Feeds:
Posts
Comments

Archive for the ‘Uncategorized’ Category

சுவாமிஜியின் திட்டம் உதயம் ….

சுவாமிஜி இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் நிலைமை மிக மோசமாயிருந்தது. நம் நாடு அப்போது சுதந்திரம் பெறவில்லை. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது. மக்கள் வறுமையில் வாடினர். பெரும்பாலான மக்களுக்குப் போதிய உணவு கூட கிடைக்கவில்லை. மிகச் சில சிறுவர் சிறுமியரே பள்ளி செல்ல முடிந்தது. மக்கள் தைரியத்தை இழந்து விட்டிருந்தனர். அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லை. அவர்கள் உதவியற்றோராக நசுக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் கண்ட சுவாமிஜி கண்கள் கலங்கின. பழங்காலத்தில் இந்தியா எத்தகையதொரு உன்னத நிலையில் இருந்தது என்பதை அவர் நினைத்து பார்த்தார். பழங்கால தவ முனிவர்களையும் ரிஷிகளையும் அவர் எண்ணிப் பார்த்தார். அத்தகைய பெருமை வாய்ந்த நாடு எவ்வளவு கீழ் நிலையை அடைந்துவிட்டது என்று நினைத்து அழுதார். மீண்டும் நம் நாட்டைப் பெருமையுடைய நாடாக மாற்றுவது எவ்வாறு என்பது ஒன்றே அவர் எண்ணமாயிருந்தது.

தன் சுற்றுப் பயணத்தின் இறுதி இடமாக, இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரியை அடைந்தார். அங்கு ஆதிபராசக்தி தேவி ஒரு குமரி வடிவில் ‘கன்னியாகுமரி’ என்ற திருநாமத்தில் கோயில் கொண்டுள்ளாள். ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் சந்தனத்தால் அலங்கரித்து அவளை வழிபடுவது வழக்கம். குமரிதேவி அதி அற்புதமான தோற்றத்துடனும் அழகான கண்களோடும், இனிய புன்முறுவலோடும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். இக்கோயில் கடற்கரையோரத்தில் இருக்கிறது. கடல் நோக்கிப்  பார்க்கும்போது தண்ணீர்க்குள்ளிருந்து சில பெரிய பாறைகள் நீட்டிக் கொண்டிருப்பதை நாம் கான முடியும். அந்தப் பாறைகளின் ஒன்றின்மீது அன்னை பகவதி ஒற்றைக் காலில் தவம் செய்த அடிசுவடு காணப்படுகிறது. அலைகள் அப்பாறைகளில் முட்டி மோதிச் செல்லும். அவற்றின் பின்னே, கண்ணுக்கெட்டிய தூரம், தண்ணீர்தான்!

Thittam

ஒருநாள், தேவியின் சுவடுடைய அப்பாறையின் மீது தியானம் செய்ய விரும்பி சுவாமிஜி கடலின் நடுவே நீந்திச் சென்று, அதனை அடைந்தார். அதன் மேலேறி பாறை முனையில் அமர்ந்தார். அங்கிருந்து தன் பேரன்புக்குரிய தாய்நாட்டை நோக்கிய அவருக்கு அந்நாட்டு மக்களின் மோசமான நிலை நிழலாடுகிறது . சுவாமிஜி மீண்டும் அழுதார். சுவாமிஜிக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று அவர் குரு ஸ்ரீராமகிருஷ்ணர் , மற்றொன்று அவர் பிறந்த இந்தியத் தாய்நாடு. அப்பாறையில் அமர்ந்து கொண்டிருந்தபோது சுவாமிஜி மூன்று நாட்களாக ஆழ்ந்த தியானத்தில் லயித்தார். இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட,  தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அப்போது அவர் உணர்ந்தார்.

‘கன்னியாகுமரியில், குமரி தாயின் கோயிலில், பாரத நாட்டின் தென்கோடியிலுள்ள அந்தப் பாறைமீது அமர்ந்து சிந்தித்தேன். என் மனத்தில் திட்டம் ஒன்று உதித்தது’ என்றார் சுவாமிஜி.

*********************

Read Full Post »

இமயமலையில்…..

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இமயமலையில் நீண்ட மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மலைச்சரிவில், மேற்கொண்டு ஏறமுடியாமல் களைத்துப் போய் அமர்ந்திருந்தார் முதியவர் ஒருவர்.அவரைப் பார்த்ததும் அங்கே சென்றார் சுவாமி விவேகானந்தர். “நான் மிகவும் சோர்ந்து போய் விட்டேன். இந்த பாதையை இனி எப்படி கடக்கப் போகிறேன்? இனிமேல் என்னால் நடக்க இயலாது. என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது” என்று அவரிடம் புலம்பினார் அந்த முதியவர்.

Untitled-1அதற்கு விவேகானந்தர், “பெரியவரே! சற்று கீழே பாருங்கள். காலுக்கு கீழே நீண்டு தெரிகின்ற அந்த பாதை முழுவதும் உங்களால் கடக்கப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் நடந்தால் போதும். முன்னால் தெரிகின்ற பாதையும் விரைவில் உங்கள் காலுக்கு கீழே வந்துவிடும்” என்றார்.

