முடியும். அப்படிப்பட்டவர் ஆண்டவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? ஆனால் இறைவனை அடையும் வழி மிக நீண்டது. மிகக் கடினமானது. ஏதோ ஒரு சிலரே அவனை அடைகிறார்கள்.

நாம் தட்டுத்தடுமாறும் வெறும் குழந்தைகள். இந்த அன்புநெறியை கோடிக்கணக்கானோர் வியாபாரச் சரக்காகக் கருதுகிறார்கள். எல்லோரும் இதைப்பற்றிப் பேசுகின்றனர், ஆனால் ஒருசிலரே அடைகின்றனர். ஒரு நூற்றாண்டில் ஏதோ ஒரு சிலரே அந்த இறையன்பை பெறுகின்றனர். அவர்கள் வாயிலாக நாடு முழுவதும் ஆசிபெற்றுப் புனிதம் அடைகிறது. எப்படிச் சூரியன் உதித்ததும் இருள் அகல்கிறதோ, அதுபோல் அவதார புருஷர் ஒருவர் தோன்றும்போது, நாடே பேறு பெற்றுப் புனிதம் அடைகிறது. உலகம் முழுவதிலும் ஒரு நூற்றாண்டில் ஏதோ ஒரு சிலரே இப்படிப் பிறக்கின்றனர். ஆனால் அந்த அன்பைப் பெற நாம் எல்லோரும் முயல்வோம். யார் கண்டார்கள்! ஒருவேளை இந்தப் பூரணமான அன்பை அடுத்தது பெறப்போவது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். எனவே நாம் முயல்வோம்.

மனைவி கணவனை நேசிக்கிறாள் என்று சொல்கிறோம். தன் உயிர் முழுவதுமே அவனிடம்தான் ஆழ்ந்து கிடக்கிறது என்று அவள் நினைக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கிறது. அவளது அன்பின் பாதியோ, அதிகமோ குழந்தையிடம் செல்கிறது. கணவனிடம் முன்பு இருந்தது போல் தனக்கு அன்பு இல்லாததை அவளே உணர்வாள். அதேபோல் தான் தந்தையும். முன்பைவிட ஆழ்ந்த அன்பைச் செலுத்த ஓரிடம் கிடைத்தால் பழைய அன்பு மெதுவாக மறையத் தொடங்குகிறது. நீங்கள சிறுவர்களாக இருந்தபோது தாய்தந்தையர் அல்லது பள்ளித் தோழர்கள் சிலரை இவர்கள தான் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமானவர்கள் என்று நினைத்தீர்கள். அதற்குப் பிறகு கணவனோ மனைவியோ ஆகும் நிலை வருகிறது.

உடனே பழைய உணர்ச்சிகள் பறக்கின்றன, புதிய அன்பு உணர்ச்சிகள் தீவிரம் அடைகின்றன. ஒரு வீண்மீன் தோன்றுகிறது, பிறகு இன்னும் பெரிய ஒன்று தோன்றுகிறது, அதன் பிறகு அதைவிடப் பெரியது தோன்றுகிறது. இறுதியில் சூரியன் தோன்றியதும் சிறு ஒளிகள் அனைத்தும் மறைகின்றன. அந்தச் சூரியனே கடவுள். விண்மீன்களே சிறிய அன்புகள் . அந்த இறையொளி மனிதன் மீது படும்போது, ஒருவன், எமர்சன் கூறுவதுபோல் ‘இறைப்பித்தன்’ ஆகிறான், இறுதியில் கடவுளாக மாறுகிறான். அந்த அன்புக்கடலில் எல்லாம் கரைந்துவிடுகின்றன. சாதாரண அன்பு என்பது வெறும் மிருகக் கவர்ச்சிதான்; இல்லையேல் அதில் ஏன் ஆண்-பெண் வேறுபாடு இருக்கவேண்டும்? ஒருவன் ஓர் உருவத்தின் திருமுன்னர் மண்டியிட்டுத் தொழுதால், அது கொடுமையான உருவ வழிபாடாம்! மனைவி அல்லது கணவன் முன்னால் முழங்காலிட்டால் அது சிறந்தது, போற்றத்தக்கது, அதில் எவ்விதத் தவறும் இல்லையாம்.

