Feeds:
Posts
Comments

Archive for July, 2011

ஸ்ரீ ரமண பகவான் அருள்மொழி

பூமியின் ஹ்ருதயமும் நினைக்க முக்தி தரவல்லதுமான ஸ்ரீ அருணாசலத்தில் விருபாக்ஷ குகையில் பகவான் ஸ்ரீ ரமண மகார்ஷிகளது அருந்தவ மோனத்தால் அவர்பால் அர்க்கப்பெர்ற பக்தர்கள் பலருள் ஒருவரான சிவபிரகாசம் பிள்ளை என்னும் அன்பர் 1901, 1902 – ல் மகரிஷிகளை அணுகி, உண்மையை உணர்ந்தபடி தமக்குபதேசிக்கும்படி வினயத்துடன் வேண்டிக் கேட்ட வினாக்கட்கு, மஹர்ஷிகள் அவ்வபோது தமிழில் விடை எழுதித் தந்த இந்நூல் இதற்குமுன் பல முறை பதிக்கப்பெர்று இப்பொழுது இருபத்தி ஆறாவது பதிப்பாக வெளியிடப்படுகின்றது.

நான் யார் ?

சகல ஜீவர்களும் துக்கமேன்பதின்ரி எப்போதும் சுகமாயிருக்க விரும்புவதாலும், யாவர்க்கும் தன்னிடத்திலேயே பரம பிரியமிருப்பதாலும், பிரியத்திற்கு சுகமே காரனமாதளாலும், மணமற்ற நித்திரையில் தினமனுபவிக்கும் தன சுபாவமான அச்சுகத்தை யடையத் தன்னைத்தா னறிதல் வேண்டும். அதற்கு நான் யார் என்னும் ஞான விசாரமே முக்கிய சாதனம்.

DOWNLOAD

 

Read Full Post »

விவேகானந்தரை நினைத்திடுவோம் |
விவேக வழியில் வாழ்ந்திடுவோம் ||
தெய்வீகம் மனிதனின் இயல்பென்போம் 
தெய்வத்தொண்டில் சிறந்திடுவோம் |
விவேகானந்தரின் நெறியில் நின்றே 
ஆண்மையுடன் நாம் வாழ்ந்திடுவோம் ||
தொண்டும் துறவும் போற்றிடுவோம் 
இதயத்தைக்  கோயில் ஆக்கிடுவோம் | 
விவேகானந்தரின் குரலை முழங்கி 
சிங்கமென நாம் சிலிர்த்திடுவோம் ||
சுயநலம் களைந்தே வாழ்ந்திடுவோம் 
பொதுநலம் பேணி உழைத்திடுவோம்  |
விவேகானந்தரின் கொடியை ஏந்தி 
தியாகத்தின்  உருவாய் விளங்கிடுவோம் ||
முனிவர்கள் பரம்பரை நாம் என்போம் 
பக்தியும் முக்தியும் சேர்த்திடுவோம் |
விவேகானந்தரின் படையாய்   விளங்கி
மங்களம் எங்கும் பரப்பிடுவோம் ||

Read Full Post »

அவர் ஒரு வேதாந்தி!

சுவாமி விவேகானந்தர் ஒரு  முறை பாரிஸ் நகரவீதியில் தன ஐரோப்பிய சிஷ்யையுடன் கோச் வண்டியில் சென்று கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் ஒரு வீட்டிலிருந்து இரண்டு பணக்காரச் சிறுவர்கள் வெளியே வந்தார்கள். கோச் வண்டியை ஓட்டியவர் வண்டியை நிறுத்தி அந்தப் பணக்காரச் சிறுவர்களை கட்டியணைத்து முத்தம்மிட்டார். சில வார்த்தைகள் பேசினார். மறுபடியும் வந்து வண்டியை ஓட்டிச்சென்றார் .

“யார் அந்தச் சிறுவர்கள்?” என்று கேட்டார் சுவாமிஜியின் சிஷ்யை. பதிலுக்கு வண்டியோட்டி “என் குழந்தைகள்தான்” என்றார்.
சுவாமிஜிக்கும், சிஷ்யைக்கும் ஒரே ஆச்சரியம்.கோச் வண்டிக்காரர் திரும்பிப் பார்த்தார்.பாரீஸில் இருந்த ஒரு வங்கியின் பெயரைச் சொல்லி, “அந்த வங்கியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

“ஒ! தெரியும். மிகப் பெரிய வங்கிதான். ஆனால், தற்போது திவாலாகிவிட்டது போல் தெரிகிறது!”
என்றார் சுவாமிஜியின் சிஷ்யை.

