Feeds:
Posts
Comments

Archive for the ‘கிறிஸ்துவ மதம்’ Category

இன்றைய கிறிஸ்துவர்கள்….

ஏசு நாதர் போதனை செய்து கொண்டிருக்கிறார். ஒருவன் அவரிடம் வந்து, ‘நீங்கள் போதிப்பது நன்றாக இருக்கிறது. நிறைநிலையை அடைய அதுதான் வழி என்று நினைக்கிறேன், அதைப் பின்பற்றவும் தயாராக இருக்கிறேன். ஆனால் தாங்கள்தான் ஒரே தேவ மைந்தன் என்று உங்களை வழிபட நான் தயாராக இல்லை’ என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். ஏசுநாதர் என்ன பதில் சொல்லிருப்பார் ? ‘ சகோதரா, மிகவும் நல்லது. இலட்சியத்தை பின்பற்று, உன் வழியிலேயே முன்னேறு. இந்தப் போதனைக்குரிய பெருமையை நீ எனக்குக் கொடுக்கிறாயா இல்லையா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை. நான் வியாபாரி அல்ல. நான் மதத்தை வியாபாரம் செய்யவில்லை. நான் உண்மையைப் போதிக்கிறேன், உண்மை யாருடைய சொத்தும் அல்ல. அது தனக்கு மட்டுமே சொந்தம் என்று யாரும் பதிவு செய்ய முடியாது. உண்மை என்பது கடவுளே, முன்னேறு’ என்பதுதான் பதிலாக இருக்கும்.
swami_vivekanand
ஆனால் தற்காலத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? நீங்கள் ஏசுவின் போதனைகளைப் பின்பற்றுகிறீர்களா இல்லையோ, நீங்கள் அவருக்குப் பெருமை கொடுக்கிறீர்களா? நீங்கள் அவருக்குப் பெருமை கொடுத்தால்தான் காபாற்றப்படுவீர்கள், இல்லாவிடில் உங்களுக்கு முக்தியே இல்லை என்கிறார்கள்.இப்படி அந்தப் போதகரின் போதனைகளை இழிவுப்படுதுகின்றன.போராட்டமும் சண்டையும் எல்லாம் அவரைப் பற்றிதான். இப்படி வற்புறுத்துவதன் காரணமாக அவர்கள் யாரைப் பெருமைப்படுத்த விரும்புகிறார்களோ, அவருக்கு ஒருவகையில் அவமானமே தேடித் தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது. இதைக் கண்டால் அவரே அவமானத்தினால் குன்றிப் போயிருப்பார். உலகில் ஒருவராவது தன்னை ஞாபகம் வைத்துக் கொண்டானா, இல்லையா என்பதைப் பற்றி அவர் கவலைபட்டாரா என்ன? செய்தியை சொல்ல வேண்டும் சொல்லிவிட்டார்.

ஆனால் இன்றைய கிறிஸ்துவர்கள் என்ன சொல்வார்கள்? நீங்கள் நிறைமனிதனாக இருக்கலாம், சுயநலம் துளியும் அற்றவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் எங்கள் போதகரை, எங்கள் மகானை ஏற்றுக்கொள்ளவிட்டால் பயனில்லை என்பார்கள். ஏன்? இந்த மூடநம்பிகைகளுக்கும் அறியாமைக்கும் என்ன காரணம்? இறைவன் ஒரே ஒரு தடவைதான் தோன்ற முடியும் என்று நினைப்பதுதான். முழுத் தவறும் அங்குதான் இருக்கிறது. கடவுள் உங்களுக்கு மனிதனாக தோன்றுகிறார். ஆனால் இயற்கையில் ஒரு தடவை நிகழ்வது முன்பும் நடந்திருக்க வேண்டும், பின்பும் நடக்கும். நியதியால் கட்டுப்படாத எதுவும் இயற்கையில் கிடையாது. எனவே ஒருதடவை நடப்பது நடந்துகொண்டேதான் இருக்கவேண்டும், நடந்து கொண்டேதான் இருந்திருக்கும்.

—-சுவாமி விவேகானந்தர்

எழுந்திரு விழித்திரு(ஞான தீபம்) 7  பக்கம் 287-289

Read Full Post »

ஏசு என்ற ஒருவர் இருந்தாரா?