இந்த சிறுசிறு ஆசைகளை நாம் கடந்தாக வேண்டும். முதலில் நம்மை நான் தயாராக்கி கொள்ள வேண்டும். நாம் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறோமோ அதை பொறுத்தே அன்பைப் பற்றி நமது கருத்தும் அமையும். இந்த உலக வாழ்க்கையையே நமது நோக்கமாகவும் முடிவாகவும் கொண்டால், அது மிருகத்தனமானது, தரம் தாழ்ந்தது. அந்த எண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடங்குபவன் தன்னைத்தானே சீரழித்துக் கொள்கிறான். அதிலிருந்து அவனால் உயரே செல்ல முடியாது. எல்லாவற்றிற்கும் பின்னால் நிற்கும் ஒளியை அவனால் காண முடியாது. அவன் எப்போதும் புலன்களுக்கு அடிமையாகவே கிடப்பான், ஓரிரு கவள உணவிற்கு வேண்டிய பணத்திற்காக போராடிக் கொண்டிருப்பான். இத்தகைய வாழ்வு வாழ்வதைவிடச் சாவதே மேல். நீங்கள் உலகின் அடிமைகள்! புலன்களின் அடிமைகள்! உங்களை விழிப்புணர்த்துங்கள். இத்தகைய புலன் வாழ்வை விட உயர்ந்த ஒன்று உள்ளது.

இந்த மனிதன், இந்த எல்லையற்ற ஆன்மா வெறும் கண், மூக்கு, காது என்று புலன்களுக்கு அடிமையாகக் கிடக்கத்தான் பிறந்தான் என்று நினைக்கீறிர்களா? எல்லையற்ற, எங்கும் நிறைந்த ஓர் ஆன்மா அனைத்திற்கும் பின்னால் உள்ளது. அது எதை வேண்டுமானாலும் செய்ய வல்லது; எல்லா பந்தங்களையும் அகற்ற வல்லது; அந்த ஆன்மா தான் நாம்; அந்த ஆன்ம சக்தியை நாம் அன்பினால் தான் அடைகிறோம். இதுதான் லட்சியம். இது நன்றாக நினைவில் இருக்கட்டும். நாளையே இதை நாம் அடைந்து விட முடியாது; அடைந்துவிட்டோம் என்று கற்பனை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஆனால் அது வெறும் கற்பனைதான், உண்மை வெகு தொலைவில் உள்ளது.

மனிதன் எந்த நிலையில் இருக்கிறானோ, அதனை ஏற்றுக்கொண்டு, முடியுமானால் அங்கிருந்து அவன் முன்னேற உதவ வேண்டும். அவன் உலோகாயதத்தில் ஊன்றி நிற்கிறான். நீங்களும் நானும் எல்லோரும் உலோகாயதவாதிகளே. இறைவன், ஆன்மா என்றெல்லாம் நாம் பேசுவது நல்லதுதான். ஆனால் அவை சமுதாயத்தில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் மட்டுமே. கிளிபிள்ளைகளைபோல் அவற்றைக் கேட்டுப் பேசுகிறோம். எனவே இப்போது நாம்  உலோகாயதவாதிகளே என்பதை ஒப்புக்கொண்டு, தேவைப்படுமானால் ஜடப்பொருளின் துணையை ஏற்றுக்கொண்டு படிப்படியாகச் செல்வோம்; உண்மையான ஆன்மிகவாதிகளாகத் திகழும் வரை, நாம் என்பதை உணரும் வரை, அந்த ஆன்மாவை புரிந்துகொள்ளும்வரை, எல்லையற்றது என்று கூறும் உலகம் என்பது உண்மையில் அதன் பின்னால் நிற்கும் அந்த ஆன்மாவின் தூலமான புறத்தோற்றம் மட்டுமே என்பதை உணரும்வரை  முயன்று கொண்டே செல்வோம்.