இதை கேட்டுவிட்டு வண்டியோட்டி அமைதியாக, “நான்தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்போது கொஞ்சம் சிரமநிலையில் இருக்கிறது. இந்தநிலையில் நான் மற்றவர்களுக்குச் சிறிதும் சுமையாக இருக்க விரும்பவில்லை. மீதம்மிருந்த சொத்தை விற்று இந்தக் கோச் வண்டி வாங்கினேன். இதை வாடகை வண்டியாக ஒட்டிக் கொண்டிருக்கிறேன். என் மனைவியும் சிறிது சம்பத்க்கிறார். கடன்களை அடித்தவுடன் மீண்டும் வங்கியைத் திறந்துவிடுவேன்!” என்றார்.

இதைக் கேட்டு கொண்டிருந்த சுவாமிஜி மிகவும் மகிழ்ந்து.”இதோ இந்த மனிதரை பார்! இவர்தான் சரியான வேதாந்தி. வேதாந்த கட்டத்தைத் தம் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தியுள்ளார். பெரிய ஓர் அந்தஸ்திலிருந்து விழுந்தும் கூட இவர் சூழ்நிலைக்கு இரையாகி விடவில்லை. என்ன ஒரு தன்னம்பிக்கை இவரிடம் உள்ளது!” என்று கூறி ஆச்சரியப்பட்டார்.

அதற்க்கு பிறகு அவர் வீட்டிற்குப் போய் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார் சுவாமிஜி .

Read Full Post »

எழுந்திடு, விழித்திடு ஓ பாரதமே!
நம்பிக்கை கொண்டு துணிந்து செயல்படு

சுயநலம் களைந்தே பொதுநலம் பேணியே
ஏழை மாந்தரின் துயரம் போக்கிடு

மானுடம்  உருவாக்கும் வாழ்க்கை  வளமாக்கும்
கல்வி வேள்வியை கற்க வந்திடு

சகலம் தெய்வீகம் சாஸ்திர சாரம்
அகத்தினில் தேடிடு, அமைதியை நாடிடு

வலிமையே வாழ்வு, பயமே தாழ்வு
விவேகானந்தரின் பாதையில் நடந்திடு

Read Full Post »

பாரதத்திற்கு எத்தகைய  கல்வி தேவை


என் தாய்த் திருநாட்டு மக்களே! நண்பர்களே! என் இளமைச் செல்வங்களே! நம்முடைய இந்தத் தாய்த் திருநாடாகிய தேசியக்கப்பல் இதுவரைக்கும் லட்சக்கணக்கானோரை வாழ்க்கை எனும் பெருங்கடலிலிருந்து கரையேற்றி வந்துள்ளது. ஒளிமயமான நம்முடைய பண்டைக் காலத்திலிருந்து, பன்னூறு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தோணி நம் வாழ்க்கைக் கடலில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தோணியின் உதவியினால் ஆயிரக்கணக்கானோர் முக்தி என்னும் மறுகரையை அடைந்துள்ளனர்.

ஆனால் இன்றோ! இந்தக் கப்பல் நம்முடைய தவறினாலோ என்னவோ சற்று பழுதடைந்துள்ளது. சிறிதே பழுதடைந்துள்ளது. துளைகளின் வழியாக நீர் உள்ளே கசிந்து கொண்டிற்குக்கிறது. அதற்காகக் கப்பலை குறைகூறிப் பழிக்க முடியுமா? காலங்காலமாக எது நமக்கு உதவி வந்ததோ, இவ்வுலகில் வேறு எந்தப் பொருளையும் விட எது நமக்காக அதிகமாகப் பாடுபட்டு வந்துள்ளதோ அதையா பழிப்பது? அதையா சபிப்பது? இது நேர்மைதானா? இது முறையா? நம்முடைய இந்தத் தாய்த் திருநாடாம் கப்பலில் தவறுகள் என்னும் துளைகள் விழுந்தால் அந்தத் துளைகளை, அந்தத் தவறுகளைச் செய்தவர்கள் யார்? நாம் அல்லவா? நம்முடைய இச்சமுதாயம் தானே?