அவரது தெம்பூட்டுகின்ற இந்த வார்த்தைகளை கேட்டதும், சோர்ந்து போய் இருந்த பெரியவர் எழுந்து நடக்க ஆரம்பித்தார் மலையின் உச்சியை அடைந்தார்.

Read Full Post »

சர்வ சமயப் பேரவையில்

சர்வ சமயப் பேரவையில்:

சுவாமிஜி பாஸ்டனிலிருந்து சிகாகோ சென்றடைந்த பின்னர் சர்வ சமயப் பேரவை குழுத்தலைவரின் முகவரியுடன் இருந்த அறிமுக கடிதத்தைத் தொலைத்துவிட்டார். சுவாமிஜிக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. அவர் மிகவும் சோர்வாக இருந்தார். எனவே சிகாகோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில் பெட்டி ஒன்றில் படுத்து உறங்கிவிட்டார். அடுத்த நாள் காலை இந்திய நாட்டின் சன்னியாசிகளைப் போல் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தார். அவரை மக்கள் எகத்தாளமாக நடத்தினர். மேலை நாடுகளில் பிச்சை எடுப்பது குற்றம் எனக் கூறினார்கள். என்ன செய்வது என்றறியாமல் இறைவன் விட்ட வழி என ஒரு தெரு ஒரத்தில் அமர்ந்து விட்டார். இறைவன் அருளால் எதாவது நடக்கும் என எண்ணி அதுவரைக் காத்திருப்பதாக முடிவு செய்தார். அப்பொழுது எதிர் வீட்டின் கதவு திறக்கப்பட்ட்து. ஒரு பெண்மனி வெளியே வந்தாள். அவள் சுவாமிஜியை நோக்கி “ஐயா, தாங்கள் சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்களா? என வினாவினாள். மிஸஸ். ஜார்ஜ் ஹேல் என்ற அந்தப் பெண்மணியின் உதவியுடன் சர்வ சமயப் பேரவையில் கலந்துக் கொள்ள சுவாமிஜிக்கு வாய்ப்புக் கிடைத்தது.

1233560_590718274319052_45925771_n

சர்வ சமயப் பேரவை— செப்டம்பர் 1893:

1893ம் வருடம், செப்டம்பர் 11ம் நாள் திங்கள் கிழமை சர்வ சமயப் பேரவைக் கூடியது. அந்தக் குழுத்தலைவர் சுவாமிஜியைப் பேச பலமுறை அழைத்தார். ஆனால் சுவாமிஜி அங்கு கூடியிருந்த 7000 பேர்களைப் பார்த்தும் சிறிது அச்சமடைந்து பேச எழவில்லை. மதிய வேளையில் “அமெரிக்க சகோதரி சகோதரர்களே” எனக் கூறி தன் உரையைத் துவங்கினார். அவர் அன்போடு அழைத்ததும் இடி இடிப்பது போல் பார்வையாளர்களிடமிருந்து 2 நிமிடம் கைதட்டல் தொடர்ந்தது. சுவாமிஜி தன் காவி உடையில் 7000 பேர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் கம்பீரமாக மேடைமேல் நின்றிருந்தார். அரங்கத்தில் அமைதி எற்பட்டதும் தன் உரையைத் தொடர்ந்தார். இந்த பேரவையில் இந்து மதத்தர்மத்தின்படி அனைத்து மதங்களும் உண்மையே, அனைத்து மதங்களையும் நாம் எற்றுக் கொள்ள வேண்டும் என்று முழுங்கினார். சுவாமிஜின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்தவையாக இருந்தது. இறைவனின் வார்த்தைகளாக வெளி வந்தது. இதுவே அனைத்துப் பார்வையாளர்களின் இதயத்தைத் தொட்டது.

Read Full Post »

ஷாகா கட்டளைகள்

 

ஷாகா துவக்கத்திற்கான கட்டளைகள்:

1. தர்ர்ர்ர்….தக்   தர்ர்ர்ர்….தக்(விசில்)

2. சங்க தக்ஷ

3. ஆ ரம

4. அக்ரே ஸர

5. அக்ரேசர் சம்யக்

6. அக்ரேசர் ஆ ரம

7. சங்க சம்பத

8. சங்க தக்ஷ

9. சங்க சம்யக்

10. அக்ரேசர் அர்தவ்ருத

11. சங்க ஆ ரம

12. சங்க தக்ஷ

13. த்வஜ ப்ரணாம்

   ஏக்…தோ…தீன்

14. சங்க்யா

15. ஆ ரம

16. சங்க தக்ஷ

17. ஆ ரம

18. சங்க தக்ஷ

19. ஸ்வஸ்தான்

 imageaa015

ஷாகா முடிப்பதற்கான கட்டளைகள்

1. தர்ர்ர்ர்..தக்.தக்.தக் (விசில்)

2. அக்ரேசர் சம்யக்

3. அக்ரேசர் ஆ ரம

4. தர்ர்ர்ர் ….தக்.தக்(விசில்)

5. சங்க தக்ஷ

6. சங்க சம்யக்

7. அக்ரேசர் அர்தவ்ருத

8. சங்க்யா

9. ஆ ரம

10. சங்க தக்ஷ

11. ஆ ரம

12. சங்க தக்ஷ

13. தக் (விசில்)

14. த்வஜப்ரணாம்

ஏக் ….தோ…தீன்

15. சங்க வீகிர.