அதைத் தவிர வெறும் சிலவும் தேவைபடுகின்றன. ஏசுநாதரின் மலைபிரசங்கத்தில், பின்வருவதை நாம் படிக்கிறோம். ‘கேளுங்கள் தரப்படும்’; தேடுங்கள் கிடைக்கும்; தட்டுங்கள் திறக்கப்படும்’. ஆனால் யார்  தேடுகிறார்கள்?  யார் விரும்புகிறார்கள்? அதுதான் பிரச்சினை. கடவுளை அறிந்துள்ளதாக நாம் எல்லோரும் சொல்கிறோம். கடவுள் இல்லை என்பதை நிரூபிக்க ஒருவன் ஒரு பெரிய நூல் எழுதுகிறான்; இருக்கிறார் என்பதை நிரூபிக்க இன்னொருவன் இன்னொரு நூல் எழுதுகிறான். தன் வாழ்க்கை முழுவதும் இறைவன் இருப்பதை நிருபித்துகொண்டே இருக்க வேண்டுவது தன் கடமை என்று நினைக்கிறான் ஒருவன். இன்னொருவனோ அவர் இல்லை என்று நிருபிபத்து தன் கடமையென எண்ணுகிறான். எனவே கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து திரிகிறான் அவன். கடவுள் உண்டு என்றோ இல்லை என்றோ நூல்களை எழுதுவதால் என்ன பயன்? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி  பெரும்பாலோர் கவலைப் படுவதே இல்லையே.

—சுவாமி விவேகானந்தர்….

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும் …..

 

Read Full Post »

கடவுள் நமக்குத் தேவையா?

Kadavul part 2

பாகம் 1:

பாகம் 1 இன் தொடர்ச்சி:

தனக்கு தெரியாத உயர்ந்த ஒன்று உள்ளது என்பதை ஒவ்வொருவனும் உணர்வே செய்வான். வாழ்க்கையின் மீதும், புலனினபப் பொருட்களின் மீதும் அவனுக்குள்ள பற்று படிப்படியாக மறையும்.

நான் சிறுவனாக இருந்தபோது பள்ளியில் ஒருநாள் மிட்டாய்க்காகவோ வேறு எதற்காகவோ என் பள்ளித் தோழனுடன் சண்டையிட நேர்ந்தது. அவன் நல்ல பலசாலி. என் கையில்ருந்ததைப் பிடுங்கி கொண்டான். அப்போது எனக்கிருந்த உணர்ச்சி இன்னும் நினைவில் இருக்கிறது. ‘உலகிலேயே மிகக் கொடியவன் இவன்தான்’ என்று நினைத்தேன் நான். நானும் போதிய அளவு பலசாளியனதும் அவனைத் தண்டிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அவன் செய்த குற்றத்திற்கு ஈடாக என்ன தண்டனை கொடுப்பது என்று என்னால் முடிவு செய்ய முடியாத அளவிற்கு அவனது குற்றம் அன்று எனக்கு பெரிதாகப் பட்டது. பிறகு நாங்கள் இருவருமே வளர்ந்து பெரியவர்கள் ஆனோம். இப்போது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம்.

ஆகவே உண்பது, உறங்குவது, இன்னும் இவை போன்ற புலனின்பங்கள்  தான் எல்லாம் என்று கருதுகின்ற வெறும் குழந்தைகளே உலகம் முழுவதும் உள்ளனர். அந்தப் புலனின்பங்களில் சிறு துளியை இழக்க நேர்ந்தால் கூட அது அவர்களுக்கு பொறுக்க முடியாதாக இருக்கிறது. அவர்கள் தின்பண்டங்களைபற்றியே கனவு கண்டு கொண்டு இருப்பார்கள். எதிர்கால வாழ்க்கை என்றால் அவர்களைப் பொறுத்தவரை அது தின்பண்டங்கள் ஏராளம் கிடைக்கின்ற ஓர் இடம், அவ்வளவுதான். வேட்டையாடுவதற்குப் போதிய வாய்ப்புகள் இடத்தில்தான் தனது எதிர்கால் வாழ்வு தொடரவேண்டும் என்று நம்புகின்ற செவ்விந்தியனை நினைத்து பாருங்கள். தங்கள் சொர்க்கம் எப்படி இருக்க வேண்டும் என்று நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. ஆனால் நாளடைவில் நாம் வளர்ச்சியடைந்து, உயர்ந்த விஷயங்களை காணும்போது, இவை எல்லாவற்றிகும் அப்பால் உள்ளவற்றின் கணநேரக் காட்சிகளைக் காண்கிறோம்.