எனவே நாமே முயன்று அந்தத் துளைகளை அடிப்போம். நமது அறிவை, சிந்தனையை அடைப்பானாக்கி கப்பலில் கண்ட துளைகளை நிரப்பிவிடுவோம். இதுவன்றி, ஒருநாளும் ஏச வேண்டாம். பழிக்க வேண்டாம். சமுதாயத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசவேண்டாம்          நமது நாட்டின் பண்டைய பெருமையைக் கண்டு அதன் உன்னதங்களை உணர்ந்து அதன் மீது தனியாக் காதல் கொண்டிருக்கிறேன். உங்களையெல்லாம் உளமார நேசிக்கிறேன். எல்லாம் வல்ல இறைவனின் அன்புக் குழந்தைகள் அல்லவா நீங்கள்? சீர்மையும் சீலமும் மிக்க நம் முன்னோர்களின் வழித்தோன்றல்கள் அல்லவா நீங்கள்? உங்களை விரும்பாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? உங்களை என்னால் சபிக்க  முடியாது. உலகிலுள்ள எல்லா வாழ்த்துகளும் உங்களுக்கு உரித்தாகுக!என் அன்பிற்குகந்த மாணவச் செல்வங்களே! நான் என்ன செய்யப் போகிறேன்? என்னுடைய பணித் திட்டங்கள் என்ன என்பதை உங்களுக்கு விளக்குவதற்காக உங்கள் நடுவே வந்து அமரப் போகிறேன்.

என்பணித் திட்டங்களைக் கேட்ப்பீர்கலானால், ஏற்ப்பீர்கலானால் உங்களோடு நானும் சேர்ந்து தோளோடு தோள் சேர்த்து செயலாற்றக் காத்திருக்கிறேன். என் சொற்களைக் கேட்க மறுத்து, ஒரு வேலை இந்த நாட்டை விட்டு என்னை துரத்தினாலும் நான் என் தாய்த்திருநாட்டிற்கு திரும்பி வருவேன். திரும்பி வந்து நம்முடைய பழம்பெரும் நாடான தாய்நாடு என்னும் கப்பலில் தற்போது தோன்றியுள்ள துளைகளால் நாமெல்லாம் மெல்ல முழ்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு எடுத்துரைப்பேன். மூழ்குவதானாலும் உங்களுடன் சேர்ந்து மூழ்குவேன். ஆனால் மறந்தும் தாய்நாட்டைப் பழிக்கும் சாபக்கேடுகள் நம்மிடம் எழவேண்டாம்.

நம் நாட்டுக் கல்வியில், ஆன்மீகக் கல்வி, உலக நடைமுறைக் கல்வி ஆகிய இரண்டிலும் நமக்கு பிடிப்பு இருக்க வேண்டும். உரிமை இருக்க வேண்டும். இந்த இரண்டையும் அடித்தளமாகக் கொண்டே நமது கல்வி உருவாக வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? சொல்லப் போனால் நாம் காணும் கனவு, பேசுகிற பேச்சு, நம்முடைய எண்ணம, வேலை எல்லாமே இதப் பற்றியதாகவே இருக்க வேண்டும். இல்லாமல் நம் இனத்திற்கு விடிவு தோன்றாது  இன்று நீங்கள் பயின்று வரும் கல்வியில் சில நல்ல கருத்துகள் இருக்கலாம். இருப்பினும் இந்தக் கல்வியால் தீமைகளே பெருகியுள்ளது.

எவையெல்லாம் நல்லனவோ அவையெல்லாம் அடிபட்டு அடிமட்டத்திற்கு போய்விட்டன. முதலில் அது மனிதனை உருவாக்கும் கல்வியில்ல. எதிர்மறையான கல்வியாகவே அது முழுக்க முழுக்க அமைந்துள்ளது. எதிர்மறையானப் பயிற்சி மரணத்தை விட நாசம் செய்யக் கூடியது. குழந்தையை பள்ளிக் கூடத்திற்கு அனுப்புகிறோம். அங்கே அது முதன் முதலாக கற்பதென்ன? என் தந்தை ஒரு முட்டாள், இரண்டாவதாக என் தாத்தா ஒரு பைத்தியக்காரன். மூன்றாவதாக ஆசிரியர்கள் அனைவரும் வேஷதாரிகள். போலி ஆசாமிகள். நான்காவதாக அக்குழந்தை அறிந்துகொள்வது நம் சாஸ்திரங்கள் அனைத்தும் புளுகு மூட்டைகள். அந்தக் குழந்தைக்குப் பதினாறு வயது ஆகும் போது அத்தகைய முரண்பட்ட கல்வியினால் அவனுக்கு நம்முடையது எதுவும் நல்லதாக தெரிவதில்லை. மறுப்புணர்ச்சியின் ஒரு மொத்த வடிவமாகவும், உயிரும் எலும்பும் இல்லாத ஒரு சதைப் பிண்டமாகவும் ஆகிவிடுகிறான்.

