Feeds:
Posts
Comments

Posts Tagged ‘இந்து-மதம்’

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் — ஆசை

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?  ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது. சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது. சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருப்பத்தைய்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.

“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.

அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று. அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.

‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?

அதுதான் இறைவன் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்க அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கா, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.

ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.

மண்ணாசை!

பொன்னாசை!

பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல! “இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.

அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்

பற்றுக பற்று விடற்கு” – என்பது திருக்குறள்.

ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்ய என்று போதித்தது இந்து மதம். நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு. ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன்மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்?

அது ஆசை போட்ட சாலை.

அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது. போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.

அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல. உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது. உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது. ‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.

கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. “பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.

இன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்;ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண மரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்து  மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘ என்ற எண்ணம் விலகிவிடும்.

நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள, உன் தாய் விடிவில் துணை வருவது இந்துமதம். ஆசைகளைப்பற்இ பரமஹம்சர் என்ன கூறுகிறார்? “ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களிஙல் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார். “அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது. அது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது” “விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது”. என்றார். அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம். நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.

நன்றி :- கவிஞர் கண்ணதாசன்

*****************

Read Full Post »

மராட்டிய மாவீர‌ன் சிவாஜி வாழ்வில் நடந்த நிகழ்வு …

 

நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகனையும்  கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார்.

 சிவாஜி : மகனே‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து,அதைத் தானம் செய்வது வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’

 மகன்(சம்பாஜி ):‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’

 சிவாஜி: ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’

 மகன் (சம்பாஜி ): ‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா… அது முடியுமா? (சந்தேக‌த்துடன்)’’

சிவாஜி : ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ (உறுதியோடு) அதன்பின்,சிறைக்கு பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.

 பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி.

 சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட்ப்போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்களை அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌க்கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.

‘‘மாபெரும் படை கொண்ட முகாலையர்களை என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில். ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

 பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார்.

 சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே , ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை… துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

 ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால்,சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத் தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதிஎன முடிசூடினார் சிவாஜி.

 1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை என்கிற அவரது தாரக மந்திரம்தான்.

Read Full Post »

“பாவிகளே! உங்கள் பாவங்களை இறைவன் வாங்கிக் கொள்கிறான். இங்கே வாருங்கள்!” என்று கூவிக்கூவி அழைப்பவர்கள் இருக்கிறார்கள்! ஏதோ பாவம் என்ற பொருளை இறைவன் ‘ரீபர்ச்சேஸ்’ செய்து கொள்கிறார் என்பது போல் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு அந்தக் கடைகளுக்குச் சென்று தங்கள் பாவங்களை குறைந்த விலைக்கு விற்றும் வருகிறார்கள். இறைவன் அதை வாங்கிக்கொள்கிறான் என்பது இந்த அப்பாவிகளின் நம்பிக்கை. பாவம்!

உண்மையில் பிறக்கும் மனிதர்கள் எல்லோரும் பாவிகளா என்றால் இல்லை என்கிறது இந்து தர்மம். நாம் செய்யும் கர்மங்களின் வினைப்பயனாகவே பிறப்பும் இறப்பும் அமைந்து விடுகிறது என்கிறது இந்து மத உபதேசங்கள்.

சரி கர்மம் என்றால் என்ன? கர்மம் என்றால் செயல்கள் என்று பொருள். செயல்களில் பாபமும் அடக்கம், புண்ணியமும் அடக்கம். அதற்கான வினைப் பயன் நமது அடுத்த பிறவியிலும் தொடர்கிறது. இது ஒரு சங்கிலித் தொடர் போன்று அமைகிறது. நன்மை செய்பவனும், தீமை செய்பவனும் அதற்கேற்ற பிறவிகளை அடைகிறான் என்கிறது உபநிஷத்து.

“மரணத்திற்குபிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப் பயனும், பெற்ற அனுபவமும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்” என்கிறார் உபநிஷத்தில் எமதர்மன்.