ஆனால் மறுவுலக வாழ்வு அதுஇது என்று எதையும் நம்ப  மாட்டோம் என்று தற்காலத்தில் செய்கிறார்களே, அதுபோல் எதிர்கால வாழ்க்கையைப்பற்றிய நம் கருத்துகளை உதறித் தள்ள வேண்டாம். எது அழிவு. இவ்வாறு எல்லாவற்றையும் அளிக்கும் ஆஜ்நேயவாதி தவறான வழியில் செல்கிறான். பக்தன் இன்னும் உயர்ந்தவற்றைக் காண்கிறான். ஆஜ்நேயவாதிக்கு சொர்க்கம் என்று ஒன்றில்லை. ஆனால் பகவானின் பிள்ளையான பக்தனுக்கோ அது குழந்தை-விளையாட்டு என்பது புரிந்துவிட்டால் அவன் சொர்கத்திற்கு செல்ல விரும்பவதில்லை. அவனுக்கு வேண்டுவதெல்லாம் இறைவன் ஒருவனே.

இறைவனை விட உயர்ந்த லட்சியம் வேறு என்ன இருக்க முடியும் அவனே மனிதனின் மிக உயர்ந்த லட்சியம். அவனைப் பாருங்கள்; அவனிலேயே இன்பம் காணுங்கள். இதைவிட உயர்ந்த ஒன்றை நாம் ஒருபோதும் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. ஏனெனில் அவன் பரிபூரணமானவன். அன்பைவிடச் சிறந்த இன்பத்தை நாம் நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் இந்த ‘அன்பு’ என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. அது உலகில் காணப்படும் சாதாரண தன்னலப் பற்று அல்ல. தன்னலப் பற்றை அன்பு என்று கூறுவது அபத்தம். நம் மனைவிமக்கள் மீது நாம் காட்டும் அன்பு மிருக நிலையில் உள்ளது. முற்றிலும் தன்னலம் கருதாத அன்பே அன்பு. அத்தகைய அன்பு கடவுளின் அன்பே. அதை அடைவது மிகவும் கடினம்.

குழந்தை, தாய், தந்தை, என்று பலரை நேசிக்கிறோம். அதாவது அன்பின் இத்தகைய பலவகையான நிலைகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். அன்பு காட்ட நாம் படிப்படியாகப் பயின்று கொண்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் இதிலிருந்து நாம் எந்த படிப்பினையையும் பெறுவதில்லை. எதாவது ஒருவரிடமோ அல்லது ஒரு நிலையிலோ கட்டுண்டுவிடுகிறோம். சிலர் இந்த வலையிலிருந்து  விடுபடுகிறார்கள். மனிதன் எப்போதும் மனைவி, செல்வம், புகழ் இவற்றின் பின்னால் ஓடிகொண்டிருக்கிறான். சிலவேளைகளில் அவன் தலையில் பலத்த அடி விழுகிறது. அப்போது இந்த உலகம் உண்மையில் என்ன என்பதை உணர்கிறான்.

இறைவனைத் தவிர வேறு எதையும் யாராலும் உண்மையில் நேசிக்க இயலாது; மானிட அன்பு எவ்விதச் சாரமும் அற்றது, வெறுமையானது என்பதை மனிதன் உணர்கிறான். மனிதனால் நேசிக்க இயலாது, எல்லாம் பேச்சுடன் சரி. மனைவி தன கணவனை நேசிப்பதற்காக கூறி அவனை அணைத்து முத்தமிடுகிறாள். ஆனால் அவன் இறந்தால் முதலில் அவள் நினைப்பது அவனது வங்கிக்கணக்கு எவ்வளவு, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது பற்றித்தான். கணவன் மனைவியை நேசிக்கிறான். ஆனால் அவள் உடல் நலம் குறைந்து அழகு குன்றினாலோ, விகாரமடைந்தாலோ, ஒரு தவறு செய்தலோ அவ்வளவுதான், அவளை ஒதுக்கத் தொடங்கிவிடுவான். உலகில் நாம் காணும் அன்பு அனைத்தும் வெறும் வெளிவேஷமே, வெறுமையே