              ஏசு இந்திய நாட்டிற்கு வந்து விட்டார் என்று சிலர் டமாரமடித்து வருகிறார்கள்.அவர்களுக்காகவும் சொல்கிறேன். ஐயோ , என் நண்பர்களே! ஏசுவும் வர வில்லை , யஹோவாவும்  வரவில்லை, அவர்கள் வரப் போவதும் இல்லை. இப்போது அவர்கள் தங்கள் வீட்டை காப்ப்ற்றுவதில் முனைந்திருக்கிறார்கள். நமது நாட்டிற்கு வர அவர்களுக்கு நேரமே இல்லை.

 இந்திய மண்ணில் அதே பழம் பெரும் சிவ பெருமான் உடுக்கையை ஒலித்தபடி என்றெண்டும் இருப்பார், அன்னை காளி மிருக பலியை என்றென்றும் பெற்று வருவாள். அவளையே ஏசுவின் தாய் மேரி என்று கிறிஸ்துவர்கள் வழிபடுகின்றனர். ஆசை கண்ணன் எப்போதும் குழலூதி கொண்டிருப்பான்.

 உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் போய்த் தொலையுங்களேன். கையளவு மக்களாகிய  உங்களுக்காக நாடே பொறுத்து பொறுத்து, நலிவுற்று நாசமாக வேண்டும் நினைக்கிரிகளா? மனம்போனபடி வாழ்வதற்கேற்ற இடமாகத் தேடி பார்த்து நீங்கள் என் போக கூடாது? உலகம் தான்  பரந்து விரிந்து கிடைக்கிறதே! போவதற்கென ?

ஆனால் போக மாட்டார்கள். அதற்குரிய வலிமை அவர்களிடம் எங்கே? சிவபெருமானின் உப்பை தின்று விட்டு, அவருக்கே துரோகம் செய்து கொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள். கேவலம்! இத்தகைய அந்நியர்களிடம் சென்று, ‘அந்தோ ! நாங்கள் தாழ்ந்தவர்கள், அற்பர்கள், அதலபாதளத்தில் கிடக்கிறோம். எங்கள் அனைத்தும் தாழ்ந்தவை’ என்று புலம்புகிரிகள். நீங்கள் சொல்வது சரிதான், நீங்கள் சத்திய சந்தர்கள் தான். நீங்கள் எக்கேடு கெட்டும் போங்கள். ஆனால் ‘நாங்கள்’ அற்பர்கள்  என்று நாட்டு மக்கள் அனைவரையும் ஏன் உங்களுடன் சேர்த்துக் கொள்கிரிகள் ? இது என்ன நியாயம் நண்பர்களே?

542484_500670023304429_398291906_n

ஏசு என்ற ஒருவர் எப்போதவது இருந்தாரா?

ஏசு என்ற ஒருவர் எப்போதவது இருந்தாரா இல்லையா என்பதில் பலத்த கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. புதிய ஏற்பாட்டின் நான்கு நுால்களுள் ஜான் எழுதிய நுால் உண்மைக்கு மாறாதது என்று கூறி புறக்கணிக்கப்பட்டுவிட்டது.மற்ற மூன்று நுால்களும்கூட சில புராதன நுால்களைப்பிரதி செய்து எடுக்கப்ட்டது என்பது ஒரு கருத்து.அவையும் ஏசுநாதரின் காலத்திற்று வெகு காலத்திற்கு பிறகு பிரதி செய்யப்பட்டவை

மேலும் ஏசுநாதர் பிறந்ததாக கூறப்படும் காலத்தில் ஜொஸீஃபஸ்,ஃபிலோ என்ற இரு வரலாற்று ஆசிரியர்கள் யூதர்களிடையே வாழ்ந்தனர்.யூதர்களிடையேில் தோன்றிய சிறுசிறு பிரிவினரைப்பற்றிக்கூட குறிப்பிட்டுள்ள இவர்கள்,ஏசுவைப்பற்றியோ,கிறிஸ்தவ மதத்தை பற்றியோ.ரோமானிய நீதிபதி ஏசுவைச்சிலுவையில் அறையும்படித் தீர்ப்பு அளித்தது பற்றியோ ஒரு குறிப்புகூட எழுதப்படவில்லை.

