Feeds:
Posts
Comments

Archive for the ‘தேசியம்’ Category

மனிதர்களே மனிதர்களே நமக்கு வேண்டும் – சுவாமி விவேகானந்தர்.

12107953_1024411640949711_8074768904993930253_n

மனிதர்களே மனிதர்களே நமக்கு வேண்டும். மற்றவை அனைத்தும் தயாராக வந்து சேரும். ஆனால் வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய, உண்மையில் பிடிப்புக்கு கொண்ட இளைஞர்களே தேவை. அத்தகைய ஒரு நுறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமான நல்ல மறுதலைப்   பெற்றுவிடும்.  முதலில் அப்படிப்பட்ட இளைஞர்களின் வாழ்வை நாம் நல்ல முறையில உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் எதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பாரதமாதாவின் நன்மைக்காக அவளுடைய மிகவும் சிறந்த, உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக்கிறது என்பதை நான் திட்ட வட்டமாக அறிந்திருக்கிறேன். பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும். என்றென்றும் நிலைத்த மாறாத அன்பும் கருணையும் பொருந்திய பல நுறு புத்தபிரான்கள் இப்போது தேவைப்படுகிறார்கள்.

Read Full Post »

பாரதம் பெயர் காரணம்

 

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக தாம் பிறந்து வாழ்ந்த பூமியைத் தாய்நாடு என்று சிறப்பித்துப் பாராட்டி, உறவு கொண்டாடிய உலகின் முதல் சமுதாயம் ஹிந்து சமுதாயமே. பூமி நமது தாய், நாம் பூமித்தாயின் புதல்வர்கள் என்ற மனோபாவம் இருப்பதால் தான் நாம் வாழும் நாடு நமது தாய்நாடு என்ற எண்ணம் நமக்கு உதித்தது.

நமது தேசத்தின் வடக்கில் ஹிமாலயமும் தெற்கில் பாரத அன்னையின் பாதங்களைப் பணியும் ஹிந்து மகாசாகரமும், கிழக்கில் கங்கை நதி கடலோடு கலக்கும் கங்கா சாகரமும் (வங்காள விரிகுடா) மேற்கே சிந்து நதி கடலில் கலக்கும் சிந்து சாகரமும் (அரபிக் கடல்) எல்லைகளாக அமைந்துள்ளன.

198241_122277824597525_1344583902_n

ஆன்மீக செல்வத்தின் உறைவிடமாய் பாரதம் திகழ்ந்தாலேயே இந்த நாட்டிற்கு பாரதம் என்ற பெயர் ஏற்பட்டது. பா – என்ற சமஸ்கிருதச் சொல்லிற்குச் “ஒளி” என்று பொருள் உண்டு. இதனாலேயே உலக இருளை அகற்றும் ஆதவனை பாஸ்கரன் என்று கூறுகிறோம். ஞாயிறு என்பதனை ‘பாநு’ என்று குறிக்கின்றோம். “ரத” என்ற சொல்லிற்கு ‘முழ்கியிருத்தல் — திளைத்திருத்தல்’ என்ற பொருள் உண்டு. எனவே “ஞானத்தில் திளைத்திருந்த பூமி” இதுவாகையால் இதற்கு பாரதம் என்ற பெயர் ஏற்பட்டது.

வேதமுடையதிந்த நாடு, நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு,
தேசமில்லா ஹிந்துஸ்தானம் — இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா!
—மகாகவி பாரதி…..

Read Full Post »

தேச பக்தி

திருவனந்தபுரத்தில் சுவாமிஜி தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தராம ஐயரின் மகன் ராமசாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜி.

“….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை.

நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள  பேரார்வம்  தான் உண்மையில் தேசபக்தி.

பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்க  சீர்குலைவுகளும் தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன்.

“அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டபடுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டபடுவது அவர்களின் கர்மம் என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது தர்மம்.

கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்கு தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி.

392616_348803058553487_191559038_n

சுவாமி அகண்டானந்தர் சுவாமிஜின் தேசபக்தியை வர்ணிக்கும்போது:-

” ….சுவாமிஜி பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேசபக்தி (patriostism) அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்மா போதம்”, அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமிஜிக்கு இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது.

நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர்காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.

தேசாத்மா போதத்துடன் அவரது உணர்வு நின்று விடவில்லை. அது விச்வாத்ம போதமாக விரிந்தது. பாரத மக்களுக்காக மட்டுமல்ல. உலக உயிரினங்கள் அனைத்துடனும் தம்மை ஒன்று படுத்திக் கொண்டு அவர்களுக்காக கவலைப்பட்டார் அவர். அனைவருக்கும் முக்தி கிடைக்காமல் அவருக்கு முக்தியில்லை……”

*****************************

Read Full Post »

சுவாமிஜியின் திட்டம் உதயம் ….