சரி இப்படி இருக்கும் போது பாபங்களை இறைவன் எடுத்துக் கொள்வான் என்று கூறப்படுவது சரியா? இறைவன் மனிதர்களின் பாபங்களை எடுத்துக் கொள்வாரா? ஓரிடத்திலிருந்து குப்பையை அகற்றினால் இன்னொரு இடத்தில் கொட்ட வேண்டும். குப்பைகள் கொட்டப்பட்ட புதிய இடம் நாற்றமடிக்கும். அந்நாற்றத்தை அகற்ற வேண்டுமானால் அங்கே இருந்தும் அதே குப்பைகளை அகற்ற வேண்டும். பாபங்களும் அப்படித்தானே! மனிதர்களின் பாபங்களை இறைவனிடம் கொடுத்து விட்டால் இறைவன் பாவியாயிற்றே! அவன் தன் பாபத்தை கழிக்க அதை யாரிடம் கொடுப்பார்? சரி எல்லா பாபங்களையும் வாங்கி ஜீரணிக்கும் அளவு சக்தி படைத்தவன் இறைவன் என்று வைத்துக் கொள்வோம், அப்படி பாபம் செய்யும் மனிதர்களை அவன் படைப்பானேன் பின் அதனை தானே வாங்கிச் சுமப்பானேன்? பாபங்களே செய்யாத மனிதர்களை இறைவன் படைக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?

இங்கே தான் நாம் படைப்பின் ரகசியம் பற்றிய ஒரு தெளிவைப் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. இறைவன் கோடான கோடி உயிரினத்தையும் , பல கோடி விண்மீன்களையும், நட்சத்திரங்களையும் மெனக்கெட்டு உட்கார்ந்து படைத்துக் கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனம். இவை யாவும் பொதுவாக வியாபித்திருக்கும் ஒரு சக்தியில் இருந்து உண்டானது. பரிணாமங்களும் அதன் வளர்ச்சியும் தானே நடக்கும் செயல்கள். அதாவது கர்மங்கள். அந்த கர்ம வினைகளின் பலனாகவே பாபமும் புண்ணியமும். இவை யாவும் தானாகவே நடந்தேருபவை. இவைகளை இறைவன் என்ற ஒரு உருவகம் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று என்பதை இந்து தர்மத்தின் பல்வேறு விளக்கங்களை படித்தாலே புரிந்து கொள்ள முடியும்.

தானாகவே உண்டான படைப்பின் ரகசியத்தை முண்டக உபநிஷத்து இவ்வாறு தெளிவாக்குகிறது.

தஸ்மாதக்னி: ஸமிதோ யஸ்ய ஸூர்ய:

ஸோமாத் பர்ஜன்ய ஓஷதய: ப்ருதிவ்யாம்|

புமான் ரேத: ஸிஞ்சதி யோஷிதாயாம்

பஹ்வீ: ப்ரஜா: புருஷாத் ஸம்ப்ரஸுதா:||

தஸ்மாத் – அவரிடமிருந்து; அக்னி – நெருப்பாலான க்ரகங்கள்

பஹ்வீ – பலவிதமான; ப்ரஜா: – உயிரினங்கள்; ஸம்ப்ரஸுதா:

                                                                                                                                                                                 – உண்டாகின்றன.

“அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டானது. சூரியன் அந்த வானுலகை ஒளிரச் செய்கிறான். சந்திரனிலிருந்து மேகங்கள் உண்டாயின. பூமியில் வளர்கின்ற செடிகொடிகள் மேகங்களின் காரணமாக உண்டாயின. ஆண் பெண்ணிடம் விந்துவை விடுவதன் மூலம் உயிர்கள் தோன்றின. இவ்வாறு அந்த இறைவனிலிருந்தே பலவிதமான உயிரினங்கள் உண்டாகின்றன.” – முண்டக உபநிஷத்து.

இங்கே இறைவன் என்பதை ப்ரபஞ்சத்தில் வியாபித்திருக்கும் அளவிட

முடியாத சக்தி என்று கொள்வோம். அந்த அளவிட முடியாத சக்தியின் வாயிலாகவே எல்லாம் தோன்றியது என்று முண்டக உபநிஷதம் விளக்குகிறது. கவனிக்க, இறைவன் ஒவ்வொரு கிழமையாக ஒன்னொன்றையும் படைத்தான் என்று கூறவில்லை. இறைவனிடமிருந்து தோன்றியது என்று தான் கூறுகிறார்கள். ஆக இறைவனிடமிருந்து தோன்றியதே தவிற அவன் உட்கார்ந்து ஓவர் டைம் போட்டு படைக்கவில்லை. அதனாலேயே இறைவன் என்பதை ப்ரபஞ்சத்தின் சக்தியாக நாம் புரிந்து கொள்வோம். அப்படி எடுத்துக் கொண்டால் படைப்பின் (ப்ரம்மத்தின்) ரகசியத்தை இன்னும் எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

சரி, படைப்பு என்பது ப்ரபஞ்சத்தில் இருந்து ஒரு சங்கிலித் தொடராக உண்டானது என்று கொண்டால், கர்மவினை, பாபம், புண்ணியம் போன்றவை எங்கிருந்து துவங்கியது என்பதையும் அறிய முற்படுவோம் அல்லவா. அந்தச் சங்கிலித் தொடரைப் பார்க்கலாம்.

