Feeds:
Posts
Comments

Archive for July, 2012

கீதை சொல்லும் பாதை!

         ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன பிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார். பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும் வேகமாக வர வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் அவனைத் தண்ணீர் எடுத்து வர அனுப்பினார்.

இந்த முறை சிறுவன் வேகமாக ஓடி வந்தான்; ஆனாலும், வீடு சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது. கூடையில் தண்ணீர் கொண்டு வருவது சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சிறுவன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் தாத்தாவோ, எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய் என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார். அந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. போங்க தாத்தா, இது பயனற்ற வீண் வேலை! என்றான், மூச்சு வாங்கியபடி. அவனைப் பார்த்து புன்னகைத்த தாத்தா, நீ இதைப் பயனற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும் என்றார். பையன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காணப்பட்டது! தாத்தா சொன்னார்: குழந்தாய்! கீதை படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. உனக்கு அர்த்தம் புரியாமல் இருக்கலாம்; நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், நீ உள்ளும் புறமும் தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாகிவிடுவாய்! இது கீதாச்சார்யனான கிருஷ்ண பரமாத்மா, நம் வாழ்வில் நிகழ்த்தும் அற்புதம்!

***********

 

 

 

Read Full Post »

கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை!

 

ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று… ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.

துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன். அப்போது…

கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”

கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…

“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”

“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.

“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன். அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது. ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.

இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.

“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.

ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது. அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.

“இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது. பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.

எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.

மேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன். மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.

“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”

நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.

“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.

“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா?” என்று வியந்தேன் நான்.

“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.

நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன். மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை

நம்பிக்கை , நம்பிக்கை , நம்மிடத்தில் நம்பிக்கை ; நம்பிக்கை , நம்பிக்கை கடவுளிடத்தில் நம்பிக்கை ; இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும். உங்கள் முப்பத்துமுன்று கோடி புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அந்நிய நாட்டவர் புகுத்தியுருக்கும் இதற தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனால் உங்கள் இடத்து நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு கதி மோட்சம் இல்லை .

–சுவாமி விவேகானந்தா .

Read Full Post »

ஆடி மாதம் வைக்கப்படும் கூழ்-???

 

நம்முடைய  முன்னோர்கள் உருவாக்கிய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் காரணங்கள் பல உண்டு..
அது போல், ஆடி மாதம் வைக்கப்படும் கூழிற்கும் காரணம் உண்டு.. தினத்தந்தி யின் ஆன்மீக இதழில் இருந்து…
சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுகிறது. அதன்படி ஆடி மாதத்தில் சூரியக் கதிர்கள் திசை மாறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர் காலமாக மாறுகிறது.. இத்தருணத்தில் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி..
அதன்படி ஆடி ஆடிமாதத்தில் சின்ன அம்மை, தட்டம்மை அதிக அளவில் பரவும். அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு கூழ் உற்றும் வழக்கத்தை கொண்டு உள்ளனர்.
இந்த கூழ் உடலை குளிர்விக்க கூடிய உணவு மற்றும் அருமருந்தும். இரும்பு சத்தும் ,கால்சியம், நார்ச்சத்து ஆகியவை இதில் உள்ளது..
அம்மைகளில் இருந்து காக்கும் கடவுளாக நாம் நம்புவது மாரியம்மனை. இவரை வணங்கி கூழ் உற்றுவதின் மூலம் அம்மை உஷ்ணத்தில் இருந்து காத்துக்கொண்டுள்ளனர்.  மேலும், கூழ் பானையை சுற்றி மஞ்சளும் வேப்பிலையும் வைப்பார்கள்.. இவையும் கிருமி நாசியே.. நோய் பரவாமல் தடுக்கும்.
 நம் முன்னோர்களின் பழக்கங்கள் ஏதும் கண்மூடித்தனமானது அல்ல. காரணங்களை அலசினால் விளக்கங்கள் ஆச்சரியமூட்டும்..
நன்றி தினதந்தி

Read Full Post »

வேதம் ஒரு புத்தகம் அல்ல !!!