சுவாமிஜி இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் நிலைமை மிக மோசமாயிருந்தது. நம் நாடு அப்போது சுதந்திரம் பெறவில்லை. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்தது. மக்கள் வறுமையில் வாடினர். பெரும்பாலான மக்களுக்குப் போதிய உணவு கூட கிடைக்கவில்லை. மிகச் சில சிறுவர் சிறுமியரே பள்ளி செல்ல முடிந்தது. மக்கள் தைரியத்தை இழந்து விட்டிருந்தனர். அவர்களிடம் தன்னம்பிக்கை இல்லை. அவர்கள் உதவியற்றோராக நசுக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் கண்ட சுவாமிஜி கண்கள் கலங்கின. பழங்காலத்தில் இந்தியா எத்தகையதொரு உன்னத நிலையில் இருந்தது என்பதை அவர் நினைத்து பார்த்தார். பழங்கால தவ முனிவர்களையும் ரிஷிகளையும் அவர் எண்ணிப் பார்த்தார். அத்தகைய பெருமை வாய்ந்த நாடு எவ்வளவு கீழ் நிலையை அடைந்துவிட்டது என்று நினைத்து அழுதார். மீண்டும் நம் நாட்டைப் பெருமையுடைய நாடாக மாற்றுவது எவ்வாறு என்பது ஒன்றே அவர் எண்ணமாயிருந்தது.

தன் சுற்றுப் பயணத்தின் இறுதி இடமாக, இந்தியாவின் தென்முனையில் கன்னியாகுமரியை அடைந்தார். அங்கு ஆதிபராசக்தி தேவி ஒரு குமரி வடிவில் ‘கன்னியாகுமரி’ என்ற திருநாமத்தில் கோயில் கொண்டுள்ளாள். ஒவ்வொரு நாளும் அர்ச்சகர்கள் சந்தனத்தால் அலங்கரித்து அவளை வழிபடுவது வழக்கம். குமரிதேவி அதி அற்புதமான தோற்றத்துடனும் அழகான கண்களோடும், இனிய புன்முறுவலோடும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். இக்கோயில் கடற்கரையோரத்தில் இருக்கிறது. கடல் நோக்கிப்  பார்க்கும்போது தண்ணீர்க்குள்ளிருந்து சில பெரிய பாறைகள் நீட்டிக் கொண்டிருப்பதை நாம் கான முடியும். அந்தப் பாறைகளின் ஒன்றின்மீது அன்னை பகவதி ஒற்றைக் காலில் தவம் செய்த அடிசுவடு காணப்படுகிறது. அலைகள் அப்பாறைகளில் முட்டி மோதிச் செல்லும். அவற்றின் பின்னே, கண்ணுக்கெட்டிய தூரம், தண்ணீர்தான்!

Thittam

ஒருநாள், தேவியின் சுவடுடைய அப்பாறையின் மீது தியானம் செய்ய விரும்பி சுவாமிஜி கடலின் நடுவே நீந்திச் சென்று, அதனை அடைந்தார். அதன் மேலேறி பாறை முனையில் அமர்ந்தார். அங்கிருந்து தன் பேரன்புக்குரிய தாய்நாட்டை நோக்கிய அவருக்கு அந்நாட்டு மக்களின் மோசமான நிலை நிழலாடுகிறது . சுவாமிஜி மீண்டும் அழுதார். சுவாமிஜிக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று அவர் குரு ஸ்ரீராமகிருஷ்ணர் , மற்றொன்று அவர் பிறந்த இந்தியத் தாய்நாடு. அப்பாறையில் அமர்ந்து கொண்டிருந்தபோது சுவாமிஜி மூன்று நாட்களாக ஆழ்ந்த தியானத்தில் லயித்தார். இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட,  தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அப்போது அவர் உணர்ந்தார்.

‘கன்னியாகுமரியில், குமரி தாயின் கோயிலில், பாரத நாட்டின் தென்கோடியிலுள்ள அந்தப் பாறைமீது அமர்ந்து சிந்தித்தேன். என் மனத்தில் திட்டம் ஒன்று உதித்தது’ என்றார் சுவாமிஜி.

*********************

Read Full Post »

கடவுள் நமக்குத் தேவையா?

 

Kadvu part 1l

எதற்காக ஒருவன் கடவுளை நேசிக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். இதை நாம் அறிந்துகொள்ளத வரையில், எதுவுமே புரிந்து கொள்ள முடியாது.

ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுப்பட்ட இரண்டு இலட்சியங்கள் வாழ்க்கையில் உள்ளன. எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாயினும், எந்த மதத்தை பின்பற்றுவர்கள் ஆனாலும் எல்லோரும் அறிந்த ஓர் உண்மை, மனிதன் உடல் மட்டுமல்ல, ஆன்மாவும் கூட என்பதாகும். ஆனால் மானிட வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் உள்ளன.

மேலை நாட்டினர் பொதுவாக மனிதனின் உடல் விஷயங்களில் அதிக அக்கறை காட்டினர். இந்தியாவின் பக்தி ஆச்சாரியர்கள் அவனது ஆன்மாவிற்கு முக்கியத்துவம் கொடுகிறார்கள். இந்த வேறுபாடு கீழ்த்திசைக்கும் மேல்திசைக்கும் இயல்பாக அமைந்துள்ளது போல் தோன்றுகிறது.அன்றாட  பேச்சு வார்த்தைகளிலும் இதையே நாம் காண்கிறோம். இங்கிலாந்தில் மரணத்தைக் குறிப்பிடும்போது, அவன் உயிரைத் துறக்கிறான் என்று சொல்கிறார்கள். இந்தியாவிலோ, அவன் உடலைத் துறக்கிறான் என்று குறிப்பிடுகின்றனர். மனிதன் என்பவன் உடல், அதில் ஆன்மா உள்ளது என்பது  முதல் கருத்து. மனிதன் ஆன்மா, அந்த ஆன்மாவிற்கு உடல் உண்டு என்பது இரண்டாவது கருத்து.

இதிலிருந்து சிக்கலான பிரச்சனைகள் பல எழுகின்றன. மனிதன் ஓர் உடல், அதில் உயிர் உள்ளது என்ற கொள்கையினர் உடலுக்கு  முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மனிதன் ஏன் வாழ்கிறான் என்று அவர்களை கேட்டால், உடைமைகள், சொத்து, உறவு முதலியவற்றால் இன்பம் பெறுவதற்கே என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.

இதைவிட  மேலானது ஒன்று உள்ளது என்பதை சொன்னாலும் மனிதன் புரிந்து கொள்ள மாட்டான். அதனை அவனால் கனவுகூடக் காண முடியாது. இந்த இன்ப நுகர்ச்சியின் தொடர்ச்சியே எதிர்கால வாழ்க்கை என்பதுதான் அவனது கருத்து. அந்த இன்பங்களை அனுபவித்தவாறு எப்போதும் இங்கேயே தொடர்ந்து இருக்க முடியவில்லை, உலகை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்று அவன் மிகவும் வருந்துகிறான். எனவே எப்படியாவது இதே இன்பம் தொடர்ந்து கிடைக்கக் கூடிய ஓரிடத்திற்கு தான் போகக்கூடுமென்று கருதுகிறான். அங்கு அதே இன்பங்கள், இதே புலன் நுகர்ச்சிகள இன்னும் அதிகமாக உயர்ந்த அளவில் தனக்கு கிடைக்கும் என்று நம்புகிறான். இந்த இலக்கை அடையக் கடவுள்தான் வழி. எனவே அவரை வழிபட விரும்புகிறான். அவனுடைய வாழ்க்கையின் லட்சியம் புலனின்பம் தான். இந்த இன்பங்களை நீண்ட காலக் குத்தகைக்கு தருபவர் இறைவன் என்று நம்புவதால் அவரை வழிபடுகிறான்.

ஆனால் வாழ்க்கையின் லட்சியம் இறைவன். அவருக்கு அப்பாற்பட்டது வேறு ஒன்றுமில்லை. இப்பொழுது அனுபவிக்கும் புலனின்பங்கள், எதிர்காலத்தில் மேலான ஒன்றைப் பெறுவோம் என்ற நோக்குடன் தற்காலிகமாக அனுபவித்து கொண்டிருப்பவையே—இது இந்தியர்களின் கருத்து. அது மட்டுமல்ல; இந்த புலனின்பங்களே எல்லாம் என்று எண்ணினால் அது மிகவும் பயங்கரமானது, அழிவிற்கே வழிவகுப்பது ஆகும். புலனின்ப நாட்டம் குறையும் அளவிற்கு மனிதனின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது என்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம். ஒரு நாய்  உண்ணும்போது கவனியுங்கள், அது உணவில் மகிழ்ச்சியடைவதுபோல் எந்த மனிதனும் அடைவதில்லை. இன்பத்தோடும் இடையிடையே உறுமிக்கொண்டு தின்னும் பன்றியை பாருங்கள். அவ்வளவு திருப்தியோடு உண்கிற எந்த மனிதனும் இவ்வுலகில் பிறக்கவில்லை. தாழ்ந்த நிலையிலுள்ள மிருகங்களுடைய கேட்கும் ஆற்றலையும், காணும் ஆற்றலையும் நினைத்துப் பாருங்கள். அவற்றின் புலன் ஆற்றல்கள் மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளன. அவற்றின் புலனின்பம் வரம்பு கடந்தது. இன்பத்தினாலும் மகிழ்ச்சியினாலும் அவை பித்தேறியவை ஆகிவிடுகின்றன. மனிதன் தாழ்ந்த நிலையில் இருக்கும் அளவிற்கு புலனினப்த்தில் இன்பம் காண்கிறான். மேலே உயரஉயர, பகுத்தறிவும் அன்பும் அவனது வாழ்க்கையின் குறிக்கோளாகின்றன. இவற்றின் வளர்ச்சிக்கு ஏற்ப அவனது புலனின்ப நாட்டம் குறைகிறது.