கல்வி என்பது மூளையே குழம்பிப் போகும் அளவிற்கு விஷயங்களை திணிப்பதல்ல. வாழ்நாள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாதபடி ஒருவனது அறிவைக் குழப்புவதல்ல. நம்முடைய கல்வி நமது வாழ்கையை நல்ல விதமாக உருவாக்குவதாக, குறிக்கோளை நம்மிடம் உருவாக்குவதாக அமைய வேண்டும்.ஐந்து நல்ல, உயர்ந்த கருத்துகளை அறிந்துகொண்டாலே போதும். அவற்றின் வழி உன் வாழ்கையை, உன் ஒழுக்கத்தை அமைத்துக் கொண்டால் நீயே நன்கு கற்றவனாகிறாய்.

நூல் நிலையம் ஒன்றில் இருக்கும் எல்லா நூல்களையும் ஒன்று விடாமல் படிக்கிற புத்திசாலியை விட நீயே மெத்தப் படித்தவனாக இருப்பாய்.வெறும் செய்திகளைத் தருவது தான் கல்வி என்றால் நூல் நிலையங்களே உலகில் மாபெரும் முனிவர்களாக இருக்குமே! கலைக்களஞ்சியங்களையே உண்மையை கண்டு கொண்ட ரிஷிகள் எனலாமே!

எனவே நாம் அமைக்கும் கல்வி நாடு முழுமைக்கும் பொதுவாக விளங்கும் கல்வியாக, ஆண்மீகத்தைக் கொண்டதாக, உலக நடைமுறைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அத்துடன் நம் கட்டுப் பாட்டிற்குள் நாமே அமைக்கும்படியான உரிமையும் நமக்கு வேண்டும். மேலும் தேசியப் பண்பாட்டிற்கு ஏற்றதாகவும், வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடிய பண்பாட்டுக் கல்வியாகவும் இருத்தல் அவசியம்

–விவேகானந்தர்.

Read Full Post »

வீர நரேந்திரா விவேகானந்தா
சரணம் சரணம் குரு நாதா
ஜீவ சேவையே சிவ சேவையென
பாதை காட்டி அருள் புரிந்தாய்

பரமஹம்சரின் அருளை பெற்று
பாருலகெங்கும் பவனி வந்தாய்
அன்னை சாரதையின் அன்பைபெற்று அகிலம்
முழுதும் அணைத்துக் கொண்டாய்!!

இந்து மதத்தின் இணையற்ற பெருமையை
இவ்வுலகெங்கும் பரவச் செய்தாய்
இப்புவி மக்கள் நலமுடன் வாழ
இறை அருள் ஒன்றே வழி என்றாய்!!

மனதின் ஆற்றல் மலையினும் பெரிதென
மாந்தர்களை நீ உணரச் செய்தாய்
தூய்மையும் தொண்டும் இருகண்களேன
திக்கெட்டும் நீ முரசொலித்தாய்!!

வேதத்தின் உண்மை காலத்தில் ஈன்றாய்
வேதாந்த சிங்கமே விவேகானந்த
வேத ஸ்வரூப விவேகானந்தா
வீரேசுவர சிவ நமோ நமோ!!

Read Full Post »

பதஞ்சலியின் யோக சாஸ்திரம்

ஞான சாதனங்களான கர்மா முதலானவைகளை உபதேசிக்கிற சாத்திரங்கள் தர்சனம் எனப்படும். அவை ஆறு இருக்கின்றன சாங்க்யம், யோகம் நியாயம், வைசேஷிகம் பூர்வ – உத்தர மீமாம்சை என்பன அவை. சாங்க்யம் கபிலரால் செய்யப்பட்டது முதலில் யோகா விஷயத்தை உபதேசம் செய்தவர் ஹிரன்யகர்பர். பதஞ்சலி அதை சுத்திர வடிவமாக்கினார் யோகா சாஸ்திரத்தால் சித்த குற்றங்களையும். வியாகரண பாஷ்யத்தால் சொற் குற்றங்களையும் , வைத்திய சாஸ்திரத்தால் சரீர தோஷங்களையும் போக்க உதவினார் என போற்றுகிறார்கள் .