தமிழில் வேதத்தை “எழுதாக் கிளவி” என்பார்கள். அதாவது வேதத்தை எழுதி வைத்துப் படிக்க  மாட்டார்கள். வேதத்தைப் பாராயணம் செய்வார்கள். சொல்லும் விதம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுக்கு கவனம் செலுத்துவார்கள். அப்படி உச்ச்சரிக்கபப்டும் ரிக் வேதத்தையே பாட்டாகப் பாடும்போது, இறைவனே நேரில் வருவான் என்பது வேதத்தின் சிறப்பு. இறைவனைக் கவர்வது, வேதக் கருத்தாக இருப்பின், ரிக் வேதம் சொன்னால் கூட இறைவன் வர வேண்டும். ஆனால் அதை சாம கானமாக  இசைக்கப்படும்போது, அந்த  கானத்துக்குத் தான் இறைவன் கவரப் படுகிறார் என்றால், அங்கே பொருள் முக்கியமல்ல, ஓசை நயமே முக்கியம் என்று தெரிகிறது. அமிர்த வர்ஷிணி போன்ற ராகங்கள் இசைக்கப் படும்போது, இயற்கையே கவரப்பட்டு, மழை பொழிகிறது என்று கேள்விப்படுகிறோம். ஆக, ஓசையானது  ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் வேண்டும் பலன்களைத் தருகிறது என்று தெரிகிறது.

வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம். வேதத்தின் ஆதாரம் அதன் ஓசை நயத்தில் இருப்பதால்தான் அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வேதம் சொல்வதை ‘வேத கோஷம்’ என்பார்கள். கோஷ்டியாக, கூட்டமாகச் சொல்ல வேண்டும். வேதத்தின் ஓசை நயத்தால், பலன் கிடைப்பதை அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சியில் அறிந்துள்ளனர்.

அதிராத்திரம் என்னும் ஹோமத்திலும் அப்படிப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள்  நடந்தன.

வேத மந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் யாகம் என்பதே, ஒரு விஞ்ஞானக் கூடத்தில் செய்யப்படும் பௌதிக அல்லது வேதியல் மாற்றம் போலத்தான். இன்னின்ன மாற்றம் அலல்து பலன் வேண்டுமென்றால், இன்னின்ன வகையில் ஹோமமும், வேத மந்திரம் ஓதப்படுதலும் வேண்டும் என்பதே வேதத்தின் ஆதார பயன். இந்த மந்திரங்களில் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி என்று பல பெயர்களும் வரும். அர்த்தம் என்று பார்த்தால் பல இடங்களிலும் கோர்வையாக அர்த்தம் இருக்காது. அங்கே அர்த்தத்துக்கு முக்கியத்துவம் இல்லை. ஓசை நயமோ, அதிர்வலைகளோ அல்லது அது போன்ற வேறு எதற்கோ தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்து மதத்தை வழி நடத்திச் சென்ற மூன்று ஆச்சர்ய புருஷர்களும்  வேதத்தை எழுதி, அதற்குப் பொருள் சொல்லவில்லை. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. தாங்கள்தான் அதைச் செய்த ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளவும்  இல்லை. ஏனென்றால் தியானத்திலும், தவத்திலும் அமிழும் போது தானாகவே அவர்கள் வாயில் புறப்பட்ட சொற்களே வேதம் ஆயிற்று. அவற்றை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்ககச்க் செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.

வேதம் சொல்லும் கருத்து என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால், தவம் செய்தவர்களையும், ரிஷிகளையும், ஞானிகளையும் நாடிச் சென்று அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். அப்படி எழுந்தது உபநிஷத்துக்கள். வேதம் சொல்லும் ஞானத்தை உபநிஷத்துக்கள் மூலமாகத் தான் அறிய முடியும். அப்படித்தான் அறிந்தனர். வேதம், உபநிஷத்துக்கள் ஆகிய இவை இரண்டுமே செவி வழியாக அறியப்படவே, இவற்றுக்கு சுருதி என்று பெயர். இவற்றை எழுதிப்  படிக்கவில்லை.

வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவியது. லௌகீக விஷயங்களுக்கு அவை தேவை இல்லை. குறுந்தொகையில் (156) ஒரு பாடல் வரும். பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்னும் பாண்டிய சேனாதிபதி ஒருவர் அதைப் பாடியுள்ளார். அதில் தலைவன், தலைவியைப் பிரிந்து வருந்துவான். அப்பொழுது அங்கே ஒரு பார்ப்பனர் வருகிறார். கையில் புரச மரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்டம் என்னும் கோலுடனும், கமண்டலத்துடனும், விரத உணவை உண்பவராகவும்  அந்தப் பார்ப்பனர் சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் தன் பிரிவாற்றாமைக்கு ஒரு வழி கேட்கலாமா என்று தலைவன் எண்ணுகிறான். அப்புறம் தோன்றுகிறது, இவரைக் கேட்டு என்ன பயன் என்று.தலைவன் சொல்லுகிறான், பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, உன்னுடைய எழுதாக் கல்வியில் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்து இருக்கிறதா? இல்லையே! என்கிறான்.