அறிவியலாளர்களின் பிக் பேங்க் தியரியும் – முண்டக உபநிஷத்தின் மேற்கண்ட ப்ரம்மத்தின் தோற்றமும் ஒன்று படுவதை இங்கே கவனிக்கலாம். ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது தான் நாமிருக்கும் இந்த அண்ட வெளி என்கிறார்கள் அறிவியலாளர்கள். “அந்த இறைவனிடமிருந்து வானுலகம் உண்டானது” – முண்டக உபநிஷத்து. இறைவன் = ப்ரபஞ்ச சக்தி.

இப்போது முதல் கர்மம், கர்மவினை அதனால் உயிர்த் தோற்றம் அவற்றினால் உண்டான பாபம் புண்ணியம் போன்றவற்றை முண்டக உபநிஷத்தின் வழியில் விளக்கமாகப் பார்ப்போம்!

ஒரு நெருப்பு பிழம்பிலிருந்து பிரிந்தது தான் நாமிருக்கும் இந்த அண்ட வெளி. நம்முள் எந்த பொருளுக்கு ஆத்மா என்று பெயரோ அதே பொருள் தான் சூரியனின் மையப்பகுதியிலும் இருக்கிறது. பூமியின் மையத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்பு பிழம்புதான் பூமிப்பந்தின் ஆத்மா எனக் கொள்வோம். சுழலுவதும் மழை பெய்வதும் அதன் கர்மா! அந்த மழையால் இடியும் மின்னலும் உண்டானது கர்ம வினை. அந்த கர்ம வினையின் பயனாகத் தோன்றிய முதல் உயிரி அமீபா! அந்த அமீபாவின் கர்மம் இனவிருத்தி என்று கொண்டால் அந்த கர்ம வினையின் பயன் பரினாம வளர்ச்சி, செடி கொடி முதல் மனிதர்கள் வரை.

ஆக பிரபஞ்சத்தின் நிலையில்லா கர்மமும் அதன் வினையும் தான் ‘நாம்’. ஆக நாம் பிறந்ததும் நம்முடைய வாழ்க்கை சுழல்வதும் நமக்கு மேல் இருக்கும் மிகப்பெரிய சக்தியான பிரபஞ்சத்தின் கர்மத்தால் உண்டானது. ஆக பிக் பேங்க் வெடிப்பு முதல் கர்மம் என்று நமது சிற்றறிவிற்கு எட்டியவரைக் கொள்ளலாம். ஆக முதல் கர்மாவிலும் முதல் உயிரின் தொடக்கத்திலும் பாவம் புண்ணியம் இருக்கவில்லை. பின் உயிர்கள் ஒன்று இரண்டான போது ஒன்றின் பசிக்கு இன்னொன்று உணவானபோது தான் பாவமும் புண்ணியமும் பிறந்திருக்க வேண்டும். பின்னர், முதல் பாவம் அதற்குப் பலனாக வேறு பிறப்பு, பின்னர் அதில் பாவம் அதனால் இன்னொரு பிறப்பு என்று நீண்டு ‘நம்’ வரை வந்திருக்கிறோம்.

ஆக இந்த ப்ரம்மத்தின் ரகசியத்தைப் புரிந்து கொண்டு அதை உணர்ந்து வாழ்பவர்கள் யாரோ அவர்களே ஞானிகளாகின்றனர். அவர்கள் தங்களது ஞானத்தால் உணர்வுகளை இறைவனிடமே (அல்லது ப்ரபஞ்சத்தின் சக்தியிடமே) நிலை பெறச்செய்து இறுதியில் அதனுடனேயே கலந்து விடுகிறார்கள். அவ்வாறு இறைசிந்தனையில் ஆழ்ந்து கர்மங்களை தொலைப்பவர்கள் பாபங்களில் இருந்து தாமாகவே விடுபடுவார்கள்.

ஸ்ரீ க்ருஷ்ணர் இதை மெய்ப்பிக்கிறார்.

கீதைக்கு வருவோம், ஸ்ரீ க்ருஷ்ணர் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார் –

“அர்ஜுனா! செயல்களையோ அவற்றைச் செய்யும் உரிமையையோ, செயல்களின் பயனோடு ஒன்றுபடும் தன்மையையோ இறைவன் இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அவ்வாறு செய்வது இயற்கையின் வேலை” என்கிறார்.