 

Read Full Post »

நரேனின் பிரார்த்தனை

ஸ்ரீ ராமகிருஷ்ணர் நரேனிடம் பேரன்பு செலுத்தினார். நரேனும் ஸ்ரீ ராமகிருஷ்ணரை உயிருக்குயிராக நேசித்தான். குருவுக்கும் சீடனுக்குமிடையே இத்தகையதொரு தூய்மையான பேரன்பு நிலவினால் மட்டுமே கடவுளைப் பற்றிய ஞானத்தை சீடன் பெற முடியும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணருடைய சீடனாகிய நரேன் மிகுந்த ஆனந்தத்தில் திளைத்தான். தட்சனேசுவரதிற்கு அடிக்கடி சென்று கடவுளைப் பற்றிக் கேட்பான். இச்சமயம் துக்ககரமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. நரேனின் தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் வாடியது. சில சமயம் சாப்பிட எதுவுமிருக்காது. மிகவும் வருந்திய நரேன் ஒரு வேலை தேடிக் கொள்ள முடிவு செய்தான்.

பி.ஏ. பட்டம் பெற்ற புத்திசாலி மாணவன் நரேன். இருப்பினும் அவனுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கிய போதிலும், வேலை கிடைக்கவில்லை. ‘நான் சிறிதேனும் சம்பாதிக்காவிட்டால் என் தாயும் சகோதர சகோதரிகளும் என்ன செய்வார்கள்? அவர்கள் கதி என்ன? என்ற சோகம் அவனை வாட்டியது.

Narenin Pirathanani

ஒருநாள் அனைத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் கூறினான் நரேன். ‘நரேன், இன்று செவ்வாய்க் கிழமை. அன்னையிடம் எது வேண்டினாலும் அவள் அள்ளித் தருவாள். நீயே சென்று அவளிடம் கேள்’ என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அன்று மாலை நரேன் காளிகோயில் சென்று அன்னையிடம் பிரார்த்தித்தான். திரும்பி வந்த நரேனிடம் ‘அன்னை என்ன சொன்னாள்?’ என்று கேட்டார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

‘ஓ நான் அவளிடம் கேட்க மறந்துவிட்டேன்’ என்றான் நரேன்.

மறந்தாயா? செல், உடனே செல், சீக்கிரம்’ என்று அவனைத் திருப்பி அனுப்பினார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.

இம்முறையும் நரேன் மறந்தான்.

மூன்றாம் முறை நரேன் மிகவும் அமைதியான முகத்துடன் திரும்பி வந்து கொண்டிருந்தான். ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் ‘நான் எவ்வாறு அன்னையிடம் பணத்தை வேண்டுவேன்? அது மிகப் பெரிய பேரரசன் ஒருவனிடம் சென்று பூசணிக்காயை யாசிப்பது போலல்லவா ஆகிவிடும். பக்தி, சுயநலமற்ற அன்பு, அவளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஆகியவற்றையே என்னால் அவளிடம் பிரார்த்திக்க முடிந்தது’ என்று கூறினான்.

பின்னர் நரேனின் குடும்பம் அடிப்படைத் தேவைகளுக்காக ஒருபோதும் வாடாது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணர் உறுதியளித்தார். அதன் பின்னரே வேலை தேடும் முயற்சியை கைவிடுவது சரியானது என்று நரேன் எண்ணினான்.

அன்று இரவு நரேனுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் அன்னையைப் பற்றிய அற்புதமான பாடலொன்றைக் கற்பித்தார். அன்றிரவு முழுவதும் நரேன் அப்பாடலைப் பாடிக்கொண்டிருக்க, ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஆழ்ந்த பரவசத்திலிருந்தார்.

தொடரும் …..

Read Full Post »

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பதில்

ஒரு நாள் ஸ்ரீ ராமகிருஷ்ணரைக் காண நரேன் தட்சனேசுவரம் சென்றான். ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு அவனைக் கண்டதில் கொள்ளை மகிழ்ச்சி. உடனேயே உள்ளே சென்று இனிப்புகளைக் கொண்டு வந்து, அவனை ஒரு சிறு குழந்தையாகக் கருதி அவனுக்கு ஊட்ட ஆரம்பித்துவிட்டார். அவன்மீது பேரன்பு கொண்ட அன்னையானார் அவர்.