ரிக் வேதத்தை ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஆரிய – திராவிடப் போராட்டத்தை நம்பும் நம் திராவிடத் தலைவர்கள், இந்தப் பாடலை மறந்தது ஏன்?வேதமே எழுதாத கல்வி.அந்தக் கல்வியில்  காதல், லௌகீகம் போன்றவற்றைப் பற்றி ஒன்றும் இல்லை.போரும், அதில் வெற்றியும் பற்றி இருந்தால் இந்த சேனாதிபதி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருப்பானா?அது ஆரிய – திராவிடக்  கதை  சொல்லியிருந்தால்,   தமிழர்கள் அதை அன்றே அறிந்திருக்க மாட்டார்களா?

வேதம் என்பது படித்துப் பொருள் சொல்ல அல்ல. அது கதைப் புத்தகமும் அல்ல.அது சரித்திரப் புத்தகமும் அல்ல, அதிலிருந்து நம் சரித்திரத்தைத்  தெரிந்து கொள்ள.தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருக்குறளே வேதம் எப்படிப்பட்டது, எதற்குப் பயன் படுவது என்பதற்குச் சாட்சி.பொய்யா மொழி என்று திருக்குறளைப் போற்றும் சங்கப் புலவர் வெள்ளி வீதியார், அது செய்யா மொழிக்கு  (யாராலும் இயற்றப்படாத வட மொழி வேதம் ) திரு வள்ளுவர் மொழிந்த பொருள் என்கிறார். (திருவள்ளுவ மாலை).அந்த செய்யா மொழியும் சரி, பொய்யா மொழியும் சரி, ஆரிய- திராவிடப்  போராட்டத்தைச் சொல்லவில்லை.   திருக்குறள் இந்திய சரித்திரம் பற்றிச்  சொல்லவில்லை.
அது போல வேதமும் சரித்திரப் புத்தகம் அல்ல.

வேதம் உதவுவது ஆத்ம ஞானத்துக்கு, இறைவனை அடைவதற்கு. 
அதைப் பிரித்து பொருள் சொல்வது என்பதை ஐரோப்பியரே செய்தனர்.

அவர்களுக்கு இந்திய சரித்திரம் வேண்டுமென்றால், புராண இதிகாசங்களை நாடி இருக்க வேண்டும். அவை தெள்ளத் தெளிவாக நம் பழைய சரித்திரத்தைக் கூறுகின்றன. அவற்றில் இந்த ஆங்கிலேயருக்கும் ஐரோப்பியருக்கும் சுவாரசியம் இல்லை. வேதம் என்பது குறிப்பிட்ட  வாழ்க்கை முறைகளைப்பின்பற்றுபவர்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதியை உடைத்து அவர்கள் அதைப் படித்ததினால் வந்த வினை இன்றும் நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது, காரணமில்லாமல் அந்த நாளில் அப்படிப்பட்ட  நியதிகள் போடவில்லை என்று புரிகிறது. நல்லவன் கையில் வேதம் அமிர்தம். அதுவே சுயநலமிக்க வல்லவன் கையில் ஒரு அம்பாகி விடுகிறது

Read Full Post »

கிறிஸ்தவர்கள் திருடும் இந்து சடங்குகள் !

 

எதிரிகளை வீழ்த்துவதற்கு இரண்டு வழிகள் உண்டு முதலாவது நேருக்கு நேராக நின்று தாக்குதல் நடத்தி எதிரி என்று ஒருவன் இருந்தான் என்ற சுவடேயே அழித்துவிடுவது அடுத்ததாக நேரடி தாக்குதலுக்கு சக்தி இல்லாத போது தோள்மீது கைபோட்டு நயவஞ்சக வார்த்தைகள் பேசி கபட வேடமாடி துரோக வழியில் எதிரியை பூண்டற்று போகவைப்பது

