Feeds:
Posts
Comments

Archive for the ‘சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின விழா (1863-2013)’ Category

விவேகானந்தரிடம் பேச மறுத்த ராமகிருஷ்ணர்.

Sw

ஒரு நாள் நரேந்திரர் தட்சிணேசுவரத்துக்கு வந்த போது அவரைக் கண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை பரமஹம்சர். நரேந்திரர் குரு நாதரை வணங்கினார். அப்போதும் அலட்சியமாகவே இருந்தார் குரு. அவருடைய பக்கத்தில் சீடர் அமர்ந்தார். அப்படி ஒருவர் அருகில் உட்கார்ந்திருப்பதைக் குரு மகராஜ் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர் ஏதோ தீர்க்கமாய்ச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் போலும் என்றெண்ணிய நரேந்திரர் அறைக்கு வெளியே வந்தார்.

ஹாஸ்ராவுடன் பேசிக் கொண்டே புகைத்தார். அப்போது உள்ளே பரமஹம்சர் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பது கேட்டது. உடனே நரேந்திரர் ஆர்வத்துடன் அவரது திருமுன்னர் சென்றார். என்ன ஆச்சரியம்! இம் முறை ஸ்ரீராமகிருஷ்ணர் அலட்சியம் செய்தது மட்டுமில்லை ; நரேந்திரருக்கு எதிர்ப்புறமாக சுவரை நோக்கி முகத்தைத் | திருப்பிகொண்டு விட்டார். ஏமாறிய நரேந்திரர் அங்கிருந்து புறப்பட்டார். அப்போதும் பரம ஹம்சர் போக்கில் மாறுதலே இல்லை.

இரண்டாம், மூன்றாம் முறையாக தட்சிணேசுவரத்துக்கு வந்தார் நரேந்திரர். நாலாம் முறையும் வந்தார். |அவர் வராத இடைக் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரும் நரேந்திரரின் சௌக்கியத்தைப் பற்றி கேட்டறிந்து தான் வந்தார். எனினும் அவர் வந்தபோது ஏனோ கல்லாகச் சமைந்திருந்தார் குருதேவர். இப்படியே ஒரு மாதம் ஆகி விட்டது. ஸ்ரீராமகிருஷ்ணர் அப்படியே தான் இருந்தார். நரேந்திரரும் முன் போலவே வந்து கொண்டு இருந்தார். குருநாதர் தம்மைப் புறக்கணிப்பது பற்றி அவர் யாரிடமும் குறை கூறக் கூட இல்லை . அதற்கு மேலும் பரமஹம்சரால் எப்படி, பொறுக்க முடியும்?

நரேன், உன்னோடு நான் ஒரு வார்த்தைக்கூடப் பேசாமலிருக்கிறேன்; அப்படியும் நீ வந்து கொண்டிருக்கிறாயே! இது எப்படி ?” என்று சிஷ்யனைக் கேட்டே விட்டார் ஆசான். “நீங்கள் பேசி நான் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இங்கே வருவதாகவா எண்ணுகிறீர்கள் ? நான் அதற்காக வர வில்லை . எனக்கு உங்களிடம் அன்பு இருக்கிறது. அந்த அன்பி னால் உங்களைக் காண விரும்பு கிறேன். அதற்காகவே நான் தட்சிணேசுவரத்துக்கு வருகிறேன்என்றார் நரேந்திரர்.

அன்பு தனக்குப் பிரதியாக எதையும் எதிர்பாராது என்பது உண்மை தான். நரேந்திரரின் அன்பு அதற்குப் பிரதியாக குருதேவரின் அன்பைக்கூட எதிர்பார்க்கவில்லை. எதையும் எதிர்பாராது எவரிடமும் அன்பு செலுத்துவதே நம் கடமையாகக் கொள்ளவேண்டும் என்று முழங்கியவர் சுவாமி விவேகானந்தர்.

Read Full Post »

சுவாமி விவேகானந்தர் ரதயாத்திரை விழா

சுவாமிவிவேகானந்தரின் 150வது பிறந்தஆண்டு விழாவானது பல்வேறு மக்களால் பல்வேறு விதமாகமிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விவேகானந்தா ஆத்ம சேவா சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தரின்  150வது ஆண்டு விழா குழுவும் இனைந்து சென்னை வண்ணாரப்பேட்டை  மற்றும் கொருக்குப்பேட்டை பகுதிகளில் சுவாமிவிவேகானந்தரின் பிறந்தநாளான 12-01-2014 ஞாயிற்றுகிழமை அன்று மாபெரும் ரதயாத்திரை ஏற்பாடுசெய்யப்பட்டது.

1

சுவாமிவிவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்திகளை மக்களிடையே பரப்பி குறிப்பாக இளைஞர்களிடையே பெறும் எழுச்சியை உண்டாக்குவதே இந்த ரதயாத்திரையின் நோக்கமாகும். ரதயாத்திரையானது 12-01-2014 ஞாயிற்றுகிழமைஅன்றுகாலை 9.00 மணியாளவில் வண்ணரப்பேட்டையில் உள்ள சர்தியாகராயர் கல்லுரி அருகில் ஆரதி மற்றும் புஷ்பாஞ்சலியுடன் ரதஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டது. சுவாமிவிவேகானந்தரின் பொன்மொழிகள் அடங்கிய பேனர் மற்றும் தட்டிகளை ஏந்தியபடி மிகுந்த உற்ச்சாகத்துடன் கோஷமிட்டுக்கொண்டே தொண்டர்கள் முன்னேசெல்ல, சுவாமிவிவேகானந்தரின் கம்பீரமான திருஉருவச் சிலையுடன் ரதமானது பின்னே சென்றது.