பிறகு நரேன் தான் இதுவரைப் பல குருமார்களிடம் கேட்ட அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டான்:

‘ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’

‘ஆம், உண்மையில் தரிசித்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் ஸ்ரீ ராமகிருஷனர். ‘உன்னைப் பார்பதைப் போலவே, அவரையும் தெளிவாகப் பார்க்கிறேன். உன்னைக் கண்டு பேசுவது போலவே, ஒருவரால் கடவுளைக் காணவும் பேசவும் முடியும்’ என்றும் கூறினார்.

Ramakrishnarin Pathil

இந்த பதிலைக் கேட்டு நரேன் ஆச்சரியமடைந்தான். அவன் உள்ளம் ஆனந்தத்தால் நிறைந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய அனைத்தையும் அவன் கவனமாகக் கேட்டான்.

‘நான் தேடிக் கொண்டிருந்த குரு இவரே!’ என்று நரேனின் மனம் கூறியது. நரேன் அவருடைய சீடன் ஆனான்.

ஸ்ரீ ராமகிருஷனர் கடவுளைக் கண்டவர் என்று நரேன் அறிந்திருந்தான். இருப்பினும், கேள்விகள் கேட்காமல் எதையும் அவன் ஒப்புக் கொள்வதில்லை. இதையே ஸ்ரீ ராமகிருஷ்ணரும் விரும்பினார். தன்னிடம் வந்த இளைஜர்கள் சுயமாக சிந்திப்பதையும், கேள்விகள் கேட்பதையும் அவர் வரவேற்றார்.

தொடரும் …….

Read Full Post »

நரேனின்(சுவாமி விவேகானந்தரின்) கேள்வி…..

‘காசியைக் கண்ட ஒருவரே, காசியைப் பற்றிக் கூறி உங்களை அங்கு அழைத்துச் செல்ல முடியும்’ என்பது பழமொழி. தான் போதிப்பதை உணர்ந்த ஆசிரியரே தேவை என்பதே இதன் பொருள். நாம் எதையாவது கற்க விரும்பினால், அதைப் பற்றி அனைத்தும் அறிந்த ஆசிரியர், குரு நமக்குத்த் தேவை. ஆகவே கடவுளை யாரேனும் அறிய விரும்பினால், கடவுளை பற்றி தெரிந்த ஒருவரை அணுக வேண்டும். அத்தகைய ஒருவரை நரேன்(விவேகானந்தர்) தேட ஆரம்பித்தான். தான் சந்தித்த அத்தனை மத குருமார்களிடமும் அவன் கேட்ட கேள்வி இது ஒன்றே. ‘ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?’ ஆனால் ஒருவர் கூட அவனுக்குத் தான் கடவுளைக் கண்டதாகக் கண்டிருப்பதாகக் கூறமுடியவில்லை.

Narenin Kelvi

ஒரு நாள் நரேனின் அண்டை வீட்டினர் ஒருவர் அவனைத் தன் வீட்டில்  பாடுவதற்காக அழைத்திருந்தார். அந்த வீட்டினர் அன்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை தம் கௌரவ விருந்தாளியாக அழைத்திருந்தனர். நரேன் மிக இனிமையாகப் பாடக் கூடியவனாதலால், ஸ்ரீ ராமகிருஷ்ணரை முன்பு பாடுவதற்காக அவனையும் அழைத்திருந்தனர்.

நரேனின் பாடல்களைக் கேட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் மிகவும் ஆனந்தமடைந்தார். நரேனை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. தான் வசிக்கும் தட்சினேசுவரத்திற்கு  அவனை வரும்படியும், அங்கு வந்து தனக்காகப் பாடும்படியும் வேண்டினார்.

இதுவே ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் நரேனுக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பு என்றாலும் அது நரேனிடத்தில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதன்பிறகு நரேனுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிக்க ஆரம்பித்தனர். ஆன்மிக லட்சியம் கொண்ட நரேன் அதற்கு உறுதியாக மறுத்துவிட்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவரான ராமசந்திர தத்தர் நரேனிடத்தில் இருந்த ஆன்மிக நாட்டத்தைக் கவனித்தார். எனவே அவர் நரேனை தட்சனேசுவரம் சென்று ஸ்ரீ ராமகிருஷ்ணரைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி தட்சனேசுவரம் சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்தார் நரேன்(விவேகானந்தர்).

தொடரும் …..

Read Full Post »

இன்றைய கிறிஸ்துவர்கள்….