எல்லைக்கு உட்பட்ட ஒன்று அன்பு செய்ய முடியாது. எல்லைக்கு உட்பட்ட ஒன்றின்மீது அன்பு காட்டவும் முடியாது. மனிதனால் விரும்பப்படும் பொருட்கள் கணந்தோறும் அழிந்து கொண்டிருகின்றன; அவன் வளரவளர அவனது மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது. அப்படியிருக்கும் போது நிலையான அன்பை இந்த உலகில் எதிர்பார்க்க முடியுமா? இறைவன் மீதுள்ள அன்பைத் தவிர வேறு எந்த அன்பும் நிலையாக இருக்க முடியாது. எனவே பலவகைப்பட்ட இந்த அன்புகள் எதற்காக? இவை யாவும் வெறும் படிகள் மட்டுமே. நமக்கு பின்னால் ஒரு சக்தி இருந்து கொண்டு, அன்பு என்ற ஒன்றை நோக்கி நம்மை உந்தித் தள்ளிக்கொண்டு செல்கிறது. உண்மை பொருளை எங்கே தேடுவது என்பது நமக்கு தெரியாது.ஆனால் நமது இந்த அன்பு அதைத் தேடிச் செல்வதற்காக நம்மை முன்னோக்கிச் செல்லத் தூண்டுகிறது. நாம் திரும்ப திரும்ப நமது தவறை உணர்கிறோம். ஏதோ ஒன்றைப் பற்றுகிறோம். அது நமது பிடியிலிருந்து நழுவிவிடுகிறது. உடனே இன்னொற்றைப் பற்றுகிறோம். இவ்வாறு முன்னேறிச் செல்கிறோம். இறுதியில்  வருகிறது ஒளி. நம்மை நேசிக்கும் ஒரே ஒருவரான ஆண்டவனிடம் நாம் வருகிறோம். அவனது அன்பு ஒருபோதும் மாறாதது. எப்போதும் நம்மை அரவணைக்கத் தயாராக இருப்பது.

—சுவாமி விவேகானந்தர்….

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும் …..

Read Full Post »

கடவுள் நமக்குத் தேவையா?

 

Kadvu part 1l

எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். இதை நாம் அறிந்துகொள்ளத வரையில், எதுவுமே புரிந்து கொள்ள முடியாது.

ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுப்பட்ட இரண்டு இலட்சியங்கள் வாழ்க்கையில் உள்ளன. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும், எந்த மதத்தை பின்பற்றுவர்கள் ஆனாலும் எல்லோரும் அறிந்த ஓர் உண்மை, மனிதன் உடல் மட்டுமல்ல, ஆன்மாவும் கூட என்பதாகும். ஆனால் மானிட வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் உள்ளன.

மேலை நாட்டினர் பொதுவாக மனிதனின் உடல் விஷயங்களில் அதிக அக்கறை காட்டினர். இந்தியாவின் பக்தி ஆச்சாரியர்கள் அவனது ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுகிறார்கள். இந்த வேறுபாடு கீழ்த்திசைக்கும் மேல்திசைக்கும் இயல்பாக அமைந்துள்ளது போல் தோன்றுகிறது.அன்றாட  பேச்சு வார்த்தைகளிலும் இதையே நாம் காண்கிறோம். இங்கிலாந்தில் மரணத்தைக் குறிப்பிடும்போது, அவன் உயிரைத் துறக்கிறான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலோ, அவன் உடலைத் துறக்கிறான் என்று குறிப்பிடுகின்றனர். மனிதன் என்பவன் உடல், அதில் ஆன்மா உள்ளது என்பது  முதல் கருத்து. மனிதன் ஆன்மா, அந்த ஆன்மாவிற்கு உடல் உண்டு என்பது இரண்டாவது கருத்து.

இதிலிருந்து சிக்கலான பிரச்சனைகள் பல எழுகின்றன. மனிதன் ஓர் உடல், அதில் உயிர் உள்ளது என்ற கொள்கையினர் உடலுக்கு  முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மனிதன் ஏன் வாழ்கிறான் என்று அவர்களை கேட்டால், உடைமைகள், சொத்து, உறவு முதலியவற்றால் இன்பம் பெறுவதற்கே என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.

