Feeds:
Posts
Comments

Posts Tagged ‘Life of Swami Vivekananda’

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின விழா (1863-2013)

சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி

சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின  விழாவை முன்னிட்டு விவேகானந்தா ஆத்ம சேவா சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தர் இளைஞர் மன்றம் சார்பில் 02/02/2013 அன்று தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் “சுவாமி விவேகானந்தரின் சிந்தனையில் பாரதம்  மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் செய்தியும் கண்காட்சி ” அமைக்கப்பட்டது .

001

கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் அவரது செய்தியை விளக்கும் விதமாக படங்கள் வைக்கபட்டு இருந்தன. இதன் ஒரு பகுதியாக ஊக்கமூட்டும் வீடியோப் படங்கள் காண்பிக்கப்பட்டன. இந்த வீடியோ படங்கள் மாணவர்களை பெரிதும் கவர்ந்தன. கண்காட்சியில் புத்தக விற்பனையும் நடைப்பெற்றது.

002

கண்காட்சியில் 7 ஆம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள சுமார் 500 க்கு  மேற்பட்ட மாணவ , மாணவியர் கலந்து கொண்டனர். 80 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் கூறுகையில் வீடியோ படம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று கூறினர் . கண்காட்சியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் செய்தியை அடிப்படையாக கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. இக்கேள்விகள் சரியான பதில் எழுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கண்காட்சியின் முடிவில் பரிசுகள் வழங்கப்பட்டன. இத்தேர்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவி களுக்கு “விவேகானந்தர் அழைக்கிறார்” புத்தகமும் “மாணவனே மனதை ஒருமுகப்படுத்து ” என்ற புத்தகமும் வழங்கப்பட்டது.

005

கண்காட்சியின் நிறைவு விழாவில் சுவாமி ஆத்ம கனானத்தர் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். “மனிதா நீ மகத்தானவன் ” என்ற பாடலை பாடி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் விதமாக பேசினார். ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் தெரியாது என்று பதில் கூறினர். சரி காந்தியை பற்றி தெரியுமா என்று கேட்டார்.ஆம் தெரியும் என்று மாணவர்கள் அனைவரும் கூறினர். காந்தியை பற்றி தெரிந்த உங்களுக்கு ஏன் உங்கள் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியவில்லை என்று கேட்டார் அதற்கு மாணவர்கள் அனைவரும் அமைதியாய் இருந்தனர். அதில் ஒரு புத்திசாலி மாணவி எழுந்து காந்தி தாத்தா நம் நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்டர் என் தாத்தா என்ன செய்தார் நான் ஏன் அவரை நினைவில் வைக்க வேண்டும் என்றார். அது போல நாம் வாழும் இந்த பூமியில் நாம் வாழ்ந்தற்குகான ஏதேனும் சான்றை விட்டுச்செல்ல வேண்டும் என்று கூறினார்.

008

தலைமையாசிரியர்  பேசும் போது இப்படி ஒரு வாய்ப்பு நமது பள்ளிக்கு கிடைத்தது  ஒரு பாக்கியம் என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மாணவ , மாணவி அனைவரும் அவரது வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

009

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுவாமி பரிசுகள் வழங்கினார் மற்றும்  பள்ளிக்கு விவேகானந்தர் இளைஜர் மன்றம் சார்பில் நினைவுபரிசும் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பள்ளியின் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்கள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்.

011

Read Full Post »

Image

Image

Image

Read Full Post »

Naren School

6789

தொடரும் ……

Read Full Post »

சுவாமிஜி வாழ்வில் நடந்தவை …..

                      ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் ‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.
சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘ என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.
சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.
சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.
சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.
ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும். இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால் தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன’ என்றார்.
Close Path
இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர் இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.
இவ்வகையில் வெளிப்படும் சக்தியை கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.
ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும் உணர முடியும்.
இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.
எண்ணம், சொல், செயல் அனைத்திலும் அப்பழுக்கற்ற பிரம்மச்சரியம் (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) அவசியம்.

Read Full Post »

சிறுவயதில் விவேகானந்தர்

 

தொடரும் …..