ஏசு நாதர் போதனை செய்து கொண்டிருக்கிறார். ஒருவன் அவரிடம் வந்து, ‘நீங்கள் போதிப்பது நன்றாக இருக்கிறது. நிறைநிலையை அடைய அதுதான் வழி என்று நினைக்கிறேன், அதைப் பின்பற்றவும் தயாராக இருக்கிறேன். ஆனால் தாங்கள்தான் ஒரே தேவ மைந்தன் என்று உங்களை வழிபட நான் தயாராக இல்லை’ என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். ஏசுநாதர் என்ன பதில் சொல்லிருப்பார் ? ‘ சகோதரா, மிகவும் நல்லது. இலட்சியத்தை பின்பற்று, உன் வழியிலேயே முன்னேறு. இந்தப் போதனைக்குரிய பெருமையை நீ எனக்குக் கொடுக்கிறாயா இல்லையா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. நான் வியாபாரி அல்ல. நான் மதத்தை வியாபாரம் செய்யவில்லை. நான் உண்மையைப் போதிக்கிறேன், உண்மை யாருடைய சொத்தும் அல்ல. அது தனக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் பதிவு செய்ய முடியாது. உண்மை என்பது கடவுளே, முன்னேறு’ என்பதுதான் பதிலாக இருக்கும்.
swami_vivekanand
ஆனால் தற்காலத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? நீங்கள் ஏசுவின் போதனைகளைப் பின்பற்றுகிறீர்களா இல்லையோ, நீங்கள் அவருக்குப் பெருமை கொடுக்கிறீர்களா? நீங்கள் அவருக்குப் பெருமை கொடுத்தால்தான் காபாற்றப்படுவீர்கள், இல்லாவிடில் உங்களுக்கு முக்தியே இல்லை என்கிறார்கள்.இப்படி அந்தப் போதகரின் போதனைகளை இழிவுப்படுதுகின்றன.போராட்டமும் சண்டையும் எல்லாம் அவரைப் பற்றிதான். இப்படி வற்புறுத்துவதன் காரணமாக அவர்கள் யாரைப் பெருமைப்படுத்த விரும்புகிறார்களோ, அவருக்கு ஒருவகையில் அவமானமே தேடித் தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. இதைக் கண்டால் அவரே அவமானத்தினால் குன்றிப் போயிருப்பார். உலகில் ஒருவராவது தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டானா, இல்லையா என்பதைப் பற்றி அவர் கவலைபட்டாரா என்ன? செய்தியை சொல்ல வேண்டும் சொல்லிவிட்டார்.

ஆனால் இன்றைய கிறிஸ்துவர்கள் என்ன சொல்வார்கள்? நீங்கள் நிறைமனிதனாக இருக்கலாம், சுயநலம் துளியும் அற்றவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் எங்கள் போதகரை, எங்கள் மகானை ஏற்றுக்கொள்ளவிட்டால் பயனில்லை என்பார்கள். ஏன்? இந்த மூடநம்பிகைகளுக்கும் அறியாமைக்கும் என்ன காரணம்? இறைவன் ஒரே ஒரு தடவைதான் தோன்ற முடியும் என்று நினைப்பதுதான். முழுத் தவறும் அங்குதான் இருக்கிறது. கடவுள் உங்களுக்கு மனிதனாக தோன்றுகிறார். ஆனால் இயற்கையில் ஒரு தடவை நிகழ்வது முன்பும் நடந்திருக்க வேண்டும், பின்பும் நடக்கும். நியதியால் கட்டுப்படாத எதுவும் இயற்கையில் கிடையாது. எனவே ஒருதடவை நடப்பது நடந்துகொண்டேதான் இருக்கவேண்டும், நடந்து கொண்டேதான் இருந்திருக்கும்.

—-சுவாமி விவேகானந்தர்

எழுந்திரு விழித்திரு(ஞான தீபம்) 7  பக்கம் 287-289

Read Full Post »

கடவுள் நமக்குத் தேவையா?

 

Kadavul part 5

பாகம் 4:

பாகம் 4 இன் தொடர்ச்சி:

அன்பு, அன்பையே பிரதியாகத் தருகிறது. நீங்கள என்னை வெறுக்கீரிகள், நான் உங்களை நேசிக்கத் தொடங்கினாலும் நீங்கள் என்னை வெறுக்கலாம். ஆனால் நான் தொடர்ந்து அன்பு செலுத்தினால், ஒரு மாதத்திலோ ஓராண்டிலோ கண்டிப்பாக நீங்கள் என்னிடம் அன்பு காட்டவே செய்வீர்கள். இது மனஇயல் கண்ட உண்மை. மறைந்த கணவனை அன்புமிக்க மனைவி நேசிப்பதுபோல், நாம் இறைவனை நேசிக்க வேண்டும். அப்போது நாம் அவனைக் காண்போம். நூல்களும் சரி, விஞ்ஞானங்களும் சரி நமக்கு எதையும் கற்பிக்காது. நூல்களைப் படித்தால் கிளிப்பிள்ளைகள் ஆவோம்; நூல்களைப் படித்தால் யாரும் அறிஞராவதில்லை.அன்பைப் பற்றிய ஒரு வார்த்தையின் பொருளை ஒருவன் அறிந்தால் போதும், அவன் அறிஞானாகிறான். எனவே அன்பைப் பெரும் ஆசையை முதலில் வளர்க்க வேண்டும்.