ஏசுவை நம்புங்கள் அவர் மட்டுமே பரலோக ராஜ்யத்திற்கு அழைத்து செல்லும் வல்லமை படைத்தவர் என்று கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வதை ஒரு வகையில் யாரும் குறைசொல்ல முடியாது என் கடையில் விற்கும் பொருட்கள் மட்டுமே உயர்தரமானது மற்றவைகள் மட்டமானவைகள் என்று ஒரு வியாபாரிக்கு தனது பொருளை சந்தை படுத்த உரிமை இருப்பது போல இதையும் விட்டு விடலாம் ஆனால் காலகாலமாக மக்கள் பயன் படுத்தும் ஒரு பொருளை போலவே போலியாக ஒன்றை செய்து அதை விற்பனைக்கு எந்த வியாபாரி கொண்டு வந்தாலும் அதை வர்த்தகம் என்று எடுத்துக்கொள்ள முடியாது போலி என்றும் ஏமாற்று வேலை என்றும் வேண்டுமானால் அழைக்கலாம்

இந்து தத்துவங்களோடு போட்டி போட்டு வெல்ல முடியாது என்பதற்காக இந்து மத நடைமுறைகளை கிறிஸ்தவ மயமாக்க இன்று திட்டமிட்டு பல காரியங்கள் நடந்துவருகிறது.

பாரத திருநாட்டில் காவி நிறம் என்பது இந்துக்களை குறிப்பது விரத காலத்திலும் சன்யாச காலத்திலும் இந்துக்கள் அணிவது என்று நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் இன்று கிறிஸ்தவ பிரசங்கிகள் பலர் காவி ஆடை அணிகிறார்கள் இந்துக்களுக்கே உரித்தான துளசி மாலைகளையும் ருத்தாரச்ச மணிகளையும் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் கிறிஸ்தவர்கள் பயன்படுத்துகிறார்கள் பழனிக்கும் திருமலைக்கும் பக்தர்கள் பாதயாத்திரை செய்வது போல வேளாங்கண்ணி போன்ற கிறிஸ்தவ ஸ்தலங்களுக்கும் கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை போகிறார்கள் அப்படி போவது அவர்கள் விருப்பம் என்பது ஒருபுறம் என்றாலும் அப்போது அவர்கள் பயன்படுத்தும் காவி ஆடை என்பது முழுக்க முழுக்க இந்துமதத்தை தனதாக்கி கொள்ளும் பெராசையாகும்

இந்து ஆலையங்களில் திருவிளக்கு வழிபாடு நிலவிளக்கு வழிபாடு என்பவைகள் தொன்று தொட்டு நடந்து வருவதை சிறிய குழந்தை கூட அறியும் இந்து பெண்கள் இத்தகைய வழிபாடுகளில் கலந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் ஏனென்றால் ஜோதி வடிவாக இருக்கும் அன்னையை வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்ப இருட்டுகள் மறைந்து விடும் என்பது அவர்களது நம்ப்பிக்கை

இதை திருவிளக்கு வழிபாட்டை பல சிரியன் கிறிஸ்தவ சபைகள் இன்று நடத்துகின்றன ஒவ்வொரு சிரியன் கிறிஸ்தவ வீட்டில் இந்த விளக்கு வழிபாடு தினசரி நடத்த சொல்லி மத பிரச்சாரர்கள் வலியுருத்திகிறார்கள் இதற்கென்றே கிறிஸ்தவ மயமாக்க பட்ட குத்துவிளக்குகள் கடைகளில் விற்பனையாகின்றன நம் வீட்டில் வழிபாட்டிற்கு பயன்படுத்தும் குத்துவிளக்குகளை நன்கறிவோம் அவற்றின் மேல்பகுதியில் ஓம் என்ற எழுத்தோ அல்லது சிவ வைஷ்ணவ சின்னங்களோ இருக்கும் ஆனால் கிறிஸ்தவர்கள் அந்த சின்னத்தை மட்டும் எடுத்துவிட்டு அதில் சிலுவையை வைத்து விடுகிறார்கள்

பல கத்தோலிக்க தேவாலையங்களில் அல்லது குருசடி என்று அழைக்கப்படும் புனிதர்களின் வழிபாட்டு கூடங்களில் இந்து மத சடங்குகள் போல் சிகை நீக்கி காது குத்துதல் கிடா வெட்டி சோறு போடுதல் போன்றவைகள் சர்வ சாதரணமாக நடக்கிறது இப்படி பட்ட வழிபாட்டு விருந்துகளை அசனம் என்ற பெயரில் அவர்கள் அழைக்கிறார்கள் கேரளாவில் உள்ள பல கத்தோலிக்க தேவாலயங்களில் குத்து விளக்கு ஏற்றப்படுவது கட்டாயமாகவே இருக்கிறது

