Feeds:
Posts
Comments

Archive for the ‘Audio Books’ Category

பாரதம்

காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுப்பட்டதும் பல நாடுகள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளன. நமக்கு மிகவும் அண்மையில் உள்ள நாடுகளான பர்மாவும் சிலோனும் உதாரணங்கள்.பர்மா தனது பெயரை மியான்மர் என்று மாற்றிக் கொண்டுவிட்டது. சிலோன் தனது பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்றிக் கொண்டது.

அந்நியர்களால் அடிமைப் படுத்தப்பட்டு சுரண்டப்படுவதற்கு நெடுங்காலம் முன்பிருந்தே தான் ஒரே நாடாக இருந்ததை உலகத்தின் முன் நிருபித்துக் காட்டிவது; உலக அரங்கில் ஒரு நாடாகக் தன்னை நிலைநாட்டிக் கொள்வது – இவைதான் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியாக அமைந்த அடிப்படைக் காரணம். இத்தகைய ஒரு நடவடிக்கையின் மூலம் அவை தங்களது தனித்தன்மையைப் பறைசாற்றிக்கொள்ள விரும்பின. வேரைக் கண்டுபிடித்து, நிலத்தைச் சுத்தம் செய்துகொடுத்து, வேர் நன்கு பிடித்து வளர வழிசெய்து கொடுப்பது – இதுதான் இந்த இரண்டு நாடுகளிலுமே நடை பெற்றுள்ள விஷயம். நியுசிலாந்து கூட இப்படிதான். அது தனக்குச் சூட்டப்பட்ட ஆங்கிலப் பெயரை வீசி எறிந்துவிட்டு தனது சொந்த மொழியிலிருந்து ஒரு பெயரை வைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறது.

நமது நாட்டுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம் உருவத்திலும் மக்கள் தொகையிலும் எவ்வளவு சிறியவை இந்த நாடுகள் ! சரித்திரத்தில் பார்த்தால், இவை ரொம்பவும் புதிய நாடுகள். கலாசாரத்திலோ, இவை ரொம்பவும் புதிய நாடுகள்.கலாசாரத்திலோ, இவை இளமையானவை. உடன்படுபவைகளைவிட முரன்பவைகல்தான் எக்கச்சக்கமாக உள்ளன.ஆனால் இந்த நாடுகள் எல்லாம் தங்களது தேசிய ம உறுதியைக் காட்டின.பாவப்பட்ட “நாம்” மட்டும் இன்னமும் “இந்தியா”வை விடுகிற வழியைக் காணோம். என்னே பரிதாபம்! “நாற்பதுகளில் ‘தேசிய சுதந்திரம்’ என்ற ஒரு மாபெரும் சகாப்தத்தையே துவக்கி வைத்து நாம் தான்” என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொல்லும்போது இந்த வேதனை மிகவும் அதிகரிக்கிறது.

சுதந்திரம் பெற்ற அனைத்து நாடுகளிலுமே நம் நாடு தான் மிகப் பழமையானது. ஆனால் நமது அரசியல் நிர்ணய சபையானது நமது அரசியல் சாசனத்தை வரையருப்பதர்காகக் கூடியபோது அதன் நிர்மான கர்த்தாக்கள் நமது தாய்நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டார்கள் (India That is Bharat )  மீண்டும் அதே மனநிலை. ‘இந்தியா என்பது ஒரு நாடாக உருவாகிக் கொண்டு வருகிறது” என்று கருத்தும் அதே மனநிலை நீடித்தது. இந்த நாட்டின் அமரத்துவம் வாய்ந்த தேசியத் தன்மை முழுமையாக மறக்கப்பட்டுவிட்டது.
அவர்கள் மனதில் ஆதிக்கம் செலுத்திவந்ததெல்லாம் 18 ஆம் நுற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய அரசியல் ரீதியான தேசியம்தான். அது ,நெப்போலியன் தனது எல்லைகளை விருத்தி செய்துகொண்டே போனதற்கு எதிராக ஏற்பட்ட வெறும் அரசியல் ரீதியான எதிர்மறை விளைவு மட்டுமே. எனவே பாரதம் என்ற புனிதமான பெயரை – ஆழ்ந்த பொருள் செறிந்த புனிதப் பெயரை – தொன்றுதொட்டு நமது எல்லா இலக்கியங்களிலும் எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக குறிப்பிடப்பட்டு வரும் பாரதம் என்ற அந்தப் பெயரை, அவர்களால் தரிசனம் செய்யமுடியவில்லை. சஈனப்படைஎடுப்பு சமயத்தில், ‘இமயமலைக்குத் தெற்கே அமைந்துள்ள நிலப்பரப்பு முழுவதும் பாரதம்தான்’ என்பதை உலகத்திற்கு நிலைநாட்டுவதற்காக, டாக்டர் ராதாகிருஷ்ணன் ,

“உத்தரம் யத் சமுத்திரஸ்ச ஹிமாத்ரேஸ் சைவ தக்ஷிணம்
வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர ஸந்ததி”

என்ற வரிகளைச் சுட்டிக் காட்டினார்.