‘கடவுள் நமக்கு தேவையா?’ இதனை நாள்தோறும் நம்மை நாம் கேட்டுக்கொள்வோம். மதத்தைப்பற்றிப் பேசும்போது, குறிப்பாக உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களுக்கு கற்பிக்கும்போது, இந்தக் கேள்வியைக் கேட்போம். பல நேரங்களில் நமக்கு நாமே, ‘கடவுள் எனக்குத் தேவை இல்லை, உணவுதான் தேவை’ என்றுதான் உணர்கிறோம். சிறிது உணவு கிடைக்காவிட்டால் நான் பைத்தியமாகிவிடுவேன். ஒரு வைரமாலை கிடைக்கவில்லை என்றால் பெண்களுள் பலருக்குப் பைத்தியம் பிடித்துவிடும். ஆனால் அதே ஆசையை, கடவுளை அடைவதற்கு அவர்கள் கொள்வதில்லை; உலகில் உள்ளதான ஒரே உண்மையை அவர்கள் உணர்வதில்லை. எங்கள் நாட்டில் ஒரு பழமொழி உண்டு—– ‘நான் வேடனாக இருந்தால், காண்டாமிருகத்தை வேட்டையாடுவேன். கொள்ளைக்கரானாக இருந்தால் அரசனின் பொக்கிஷத்தை கொள்ளையடிப்பேன். பிச்சைக்காரர்களிடம் களவாடுவதாலும், எறும்புகளை வேட்டையாடுவதாலும் என்ன பயன்?’ எனவே அன்பு செலுத்த விரும்பினால் இறைவனிடம் அன்பு செலுத்துங்கள். இந்த உலகைப் பற்றி நமக்கென்ன கவலை?

நான் ஒளிவுமறைவின்றிப் பேசுவேன், ஆனால் எல்லோருக்கும் நன்மையை விரும்புபவன். உங்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன். நான் உங்களைப் புகழ்ந்து பேச விரும்பவில்லை. அது என் வேலையும் அல்ல. நீங்கள் என் குழந்தைகள்  போன்றவர்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். இந்த உலகமே முழுப்பொய். உலகின் ஆச்சாரியர்கள் அனைவரும் இதை உணர்ந்துள்ளனர். கடவுளின் வழியாக அல்லாமல் இந்தப் பொய்யான உலகத்திலிருந்து தப்ப வேறு வழி இல்லை. அவரே நமது வாழ்க்கை லட்சியம். மாறாக இந்த உலகத்தை நமது லட்சியமாகக் காட்டுகின்ற கருத்துகள் அழிவையே தருபவை. இந்த உலகத்திற்கும், இந்த உடலுக்கும் உரிய பயனுண்டு; அதாவது இறைவனை அடைய ஒரு  சாதனம் என்கிற இரண்டாம் பட்சச் சிறப்பு உண்டு. ஆனால் உலகமே லட்சியமாகிவிடக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக, அடிக்கடி நாம் உலகை லட்சியமாகக் கொண்டு , கடவுளைச் சாதனமாக கொள்கிறோம். மக்கள் கோயிலுக்கு சென்று ‘இறைவா! எனக்கு இவற்றையெல்லாம் தருவாய்! எம்பெருமானே, என் நோயைத் தீர்ப்பாய்!’ என்றெல்லாம் முறையிடுவதைக் காண்கிறோம். அவர்கள் ஆரோக்கியமான நல்ல உடலை விரும்புகின்றனர். அதைக் கொடுப்பதற்காக யாரோ ஒருவர் எங்கோ உட்கார்ந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு, அவரிடம் சென்று பிரார்த்திக்கின்றனர். மதம் என்பதைபற்றி இத்தகைய கருத்தைக் கொண்டிருப்பதைவிட நாத்திகனாக இருப்பதே சிறந்தது.

நான் கூறியதுபோல் இந்த பக்திதான் மிக உயர்ந்த லட்சியம். பலகோடி ஆண்டுகளுக்குப் பிறகாவது நாம் இதை அடைவோமா, மாட்டோமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நமது மிக உயர்ந்த லட்சியமாக அதையே கொள்ள வேண்டும்; நமது புலன்களும் அந்த மிக உயர்ந்ததையே நாடும்படிச் செய்ய வேண்டும். அந்த அறுதி நிலையை அடைய முடியவில்லை என்றாலும் அதன் அருகிலாவது செல்ல வேண்டும். உலகின் வாயிலாகவும், புலன்கள் மூலமாகவும் படிப்படியாக நாம் இறைவனை அடையப் பாடுபட வேண்டும்.

 -சுவாமி விவேகானந்தர்……..

 

~~கடவுள் நமக்கு தேவையா?  என்ற தலைப்பு  முற்றிலும் முடிந்தது .~~

Read Full Post »

கடவுள் நமக்குத் தேவையா?

 

Kadavul part 4

 

பாகம் 3:

பாகம் 3 இன் தொடர்ச்சி:

கடவுள் உண்டு என்றோ இல்லை என்றோ நூல்களை எழுதுவதால் என்ன பயன்? கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி பெரும்பாலோர் கவலைப் படுவதே இல்லையே.

