Archive for the ‘பாரதியார்’ Category
விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார் – பகுதி 2
Posted in ஆன்மீகம், எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக, சுவாமி விவேகானந்தர், தேசியம், பாரதியார், விவேகானந்தரின் வீர முரசு, விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார், tagged சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், மகான், விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார், விவேகானந்தர், barathiyar, Swami Vivekananda on May 13, 2011| Leave a Comment »
விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார் பகுதி 2
‘உலகிற்க்கெல்லாம் ஒரு புதிய ஒளி கொடுப்பதற்குப் பிறந்த மகான் இவர்!‘ அந்த ஞானியின் திருவுள்ளத்தில் தோன்றிவிட்டது.
அப்போது பரமஹம்சர் நரேன்றருக்கு ஞான நெறி உணர்த்தினார்.அதனால் பிரம்மத்தேனை நரேந்திரரைமுர்ரிலும் அருந்தி, பரஹம்சர் வெற்றிக்கொள்ளும்படி செய்துவிட்டார். அந்த மகா ஞானவெறி, நரேந்திரரைவிட்டு ஒருபோதும் நீங்கவில்லை.
பிரம்மக் கள்ளுண்டு,இந்த நரேன்ட்ரப் பரதேசி பிதற்றிய வசனங்களே இனி, எந்நாளும் அழிவில்லாத தெய்வ வசனங்கலாகப் பெருங்ஞானிகளால் போற்றப்பட்டு வருகின்றன.ஞானோபதேசம் பெற்ற காலம் முதல், நரேந்திரர் தனது பழைய இயல்புகலேல்லாம் மாறிப் புதிய ஒரு மனிதராகிவிட்டார்.
தாய்க்குக் குழந்தையின் மீது இருக்கும் அன்பைக் காட்டிலும், நரேந்திரர் மீது பரமஹம்சர் அதிக அன்பு செலுத்தினர்.
சுமார் ஆறு வருட காலம் நரேந்திரர், தன்னுடைய குருவுடன் செலவிட்டார். இந்த ஆறு வருடங்களில்தான் – உலகம் முழுவதையும் கலக்கத் தோன்றிய அற்புதப் பெரிய எண்ணங்கள் இவர் மனதில் உதித்து நிலைப் பெற்றன.
வேறு பல சாதாரண சந்நியாசிகளைப் போன்று சுவாமி விவேகானந்தர் பெண்களைக் குறித்து தாழ்வான – கெட்ட அபிப்பிராயங்கள் உடையவர் அல்லர்.
எல்லா ஜீவாத்மாக்களும் – முக்கியமாக எல்லா விதமான மனிதர்களும் – தெய்வங்களைப் போலவே கருதி நடத்துவதற்கு உரியவர்’ என்ற தன கொள்கையை, சுவாமி விவேகானந்தர் மிகவும் அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
சுவாமி விவேகானந்தர் நம்முடைய நாட்டிற்கு விமோசம் ஏற்பட வேண்டுமானால் – அதற்கு மூலாதாரமாக நம்முடைய பெண்களுக்கும் பரிபூரண சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் வானத்துப் பறவைகள் போல் சுதந்திரமாக இருப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும்,அவர்கள் பள்ளிக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நிறைந்திருக்க வேண்டும் என்றும், தங்களுக்கு வேண்டிய பொருளைத் தாங்களே உத்தியோகங்கள் செய்து தேடிக்கொள்வதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும் ஆண்கள் தொழில் புரியும் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தொழில் புரிவதற்கு இடம் தர வேண்டும் என்றும், பெண்களை நாம் பொதுவாகப் பாரசக்தியின் அவதாரங்கள் என்று கருத வேண்டும்.என்றும் கருதினார் என்று தெளிவாகத் தெரிகிறது.
சுவாமி விவேகானந்தரின் கல்வி பெருமையும், அறிவுத் தெளிவும், தெய்வீகமான அன்பும், அவருடைய தைரியமும் மேருமலை போன்ற மனவலிமையும்,அவர் செய்திருக்கும் சொற்பொழிவுகளிலும் நூல்களிலும் இருப்பதைக் காட்டிலும் அவருடைய கடிதங்களில் ஒருவாறு அதிகமாகவே தெரிகின்றன என்று கூறுவது தவறாகாது.
விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார் – பகுதி 1
Posted in ஆன்மீகம், எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக, சுவாமி விவேகானந்தர், தேசியம், பாரதியார், விவேகானந்தரின் வீர முரசு, விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார், tagged சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், மகான், விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார், விவேகானந்தர், barathiyar, Swami Vivekananda on May 12, 2011| Leave a Comment »
விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார்
ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத்திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம்.
சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்கிய சாஸ்திரம் எதுவுமே கிடையாது. அவருடைய அறிவின் வேகத்திற்குத் தடையே கிடையாது. அவருடைய தைரியத்திற்க்கோ எல்லையே கிடையாது.
கண்ணபிரான் கீதை உபதேசம் செய்து, எல்லா விதமான மக்களின் சந்தேகளையும் அறுத்து வேதஞானத்தை நிலைநிறுத்திய காலத்திற்குப் பிறகு, இந்துமதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுவதும் மிகவும் தெளிவாக, எல்லா மக்களும் புரியும் வகையில் எடுத்துக் கூறிய ஞானி விவேகானன்டரே ஆவார் என்று தோன்றுகிறது.
‘அமெரிக்காவிற்குச் சென்று ஹிந்து மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும்’ என்ற நோக்கத்தில், சுவாமி விவேகானந்தர் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குச் சென்ற மாத்திரத்தில், வேதசக்தியாகிய பாரசக்தி அவருக்கு ஞானச்சிறகுகள் அருள் புரிந்துவிட்டால். அவர் ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு எழுதிய கடிதங்களில், புதிய ஜ்வாலை தோன்றத் தொடங்கிவிட்டது; நவீன ஹிந்து தர்மத்தின் அக்கினி அவருடைய உள்ளத்தில் இறங்கி நர்த்தனம் செய்யத் தொடங்கிவிட்டது.
‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய நாகரிகத்துக்கு இலட்சிய பூமியாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ஹிந்து தர்மம் தன வெற்றிக் கொடியை நிலைநாட்ட வேண்டும்’ என்று, இறைவனின் சங்கல்பம் இருந்து. அதற்கு சுவாமி விவேகானந்தர் கருவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹிந்து தர்மத்தின் புதிய கிளர்ச்சிக்கு, ஹிந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலில் அங்கீகாரம் செய்த பிறகுதான் வங்கம், மகாராஷ்டிரம் போன்ற இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன.
‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்’ என்பதை உலகம் அறியும்.
ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில், நமது பாரதநாட்டு ஆரிய சனாதன தர்ம மதத்தைப் பற்றி, சப்த மேகங்கள் ஒன்றுகூடி மழை பொழிந்ததுபோல் சண்டமாருதமாகச் சொர்போழோவு செய்து, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களை வென்று வேர்ரிவீரராக இந்தியாவிற்குத் திரும்பி வருவதற்கு, போஸ்டன் என்ற துறைமுகத்தில் கப்பலில் ஏறினார்.
விவேகானந்தரின் சத்குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ விவேகானந்தர் ஆகியவர்களே சமீபத்தில் தோன்றி மறைந்த மகான்கள்.
‘இவர்களில் யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர்?’ என்று வகுத்துக் கூறுவதற்கு – இது சமயம் இல்லை. அதற்கு நான் தகுதி உடையவனுமில்லை.
சுக்கிர கிரகத்திற்கும். புதன் கிரகத்திற்கும் உள்ள உயர்வு – தாழ்வு பற்றிப் பேசுவதற்கு, பாறைக்குள் இருக்கும் ஒரு தேரைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?
சுயலாம், ஆசை, அச்சம் என்ற குணங்கள் நிறைந்த உலக மாயை என்ற பாறைக்குள் இருக்கும் தேரையாகிய நான் – ஞானம் என்ற ஆகாயத்தில் சர்வ சுதந்திரமாக ஒழி வீசிக்கொண்டிருக்கும் ஜோதி நட்சத்திரங்கலாகிய விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், கேசவசந்திரர் முதலானவர்களின் உயர்வு தாழ்வு பற்றி எப்படி வகுத்துச் சொல்ல முடியம்?