இதை ஓர் உதாரணம் கூறி விளக்குகிறேன். ஒருவனுக்குக் குறிப்பிட்ட அளவு சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதை அவன் உடல், உள்ளம், ஆன்மா, இவற்றிக்க்காகச் செலவு செய்யலாம். இவற்றுள் எதாவது ஒன்றிற்கு எவ்வளவு சக்தியைச் செலவிடுவானோ, அந்த அளவிற்கு குறைவாக மற்றவற்றிற்குச் செலவிட வேண்டிவரும். அப்படிதானே! அறிவற்ற காட்டுமிராண்டி மக்களுக்கு நாகரிக மக்களைவிடப் புலனின்ப நாட்டத்திற்கான ஆற்றல்கள் மிக நுட்பமானவை. ஒரு சமுதாயம் நாகரிகம் அடைய அடைய அதன் மக்களுடையே நரம்பு அமைப்புகள் நுட்பமாகின்றன. அதே வேளையில் அவர்கள் உடல்ரீதியாக பலவீனம் அடைகிறர்ர்கள் என்பதை வரலாற்றிலிருந்தே நாம் அறிகிறோம். ஒரு காட்டுமிராண்டி இனத்திற்கு நாகரிகம் அளித்துப் பாருங்கள், அப்போது இந்த உண்மையை காண்பீர்கள். இன்னொரு காட்ட்மிரண்டி இனம் தோன்றி, நாகரிகம் பெற்ற இந்த இனத்தை வெற்றிக்கொண்டுவிடும். காட்டிமிரண்டிகளே ஏறக்குறைய எப்போதும் வெற்றி பெறுகிறார்கள்.

எனவே எந்நேரமும் புலனின்பதையே நாடினால் நாம் மிருகநிலைக்கு இழிந்துவிடுவோம். புலனின்பங்களை இன்னும் அதிகமாக, இன்னும் தீவிரமாக அனுபவிக்கத்தக்க ஓரிடத்திற்கு போகவேண்டுமென்று ஒருவன் கேட்கும்போது, தான் உண்மையில் என்ன கேட்கிறோம் என்பது புரியாமல் அவன் கேட்கிறான். மிருக நிலைக்கு சென்றால்தான் அதைப் பெற முடியும் என்பதை அவன் உணர்வதில்லை. தான் அசுத்தமான பொருளை உண்பதாக ஒருபோதும் பன்றி நினைப்பதில்லை. பன்றிக்கு அதுதான் சொர்க்கம். மிகப்பெரிய தேவதை வந்தால் கூடப் பன்றி ஏறெடுத்தும் பார்க்காது. அதன் வாழ்க்கையே உண்பதில்தான் உள்ளது.

புலனின்பம் நிறைந்த ஒரு சொர்க்கத்தை விரும்பும் மனிதனின் நிலைமையும் இத்தகையதே. அவர்கள் பன்றிகள் போல் சிற்றின்ப சேற்றில் புரண்டுகொண்டு அதற்கு அப்பால் எதையும் பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேண்டுவதெல்லாம் புலனின்பம்தான். அதை இழந்தால் அவர்களுக்குச் சொர்க்கத்தையே இழந்தது போல்தான். பக்தன் என்ற வார்த்தை உண்மையில் எதைச் சுட்டி நிற்கிறதோ, அத்தகைய மேலான பக்தர்கள ஆகா இவர்களால் ஒரு போதும் முடியாது. இவர்களால் ஆண்டவனிடம் ஒருபோதும் உண்மையான அன்பு வைக்க முடியாது. ஆனால் சிறிது காலம் இந்தக் கீழான லட்சியத்தை பின்பற்றி வரும்போது நாளடைவில் மாற்றம் ஏற்படவே செய்யும். தனக்கு தெரியாத உயர்ந்த ஒன்று உள்ளது என்பதை ஒவ்வொருவனும் உணர்வே செய்வான். வாழ்க்கையின் மீதும், புலனினபப் பொருட்களின்  மீதும் அவனுக்குள்ள பற்று படிப்படியாக மறையும்.