பொதுவாக நமது குழந்தைகளை விஜய தசமி அன்று பாடசாலைக்கு அனுப்புவது நம் தாத்தா முப்பாட்டன் காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கிறது ஆசிரியரின் மடி மீது குழந்தையை உட்கார வைத்து நெல் மீது ஹரி ஓம் என்று எழுதவைத்து கல்வியை ஆரம்பிப்பது நமது வழக்கம் இதே மரபை கேரளாவில் உள்ள பல கிறிஸ்தவர்கள் தமது தேவாலயங்களில் நடத்த துவங்கி விட்டார்கள் அவர்களும் விஜய தசமி அன்று குழந்தைகளுக்கு கல்வி துவங்கும் சடங்கை செய்கிறார்கள்

முன்பெல்லாம் அயல்நாட்டிலிருந்து பெறுகின்ற பணத்தை வைத்து நடத்துகின்ற தொண்டு நிறுவனங்களுக்கு கருணை இல்லம் என்கின்ற மாதிரியான பெயர்களை வைப்பார்கள் ஆனால் இப்போது காலம் மலையேறி விட்டது கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இந்து மதத்திற்கே உரிய ஆசிரமம் என்ற வடமொழி பெயரை சூட்டி கொள்கிறார்கள் இதை விட ஒருபடி மேலே போய் இந்து மத வேதங்களான சதுர்மறையில் ஏசுவின் மறுவருகையை பற்றி குறிப்பு இருக்கிறது ஏசு தான் ஒரே தேவ குமாரன் என்று சொல்லபட்டிருக்கிறது என்றெல்லாம் கடுமையான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்

நிலைமை இப்படியே போனால் ஏசுதான் சிவன் ஏசுதான் பெருமாள் கன்னி மரியாள் தான் ஆதிபராசக்தி திருப்பதி கோவில் பாலன் ஏசுவின் புனித பூமி என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் இதை நான் விளையாட்டாக சொல்லவில்லை மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பல கிறிஸ்தவ தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஏசுநாதரை ஈஸ்வரன் என்று குறிப்பிடுகிறார்கள்

நாம் நினைப்பது போல ஈஸ்வரன் என்ற வார்த்தை சிவனை மட்டுமே குறிப்பது அல்ல ஒட்டு மொத்தமான இறைவனையும் ஈஸ்வரன் என்ற வார்த்தையில் அழைக்கலாம் ஆனால் அந்த ஈஸ்வரன் என்ற வார்த்தை இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது இந்து கடவுளை மட்டுமே அப்படி அழைக்க முடியும் ஆனால் அதையும் கிறிஸ்தவ பாதிரிகள் விட்டு வைக்க வில்லை தங்களுக்கே உரித்தான வார்த்தை என்பது போல் சர்வ சுகந்திரமாக பயன்படுத்தி வருகிறார்கள்

சில கலாங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏசுவை அல்லா என்று அழைத்தார்கள் அல்லா என்பது முழுமுதல் கடவுளை குறிக்கும் வார்த்தை என்பதில் சந்தேகமில்லை ஆனால் அதை காலகாலமாக இஸ்லாமியர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் அதை மற்றவர்கள் தங்கள் கடவுளின் பெயராக பயன்படுத்தி கொள்ள எந்த உரிமையும் கிடையாது இதை நன்கு உணர்ந்த மலேயா இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பை காட்டினார்கள் கடேசியில் கிறிஸ்தவர்கள் தவறை ஒப்புக்கொள்ள வில்லை பயந்து போய் பின்வாங்கினார்கள்

ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு அப்படி பட்ட கவலை எதுவுமே கிடையாது இந்து மத கருத்துக்களை எப்படி வேண்டுமானாலும் திருடலாம் திரித்து பொருள் சொல்லலாம் பகவத் கீதையை கூட ஏசுநாதர் தான் உபதேசம் செய்தார் என்று மேடை போட்டு பேசலாம் கேட்பதற்கு இங்கு யாரும் கிடையாது காரணம் அரசாங்கம் கிறிஸ்தவர்களுக்கு சாமரம் வீசும் ஒரு வேலைக்காரனாகத்தான் இருந்து வருகிறது மக்களுக்கும் அதை பற்றி உணர்ச்சி கிடையாது கவலை கிடையாது எது எக்கேடு கெட்டாலும் கவலையில்லை வயிறு நிறைந்தால் போதுமென்று வாய்மூடி கிடைக்கிறார்கள்