இந்தியா

ஆனால் நமது அரசியல் சாசனம் நிர்ணயிக்கப்பட்ட வேளையில், நிர்வாகத்தில் அமர்ந்திருந்தவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ள ‘சந்தேகத்துக்கு இடமேயில்லாத இந்த வரையறையை அறியாதவர்களாய் இருந்துள்ளனர். இது ஒன்றே போதுமான தாயிற்றே! பெயர்ப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்குமே இது! என்ன பெயர் வைப்பது என்ற விவாதத்திற்கு இடமே ஏற்பட்டிருக்காதே ! ஆனாலும் ஏனோ அவர்கள் இருட்டிலே தட்டுத் தடுமாறி நடந்து, குருடன் தடவித்தடவித் படிப்பதுபோல “இண்டியா தட் ஈஸ் பாரத்” என்று படித்தார்கள்.

சரி. இதன் பொருள் என்ன? நமது நாட்டின் பெயர் இந்தியா, பாரதம் என்று அழைக்கப்படும். இதுவே, பாரத் தட் ஈஸ் இண்டியா என்று இருந்தால் ? நமது நாட்டின் பெயர் பாரதம்; இதை இந்தியா என்றும் அழைப்பார்கள் என்று பொருள்படும் அல்லவா! இந்த இரண்டில், இரண்டாவதாகச் சொல்லப்பட்டதுதான் கொஞ்மாவது அறிவுபூர்வமாக இருந்திருக்கும். ஆனால் அது நடைபெறவில்லை. காரணம் சிந்தனைக் குழப்பம்; தேசியம் பற்றிய இரவல் வாங்கப்பட்ட கருத்துக்கள். நல்லவேளை, இண்டியா தட் வாஸ் பாரத் (இந்தியா அதாவது பரதம் என்று இருந்தது) என்று இவர்கள் போடாமல் பார்த்துக் கொண்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இண்ட், இண்டியா, இண்டிகா போன்ற எல்லாம் வெளியாட்கள் சிந்து நதிக்கு அப்பால் இருந்து கொண்டு  நமக்கு இட்டபெயர்கள். ஆனால் நமக்கு நாமே வைத்துக்கொண்ட, இன்றும் வைத்துக்கொண்டிருக்கிற – பெயர் பாரதம். ஆகா இந்த இரண்டில் எது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்? கண்டிப்பாக, பிந்தையதுதான். ஆனால் அந்தக் கண்ணோட்டம் இல்லை. அதன் விளைவுதான் இன்றைய குழப்பநிலை.

இஸ்ரேலியர்களின் முக்கியமான செயல் ஒன்றை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது நமக்கு அறிவூட்டுவதாய் அமையும்.அவர்கள் சுதந்திரம் பெற்ற நாடாக ஆனா அதேவேகத்தில், புவியியல், வரலாற்று நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார்கள். பத்திரிகை நிருபர்கள் இதன் காரணத்தைக் கேட்டபோது, ” எங்கள் நாடு புராதனமான நாடு. இதை நாங்களும் எங்கள் குழந்தைகளும், உலகமும் ஏற்றுக் கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்று பதில் கூறினார்கள்.

Read Full Post »

பாரத மாதா

ஜன கன மன அதிநாயக, ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா
விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதிதரங்கா
தவ சுப நாமே ஜாகே
தவ சுப ஆஷிஸ மாகே
காஹே தவ ஜய காதா
ஜன கன மங்கள தாயக ஜய ஹே
பாரத பாக்ய விதாதா
ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே,
ஜய ஜய ஜய, ஜய ஹே!

DOWNLOAD AUDIO MP3

ஜன கன மன அதிநாயக ஜய ஹே – மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டுக்கு பெருமையும், மங்கலமும், செல்வங்களும் அருளுபவள் நீயே.

பஞ்சாப சிந்து குஜராத் மராத்தா
திராவிட உத்கல பங்கா

ஐந்து பெரிய நதிகள் ஓடும் நிலம், பெரும் வீரர்கள் தோன்றிய இடம், சமய ஒற்றுமையை வலியுறுத்தும் சீக்கியத்தின் பிறப்பிடம் – பஞ்சாப் மாகாணம் உன்னுடையது.