இங்குள்ள மக்களுள் பெரும்பாலோர் காலையில் எழுந்ததும் சிற்றுண்டி அருந்தச் செல்கின்றனர். அதை உண்ணவோ, உடை அணிந்துகொள்ளவோ கடவுள் வந்து உதவி செய்வதில்லை. பின்னர் வேலைக்குச் சென்று நாள்முழுவதும் உழைத்துப் பணம் சம்பாதிக்கிறான். இரவில் சாப்பிடுகிறான். பிறகு உறங்கச் செல்கிறான். கடவுளைப் பற்றியே சிந்திக்காமல் ஒரு எந்திரம்போல் செயல்படுகிறான். அப்படி ஒருவர் தேவை என்றும் அவன் உணர்வதில்லை. பின்பு ஒரு நாள் மரணம், ‘வா’ என்று அழைக்கின்றது. அப்போது, ‘சிறிது காத்திரு. எனக்கு இன்னும் சிறிது காலம் தேவை; என் மகன் இன்னும் சற்று பெரியவனாகட்டும்’ என்கிறான். ஆனால் மரணமோ, ‘உடனே வா’ என்று கூவுகிறது. இப்படியே எல்லோம் போய்க் கொண்டிருகின்றன. பாவம், மனிதனும் இப்படியே வாழ்கிறான் அவனுக்கு நாம் என்ன சொல்ல முடியும்? இறைவனே அனைத்திலும் மிக மேலானவன் என்று அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை அவன் முற்பிறவியில் ஒரு பன்றியாக  இருந்து இப்போது சற்று உயர்ந்து மனிதனாகப் பிறந்திருக்ககூடும்.

ஆனால் இத்தகையோர் மட்டுமே உலகில் இருகிறார்கள என்றில்லை. சிறிது விழிப்புணர்வு பெற்ற சிலரும் இருக்கவே செய்கிறார்கள். துன்பம் வருகிறது, நாம் மிகவும் நேசிக்கின்ற ஒருவர் இறக்கிறார்; எதைப் பெறுவதற்காக நம் ஆற்றல் அனைத்தையும் செலவிட்டோமோ, எதற்காக உலகனைத்தையும் வஞ்சித்தோமோ உலகனைத்தையும் என்றல்ல, சொந்த சகோதரனைக்கூட வஞ்சிக்கத் துணிந்தோமோ, எத்தனையோ கொடிய இன்னல்களையும் அவருக்கு இழைக்கத் துணிந்தோமோ அது திடிரென்று மறைந்துவிடுகிறது; நம்மீது பேரிடிவிழந்தது போலாகிறது. அப்போது நம் இதய ஆழத்திலிருந்து ஒரு குரல் எழுகிறது; ‘இதற்கு பின் என்ன?’ என்று அது கேட்கிறது. எந்த மகனுக்காகத் தானும் பட்டினி கிடந்து, பிறரையும் ஏமாற்றி வந்தானோ, அந்த மகன் ஒருவேளை இறந்துவிடுகிறான். அந்தப் பேரிடியால் அவன் விழிப்புணர்வு பெறுகிறான். எந்த மனைவியை அடைய அவன் வெறிபிடித்த காளையைப் போல் எல்லோரிடமும் முட்டிமோதிப் போனானோ, யாருக்காகப் புது ஆடைகளும், நகைகளும் வாங்கப் பணம் சேர்த்து வைத்தானோ, அவள் ஒருநாள் திடிரென்று இறந்து போகிறாள். பிறகு என்ன? சில வேளைகளில் மரணம் வருகிறது. அது எவ்வித அதிர்ச்சியையும் தராமலே போகிறது. ஆனால் மிகவும் அரிதாகவே அவ்வாறு நிகழ்கிறது.

நம் பொருள் கைவிட்டு நழுவும்போது, நம்முள் பெரும்பாலோர், ‘இனி என்ன?’ என்று பதறி ஓலமிடுகிறோம். நாம் புலன்களை எப்படி பற்றிக்கொள்கிறோம்! இதனால்தான்  துன்பபடுகிறோம். ஆற்றில் முழ்கும் ஒருவன், பிடித்துக்கொள்ள வேறு ஒன்றும் கிடைக்காதபோது ஒரு துரும்பைப் பற்றிக்கொண்டு தன்னைக் காப்பற்றிக் கொள்ள முயல்கிறான். சாதாரணமாக மனிதனும் இவ்வாறே தனுக்கு எதிரில் முதலில் எது கிடைக்கிறதோ அதைப் பற்றிக்கொள்கிறான். அது காப்பற்றாதபோது யாரவது தனக்கு உதவி புரிய வேண்டுமென கெஞ்சுகிறான். எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்த பிறகுதான் உயர் விஷயங்களைப்பற்றி நினைக்கிறான். இந்த பக்திதான் ஆன்மிகம்.