—சுவாமி விவேகானந்தர்….

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் வரும் …..

Read Full Post »

Barathmatha

1.எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

2-பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

3-செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

4-கிரானைட்(சலவைக் ஆண்டுகளுக்கு)கல்லால் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

7-உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)
8-1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

9-மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

10-உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

12-தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

14-உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

15-வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

16-அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுகிறார� �. 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).

17-5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

18-முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு
(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனர்

19-வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

20-உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

21-குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

22-நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

23-காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

24-முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

25-இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு(35 வயதுக்குட்பட்டவர� �கள் 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு
“நமது இந்தியா” தான்.

Read Full Post »

சாதிப் பிரச்சினை

 

சமூகத்திற்கே சாதி —சமயத்திற்கு அன்று..

சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ஆகலாம்.அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன.

சாதி முதலிய நமது சமூக ஏற்பாடுகள் சமயத் தொடர்புடையனவாக வெளிக்குத் தோன்றினாலும் உண்மையில் அவை அத்தகையனவல்ல. நம்மை ஒரு தனி சமூகமாக காப்பாற்றி வருவதற்கு அந்த ஏற்பாடுகள் அவசியமாக இருந்து வந்திருகின்றன.தற்காப்புக்கு அவசியம் இல்லை என்னும்போது அவை இயற்கை மரணமடைந்து மறையும்.

கௌதம புத்தர் முதல் ராம்மோகன் ராய் வரையிலும் ( சீர்திருத்த்காரர்) எல்லோரும் ஒரு தவறு செய்திருகிறார்கள். அவர்கள் சாதியை சமயப் பிரிவு என்று கொண்டு சாதி, சமயம் எல்லாவற்றையும் சேர்த்து அழித்திவிட முயன்றார்கள். எனவே அவர்கள் அடைந்தது தோல்வியே ஆகும். ப்ரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் சரியே, சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடே என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பிரிவு தன்னுடைய வேலையை செய்த பின்னர் இப்போது அழுகி நாற்றமெடுத்திருக்கிறது. இந்திய ஆகாய வெளியில் அந்த நாற்றம் நிறைந்துள்ளது.

சாதி ஏற்பாடு வேதாந்த மதத்துக்கு விரோதமானது. சாதி என்பது ஒரு வழக்கமேயல்லாது  வேறில்லை.நமது பெரிய ஆசாரியர்கள் எல்லோரும் அதைத் தாக்க முயன்று இருக்கிறார்கள்.புத்தர் காலத்தில் இருந்து சாதிக்கு எதிராக அநேகர் பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால் ஒவ்வொரு முறையுலும் அது வலிமை பெற்று வந்ததேயன்றி வேறு பயனில்லை. இந்தியாவின் அரசியல் அமைப்புகளிருந்து வளர்ச்சி பெற்றதே சாதி ஆகும். அதை பரம்பரையான தொழிற் சங்க முறை என்று சொல்லலாம். ஐரோப்பாவுடன் நேர்ந்த தொழிற் போட்டியானது எந்தப் போதனையும் விட சாதியை அதிகம் தகர்த்து இருக்கிறது..

swamiji 037

சாதிப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி:

சாதி சண்டைகள் போடுவதில் பயனில்லை. அதனால் நன்மை என்ன? அந்தச் சண்டை நம்மை இன்னும் அதிகமாகப் பிரிக்கும்; இன்னும் அதிகமாக பலவீனபடுத்தும்; இன்னும் அதிகமாக தாழ்த்தும்.சாதி பிரச்சினையை தீர்ப்பதற்கு வழி மேலே உள்ளவர்களைக் கீழே இழுப்பதன்று; கீழே உள்ளவர்களை மேலுள்ளவர்களின் நிலைக்கு உயர்த்துவதே ஆகும்.