யாரவது கிறிஸ்தவர்கள் இந்துக்களின் சம்பிராதயங்களை திருடலாமா என்று கேட்டால் அவன் இந்த சமூகத்தில் மதவாதி பிற்போக்குவாதி அமைச்சர் சிதம்பரத்தின் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் காவி தீவிரவாதி இப்படி ஆயிரம் பட்டங்கள் கட்டி அவனை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள் அதனால் தான் யாரை வேண்டுமென்றாலும் எதை வேண்டுமென்றாலும் கபளீகரம் செய்யலாம் என்று கிறிஸ்தவ பாதிரிமார்கள் சுதந்திரமாக தமது கபட நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்கள்

சமீபத்தில் திருவனந்தபுரம் பத்நாப சுவாமி கோவிலில் பொக்கிசங்கள் எடுக்கப்பட்டதை நாமறிவோம் அந்த பொக்கிசத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கொச்சியை சேர்ந்த ஜேக்கப் மாப்பிளசேரி என்பவர் சுப்ரீம் கோர்டில் மனுதாக்கல் செய்துள்ளார் யாரவது நமச்சிவாய முதலியாரோ சுந்தர பாண்டிய நாடாரோ கிறிஸ்தவ அமைப்புகளில் ஆலயங்களில் குவிகின்ற கோடிகணக்கான பணத்தை அரசாங்கம் எடுத்து கொள்ளவேண்டும் என்று நீதி மன்ற வாசலை மிதித்திருந்தால் காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல அமெரிக்க இங்கிலாந்து கிறிஸ்தவர்கள் கூட அலறி புடைத்து ஆர்பாட்டம் நடத்துவார்கள் ஆனால் இது இந்து கோவில் தானே இந்துக்களின் சொத்து தானே எப்படி போனால் என்ன அதில் நாலு காசு நமக்கு கிடைக்குமா? என்று தான் அரசியல் தலைவர்களும் பார்ப்பார்கள்

இந்துக்கள் தங்களது மத அடையாளங்களை கூட கிறிஸ்தவர்கள் விட்டு வைக்காமல் திருடுவதை இனியும் உணர மறுத்தால் மறந்தால் வீட்டு வாசலில் தலைவைத்து நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கினால் உங்களது கோவணம் கூட நான்தான் தந்தேன் என்று கிறிஸ்தவர்கள் சொல்வதை ஆமாம் போட்டு கேட்டுக்கொண்டு அடிமை வாழ்வு நடத்தவேண்டிய நிலை வரும் நான் கிறிஸ்தவர்களை ஆயுதம் கொண்டு தடுக்க சொல்லவில்லை உங்களது எதிர்ப்பை அதிர்ப்தியை உரத்த குறிலில் சொல்லுங்கள் என்று தான் சொல்கிறேன் இல்லை என்றால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தவன் கதையாக போய்விடும் ஜாக்கிரதை.

Read Full Post »

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்


             கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

நன்றி: http://www.tamilhindu.net/

****************

Read Full Post »

ஆசை படுவது யார்?

 

 

ஆசை படுவது யார்?

என்று நீங்கள் அமைதியாக உட்கார்ந்து சிந்தியுங்கள்.

உங்கள் உடலா?,உங்கள் மனமா?

நிச்சயம் உடலாக இருக்க முடியாது.

ஏனெனில் அது மனம் வழியே செயல்படுகிறது.

பிறகு மனமா?ஆமாம்.

இப்பொழுது அப்படியே இருக்கட்டும்.

மனம் எப்படி செயல்படுகிறது?

உங்கள் இறந்தகால,வருங்கால எண்ணங்களினால்,

அறிந்ததை அடைய ஆவல் கொண்டு உங்களை

அலைய வைக்கிறது.

“இதோ இன்பம்,அதோ இன்பம்” என்று உங்களை

விரட்டிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் ஒன்றை அடைந்தால்,அதில் சலிப்புற்று,

வேறு ஒன்றிற்கு ஏன் ஆசைபடுகிறீர்கள்? என்று

என்றைக்காவது ஆழ்ந்து சிந்தித்து இருக்கிறீர்களா?

இந்த உடலுக்கும் மனதிற்கும் எது ஆதாரம்,

ஏன் மனம் அலை பாய்ந்துக்கொண்டிருக்கிறது

என்று தனிமையாக சிந்தித்து இருக்கிறீர்களா?

அப்படி ஒருவர் சிந்திக்கத் தொடங்கினால்,

உண்மையில் “தான் யார்” என்று விளங்க ஆரம்பிக்கும்.

அது உங்கள் “உயிர்தன்மை” யைத் தவிர

வேறு எதுவும் இல்லை.