Read Full Post »

       மக்களுக்கு நமது கடமை

          இந்தியாவில் உள்ள தீமைகள் அனைத்திருக்கும் வேறாக இருக்கின்ற ஒரே விஷயம் ஏழைகளின் நிலைமை. மேலை நாட்டின் ஏழைகள் பேய் பிசாசுகள்; அவர்களுடன் ஒப்பிட்டால் நமது ஏழைகள் தேவதைகள். எனவே நமது ஏழைகளின் நிலைமையை உயர்த்துவது மிக எளிது. நமது நாட்டின் தாழ்ந்த வகுப்பினர்க்குச் செய்ய வேண்டிய ஒரே சேவை கல்வி அளிப்பது. அவர்கள் இழந்த தனித்துவத்தை மீண்டும் பெறச் செய்வது. நமது நாட்டின் மக்களும் மன்னர்களும் செய்ய வேண்டிய பெரும் பணி இதுவே. இதுவரையில் இந்த துறையில் ஒன்றுமே செய்ய பட வில்லை. புரோகித ஆதிக்கம் , அன்னியரின் ஆக்கிரமிப்பும் நூற்று ஆண்டுகளாக அவர்களைக் கீழே தள்ளி மிதித்து வந்துள்ளன. இறுதியில் இந்தியாவின் ஏழைகள் தாங்கள் மனித பிறவிகள் என்பதையே மறந்து விட்டனர். அவர்களுக்கு கருத்துகளை அளிக்க வேண்டும். தாங்களை சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்பதை அறியுமாறு அவர்களின் கண்கள் திறக்க பட வேண்டும். பிறகு அவர்கள் தங்கள் உயர்வை தாங்களே தேடிக் கொள்வார்கள். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு ஆணும் , ஒவ்வொரு பெண்ணும் தங்கள் உயர்வை தாங்களே தேடிக்கொள்ள  வேண்டும். கருத்துக்களை  அவர்களுக்கு கொடுங்கள் – வேண்டிய உதவி அது ஒன்றே. மற்றவையெல்லாம் அதன் விளைவாக தொடர்ந்து  வந்தே தீரும். ரசாயனப் பொருட்களை சேர்த்து வைப்பது நமது வேலை, இயற்கை நியதிக்கு ஏற்ப படிகமாதல் தானாகவே நிகழும். அவர்களின் மூளையில் கருத்துகளை புகுத்துவது நமது கடமை, பிறவற்றை அவர்கள் செய்து கொள்வார்கள், இந்தியாவில் செய்ய வேண்டியது இதுதான்.

           ஏழைகளுக்கு கல்வி அளிப்பதிலுள்ள பெருங் கஷ்டம் இதுதான் . நீங்களே கிராமந் தோறும் இலவச பள்ளி ஒன்றை ஏற்படுத்துகீரிகள் என்று வைத்து கொள்வோம். அதனால் எந்த நன்மையும் வராது. ஏழை சிறுவர்கள் பள்ளிக்கு வருவதை விட வயல்களுக்கு சென்று தங்கள் தந்தைக்கு உதவுவார்கள், அல்லது வேறு வழியில் பிழைப்புக்கு வழி தேட முயல்வார்கள். இந்தியாவில் வறுமை அவ்வளவு கடுமையானது. எனவே மலை முகமதுவை  நாடி வாரவிட்டால் , முகமது மலையை நாடி செல்ல வேண்டும். ஏழை சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால், கல்வி அவனிடம் செல்ல வேண்டும். நமது நாட்டில் திட சித்தமுள்ள சுயநலமற்ற துறவிகள் உள்ளனர். அவர்கள் கிராமம் கிராமமாக சென்று மதத்தை போதிக்கவே செய்கின்றனர். அவர்களுள் சிலரை உலக விஷியங்களையும் போதிக்கின்ற ஆசிரியர்களாக்க முடியுமானால், அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று , வீடு வீடாக மத போதனை செய்வதுடன் உலகக் கல்வியும்  அளிப்பார்கள். இவர்களுள் இருவர் மாலை வேளைகளில் ஒரு கிராமத்திற்கு போகலாம்; காமார, பூகோளம் , தேசப் படங்கள் இவற்றில்  உதவியுடன் பாமர மக்களுக்கு வான இயல் , புவியியல் என்று எவ்வளவோ சொல்லித்தரலாம். பல்வேறு நாடுகளை பற்றிச் சொல்லலாம். ஆயுள் முழுவதும் நூல்களைப் படித்து அறிவதை விட நூறு மடங்கு அதிகமானவற்றை அவர்கள் இவ்வாறு செவி வழியாகக் கற்க முடியும்.

மறுபடியும் கல்வி கற்பதாக இருந்தால் வெறும் புள்ளி விவரங்கள் அடங்கிய கல்வி விபரங்களை நான் படிக்க மாட்டேன். முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், நல்ல பண்பாட்டினையும் வளர்த்துக் கொள்வேன். அதன்பிறகு, மனம் பண்பட்டு விடும். மனம் என்னும் பண்பட்ட கருவி கொண்டு நினைத்த நேரத்தில் உண்மைகளை அறிந்து கொள்வேன்.கல்வி என்பது மூளைக்குள் பல விஷயங்களைப் போட்டு திணித்து வைப்பதன்று. அப்படி திணிக்கப்படும் அந்த விஷயங்கள் வாழ்நாள் முழுவதும் அஜீரணத்தால் உனக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கும்.