இதைவிட  மேலானது ஒன்று உள்ளது என்பதை சொன்னாலும் மனிதன் புரிந்து கொள்ள மாட்டான். அதனை அவனால் கனவுகூடக் காண முடியாது. இந்த இன்ப நுகர்ச்சியின் தொடர்ச்சியே எதிர்கால வாழ்க்கை என்பதுதான் அவனது கருத்து. அந்த இன்பங்களை அனுபவித்தவாறு எப்போதும் இங்கேயே தொடர்ந்து இருக்க முடியவில்லை, உலகை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்று அவன் மிகவும் வருந்துகிறான். எனவே எப்படியாவது இதே இன்பம் தொடர்ந்து கிடைக்கக் கூடிய ஓரிடத்திற்கு தான் போகக்கூடுமென்று கருதுகிறான். அங்கு அதே இன்பங்கள், இதே புலன் நுகர்ச்சிகள இன்னும் அதிகமாக உயர்ந்த அளவில் தனக்கு கிடைக்கும் என்று நம்புகிறான். இந்த இலக்கை அடையக் கடவுள்தான் வழி. எனவே அவரை வழிபட விரும்புகிறான். அவனுடைய வாழ்க்கையின் லட்சியம் புலனின்பம் தான். இந்த இன்பங்களை நீண்ட காலக் குத்தகைக்கு தருபவர் இறைவன் என்று நம்புவதால் அவரை வழிபடுகிறான்.

ஆனால் வாழ்க்கையின் லட்சியம் இறைவன். அவருக்கு அப்பாற்பட்டது வேறு ஒன்றுமில்லை. இப்பொழுது அனுபவிக்கும் புலனின்பங்கள், எதிர்காலத்தில் மேலான ஒன்றைப் பெறுவோம் என்ற நோக்குடன் தற்காலிகமாக அனுபவித்து கொண்டிருப்பவையே—இது இந்தியர்களின் கருத்து. அது மட்டுமல்ல; இந்த புலனின்பங்களே எல்லாம் என்று எண்ணினால் அது மிகவும் பயங்கரமானது, அழிவிற்கே வழிவகுப்பது ஆகும். புலனின்ப நாட்டம் குறையும் அளவிற்கு மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது என்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம். ஒரு நாய்  உண்ணும்போது கவனியுங்கள், அது உணவில் மகிழ்ச்சியடைவதுபோல் எந்த மனிதனும் அடைவதில்லை. இன்பத்தோடும் இடையிடையே உறுமிக்கொண்டு தின்னும் பன்றியை பாருங்கள். அவ்வளவு திருப்தியோடு உண்கிற எந்த மனிதனும் இவ்வுலகில் பிறக்கவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள மிருகங்களுடைய கேட்கும் ஆற்றலையும், காணும் ஆற்றலையும் நினைத்துப் பாருங்கள். அவற்றின் புலன் ஆற்றல்கள் மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளன. அவற்றின் புலனின்பம் வரம்பு கடந்தது. இன்பத்தினாலும் மகிழ்ச்சியினாலும் அவை பித்தேறியவை ஆகிவிடுகின்றன. மனிதன் தாழ்ந்த நிலையில் இருக்கும் அளவிற்கு புலனினப்த்தில் இன்பம் காண்கிறான். மேலே உயரஉயர, பகுத்தறிவும் அன்பும் அவனது வாழ்க்கையின் குறிக்கோளாகின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப அவனது புலனின்ப நாட்டம் குறைகிறது.

இதை ஓர் உதாரணம் கூறி விளக்குகிறேன். ஒருவனுக்குக் குறிப்பிட்ட அளவு சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதை அவன் உடல், உள்ளம், ஆன்மா, இவற்றிக்க்காகச் செலவு செய்யலாம். இவற்றுள் எதாவது ஒன்றிற்கு எவ்வளவு சக்தியைச் செலவிடுவானோ, அந்த அளவிற்கு குறைவாக மற்றவற்றிற்குச் செலவிட வேண்டிவரும். அப்படிதானே! அறிவற்ற காட்டுமிராண்டி மக்களுக்கு நாகரிக மக்களைவிடப் புலனின்ப நாட்டத்திற்கான ஆற்றல்கள் மிக நுட்பமானவை. ஒரு சமுதாயம் நாகரிகம் அடைய அடைய அதன் மக்களுடையே நரம்பு அமைப்புகள் நுட்பமாகின்றன. அதே வேளையில் அவர்கள் உடல்ரீதியாக பலவீனம் அடைகிறர்ர்கள் என்பதை வரலாற்றிலிருந்தே நாம் அறிகிறோம். ஒரு காட்டுமிராண்டி இனத்திற்கு நாகரிகம் அளித்துப் பாருங்கள், அப்போது இந்த உண்மையை காண்பீர்கள். இன்னொரு காட்ட்மிரண்டி இனம் தோன்றி, நாகரிகம் பெற்ற இந்த இனத்தை வெற்றிக்கொண்டுவிடும். காட்டிமிரண்டிகளே ஏறக்குறைய எப்போதும் வெற்றி பெறுகிறார்கள்.