2

ரதம் சென்ற இடமெல்லாம் மக்கள் ஆரதி எடுத்து புஷ்பாஞ்சலி செய்து அமோக வரவேற்ப்பு கொடுத்தனர். சுவாமிவிவேகானந்தரின் படம், சிந்தனைதுளிகள், சுவாமிவிவேகானந்தரின் வாழும் செய்தியும்அடங்கியதுண்டு பிரசுரம், மற்றும் பொன்மொழிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இந்தரதயாத்திரையில் பங்கேற்றனர்.

ரதயாத்திரையின் இறுதிநிகழ்ச்சியாக கொருக்குபேட்டை H4 காவல்நிலையம் அருகில் பொதுகூட்டத்திற்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. ரதமானது H4 காவல்நிலையம்அருகில்வந்ததும், முதலில் ஆரதி செய்யப்பட்டு பிண்பு வரவேற்புரைஅளிக்கப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டன. சுவாமிவிவேகானந்தரை போல் வேடமிட்ட  சிறுவன் அனைவரது கவனத்தையும்கவர்ந்தான்.

3

உயர்திரு பழனிவேல்ஜி அவர்கள் தலைமையுரையாற்றினார் அவர் இளைஞர்கள்அனைவரும் சுவாமி விவேகானந்தரை முன்னுதாரனமாக வைத்துபின்பற்ற வேண்டும் என்று கூறினார். அவரைதொடர்ந்து உயர்திரு துறைசங்கர்ஜி அவர்கள் சிறப்புரையாற்றினர். அவர் இந்த உலகத்தின் புண்ணிய பூமி பாரததேசம் என்றுரைத்தவர் சுவாமிவிவேகானந்தர். பாரததேசத்தின் அதிவேக முன்னேற்றத்தில் நம்பிக்கை கொண்டவர் சுவாமிஜி. சுவாமிஜியின் உலகசகோதரத்துவதத்துவம் அனைத்துலக மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் பாரதத்தின் மீது கொண்டிருந்த தேசபக்தி அளவிட முடியாதது. அவர்விரும்பிய பயன்பாட்டுகல்விமுறையை மக்கள் வணங்கி ஏற்றுக்கொண்டனர். பாரததேசத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமிஜி என்று எழுச்சி மிகுந்த சொற்பொழிவாற்றினார். பிண்பு உறுதிமொழி வாசிக்கப்பட்டு நன்றியுரை வழங்கப்பட்டது. இறுதியாக பொதுகூட்டதில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாஇனிதேநிறைவுற்றது.

*****************************************

Read Full Post »

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின விழா (1863-2013)

சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின  விழாவை முன்னிட்டு விவேகானந்தா ஆத்ம சேவா சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் 02/02/2013 அன்று தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் “சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி ” அமைக்கப்பட்டது .

001

கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அவரது செய்தியை விளக்கும் விதமாக படங்கள் வைக்கபட்டு இருந்தன. இதன் ஒரு பகுதியாக ஊக்கமூட்டும் வீடியோப் படங்கள் காண்பிக்கப்பட்டன. இந்த வீடியோ படங்கள் மாணவர்களை பெரிதும் கவர்ந்தன. கண்காட்சியில் புத்தக விற்பனையும் நடைப்பெற்றது.

002

கண்காட்சியில் 7 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள சுமார் 500 க்கு  மேற்பட்ட மாணவ , மாணவியர் கலந்து கொண்டனர். 80 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில் வீடியோ படம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று கூறினர் . கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்தியை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இக்கேள்விகள் சரியான பதில் எழுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கண்காட்சியின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இத்தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவி களுக்கு “விவேகானந்தர் அழைக்கிறார்” புத்தகமும் “மாணவனே மனதை ஒருமுகப்படுத்து ” என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.

005

கண்காட்சியின் நிறைவு விழாவில் சுவாமி ஆத்ம கனானத்தர் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். “மனிதா நீ மகத்தானவன் ” என்ற பாடலை பாடி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக பேசினார். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் தெரியாது என்று பதில் கூறினர். சரி காந்தியை பற்றி தெரியுமா என்று கேட்டார்.ஆம் தெரியும் என்று மாணவர்கள் அனைவரும் கூறினர். காந்தியை பற்றி தெரிந்த உங்களுக்கு ஏன் உங்கள் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியவில்லை என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் அமைதியாய் இருந்தனர். அதில் ஒரு புத்திசாலி மாணவி எழுந்து காந்தி தாத்தா நம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டர் என் தாத்தா என்ன செய்தார் நான் ஏன் அவரை நினைவில் வைக்க வேண்டும் என்றார். அது போல நாம் வாழும் இந்த பூமியில் நாம் வாழ்ந்தற்குகான ஏதேனும் சான்றை விட்டுச்செல்ல வேண்டும் என்று கூறினார்.

008

தலைமையாசிரியர்  பேசும் போது இப்படி ஒரு வாய்ப்பு நமது பள்ளிக்கு கிடைத்தது  ஒரு பாக்கியம் என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவ , மாணவி அனைவரும் அவரது வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

009

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுவாமி பரிசுகள் வழங்கினார் மற்றும்  பள்ளிக்கு விவேகானந்தர் இளைஜர் மன்றம் சார்பில் நினைவுபரிசும் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பள்ளியின் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்.

011

Read Full Post »