இந்த பதஞ்சலி யோகா சாஸ்திரத்துக்கு எட்டு வியாக்கியானங்கள் உண்டு

யோகம் என்றால் யோகா ஆசனகல்தான் நமக்கு உடனே நினைவுக்கு வருகிறது. ஆனால் யோகம் என்பதற்கு இணைதல் என்பதே பொருள் ஐக்கியம்;ஆன்மா பரமான்மாவுடன் ஐக்கியமாதல் எனலாம் இந்த நூல் முக்கியமாக ஞானம் பெற திஷை கிடைத்தவருக்கே உரித்தாகும் இன்று யோகம் உலகமெங்கும் பரவிவிட்டது. பல வேறு மாற்றங்களும் அடைந்துவிட்டது பல போலிகளும் வந்தாகிவிட்டது.

பதஞ்சலி 195 சூத்திரங்களிலேயே ஒரு நம்பத்தகுந்த தத்துவமும் வழிமுறையும் சொல்லி இருக்கிறார் அவை இங்கு பதியப்படுகின்றன சமஸ்கிருத மூலமும் தமிழில் சுக்கு மிளகு திப்பிலி ரீதியில் எழுதப்பட்டுள்ளது. பொருள் எளிய  முறையில்  புரிய  வைக்க  முயன்று  இருக்கிறேன். இதுதான் பொருள் என்று இல்லை. ஆழ்ந்து யோசிப்போருக்கு வேறு பொருள் கிட்டக்கூடும்.

இது ஒரு கிராஷ் கோர்ஸ் இல்லை. விடாமுயற்சி உள்ளவருக்கே இது பயனாகும். பர்ரின்னையும் அப்பியாசமும் மிக அவசியம் நமக்கு இதை அடையவே பேரு முயற்சி வேண்டும் படித்து உடனே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். நிதானமாகவே படிக்க வேண்டும் கலைச்சொற்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும் ஏனெனில் அது அடுத்த வரிகளில் வரும். அப்போது இது என்ன என்று விழிக்கக்கூடாது. இது தியரி மட்டுமே பயிலுவதற்கு ஒரு குரு அவசியம் தேவை தயை செய்து யாரும் குரு மேற்பார்வை இல்லாமல் முயற்சி ஆரம்பித்து அவாத்தை பட வேண்டாம். அப்படி ஒன்றும் செய்யவும் முடியாது ஏன் பின்னே இதை பதிக்கிறேன் எனில் எதோ ஒரு தூண்டுதலாலேயே. யாருக்கோ பயன்படும் .

patanjali part1

patanjsali part2

patanjsali part3

patanjsali part4

DOWNLOAD

Read Full Post »

மனதில் இருவேறு துருவங்களாய் நின்று இரு கேள்விகள் ஆக்கிரமித்துக் கொண்டன.

“குருவின் லட்சியமா?’ குடும்பத்தின் கடைத்தேற்றமா?”

ஒருபுறம் வாழ்வினைப் பூரனமாக்கும் குருவின் வழிகாட்டல் உறுதியாய் வந்து நின்றது; மறுபுறம் தந்தையை இழந்து வாடும் தாய்,சகோதரரின் வறுமை நிலை எதிரியாய் வந்து நின்றது.

ஒரு குடும்பம் உய்ய வாழ்க்கையை நடத்துவது அல்லது வாழ்வாங்கு வாழ்ந்த மகானின் உபதேசங்களால் உயரிய வாழ்க்கையை வாழ்வது.

எதை ஏற்பது? எதை கைவிடுவது ?

ஒரு குடும்பமா? இல்லை உலகமே குடும்பமா?

சிந்தனைகளின் சுழலில் சிக்கித் தவித்த மனம்… கண்களை மூடியபடியே தியானத்தில் மூழ்கினார்; காட்சிகள் விரிந்தன; கடமையும், களத்தின் அவசியமும் புரிந்தன .

வென்றது குருவின் அன்பு; விலகியது தனிமனிதனை சார்ந்த      சிந்தனை.

மேற்சொன்ன மனநிலை சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் சவாலான, நெருக்கடியான சமயத்தில் ஏற்பட்டது.