–சுவாமி விவேகானந்தா

Read Full Post »

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும்

சுவாமி விவேகானந்தரும் சீடர்களும் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.
சீடர்: ‘சுவாமி, நானே பிரம்மம் என்றால் நான் ஏன் அதை எப்போதும் உணர்வதில்லை?”
சுவாமி விவேகானந்தர் “உணர்வு நிலையில் அதை அடைய வேண்டுமானால் ஒரு கருவி தேவை. மனமே அந்தக் கருவி. ஆனால் அது ஜடப்பொருள். பின்னால் இருக்கும் ஆன்மாவின் உணர்வினால் அதுவும் உணர்வுடையது போல் தோன்றுகிறது. அதனால் தான் பஞ்சதசியின் ஆசிரியர் “சிச்சாயாவேசத: சக்திச் சேதனேவ விபாதிஸா’- அதாவது உணர்வுப் பொருளான ஆன்மாவின் நிழல் அல்லது பிரதிபலிப்பால் தான் சக்தி அறிவுள்ளது போல் தோன்றுகிறது’ என்று கூறுகிறார்.
அது போல் நம் மனமும் உணர்வுடையது போல் காட்சி அளிக்கிறது. ஆகவே உணர்வின் சாரமாக இருக்கும் ஆன்மாவை மனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியாது என்பது உறுதி. ஆன்மாவை அறிய நீ மனத்திற்கு அப்பால் செல்ல வேண்டும்.
மனத்தைக் கடந்து வேறு எந்த ஒரு கருவியும் இல்லை. ஆன்மா மட்டுமே இருக்கிறது. அதாவது அங்கே எதை அறிவாயோ அதுவே கருவியின் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அறிபவன், அறிவு, அறியும் கருவி எல்லாம் ஒன்றாகி விடுகின்றன. அதனால் தான் வேதங்கள், ‘அறிபவனை எதனால் அறிவது?’ என்று கேட்கின்றன.
உண்மை என்னவென்றால் உணர்வு நிலைக்கு அப்பால் ஒரு நிலை உள்ளது. அங்கு அறிபவன், அறிவு, அறியும் கருவி என்று எதுவும் இல்லை. மனம் ஒடுங்கும்போது அந்த நிலை உணரப்படுகிறது. ‘உணரப்படுகிறது’ என்று தான் நான் சொல்கிறேன். ஏனென்றால் அந்த நிலையை உணர்த்த வேறு வார்த்தைகள் இல்லை. அனுபவமே தீர்வு.
மேலும் உணர்வுகள் அனுபவிக்கும் பயத்தைப் பற்றி விவேகனந்தர் இப்படிச் சொல்கிறார்.
இன்பத்தில் இருப்பது நோயின் பயம்
உடலில் இருப்பது சாவின் பயம்
உயர் பிறப்பில் சாதி இழத்தலில் பயம்
பணத்தில் இருப்பது கொடுங்கோலின் பயம்
பலத்தில் இருப்பது பகைவர் பயம்
மதிப்பில் அதை இழத்தலின் பயம்
அழகில் இருப்பது மூப்பின் பயம்
குணத்தில் இருப்பது வசையின் பயம்
வாழ்க்கையில் இருப்பது எல்லாம் பயம்
துறவில் தானே பயமே இல்லை!
–சுவாமி விவேகானந்தா …

Read Full Post »

   கடவுளை பற்றிய கருத்து ……     

                         மதம் என்பது வளர்ச்சி பற்றியது என்பதை உணர வேண்டும் ; அது வெறும் பொருளற்ற பிதற்றல்கள் அல்ல . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு மனிதன் கடவுளை கண்டான். புதரில் கடவுளை கண்டார் மோசஸ். மோசஸ் கடவுளை கண்ட போது என்ன செய்தாரோ,  அது உங்களை காப்பாற்றுமா ? ஒருவன் கடவுளை கண்டது, உங்களை உற்சாகம் படுத்தி அவ்வாறு  செய்யும் படி துண்டலாம் , அதருக்கும் மேலாக அது உங்களுக்கு உதவி செய்யாது. முன்னோர்களின் உதாரனகளுடைய முழுப்பயனும் அவ்வளவுதான் . அதருக்கு மேல் ஒன்றுமில்லை. செல்லும் வழியிலுள்ள கைகட்டிய கம்பங்கள் அவை . ஒருவன் உண்டால் இன்னொருவனின் பசி தீராது. ஒருவன் கடவுளை காண்பது மற்றொரு மனிதனைக் காபற்றாது. உங்களுக்கு நீங்களே கடவுளை காண வேண்டும். இப்போது சண்டை எல்லாம் கடவுளுக்கு  ஒரு உடலில் முன்று தலைகளா அல்லது ஆறு தலைகளா என்பது பற்றியே ! ஆனால் நீங்கள் கடவுளை கண்டதுண்டா என்றால் இல்லை ; காண முடியும் என்று நம்புவதும் இல்லை. நாம் எவ்வளவு மதிகெட்ட முட்டாள்கள் ! நிச்சியமாக பைதியகாரர்களே.