 நமது லட்சியத்தின் மேல்படியில் பிராமணன், கீழ்ப்படியில் சண்டாளன். சண்டளானை பிராமண நிலைக்கு உயர்த்துவதே நமது வேலை. உயர் வகுப்பாரின் கடமை தங்களுடைய வீசேஷ உரிமைகளைத் தாங்களே தியாகம் செய்வதாகும். இது எவ்வளவு விரைவில் நடக்கிறதோ அவ்வளவுக்கு நன்மை. தாமதம் ஆக ஆக அவை அதிகமாக கெட்டுக்கொடிய மரணம் அடைகின்றன.

 தான் பிராமணன் என்பதாக உரிமை பாராட்டிக் கொள்ளும் ஒவ்வொருவனும் அவ்வுரிமையை இரண்டு வழிகளில் நிரூபிக்க வேண்டும். முதலாவது தன ஆன்மிக மேன்மையை விளங்க செய்தல்; இரண்டாவது மற்றவர்களைத் தன் நிலைக்கு உயர்த்தல். ஆனால் தற்போது அவர்களின் பலர் பொய்யான பிறவிக் கர்வத்தையே பேணி வருவதாகக் காணப்படுகிறது. பிராமணர்களே ! எச்சரிக்கை ! இது சாவின் அறிகுறி ஆகும்.விழித்தெழுங்கள். உங்களைச் சுற்றியுள்ள பிராமணர் அல்லாதாரை உயர்த்துவதின் மூலம் உங்களுடைய மனிதத் தன்மையையும், பிராமணப் பண்பையும் நிரூபியுங்கள். ஆனால் இதை எஜமானன் என்ற இறுமாப்புடன், குருட்டு நம்பிக்கை கலந்த கர்வத்துடன் செய்ய வேண்டாம். ஊழியன் என்ற தாழ்மை உள்ளதுடன் செய்யுங்கள்.

 பிராமணர்களை நான் வேண்டிக் கொள்வதாவது:

‘உங்களுக்குத் தெரிந்திருப்பதை பிறருக்குக் கற்பியுங்கள். பல நூற்றாண்டு காலமாக நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் ஞானச் செல்வத்தை எல்லாருக்கும் அளியுங்கள்.இவ்வாறு இந்திய ஜாதியை உயர்த்த பெருமுயற்சி செய்யுங்கள்’ என்பதே.உண்மை பிராமணம் எது என்பதை நினைவு கூர்ந்திருத்தல் பிராமணர்களின் கடமை ஆகும். பிராமணனிடம் ‘தர்ம பொக்கிஷம்’ இருப்பதினாலேயே அவனுக்கு இவ்வளவு சிறப்புகளும், விசேஷ உரிமைகளும் அளிக்கப்பட்டுள்ளன என்று மனு சொல்கிறார். பிராமணன் அந்தப் பொக்கிஷத்தைத் திறந்து அதிலுள்ள செல்வங்களை உலகிற்கெல்லாம் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

 பிராமணர் அல்லாதாருகெல்லாம் நான் கூறுவதாவது:

‘பொறுங்கள்; அவசரப்பட வேண்டாம். பிராமணனுடன் சண்டையிட எங்கே சந்தர்ப்பம் என்று காத்திராதிர்கள். நீங்கள் கஷ்டப்படுவதற்குக் காரணம் உங்கள் தவறே ஆகும். ஆன்மிக துறையையும், சமஸ்கிரத கல்வியையும் அலட்சியம் செய்யும் படி உங்களுக்கு யார் சொன்னார்கள்? இவ்வளவு காலம் என்ன செய்து கொண்டிருந்தீரிகள்? இத்தனை நாள் அலட்சியமாக இருந்து விட்டு, இப்போது மற்றவர்கள் உங்களை விட அதிகமூளையும், ஊக்கமும், திறமையும் உள்ளவர்களாக இருப்பது குறித்து எரிச்சலடைவதில் யாது பயன்? பயனற்ற விவாதங்களிலும், பத்திரிகைச் சண்டைகளிலும் உங்கள் சொந்த வீடுகளில் வீணான போர் நடத்திப் பாவம் தேடிக் கொள்வதற்குப் பதிலாக பிராமணன் பெற்றிருக்கும் அறிவுச் செல்வத்தை அடைவதில் உங்கள் எல்லாச் சக்திகளையும் பயன்படுத்துங்கள். வழி அதுவே ஆகும்..

 தாழ்ந்த சாதியர்களுக்கெல்லாம் நான் சொல்வதாவது:

‘உங்களுக்கு ஒரே வழி சமஸ்கிருதம் படித்தலே ஆகும். உயர் சாதியார்களிடத்து எரிந்து விழுதலும், அவர்களுடன் சண்டை போடுதலும் பயனளியா. அவ்வழியினால் யாருக்கும் நன்மை இல்லை. அதனால் துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே பிரிவினை அதிகமாக உள்ள நமது சமுகத்தில் நாளுக்கு நாள் அதிக வேற்றுமையே ஏற்படும்.உயர் சாதிகளின் வலிமையெல்லாம் அவர்களுடைய கல்வியும், பயிற்சியுமே ஆகும். நீங்களும் அவற்றைக் கைக்கொள்வது என்றே சாதி ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வழி ஆகும்..