ஆனால் அந்தப் பாரையிளிருந்தும் ஒரு சிறிய பிளவின் மூலம், ஏதாவது ஒரு நட்சத்திரத்தின் ஒளியைப் பார்த்து மகிழும் தன்மை தேரைக்கும் இருக்கலாம் அல்லவா?
அதுபோல் எனக்குத் தெரிந்த வரையில் விவேகானன்டச் சுடரின் பெருமையைச் சிறிது பேசத் தொடங்குகிறேன்.
உண்மையான புருஷத்தன்மையும், வீரநேரியும் மனித வடிவம் எடுத்தது போல் அவதரித்தவர் விவேகானந்தர். அவருக்கு அவருடைய தாய் தந்தைகள், ‘விரேஸ்வரன்’ – ‘நரேந்திரன்’ என்ற பெயர்கள் வைத்தது, மிகவும் பொருத்தமானது அல்லவா?
‘இந்த ஜகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்று மில்லை’ என்ற மகத்தான கொள்கையை, உலக மக்களுக்கு எடுத்துப் போதனை செய்வதற்கு வந்த இந்த மகான், ‘இந்த ஜகத்தில் தெய்வமே கிடையாது ‘ என்ற கொள்கையைச் சிறிது காலம் வைத்திருந்தார். ஆனால், இந்தக் கொள்கைச் சிறிது காலத்திற்குப் பிறகு அவரிடமிருந்து நீங்கிவிட்டது.
தட்சிணேஸ்வரம், கல்கத்தாவுக்கு வடக்கில் நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது இந்த தட்சிணேஸ்வரத்திற்கு நரேந்திரன் ஒரு நாள் சென்று, மகாஞாநியைத் தரிசித்தார். அந்த ஞானிதான் புகழ் பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று சொல்ல வேண்டியதில்லை.
தொடரும்…
பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
Posted in ஆன்மீகம், ஆர்.எஸ்.எஸ்., துதி பாடல், தேசபக்தி பாடல், தேசியம், பாடல், பாரதியார், tagged திருப்பள்ளி எழுச்சி, தேசபக்தி பாடல், பாடல், பாரத மாதா, பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி, பாரதியார் on March 29, 2011| 1 Comment »
பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி
பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே!
புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின, கோளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்!
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதி நிற் கின்றனர்,
அள்ளிய தெள்ளமு தன்னை எம் அன்னை!
ஆருயிரே! பள்ளி யெழுந்தரு ளாயே!
பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்,
பார்மிசை நின்னொளி காணுதற்கு அளந்தோம்,
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்
சுருதிகள் பயந்தனை! சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!
நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பணிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள் செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல் இது நன்றோ?
இன்னுயிரே? பள்ளி யெழுந்தரு ளாயே!
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமகளே! பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவளே! பள்ளி யெழுந்தரு ளாயே!
பகவத் கீதை – மகாகவி பாரதியார்
Posted in ஆன்மீகம், பகவத் கீதை, பாரதியார், E-Books, tagged பகவத் கீதை, பாரதி, பாரதியார், மகாகவி பாரதியார், bagwatgita, barathiyar on October 4, 2010| 1 Comment »
சுவாமி விவேகானந்தரின் வீர மொழிகள்
சுவாமி விவேகானந்தர்
ஸ்ரீமத் பகவத் கீதை
வேதாந்த ரகசியங்கள்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
DOWNLOAD
Categories
- Audio Books (5)
- ஆசிரியர் (1)
- ஆன்மீகம் (95)
- பகவத் கீதை (7)
- ஆர்.எஸ்.எஸ். (47)
- இந்தியா (76)
- இந்து மதம் (40)
- ஈஷா (1)
- எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக (27)
- ஒபாமா (1)
- கண்காட்சி (1)
- கதைகள் (9)
- கல்வி (7)
- கவிதை (5)
- கவியரசு கண்ணதாசன் (3)
- காலத்தால் அழியா சுவடுகள் (7)
- கிறிஸ்துவ மதம் (3)
- சமுதாயம் (5)
- சுகி சிவம் (1)
- சுதந்திரப் போர் தியாகிகள் (9)
- சுவாமி சுகபோதானந்தா (1)