சொர்கத்தை விட மற்றவர்களுக்காக நரகத்திற்கும் செல்லத் துணிந்த விவேகானந்தர், தன் குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் லட்சிய வடிவமாகவே வாழ்ந்தார்.

பாரத தேசத்தில் குருபக்தி புனிதமானது மட்டுமல்ல, என்றும் நமக்கு வழிகாட்டக் கூடியதாகவும் விளங்கும்.

Read Full Post »

‘நான் அறிவுப்பூர்வமாகத்தான் வாழ்கிறேன்’ என்று பலரும் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் அப்படி வாழ்வது மிகவும் கடினமான காரியம். அறிவைச் செலுத்தி ஆராய்ந்து அதன்படி வாழ்த்துநிகின்ர ஒருவன் இருப்பானால் இருநூறு மைல்கள் சென்றும் அவனைக் காண நான் தயாராக இருக்கிறேன். சொல்வதற்குக்கடினமானதும் இதைவிட ஏதும் இல்லை. எப்போதும் மூட நம்பிக்கைகளையே பிப்றி வாழப் பழகிவிட்டோம்.

தேசிய அளவிலான அல்லது மனிதகுலம் முழுமைக்குமே உரியதான பழைய காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகள்;குடும்பம், நண்பர் நாடு,நாகரிகம்,சாஸ்திரங்கள்,பால் வேறுபாடு என்று ஏதோதோ சம்பத்தப்பட்ட மூட நம்பிக்கைகள் எல்லாம் நம்மைக் கட்டியுள்ளன. இதில் அறிவைப்பற்றி நாம் பேசுகிறோம்! அறிவுபூர்வமாகச் சிந்திப்பது எதோ ஒரு சிலர் மட்டுமே. ‘எதையெடுத்தாலும் நம்ப நான் தயாராக இல்லை.இருளில் உழல நான் தயாராக இல்லை. நான் ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ என்று பலர் சொல்வதைக் கேட்கிறோம்.அவ்வாறே ஆராயவும் மனிதன் தலைபடுகிறான்.

ஆனால் அவன் நெஞ்சோடு இறுகக் கட்டியனத்துள்ள பொருட்களையெல்லாம் அந்த ஆராய்ச்சி நொறுக்கித் தூள்தூளாக்கும்போது ‘இனி தாங்காது! எனது லட்சியங்களை உடைத்தெரியும்வரை ஆராய்ச்சி என்பது சரிதான், அத்தோடு நின்றுவிட வேண்டும்’ என்கிறான். இவன் ஒரு போதும் ஞானியாக மாட்டான். இந்த வாழ்க்கை என்றல்ல , இனி வரப்போகும் வாழ்க்கைகளிலும் அவன் தன தலைகளைச் சுமந்தே செல்கிறான். மரணத்தின் ஆதிக்கத்தில் அவன் மீண்டும் மீண்டும் வருகிறான் .இத்தகையோர் ஞானயோகத்திற்குதகுதியானவர்கள் அல்ல. பக்தி,கர்மம்,ராஜயோகம் என்று அவர்களுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் ஞானயோகம் அவர்களுக்கு இல்லை.

மிகவும் துணிவுடையவர்கள் மட்டுமே இந்தப் பாதையைப் பின்பற்ற முடியும் என்பதை முதலிலேயே உங்களுக்குச் சொல்லி, உங்களைத் தயார்படுத்த நான் விரும்புகிறேன், கோயிலை நம்பாதவனும், எந்த மதப்பிரிவையும் சாராதவனும், ‘எதையும் நம்பமாட்டேன்’ என்று சொல்லித்திரிபவனும் பகுத்தறிவுவாதி என்று எண்ணிவிடாதீர்கள். அப்படி இல்லவேயில்லை, அப்படியெல்லாம் பிதற்றித் திரிவது இன்று ஒரு வீரச் செயலாகக் கருதப்படுகிறது.

பகுத்தறிவுவாதியாக இருப்பதற்கு, அவநம்பிக்கை மட்டுமின்றி அதற்கு மேலும் பல வேண்டும். அறிவுபூர்வமாக ஆராய்வதுடன், அந்த ஆராய்ச்சி இட்டுச் செல்கின்ற வழியில் போவதற்கான துணிவு வேண்டும்.