 நீங்கள் ஏன் சமஸ்கிரத பண்டிதர்கள் ஆகக்கூடாது? இந்தியாவிலுள்ள எல்லாச் சாதிகளுக்கும் சமஸ்கிரத கல்வி அளிப்பதற்காக நீங்கள் ஏன் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யலாகாது?

இவைகளை நீங்கள் செய்து முடிக்கும் போது பிராமணனுடன் சமம் ஆகீறிர்கள். இந்தியாவில் செல்வாக்குப் பெறும் இரகசியம் அதுவே ஆகும் இந்தியாவில் சமஸ்கிரதமும் மரியாதையும் பிரிக்க முடியாதவையாக இருக்கின்றன. நீங்கள் சமஸ்கிரத கல்வி பெற்றவுடன் உங்களுக்கு விரோதமாக யாரும் எதுவும் சொல்லத் துணியார்கள்.

—-சுவாமி விவேகானந்தர் ……..

Read Full Post »

மூட நம்பிக்கைகளுக்கு   உள்ள வேறுபாடு.

 

ற்காலத்தில் ஒருவன் மோசஸ் , இயேசு கிறிஸ்து , புத்தர் ஆகியவர்களின் மேற்கோள்களை எடுத்துக்காட்டாக சொன்னால் , அவன் ஏளனத்துக்கு ஆளாகிறான். ஆனால் ஒரு ஹக்ஸ்லி,டின்டால், டார்வின் ஆகிய இவர்களின் பெயர்களை அவன் சொல்லட்டும். அவர்களுடைய கருத்து என்னவாக இருந்தாலும் மக்கள் அதை அப்படியே கேள்விக்கிடமின்றி நம்பிவிடுவார்கள்.

 Swami-Vivekananda-famous-Quotes

‘ஹக்ஸ்லி இப்படி சொல்லிருக்கிறார்’ என்று குறிப்பிட்டால் அதுவே பலருக்கு போதுமானதாக இருக்கிறது. நாம் மூட நம்பிக்கையிலிருந்து  விடுபட்டவர்கள்தாம் என்றாலும் , முன்பு கூறியது மத வாழ்க்கை சேர்ந்த மூட நம்பிக்கையாக இருந்தது. பின்னால் குறிப்பிட்ட இது , விஞ்ஞான ரீதியான மூட நம்பிக்கையாக இருக்கிறது. மதத்தை சேர்ந்த மூட நம்பிக்கைகளின் மூலமாகத் தான் உயிரோட்டம் தரக்கூடிய ஆன்மிக கருத்துகள் வெளிவந்திருக்கின்றன. விஞ்ஞான ரீதியான இன்றைய மூட நம்பிக்கையின் மூலமாகவே  காமமும் , பேராசையும் விளைந்திருகின்றன. முதலில் கூரிய மூட நம்பிக்கை கடவுள் வழிபாடாக இருந்தது. பின்னால் கூரிய இதுவோ அருவருக்கத் தக்க செல்வம், புகழ், அதிகாரம் ஆகியவற்றின் வழிபாடாக இருக்கிறது. இது தான் இந்த இரண்டு மூட நம்பிகைகளுக்கும்   உள்ள வேறுபாடு.

உலகின் எல்லையற்ற சக்தி உங்களுக்கே சொந்தமானது. உங்கள் மனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். நமது மனத்தை பலவீனமாக்கி, மூடநம்பிக்கையில் ஆழ்த்தி, மந்தமானவர்களாக்கி, சாத்தியமில்லாதவற்றை ஆசையுறச் செய்பவர்களாகவும் அற்புத செயல்களை நம்புவர்களாகவும் நம்மை ஆக்குகின்ற எந்த நெறியையும் நான் விரும்பவில்லை. அவற்றின் பலன் அபாயகரமானது. அத்தகைய நெறிகள் ஒருபோதும் நன்மை செய்வதில்லை. அவை மனத்தை மந்த நிலையில் ஆழ்த்தி காலப்போக்கில் உண்மையை உணர, உண்மைவழியில் வாழ முடியாத அளவுக்கு மனத்தை பலவீனப்படுத்திவிடுகின்றன.

 –சுவாமி விவேகானந்தர்…..

Read Full Post »

இந்தியா அழிந்துவிடுமா ?