- சுவாமி விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு பிறந்ததின விழா (1863-2013) (3)
- சுவாமி விவேகானந்தர் (78)
- ஜாதி (2)
- டாக்டர் அப்துல் கலாம் (6)
- தியானம் (5)
- துதி பாடல் (20)
- தேசபக்தி பாடல் (11)
- தேசியம் (63)
- நாயன்மார்கள் (2)
- பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் (1)
- பதஞ்சலி (3)
- பாடல் (19)
- பாரத பண்பாட்டில் சடங்கு சம்பிரதாயங்கள் (15)
- பாரதியார் (5)
- மதம் (33)
- ரமண மகரிஷி (2)
- வாழ்க்கை வரலாறு (13)
- விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு (20)
- விவேகானந்தரின் வீர முரசு (31)
- விவேகானந்தரைப் பற்றி மகாகவி பாரதியார் (5)
- விவேகானந்தர் பாடல் (12)
- வேதாந்தம் (16)
- E-Books (19)
- Uncategorized (35)
- Video (2)
Archives
- December 2018 (1)
- April 2018 (1)
- November 2015 (8)
- October 2014 (1)
- January 2014 (2)
- December 2013 (2)
- November 2013 (2)
- September 2013 (2)
- August 2013 (1)
- July 2013 (5)
- June 2013 (5)
- May 2013 (3)
- April 2013 (8)
- February 2013 (1)
- January 2013 (1)
- December 2012 (2)
- November 2012 (2)
- October 2012 (1)
- September 2012 (6)
- August 2012 (4)
- July 2012 (22)
- June 2012 (6)
- May 2012 (1)
- August 2011 (4)
- July 2011 (12)
- June 2011 (2)
- May 2011 (10)
- April 2011 (4)
- March 2011 (16)
- February 2011 (3)
- December 2010 (1)
- November 2010 (2)
- October 2010 (11)
- August 2010 (6)
இணைப்புகள்
- a.p.j. abdul kalam abdul kalam about God baratham barathiyar education god God Swami Vivekananda about golden words of swami vivekananda india kadavul kathai Life of Swami Vivekananda matham quotes ramakrishnar Rashtriya Swayamsevak Sangh (RSS)-Prarthana RSS soul swami swamiji swamiji quotes Swami Vivekananda Swami Vivekananda Quotes vande mataram vivek Vivekananda vivekananda life histrory vivekananda life intresting movements We need God அப்துல் கலாம் ஆன்மா ஆன்மீகம் இந்தியா இந்து-மதம் இளைஞர் எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கடவுள் கடவுள் நமக்கு தேவையா கடவுள் பற்றி கடவுள் பற்றி சுவாமி விவேகானந்தர் கதைகள் கல்வி காலத்தால் அழியா சுவடுகள் சுதந்திரப் போர் தியாகிகள் சுவாமிஜி சுவாமி விவேகானந்தர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் துதி பாடல் தேசபக்தி பாடல் தேசியம். நல்ல கதைகள் பகவத் கீதை பாடல் பாரத தாயின் தவபுதல்வர்கள் பாரதத்திற்கு எத்தகைய கல்வி தேவை பாரத மாதா பாரதம் பாரதியார் மகாகவி பாரதியார் மதம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவ சங்கம் (RSS) - பிரார்த்தனா விவேகானந்தரின் பொன்மொழிகள் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு விவேகானந்தரின் வாழ்வில் சில நிகழ்ச்சிகள் விவேகானந்தரின் வீர முரசு விவேகானந்தர் விவேகானந்தர் துதி பாடல் விவேகானந்தர் பாடல் விவேகானந்தர் வாழ்க்கை விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு விவேகானந்தர் வாழ்வில் வீரத்துறவி வேதம்
முன்னணி இடுகைகள்
இனயத்தைப்பற்றி
இந்த இனையத்தில் பதிப்பித்திருக்கும் தகவல்களும்,செய்திகளும்,இ-புத்தகங்கள் அனைத்தும். அறிவியலும் ஆன்மிகமும் என்ற தலைப்பில் பல இனையத்தில் இருந்தும்,பல புத்தகத்தில் இருந்தும், எடுக்கப்பட்டது.
இந்த தலைப்பில் திரட்டிய கருத்துகள் அனைத்தும் பலருக்கும் பயன் உள்ளதாக அமையும் என்று நம்புகிறன்.
ஜெய் ஹிந்த்
அதிகளவு சொடுக்குகள்
-
Join 5,131 other subscribers
வந்தவர்கள்
- 740,688