மேலும் “அர்ஜுனா! எங்கும் நிறைந்த இறைவன் எவருடைய பாவத்தையோ, புண்ணியத்தையோ வாங்கிக் கொள்வதில்லை. எவருடைய குணங்களையும் பொருட்படுத்துவதில்லை, அறிவு அறியாமையால் மறைக்கப்பட்டுள்ளது. எனவே உயிர்கள் மாயையில் மூழ்கி உள்ளன.” என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.

“அர்ஜுனா! யோகிகள் அறிவை இறைவனிடத்தில் நிலைக்கச் செய்வதாலும், அவர்கள் ஆன்மாவும் அதுவாகவே இருப்பதாலும், அதிலேயே நிலை பெறுவதாலும், அதுவே அவர்களுடைய மேலான லட்சியமாக இருப்பதாலும், அவர்களுடைய பாபங்கள் அனைத்தும் ஞானத்தால் அழிக்கப்பட்டு மீண்டும் பிறவாத நிலையான மோட்ச பதவியை அடைகிறார்கள்.” – ஸ்ரீ க்ருஷ்ணர், ஸந்யாஸ யோகம்.

அதாவது பாபங்கள் யாருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கப்படுவதில்லை. தன்னுடைய உணர்வுகளை இறைவனிடத்திலே செலுத்தி கர்மங்கள் அதாவது பாபமோ, புண்ணியமோ எந்த விதமான உணர்ச்சிப்பூர்வ செயலிலும் ஈடுபடாமல் இறை சிந்தனையிலேயே கலந்து விடுபவர்கள் தன்னுடைய பாபங்களில் இருந்து தானே விடுபடுகிறான் என்பதே கீதோபதேசம்.

ஆக இந்து தர்மத்தின் எந்த உயர்ந்த உபதேசங்களும் இயற்கைக்கு மாறான நம்பிக்கையை வளர்ப்பதில்லை. அவை நிதர்சனமான உண்மையையும் இயற்கையின் சக்தியை முழுவதுமாகப் புரிந்து கொள்வதற்கும் உதவுகின்றன. இதனை புரிந்து கொள்ளும் மனிதர்கள் பாபம் செய்ய மாட்டார்கள். செய்த பாபத்தை வாங்கிக்கொள்ள (buy back) ஒரு சாமி வரும் என்று பாபத்தை விற்க வரிசையில் நிற்க மாட்டார்கள்!. இதனை நாமும் புர்ந்து கொள்வோம். மற்றவருக்கும் எடுத்துச் சொல்வோம்! அதாவது..

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்!

நன்றி http://hayyram.blogspot.in/

Read Full Post »

உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம் கிடையாது. ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம் மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது. உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம் நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும் ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும் மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி 78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%, கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%. இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க முடிந்தது.

ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது. இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில் கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாக இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.

இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம். யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால் எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை. 180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம் இருக்கும்.

சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள் கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று 65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப் படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம் கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக் கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட. யோசியுங்கள்…

இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி இஸ்லாத்தில் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை அவமதித்துப் பேசுகிறார்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்…

வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக. அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க முற்ப்படுகிறார்கள்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்…

தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும் பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக் காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம் என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன் கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்…

மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும் வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில் நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின் வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்…

குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் , பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள் மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள் தொகை பெருகினால் பரவாயில்லையாம்.

இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!

யோசியுங்கள்…

இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.

யோசியுங்கள்…

வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார் என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும் அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான். ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.

இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?

நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும் அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.

இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேய

அடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவரகளை அவர்கள்

பாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மை காப்பாற்றிக்கொள்வோம்

ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.

யோசியுங்கள்….

இனிமேலாவது விழித்தெழுங்கள் இந்துக்களே..

Read Full Post »

இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள் என்பதை எளிய
விளக்கங்களுடன் கண்ணதாசன் போல் யாரும் சொல்ல முடியாது. நாத்திகனாக இருந்து
கம்பனை விமர்சிக்க ராமாயணம் படித்து, ஆன்மீகவாதிக மாறிப்போன ஒரு பெரும் புலவனின் சொற்பொழிவை தரவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

Download MP3

PART 1

PART 2

PART 3

PART 4

PART 5

PART 6

Read Full Post »