இந்த உடம்பு ஒரு பொய்த்தோற்றம் என்று உங்கள் பகுத்தறிவு உங்களுக்கு கூறினால், உடம்பை விட்டுவிட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? சூடு, குளிர் என்பன வெல்லாம் வெறும் புலன் மயக்கங்களே என்று உங்கள் பகுத்தறிவு உங்களிடம் சொல்கிறது.பயமின்றி அவற்றைத் தாங்கிக்கொள்ள உங்களால் முடியுமா? புலன்கள் மனத்திற்குக் கொண்டுவருகின்ற அறிவு எல்லாமே பொய் என்று பகுத்தறிவு உங்களிடம் சொன்னால் புலனறிவை மறுக்க உங்களிடம் துணிவு இருக்கிறதா? இருக்குமானால் நீங்கள் ஒரு பகுத்தறிவுவாதி.

பகுத்தறிவையும் நம்பி, உண்மையையும் கடைப்படிப்பது என்பது மிகவும் கடினமானது. மூடத்தனமாக எதையாவது பின்பற்றுபவர்கள் அல்லது அரை ஆஷாடபூதிகள் – இவர்களால்தான் இந்த உலகமே நிறைந்திருக்கிறது. இந்த வேஷதாரிகளைவிட முட்டாள்களும் மூடர்களும் எவ்வளவோ மேல்! அவர்கள் நல்லவர்கள்.

-சுவாமி விவேகானந்தர்  

Read Full Post »

ஓம்

ஓம் என்பது ப்ரணவம்
ப்ரணவம் என்பது எந்த ஒரு ஒலிக்கும் காரணமாக இருப்பது ப்ரணவம் எனப்படும். படைப்பு  அனைத்தும் ஓம் என்ற சொல்லில் அடங்கும் ஓம் படைப்பின் ரகசியம் ஆகும்
ஓம் என்பதை பிரித்தால்

அ + உ + ம் என்று பிரிக்கலாம்.

அ என்பது படைத்தல் / பிரம்மா / இறந்தகாலம்.
உ என்பது காத்தல் / விஷ்ணு / நிகழ்காலம்
ம் என்பது அழித்தல் / சிவன் / எதிர்காலம்

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும்  மூன்று தொழிழுக்கு  உட்பட்டு இருக்கும். அதாவது உலகத்தில் தோன்றிய அனைத்தும் ஒருநாள் மறைந்தே ஆக வேண்டும் என்பது நியதி . அதனை விளக்குவதே ஓம் என்றும் ப்ரணவம்.

இந்த பிரபஞ்சமும் ஓம் என்பதில் அடங்கும் அ வில் தோன்றி உ வில் இருந்து ( வாழ்ந்து) ம் ல் முடியும் ( மறையும் ). அதனால் தான் நமது ரிஷிகள் ஓம் என்னும் பிரணவமே மொத்த பிரபஞ்சமாக இருக்கிறது என்று கண்டார்கள் .

நாம் சாதாரணமாக எந்த  ஒரு சத்தத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் இந்த மூன்று தொழில்கள் வருவதை அறியலாம் . மூன்று தொழில்கள் என்பது பிரணவமே. பிரம்மத்தின் நாதம் ப்ரணவம். பிரபஞ்சத்தின் இயக்கத்தை சப்தத்தில் குறிப்பது தான் ஓம்

ஓம்  என்கிற ப்ரணவ மந்திரம் இல்லாமல் எந்த ஒரு மந்திரமும் இல்லை ஓம்-ன் சிறப்பை நமது வேதங்களும் புராணங்களும் கூறியிருக்கின்றன.

கந்த புராணத்தில் பிரம்மன் ( படைப்பு கடவுள்) பிரணவ மந்திரத்தையும் அதன் பொருளையும் மறந்தான் அதனால் கந்தன் அவனை சிறையில் அடைத்தான். பிரம்மன் சிறைப்பட்டதால் படைப்பு தொழில் நடைபெறவில்லை. ஈஸ்வரன் பிரம்மனை விடுவிக்க கோரி கந்தனிடம் கேட்டான் கந்தன் ப்ரணவ மந்திரத்தின் பொருளைக்கேட்டான் ஈஸ்வரன் நீயே சொல் என்று கூற கந்தனே தந்தையாகிய ஈஸ்வரனுக்கு தகப்பன் சாமியை ப்ரனவமந்திரத்தின் பொருளை உபதேசித்தான். இது ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தின் பொருளையும் அதன் சிறப்பையும் விளக்கும் ஒரு சிறு நிகழ்வு ஆகும்.

ஓம் 

Read Full Post »

Older Posts »