புராதன பாரதத்தின் தலை வாசல், நான்கு வேதங்களின் பிறப்பிடம் , பழம்பெரும் சிந்து சமவெளிக் கலாச்சாரம் தழைத்தோங்கிய இடம் – சிந்து நதிப்பிரதேசம் உன்னுடையது.

பகவான் கிருஷ்ணனின் ராஜ்ஜியம், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறப்பிடம் – குஜராத் மாநிலம் உன்னுடையது .

வீர சிவாஜியின் பிறப்பிடம், தற்கால இந்தியாவின் தலைவாசல் – மராட்டிய மாநிலம் உன்னுடையது .

பழம்பெரும் திராவிடக் கலாச்சாரத்தின் தொட்டில், செம்மொழியாம் தமிழ்மொழியின் பிறப்பிடம், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பாகங்களை அளித்த பெருநிலம் – திராவிட பீடபூமி உன்னுடையது.

பூரி ஜெகன்னாதம், கொனாரக் போன்ற சிறந்த கலைச்செல்வங்களாகிய கோவில்கள் இருக்கும் இடம், பழங்காலத்து கலிங்க தேசம் – உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம் உன்னுடையது.

இந்திய விடுதலையின் பிறப்பிடம், நூதன இந்தியாவின் மூளை, பெரும் ஞானிகள் பிறந்த தேசம் – பழம்பெருமை மிக்க வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது .

இந்த பெரும் மாநிலங்களும் அதில் வாழும் மக்களும் உன் பெருமைகளை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றனர்.

விந்தியா ஹிமாச்சல யமுனா கங்கா

வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் நடுவே அமைந்த இயற்கை எல்லை, மிகப் பெரியது என்றும் கடக்க முடியாதது என்றும் ஒரு காலத்தில் எண்ணப்பட்ட மலை, பல புராணக் கதைகளின் இருப்பிடம் – விந்திய மலை உன்னுடையது.

மாபெரும் மலைத்தொடர், அசலம் (அசையாதது) என்னும் சொல்லுக்கு ஒரு மாபெரும் உதாரணம், இந்தியத் தேசத்தின் இயற்கை எல்லை, மகரிஷிகளும் சாதுக்களும் வாழும் இறையாலயம், புராணக்கதைகளின் நாயகன், உலகின் மிகப் பெரிய சிகரத்தைக் கொண்ட மலைத்தொடர் – இமய மலை உன்னுடையது.

இந்தியத் திருநாட்டின் மாபெரும் சமவெளியை தழைத்தோங்கச் செய்யும் இரு நதிகள், இந்தியர்களின் ஆன்மத் தாயார்கள் – கங்கையும் யமுனையும் உன்னுடையவை.

இந்த இயற்கை அற்புதங்கள் உன் புகழை எல்லாத் திசைகளிலும் பாடிப் பரவிக் கொண்டிருக்கின்றன.

உச்சல ஜலதி தரங்கா – மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.

தவ சுப நாமே ஜாகே – உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

தவ சுப ஆஷிஸ மாகே – உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.

காஹே தவ ஜய காதா – உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்.

ஜன கன மங்கல தாயக ஜய ஹே – இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!

பாரத பாக்ய விதாதா – இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.

ஜய ஹே! ஜய ஹே! ஜய ஹே! ஜய ஜய ஜய ஜய ஹே! – வெற்றி உனக்கே! வெற்றி உனது நல்வழி செல்லும் மக்களுக்கே! வெற்றி உன் மங்கலகரமான கொள்கைகளுக்கே! வெற்றி உன் ஈடு இணையற்ற தத்துவச் செல்வங்களுக்கே! வெற்றி உன் பன்மைத் தன்மைக்கே! வெற்றி உன் அமைதியை விரும்பும் குணத்திற்கே! வெற்றி! வெற்றி!! வெற்றி!!!

Read Full Post »