அந்த காலத்தில் யூதர்களை ரோமானியர்கள் ஆண்டனர்,கிரேக்கர்கள் கல்வி கற்று தந்தனர்.அவர்களும் யூதர்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்.ஆனால் ஏசுவைப்பற்றியோ கிறிஸ்தவ மதம் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இன்னொரு பிரச்சினை என்வென்றால் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற கருத்துக்களும் உபதேசங்களும் கொள்கைகளும் ஏசுபிறப்பதற்கு முன்பிருந்தே பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்டு யூதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹிலேல் போன்ற ராபிக்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.

இதையெல்லாம் சொல்வது அறிஞர்கள், அதை ஞாபகம் வைத்துக்கொள்.சிறிதும் யோசிக்காமல் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு பிற மதங்களை பற்றி இவ்வாறெல்லாம் சொல்லி விடலாம். ஆனால் சொந்த மதத்தை பற்றி இப்படி சொன்னால் அவர்களுது பெயர் நிலைக்குமா? எனவே அந்த விஷியத்தில் சற்று அடக்கித்தான் வாசிப்பார்கள். இப்படி செய்வதுதான் ‘ Higher Criticism ‘ உயர்தர விமர்சனம்..

—சுவாமி விவேகானந்தா (ஞான தீபம், 8.  385-386)

Read Full Post »

கிறிஸ்துவ மதம்

கிருஸ்துவ மதம் முதல் மூன்று நூற்றாண்டுகளில் தன்னை உலகத்திருக்கு தெரிவித்து கொள்வதில்கூட வெற்றி பெற முடியவில்லை. வாள்மூலம் கான்ஸ்டன்டைன் அதற்கு தனது நாட்டில் ஓர் இடம் கொடுத்து நாள்முதல் ஆன்மிக அல்லது லெளகீக நாகரிக முன்னேற்றத்திற்கு கிற்ஸ்துவ மதம் எதாவது உதவி செய்திருக்கிறதா? பூமி ஒரு சுற்றி வரும் கிரகம் என்று முதன் முதலாக நிருபித்த ஐரோப்பிய அறிஞனுக்குக் கிருஸ்துவ மதம் என்ன பரிசு அளித்தது?

எந்த விஞ்ஞானியையாவது எப்போதாவது கிருஸ்துவ மதம் அங்கீகரித்துத்திருகிறதா? குற்றவியல் மற்றும் சமூகவியல் சட்டங்கள் , கலை ,வியாபாரம் இவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய கிருஸ்துவ இலக்கியத்தால் முடியுமா? இப்போதும் சர்ச் , மதம் அல்லாத இலக்கியத்தை பரவவிடுவதில்லை.

தற்க்கால கல்வியையும் விஞ்ஞானத்தை அறிந்த ஒருவன் இன்று உண்மை கிருஸ்துவனாக இருக்க முடியுமா?  புதிய ஏற்பாட்டில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ எந்தக் கலையையோ, விஞ்ஞானத்தையோ புகழ்ந்து ஒரு வார்த்தை கூடக் கிடையாது.

ஐரோப்பாவின் உன்னதச் சிந்தனையாளர்களான  வால்டர்,டார்வின்,புக்னர்,ப்லமேரியன், விக்டர் போன்ற பலரையும் இன்றைய கிருத்துவர்கள் கண்டனம் செய்யவும் நிந்திக்கவுமே செய்கின்றனர்.

374603_483818958340749_1425806766_n

 கிருத்துவர்கள் ஐரோப்பிய யூதர்களை எப்படி நடத்துகிறார்கள்? மத ஸ்தாபனங்கள் நீங்கலாக ஐரோப்பாவின் வேறெந்த துறையும் பைபிள்க்கு சம்மந்தமானவை இல்லை.கிருத்துவ மதத்திற்கு எதிராகவும் பைபிள்க்கு மாறாகவும் ஐரோப்பா ஒவ்வொரு உயர்வையும் அடைந்தது. கிருத்துவ மதம் ஐரோப்பாவில் இன்றும் முன் போலவே வலிமை பெற்றதாக இருக்குமானால் பாஸ்டர்,கோக் போன்ற விஞ்ஞானீகளையெல்லாம் உயிருடன் கொளுத்தியிருப்பார்கள்; டார்வின் போன்றோரை கழுவேற்றியிருப்பார்கள்.