ஆனால் இது பெரும்பான்மையோருக்கு உரியது அல்ல. அது முடியாத காரியம். முழுங்காலிடுவதும் எழுவதும் அமர்வதும் பெரும்பாலோருக்கு தக்கனவாக இருக்கலாம். ஆனால் ஆன்மிகம் என்பது ஒரு சிலருக்கே. ஒவ்வொரு நாட்டிலும் எதோ ஒருசிலரே ஆன்மிகவாதிகளாக இருக்க முடியும். பிறரால் முடியாது. அவர்கள விழிப்புணர்வு பெறாதவர்களாக இருப்பது தான் அதற்கு காரணம். அதை அவர்கள் விரும்பவதும் இல்லை. முதலில் தேவையானது இறைநாட்டம். ஆனால் பொதுவாக நாம் கடவுளை தவிர மற்ற எல்லாவற்றையும் நாடுகிறோம். ஏனெனில் நமது சாதாரண தேவைகளைப் புற உலகம்தான் நமக்குத் தந்துகொண்டிருகிறது. நமது தேவைகள் புற உலகைத் தாண்டி செல்லும்போது தான் உள்ளேயிருந்து, அதாவது இறைவனிடமிருந்து நாம் உதவியை எதிர்ப்பார்க்கிறோம். நமது தேவைகள் இந்த பிரபஞ்சத்தின் குறுகிய வட்டத்திற்குள் இருக்கும்வரையில் கடவுளின் தேவை நமக்கு இருப்பதில்லை. இந்த உலகில் உள்ளவற்றை அனுபவித்து சலிப்படைந்த பிறகுதான், இதனை கடந்த ஒன்றின் உதவியை எதிர்பார்க்கிறோம். தேவை இருந்தால்தான் உதவி கிடைக்கும். இந்த உலகமாகிய குழந்தை-விளையாட்டை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்துவிடு. அதன் பிறகுதான் இதற்கு அப்பால் இருக்கின்ற ஒன்றின் தேவை உனக்கு ஏற்படும்.அதுதான் ஆன்மிகத்தின் முதற்படி.

வெறும் நாகரிகமான ஒருவகை மதம் தோன்றியுள்ளது. என் நண்பரின் விருந்தினர் அறையில் மற்ற பொருட்களுடன் ஜப்பானிய ஜாடி ஒன்றும் உள்ளது. அது நாகரிகமாக இருப்பதால் பல ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ளதாக இருந்தாலும், நானும் அதுபோல் ஒன்று வாங்கியாக வேண்டும். அவ்வாறே நாகரிகத்திற்காக மதத்தைப் பின்பற்றிக் கோவிலுக்கு செல்கிறேன். பக்தி இத்தகையோருக்கானது அல்ல. உண்மையான ‘தேவை’யிலிருந்துதான் பக்தி பிறக்கிறது. எது இல்லாமால் நாம் உயிர் வாழ முடியாதோ, அதுதான் ‘தேவை’. மூச்சு தேவை, உணவு தேவை, உடை தேவை. இவை இல்லாமல் உயிர்வாழ முடியாது. ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது கூட அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று சிலவேளைகளில் நினைக்கிறான்—அது தவறு. கணவன் இறந்துவிட்டால், அவனில்லாமல் தான் வாழ இயலாது என்று மனைவி கருதுகிறாள்; ஆனால் அவள் வாழ்வே செய்கிறாள். இதுதான் ‘தேவை’ என்பதன் ரகசியம்; அது இல்லாமல் நாம் வாழ முடியாது, அது நம்குக் கிடைக்க வேண்டும், அல்லது நாம் இறந்துவிடுவோம்.

உரிய கால வரும்போது கடவுளைப் பற்றியும் நாம் இப்படி நினைக்கிறோம். அதாவது இந்த உலகிற்கு அப்பாற்ப்பட்ட ஒன்றை, ஜட சக்திகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றின் தேவையை நாம் உணர்கிறோம். அப்போதுதான் நாம் பக்தர்கள் ஆகிறோம். ஒரு நொடிப் பொழுதாயினும் சரி, மேகங்கள் மறைந்து பரம்பொருளைப் பற்றிய காட்சி கிடைக்கும்போது, அற்ப இன்பங்களெல்லாம் கடலின் சிறு துளியாக தோன்றும்போது, ‘என்ன இந்த அற்ப வாழ்க்கை !’ என்ற எண்ணம் பிறக்கிறது. அப்போதுதான் ஆன்மா வளர்கிறது; கடவுளின் தேவையை உணர்கிறது; அவனை அடைந்தே தீர வேண்டும் என்று துடிக்கிறது.

எனவே ‘நமக்கு வேண்டியது என்ன? எனபதே முதற்படி. இறைவன் நமக்கு வேண்டுமா ?’ இந்தக் கேள்வியை தினமும் நமக்கு நாமே கேட்டுக் கொள்வோம். பிரபஞ்சத்திலுள்ள எல்லா நூல்களையும் நாம் படிக்கலாம். ஆனால் பேச்சுத் திறமையினலோ, மதி நுட்பத்தினலோ, பற்பல கலைகளைக் கற்பதலோ இந்த அன்பு மலர்வதில்லை. இறைவனின் தேவையை உணர்பவர்களுக்கே இந்த அன்பு கிடைக்கும். இறைவன் அவர்களுக்கே காட்சி அளிக்கிறான்.

—சுவாமி விவேகானந்தர்….

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும் …..

Read Full Post »

Older Posts »