பிரார்த்தனா

நமஸ்தே ஸதா  வத்ஸலே மாத்ருபூமே

த்வயா ஹிந்துபூமே ஸுக(ம்) வர்த்திதோஹம்

மஹாமங்கலே புண்யபூமே த்வதர்த்தே

பதத்வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே

ப்ரபோ  ஶக்திமன் ஹிந்துராஷ்ட்ராங்கபூதா

இமே ஸாதரந் த்வான் நமாமோ வயம்

த்வதீயாய கார்யாய பாத்தா கடீயம்

ஶுபாமாஶிஷந்  தேஹி தத்பூர்தயே

அஜய்யாஞ்ச விஶ்வஸ்ய தேஹீஶ ஶக்திம்

ஸுஶீலஞ் ஜகத்யேன  நம்ரம் பவேத்

ஶ்ருதஞ்சைவயத்கண்டகாகீர்ண மார்கம்

ஸ்வயம் ஸ்வீக்ருதன்நஸ் ஸுகங்காரயேத்

ஸமுத்கர்ஷ நிஷ்ரேய  ஸஸ்யைக முக்ரம்

பரம் ஸாதனன்  நாம வீரவ்ரதம்

ததந்தஸ்  ஸ்புரத்வக்ஷயா த்யேய நிஷ்டா

ஹ்ருதந்தஹ் ப்ரஜாகர்து தீவ்ராநிஶம்‌

விஜேத்ரீ ச நஸ்  ஸம்ஹதா கார்ய சக்திர்

விதாயாஸ்ய தர்மஸ்ய ஸம்ரக்ஷணம்‌

பர(ம்) வைபவன்  நேதுமேதத்‌ ஸ்வராஷ்ட்ரம்

ஸமர்தா  பவத்வாஶிஷா தே ப்ருஶம்

பாரத்  மாதா கீ ஜய்!

குறிப்பு:

ஶ – இந்த எழுத்தை, ஸ.ஷா இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட வகையில், நாக்கை, ஓரளவு மடக்கி உச்சரிக்க வேண்டும்.

AUDIO DOWNLOAD

 

Read Full Post »

சுவாமி சுகபோதானந்தா அவர்களின்……

“MANASE RELAX PLEASE.”

[மனசே தயவு செய்து ஓய்வெடு.]

சுவாமி சுகபோதானந்தா
தெளிவு பெற்ற ஓர் ஆன்மீக குரு. “LIFE” (Living in Freedom & Enquiry Programme) மற்றும் YPL(Yogic Linguistic Programming) முறைகளை உருவாக்கியவர். பழுத்த வேதாந்த அனுபவம் கொண்ட மேலாண்மை குரு.
சுவாமிஜி இங்கிலாந்தில் அத்தாட்சி பெற்ற NPL முறை பயிற்சியாளராக இருந்தவர். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய போதனா முறைகளில் ஆழ்ந்த ஞானம் உண்டு. மகத்தான பாரம்பரிய ஆசான்களிடம் பயின்ற இவருக்கு அதிநவீன மேலாண்மை உத்திகளுடன் தொடர்ந்து வரும் தொடர்பு உண்டு. முன்னணி தொழிலகங்கள், தங்கள் அதிகாரிகளுக்காக “IN HOUSE WORKSHOP” நடத்த இவரை அழைக்கிறார்கள். சுவாமிஜியின் “LIFE” என்றபெயரில் புகழ்பெற்ற SELF DEVELOPMENT PROGRAMME துணை கொண்டு கூட:டாண்மைத் துறையில் பலரும், ஏராளமான பொதுமக்களும் பலன் அடைந்திருக்கிறார்கள். கூட்டாண்மைத்துறைக்கென்றே விசேசமாக HARMONY & CREATIVITY AT WORK என்ற முறையை சுவாமிஜி அமைத்திருக்கிறார். தியான முறையில் அறிவியல் கண்ணோட்டம் பற்றி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இளைஞர் முகாம்களை நடத்தி வருகிறார்.
இவற்றைத்தவிர, சுவாமிஜியின் ஊக்குவிப்புடன் வழிகாட்டுதலுடனும் பிரசன்னா டிரஸ்ட், ஆதரவற்ற குழந்தைகளுக்காக பிரசன்ன ஜோதி என்ற அனாதை இல்லமும் நிர்குண மந்திர் என்ற தியானப்பயிற்சி நிலையமும் நடத்தி வருகிறது.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற இவரது புத்தகம் முன்பு எப்போதும் கண்டிராத சாதனை படைத்திருக்கிறது. அதன் ஒலிவடிவத்தை இங்கே தருகின்றோம்.

குரல் கொடுத்தவர்:- “நிழல்கள்” ரவி

DOWNLOAD PDF

DOWNLOAD AUDIO

PART -1

PART -2

PART -3

Read Full Post »

இந்து மதத்தின் பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள் என்பதை எளிய
விளக்கங்களுடன் கண்ணதாசன் போல் யாரும் சொல்ல முடியாது. நாத்திகனாக இருந்து
கம்பனை விமர்சிக்க ராமாயணம் படித்து, ஆன்மீகவாதிக மாறிப்போன ஒரு பெரும் புலவனின் சொற்பொழிவை தரவிரக்கம் செய்து கேட்டு மகிழுங்கள்.

Download MP3

PART 1

PART 2

PART 3

PART 4

PART 5

PART 6

Read Full Post »