 நவீன ஐரோப்பாவில் கிருத்துவம், நாகரிகம் இரண்டும் வெவ்வேறனாவை. நாகரிகம் தன் நிரந்தர எதிரியான மதத்தை அழிக்கவும், பாதிரி வர்க்கத்தையே வெறுக்கவும், அவர்களின் கைவசமிருக்கின்ற  கல்வி நிறுவனங்களையும் தர்ம ஸ்தாபனங்களையும் பிடுங்கி கொள்ளவும் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.

 அறிவிலிகளான விவசாயிகளின் கூட்டம் இல்லையென்றால், கிருத்துவ மதம் தன் இப்போதைய பரிதாபகரமான நிலையிலும் கூட ஒரு விநாடி இருக்க முடியாது; வேரோடு பிடுங்கபட்டிருக்கும். ஏனெனில் நகரவாசிகளான ஏழைகள் இப்போது சர்ச்சின் பரம விரோதிகள்.

ஒவ்வொரு கிறிஸ்துவ குழந்தையும் இந்துக்களை ‘இழிந்தவர்கள்’ ‘வெறுக்கத்தக்கவர்கள்’  என்றும், உலகிலே மிகவும் பயங்கரமான பேய்களென்றும் அழைக்கும் படி அவர்களுக்குப் பாடம் புகட்டுகிறார்களே, இந்த ஏசுவின் சீடர்களுக்கு இந்துக்கள் என்ன குற்றம் செய்துவிட்டார்கள்?

 கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களை வெறுக்க வேண்டும், அதிலும் முக்கியமாக இந்துக்களை வெறுக்க வேண்டும் என்பதும் ஞாயிற்று கிழமைகளில் பள்ளிச் சிறுவர்களுக்கு கற்பிக்கப்படும் படங்களுள் ஒரு பகுதியாக இடம் பெறுகிறது. ஏனெனில் அந்தக் குழந்தைப் பருவம் முதல் அவர்கள் ஒவ்வொரு காசையும் கிறிஸ்துவ மதப் பிரச்சார அமைப்புக்களுக்கு கொடுக்க வேண்டுமே!

 உண்மைக்காக வேண்டாம், தங்கள் சொந்தக் குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்காகவாவது கிறிஸ்துவப் பாதிரிகள் இதைத் தடுக்கக் கூடாதா? இப்படிப்பட்ட குழந்தைகள் இரக்கமற்ற கொடியவர்களாக வளர்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

 மீளா நரகத்தின் சித்திரவதைகளையும், அங்குக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும், கந்தகக் கற்களையும் பற்றி எவ்வளவு அதிகமாக ஒருவர் சித்தரிக்கிறரோ,அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவ பழமைவாதிகளிடையே உயர்ந்த இடம் பெறுகிறார். அவர்களின் மத மறுமலர்ச்சி பிரச்சாரத்தை கேட்டுவிட்டு எனது நண்பரின் பணிப்பெண் ஒருத்தியைப் பைத்திக்கரா விடுதிக்கு அனுப்ப நேரிட்டது. நரகத்தின் நெருப்பும் அங்குள்ள கந்தகத்தின் சூடும் அவளுக்கு பொறுக்க முடியாமால் போய்விட்டது.

 இந்து மதத்திற்கு எதிராகச் சென்னையில் வெளியிடப்பட்டிருக்கும் நூல்களைப் பாருங்கள். கிறிஸ்துவ மதத்தை எதிர்த்து ஓர் இந்து அதே போல்  ஒரு வரி எழுதட்டும், பாதிரிகள் பழிக்குபழியாக நெருப்பைக் கக்கிவிடுவார்கள்.

 எனது நாட்டின் அருமை மக்களே! நான் இங்கு ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கிறேன். ஏறக்குறைய இங்குள்ள சமுகத்தின் மூலைமுடுக்குகள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகு நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் இதுதான்: பாதிரிகள் கூறுவதுபோல் நாம் பேய்களும் அல்ல, தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொள்வது போல் அவர்கள் தேவர்களும் அல்ல.

—–சுவாமி விவேகானந்தர்…..

Read Full Post »