ந்தியா அழிந்துவிடுமா ? அது அப்படி அழிந்துவிடுமானால் உலகில்ருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். சமயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும். எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண்தெய்வமாகவும் , பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்குப் பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம், பலாத்காரம் , போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய பூஜைக்கிரியை முறைகளாக வைத்துகொள்ளும்.மனித ஆன்மாவை அது பலிபீடத்தில் பலியாக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி என்றுமே நடக்கப் போவதில்லை….

420658_306038159453733_1194254720_n

 உயர்ந்த பண்பு , ஒழுக்கம் , ஆன்மிகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறபளித்தவள் நமது இந்திய தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு. கடவுளுக்கு சமமான மகான்கள் இன்னுமும் இந்த நாட்டிலே தான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவா அழிந்து போய் விடும்?

இந்த உலகிலே எந்த நாடேனும் புண்ணிய பூமி என்னும் பெயருக்கு உரிமையுடையது என்றால் அது நாமது பாரத நாடே ஆகும். ஆன்மாக்கள் எல்லாம் கர்மபலன் அனுபவிப்பதற்கு வந்து சேர வேண்டிய நாடும், கடவுள் வழியில் செல்லும் ஒவ்வொரு ஆன்மாவும் கடைசியாக அடைவதற்குரிய வீடும் நமது பாரத கண்டமே ஆகும். மனித சமூகத்தின் பெருந்தன்மை, தயாளம், தூய்மை, சாந்தம் என்னும் குணங்கள் பரிபூரணம் அடைந்திருப்பதும், அகநோக்கிலும் ஆன்மீகத்திலும் தலை சிறந்ததுமான நாடு ஒன்று உண்டு என்றால், அது நமது பாரத நாடே ஆகும்.

இப்புண்ணிய பூமியில் சமயமும் சாஸ்திரமும் தழைத்து வளர்ந்தன. மகாபுருஷர்களுக்குப் பிறப்பளித்த தேசமும், தியாக பூமியும் நமது தாய் நாடே ஆகும். பண்டைய காலத்தில் இருந்து இன்று வரை மனித வாழ்க்கையின் மகோன்னதமான இலட்சியம் விளங்கி வந்திருப்பது இந்த நாட்டிலேதான்.

மற்ற நாடுகளில் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை உலகியல் என்னும் தீ எரித்து வருகின்றது. அந்தத் தீயை அணைப்பதற்கான ஜீவ நீர் இந்நாட்டிலே உண்டு.

பரந்த இவ்வுலகத்தின் வரலாறு முழுவதையும் ஆராய்ச்சி செய்து பாருங்கள், உன்னதனமான இலட்சியம் ஒன்றை நீங்கள் எங்கே கண்டாலும் அதற்குப் பிறப்பிடம் இந்தியாவாக இருப்பதைக் காண்பீர்கள். மிகப் பண்டைய காலந்தொட்டு பாரத நாடு மக்கள் குலத்துக்கு உயர்ந்த கருத்துக்கள் அளிக்கும் ஓர் அருஞ்சுரங்கமாக இருந்து வந்திருக்கிறது; உன்னதமான இலட்சியங்களுகுப் பிறப்பளித்து அவற்றை உலக முழுவதும் பரவலாகப் பரப்பியும் வந்திருக்கிறது.

 எனது அருமை சகோதரா! ஒரு பழைய விளக்கை எடுத்துக்கொண்டு , இந்த பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள் , பட்டி தொட்டிகள் , காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின் தொடர்கிறேன். உன்னால் முடியுமானால் , இப்படிப்பட்ட தலைசிறந்த மகான்கள் வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு , பார்க்கலாம்.

நமது தாய் நாட்டிற்கு இந்த உலகம் பட்டிருக்கும் கடன் மகத்தானது. நாட்டுக்கு நாடு எடுத்து  ஒப்பிட்டு பார்த்தால் பொறுமை உள்ள இந்துவுக்கு , சாதுவான  இந்துவுக்கு உலகம் கடமைப்பட்டிருபதை போன்று , பூமியிலே வேறு எந்த இனத்துக்கும் உலகம் இவ்வளவு பெரிய அளவிலே கடன்பட்டிருக்கவில்லை என்பதை நீ பார்க்கலாம்…….

—–சுவாமி விவேகானந்தர்…

Read Full Post »

உண்மையான ஆன்மீக வாழ்கை

 

                 ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல்,   இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
உண்மையான ஆன்மீக வாழ்கை
நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
ALL IS NOT GOD, BUT GOD IS ALL
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

***********************

Read Full Post »

Older Posts »