Feeds:
Posts
Comments

Archive for May, 2013

Barathmatha

1.எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

2-பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

3-செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

4-கிரானைட்(சலவைக் ஆண்டுகளுக்கு)கல்லால் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

7-உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)
8-1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

9-மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

10-உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

12-தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

14-உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

15-வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

16-அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுகிறார� �. 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).

17-5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

18-முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு
(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனர்

19-வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

20-உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

21-குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

22-நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

23-காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

24-முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

25-இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு(35 வயதுக்குட்பட்டவர� �கள் 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு
“நமது இந்தியா” தான்.

Read Full Post »

ஹந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்…

ங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? காளியா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைதான் நீங்கள் வழிபடுவீர்கள்?

உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்னுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.

indian-gods-hindu-gods-collage-shirdi-sai-baba-saibaba-wallpaper

முதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தனமையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா ?

கீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் ? புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், ஏன் ஏசு எனும் அரூபத்திலும் நினைக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.

புராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.

இறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.

Read Full Post »

ஏசு என்ற ஒருவர் இருந்தாரா?

              ஏசு இந்திய நாட்டிற்கு வந்து விட்டார் என்று சிலர் டமாரமடித்து வருகிறார்கள்.அவர்களுக்காகவும் சொல்கிறேன். ஐயோ , என் நண்பர்களே! ஏசுவும் வர வில்லை , யஹோவாவும்  வரவில்லை, அவர்கள் வரப் போவதும் இல்லை. இப்போது அவர்கள் தங்கள் வீட்டை காப்ப்ற்றுவதில் முனைந்திருக்கிறார்கள். நமது நாட்டிற்கு வர அவர்களுக்கு நேரமே இல்லை.

 இந்திய மண்ணில் அதே பழம் பெரும் சிவ பெருமான் உடுக்கையை ஒலித்தபடி என்றெண்டும் இருப்பார், அன்னை காளி மிருக பலியை என்றென்றும் பெற்று வருவாள். அவளையே ஏசுவின் தாய் மேரி என்று கிறிஸ்துவர்கள் வழிபடுகின்றனர். ஆசை கண்ணன் எப்போதும் குழலூதி கொண்டிருப்பான்.

 உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் போய்த் தொலையுங்களேன். கையளவு மக்களாகிய  உங்களுக்காக நாடே பொறுத்து பொறுத்து, நலிவுற்று நாசமாக வேண்டும் நினைக்கிரிகளா? மனம்போனபடி வாழ்வதற்கேற்ற இடமாகத் தேடி பார்த்து நீங்கள் என் போக கூடாது? உலகம் தான்  பரந்து விரிந்து கிடைக்கிறதே! போவதற்கென ?

ஆனால் போக மாட்டார்கள். அதற்குரிய வலிமை அவர்களிடம் எங்கே? சிவபெருமானின் உப்பை தின்று விட்டு, அவருக்கே துரோகம் செய்து கொண்டு, ஏசுவின் புகழ் பாடுவார்கள். கேவலம்! இத்தகைய அந்நியர்களிடம் சென்று, ‘அந்தோ ! நாங்கள் தாழ்ந்தவர்கள், அற்பர்கள், அதலபாதளத்தில் கிடக்கிறோம். எங்கள் அனைத்தும் தாழ்ந்தவை’ என்று புலம்புகிரிகள். நீங்கள் சொல்வது சரிதான், நீங்கள் சத்திய சந்தர்கள் தான். நீங்கள் எக்கேடு கெட்டும் போங்கள். ஆனால் ‘நாங்கள்’ அற்பர்கள்  என்று நாட்டு மக்கள் அனைவரையும் ஏன் உங்களுடன் சேர்த்துக் கொள்கிரிகள் ? இது என்ன நியாயம் நண்பர்களே?

542484_500670023304429_398291906_n

ஏசு என்ற ஒருவர் எப்போதவது இருந்தாரா?

ஏசு என்ற ஒருவர் எப்போதவது இருந்தாரா இல்லையா என்பதில் பலத்த கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. புதிய ஏற்பாட்டின் நான்கு நுால்களுள் ஜான் எழுதிய நுால் உண்மைக்கு மாறாதது என்று கூறி புறக்கணிக்கப்பட்டுவிட்டது.மற்ற மூன்று நுால்களும்கூட சில புராதன நுால்களைப்பிரதி செய்து எடுக்கப்ட்டது என்பது ஒரு கருத்து.அவையும் ஏசுநாதரின் காலத்திற்று வெகு காலத்திற்கு பிறகு பிரதி செய்யப்பட்டவை

மேலும் ஏசுநாதர் பிறந்ததாக கூறப்படும் காலத்தில் ஜொஸீஃபஸ்,ஃபிலோ என்ற இரு வரலாற்று ஆசிரியர்கள் யூதர்களிடையே வாழ்ந்தனர்.யூதர்களிடையேில் தோன்றிய சிறுசிறு பிரிவினரைப்பற்றிக்கூட குறிப்பிட்டுள்ள இவர்கள்,ஏசுவைப்பற்றியோ,கிறிஸ்தவ மதத்தை பற்றியோ.ரோமானிய நீதிபதி ஏசுவைச்சிலுவையில் அறையும்படித் தீர்ப்பு அளித்தது பற்றியோ ஒரு குறிப்புகூட எழுதப்படவில்லை.

அந்த காலத்தில் யூதர்களை ரோமானியர்கள் ஆண்டனர்,கிரேக்கர்கள் கல்வி கற்று தந்தனர்.அவர்களும் யூதர்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்.ஆனால் ஏசுவைப்பற்றியோ கிறிஸ்தவ மதம் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இன்னொரு பிரச்சினை என்வென்றால் புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற கருத்துக்களும் உபதேசங்களும் கொள்கைகளும் ஏசுபிறப்பதற்கு முன்பிருந்தே பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்டு யூதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஹிலேல் போன்ற ராபிக்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.

இதையெல்லாம் சொல்வது அறிஞர்கள், அதை ஞாபகம் வைத்துக்கொள்.சிறிதும் யோசிக்காமல் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு பிற மதங்களை பற்றி இவ்வாறெல்லாம் சொல்லி விடலாம். ஆனால் சொந்த மதத்தை பற்றி இப்படி சொன்னால் அவர்களுது பெயர் நிலைக்குமா? எனவே அந்த விஷியத்தில் சற்று அடக்கித்தான் வாசிப்பார்கள். இப்படி செய்வதுதான் ‘ Higher Criticism ‘ உயர்தர விமர்சனம்..

—சுவாமி விவேகானந்தா (ஞான தீபம், 8.  385-386)

Read Full Post »