அது தன் உணர்வாய்,தன் அறிவாய்,

தன்னையே தேடுகிறது.

ஆனால் அதுவே மனமாகி,படர்க்கை நிலை அடைந்து,

அந்த “தேடுதலை” சாதாரண மக்களிடம்

இந்த உலகத்தில் தேட வைக்கிறது.

தன்னை தானே தேடுவது உண்மைநிலை.

உலகத்தில் தேடுவது பொய்மைநிலை.

இந்த வித்தியாசத்தை ஒருவன் நன்றாக புரிந்துக் கொள்ளவேண்டும்.

Read Full Post »

இந்து மதம் – கேள்வி பதில்

 

ஹிந்துத்துவம் என்பது என்ன?

பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.

ஹிந்து மதம் எப்போது தோன்றியது?

பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.

ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?

பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.

புராணங்கள் உண்மையா பொய்யா?

பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.

புண்ணியம் – பாவம் என்பது என்ன?

பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.

மகாபாரதம் கூறுகிறது –

श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।

परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥

ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |

ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||

“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”

தர்மம் என்பது எது?

பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.

ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?

பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

சோதிடம் உண்மையா?

பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.

“சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?

பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.

தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?

பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?

ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?

பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

Read Full Post »

கொடி காத்த கோமான்

 

               தடையை மீறி ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர் காவலர்கள். அதில் படுகாயம் அடைந்தான் அந்த இளைஞன்.  ‘வந்தே மாதரம்’ என்று கூறியபடி கையில் பிடித்திருந்த தேசியக்கொடியுடன் கீழே சரிந்தான் அந்த இளைஞன். ஒருபுறம் தடியடியால் மண்டை பிளந்து ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது.

உயிருக்கு போராடிய அந்நிலையிலும், கரத்தில் பற்றிய தேசியக்கொடியை அவனது விரல்கள் பற்றியே இருந்தன. மயங்கிச் சாய்ந்த அந்த இளைஞன் பின்னர் மருத்துவமனையில் வீர மரணம் அடைந்தான்.  அவன் வேறு யாருமல்ல. தாயின் மணிக்கொடி காக்க உயிர் துறந்தவர் குமாரசாமி என்று அழைக்கப்பட்ட திருப்பூர் குமரன் தான்.  இறக்கும் தறுவாயிலும் கொடியை விடாத அவரது தேசபக்தியால்தான்  கொடி காத்த குமரன் என்று இன்றும் அழைக்கப்படுகிறார்.

1904ம் ஆண்டு அக். 4ம் தேதி,  தமிழகத்தின் ஈரோடு அருகிலுள்ள சென்னிமலையில்,  ஏழை நெசவாளர் குடும்பத்தில் குமரன் பிறந்தார். போதிய வருவாய் இன்றி  குடும்பம் வறுமையில் வாடியது. எனினும் செம்மையாகவும், கவுரவமாகவும் வாழ்ந்த குமரன், 11 வயது நிரம்பிய ராமாயி என்ற பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார்.

இளம் வயதிலேயே நாட்டுபற்று மிக்கவராகத் திகழ்ந்தார் குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.  கடந்த 1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடியடிகளின் சட்ட மறுப்பு  இயக்கத்துக்கு ஆதரவாக வீரத்துக்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றார் குமரன்.  காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் ‘வந்தேமாதரம்… வந்தே மாதரம்...’ என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ம் ஆண்டு ஜன. 11ம் தேதியாகும்.  மானம் காக்க ஆடை கொடுக்கும் திருப்பூர் நகரில், தேசிய கொடியின் இழுக்கை போக்க உயிர் துறந்தார் குமரன். அவரது மரணம், மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே சுதந்திர வேட்கையை தூண்டியது.

ஆலமரம் கீழே விழும்போது மரம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அதன் அடியில் சிக்கி சிதறிய சிறு செடிகளை எவரும் நினைப்பதில்லை.  நாடு சுதந்திரமடைந்ததன்  நிறைவை நாம் கொண்டாடி மகிழும் வேளையில், திருப்பூர் குமரன் போன்ற உயிர் தியாகம் புரிந்த எண்ணிலடங்காத தியாக உள்ளங்களை நன்றியுடன் நினைவு கூறுவதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.

 வந்தே மாதரம் !!!

Read Full Post »

கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா?

ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான். அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள். வேலையில்லாத இளைஞனுக்கு அந்த நாமத்தைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

“கிருஷ்ணா’ என்ற இந்த வார்த்தையில் என்னதான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான். விடை தெரியவில்லை. அங்கிருந்த பெரியவரிடம், “கிருஷ்ணா! கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே! அதனால் என்ன கிடைத்து விடும்? எனக்கு பசிக்கிறது? உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்.

பெரியவர் அந்த இளைஞனிடம், “கிருஷ்ண நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல, நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்,” என்றார்.

இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும், அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான். ஊருக்கு அடுத்தாற் போல் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்று தனியாக அமர்ந்தான். அவன் வாயில் “கிருஷ்ணா’ என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை. திடீரென்று அந்தப் பக்கம் யாரோ வருவது போல சப்தம் கேட்டதும், ஒரு மரத்தின் மீது ஒளிந்து கொண்டான் இளைஞன்.

ஒரு வழிப்போக்கன் அந்த மர நிழலில் அமர்ந்து, அவன் கொண்டு வந்த கட்டுச் சோற்றை சாப்பிட்டான். அசதியில் அங்கேயே தூங்கி விட்டன். இளைஞனோ கண்ணை மூடியபடி மரத்தில் அமர்ந்தே கிருஷ்ண நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் கண் விழித்துப் பார்த்தவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. இன்னொரு கட்டு சாதத்தை மரநிழலில் மறந்து வைத்து விட்டு வழிப்போக்கன் சென்று விட்டான். கிருஷ்ணநாம மகிமையால் தான் இந்த சாதம் தனக்கு கிடைத்தது என்று எண்ணி வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கினான்.

ஆனால், வந்த வேகத்தில் அவன் அப்படியே நின்றுவிட்டான். எவனோ, வழிப்போக்கன் மறந்து விட்டுப் போன சோற்றைச் சாப்பிடுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. உண்மையில் கிருஷ்ண நாமத்திற்கு மகிமை இருக்குமானால், இந்தச் சாப்பாட்டை சாப்பிடும்படி நிர்ப்பந்தம் ஏற்படும் வரை பட்டினியாகவே இருப்பது என்று முடிவெடுத்தான்.

திரும்பவும் மரத்தின் மீது ஏறி அமர்ந்தான். சூரியன் மறையும் வேளை வந்தது. அப்போது காட்டுப் பாதையில் சில கள்வர்கள் தாங்கள் திருடிய பொருள்களுடன் வந்து மரநிழலில் அமர்ந்து பங்கிட்டுக் கொண்டிருந்தனர். கள்வர் தலைவன், ஜபம் செய்து கொண்டிருந்த இளைஞனைக் கண்டான்.

தங்களை வேவு பார்க்க வந்திருப்பவன் என்று ஆத்திரம் கொண்டு, இளைஞனை அந்த மரத்திலேயே கட்டி வைத்தான்.

அதற்குள் பசியில் இருந்த திருடன் ஒருவன், மரத்தடியில் இருந்த சாப்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். ஆனால், கள்வர் தலைவன், “இந்தச் சோற்றை நாம் சாப்பிடுவது கூடாது. நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன் தான் வைத்திருப்பான். அந்தச் சோற்றை அவனுக்கே கொடுப்போம்!” என்று சொல்லி இளைஞனை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். இளைஞனும் அதை வயிறு நிறைய சாப்பிட்டான்.

இளைஞன் சாப்பிட்ட பிறகும் அவன் சாகாததைக் கண்ட திருடர்கள், உணவில் விஷம் இல்லை என்பதை அறிந்தனர். இளைஞனால் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்தார்கள்.

கள்வர் தலைவன் இளைஞனைக் கட்டிலிருந்து அவிழ்த்து விட்டதோடு இல்லாமல் தன்னிடம் இருந்த பணத்தில் கொஞ்சம் கொடுத்தான். “நம்பிக்கையில்லாமல் கிருஷ்ண நாமம் சொன்னதற்கே இவ்வளவு பலன் கிடைத்ததே’ என்று எண்ணியவன், அழியாத செல்வம் கிருஷ்ண நாமம்தான் என்ற முடிவுக்கு வந்தான்.

காட்டிலிருந்து ஊரில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, திருடன் தந்தப் பணத்தை உண்டியலில் போட்டான். “இனி ஊர் சுற்றமாட்டேன். உண்மையாக பக்தி கொண்டு உழைத்து வாழ்வேன்,” என்று கிருஷ்ணனிடம் சத்தியம் செய்தான். உழைப்பால், பெரும் பணக்காரனும் ஆனான்.

Read Full Post »

Older Posts »