எனவே எந்நேரமும் புலனின்பதையே நாடினால் நாம் மிருகநிலைக்கு இழிந்துவிடுவோம். புலனின்பங்களை இன்னும் அதிகமாக, இன்னும் தீவிரமாக அனுபவிக்கத்தக்க ஓரிடத்திற்கு போகவேண்டுமென்று ஒருவன் கேட்கும்போது, தான் உண்மையில் என்ன கேட்கிறோம் என்பது புரியாமல் அவன் கேட்கிறான். மிருக நிலைக்கு சென்றால்தான் அதைப் பெற முடியும் என்பதை அவன் உணர்வதில்லை. தான் அசுத்தமான பொருளை உண்பதாக ஒருபோதும் பன்றி நினைப்பதில்லை. பன்றிக்கு அதுதான் சொர்க்கம். மிகப்பெரிய தேவதை வந்தால் கூடப் பன்றி ஏறெடுத்தும் பார்க்காது. அதன் வாழ்க்கையே உண்பதில்தான் உள்ளது.

புலனின்பம் நிறைந்த ஒரு சொர்க்கத்தை விரும்பும் மனிதனின் நிலைமையும் இத்தகையதே. அவர்கள் பன்றிகள் போல் சிற்றின்ப சேற்றில் புரண்டுகொண்டு அதற்கு அப்பால் எதையும் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேண்டுவதெல்லாம் புலனின்பம்தான். அதை இழந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்தையே இழந்தது போல்தான். பக்தன் என்ற வார்த்தை உண்மையில் எதைச் சுட்டி நிற்கிறதோ, அத்தகைய மேலான பக்தர்கள ஆகா இவர்களால் ஒரு போதும் முடியாது. இவர்களால் ஆண்டவனிடம் ஒருபோதும் உண்மையான அன்பு வைக்க முடியாது. ஆனால் சிறிது காலம் இந்தக் கீழான லட்சியத்தை பின்பற்றி வரும்போது நாளடைவில் மாற்றம் ஏற்படவே செய்யும். தனக்கு தெரியாத உயர்ந்த ஒன்று உள்ளது என்பதை ஒவ்வொருவனும் உணர்வே செய்வான். வாழ்க்கையின் மீதும், புலனினபப் பொருட்களின்  மீதும் அவனுக்குள்ள பற்று படிப்படியாக மறையும்.

—சுவாமி விவேகானந்தர்….

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும் …..

Read Full Post »

Barathmatha

1.எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

2-பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

3-செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

4-கிரானைட்(சலவைக் ஆண்டுகளுக்கு)கல்லால் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

7-உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)
8-1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

9-மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

10-உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

12-தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

14-உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

15-வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

16-அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுகிறார� �. 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).

17-5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

18-முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு
(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனர்

19-வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

20-உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

21-குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

22-நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

23-காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

24-முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

25-இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு(35 வயதுக்குட்பட்டவர� �கள் 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு
“நமது இந்தியா” தான்.

Read Full Post »

ஹந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்…

ங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? காளியா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைதான் நீங்கள் வழிபடுவீர்கள்?

உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்னுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.

indian-gods-hindu-gods-collage-shirdi-sai-baba-saibaba-wallpaper

முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தனமையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?

கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், ஏன் ஏசு எனும் அரூபத்திலும் நினைக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.

புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.

இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.

Read Full Post »

Older Posts »