கடவுள் என்று ஒருவர் உண்டானால் , அவர் உங்கள் கடவுளாகவும் என் கடவுளாகவும் இருக்க வேண்டும் என்பது இந்தியாவில் தொண்டுதொட்டு வரும் கருத்து. சூரியன் யாருக்கு சொந்தம் ? அம்புலி மாமா எல்லாருக்கும் மாமா என்கிரிகள் . கடவுள் ஒருவர் உண்டானால் , நீங்கள் அவரை பார்க்க முடிய வேண்டும் . இல்லாவிட்டால் அவர் எப்படியாவது போகட்டும் !

கடவுள் ஒருவர் இருக்கிறார் , அவர் எங்கும் நிறைந்துள்ளார் என்று நீங்கள் எல்லாரும்  சொல்கிறீர்களே , எங்கும் நிறைத்திருக்கிறார் பற்றி உங்கள் கருத்து என்ன ?சற்று கண்களை மூடிக்கொண்டு சிந்தியுங்கள். அது என்ன என்பதை எனக்கு கூறுங்கள். உங்கள் சிந்தனையில் விரிவதுதான் என்ன ? ஏற்கனவே நீங்கள் கண்ட பரந்த கடல் அல்லது விரிந்த நீல வானம் , அல்லது அகன்ற புல்வெளி அல்லது இவைபோன்ற வேறு எதோ ஒன்று , அப்படிதானே ? இதுதான் எங்கும் நிறைந்தவர் என்பதற்கு நீங்கள் சொல்லும் பொருளானால் அது பயனற்றது, நீங்கள் அதன் பொருளை உணரவே இல்லை. இறைவனின் மற்ற குணங்களும் அப்படிதான். அவர் எல்லாம் வல்லவர் , எல்லாம் அறிந்தவர் என்று கூறும் பொது நாம் என்ன புரிந்துகொள்கிறோம் ? எதுவும் இல்லை . மதம் என்பது அநுபூதி. இறைவனை பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் அனுபூதியில் அறியும்போதுதான் நீங்கள் இறைவனை வழிபடுகிரிகள் என்று கூறுவேன். அதை அடையாதவரை , நீங்கள் அந்தச் சொற்களிலுள்ள எழுத்துக்களை எழுத்துகுட்டி  படிக்க தெரிந்தவர்கள் அவ்வளதான்.

இந்த அனுபூதி நிலையை அடைய , நாம் கண்ணுக்கு புலனாகின்றவை வாயிலாக செல்ல வேண்டும். குழந்தைகள் எண்ணிக்கை கற்கும் போது முதலில் புறபொருட்களின் மூலம் தான் ஆரம்பிக்கிறது , பிறகு தான் மனத்தாலேயே செய்ய கற்றுக்கொள்கிறது. ஒரு குழந்தையிடம் 5 * 2 = 10 என்று கூறினால் அதருக்கு ஏதும் புரியாது. ஆனால் பத்து பொருட்களை கொடுத்து , அது எப்படி என்பதை காட்டி விளக்கினால் புரிந்து கொள்ளும். இது நிதானமான நீண்ட பாதை இங்கு நாம் எல்லாரும் குழந்தைகள். நாம் வயது முதிந்தவர்கள் இருக்கலாம் , உலகிலுள்ள எல்லாம் நூல்களை படித்திருக்கலாம்; ஆனால் ஆன்மிக துறையில் நாம் எல்லாரும் குழந்தைகளே.  கொள்கைகள் , தத்துவங்கள் , அற கோட்பாடுகள் எல்லாவற்றையும் எவ்வளவுதான் உங்கள் மூளைக்குள் திணித்தாலும் அவற்றால் பெரிதாக பலன் ஒன்றும் இல்லை. நீங்கள் யார் , அனுபூதியில் என்ன உணர்திருகிரிகள் ? இவைதான் பயனுள்ளவை , சாரமனவை. ஆனால் நாம் கொள்கைகளையும்  கோட்பாடுகளையும் அறிதிருக்கிறோம் , அனுபூதியில் எதையும் உணரவில்லை .

சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் . மதம் என்பது மிருகத்தை மனிதனாக்கும், மனிதனை கடவுளாக்கும்.

—சுவாமி விவேகானந்தா

 

Read Full Post »

சுவாமி தேஜசனந்தர் எழுதிய சுவாமி விவேகனந்தரின் வழக்கை வரலாறு சிறிய நூல்

DOWNLOAD

Read Full Post »