விவேகானந்தர் இல்லம்
-
காலவரையற்ற ஒரு பரம்பரையின் மகத்தான தொரு நினைவுச் சின்னம்
-
பாரதத்தின் தவப்புதல்வரான சுவாமி விவேகானந்தர் தங்கிய இடம்
-
சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தவம் இயற்றிய இடம்
-
சென்னை மெரினா கடற்கரையில் ஒரு வரலாற்றுச்சின்னம்
வாருங்கள்! இந்தியக் கலாச்சார பாரம்பரியம் வேதகாலத்திலிருந்து இந்த நிகழ்காலத்தில் விரிந்து மலர்வதைக் காணுங்கள்.
ஐஸ் ஹவுஸ்
ஐஸ் பாதுகாக்க இன்றைய நவீன வசதிகள் எதுவும் இல்லாத சுமார் 150 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து கப்பலில் ஐஸ் கட்டிகளைக் கொண்டுவந்து சென்னை மெரினாவிலுள்ள இந்தக் கட்டிடத்தில் சேமித்து வைத்தார்கள். எனவே இந்தக் கட்டிடம் ‘ஐஸ் ஹவுஸ் ‘ என்ற பெயர் பெற்றது. காலப் போக்கில் நவீன வசதிகள் பெருகியதும் இவ்வாறு ஐஸ் சேமிக்க வேண்டிய நிலைமை இல்லாமல் போயிற்று. பின்னாளில் சென்னையில் பிரபல வழக்கறிஞர்களுள் ஒருவரான பிலிகிரி ஐயங்கார் இந்த கட்டிடத்தை வாங்கி, பழது பார்த்து நண்பரான நீதிபதி கெர்னன் என்பவரின் நினைவாக ‘காஸில் கெர்னன்’ என்று பெயரிட்டார். ஐஸ் சேமிப்பதற்கான ஒரு கிடங்கு போன்றிருந்த இந்தக் கட்டிடத்திற்கு ஜன்னல்களும் வட்ட வராந்தாக்களும் அமைத்து அதனை ஒரு வீடாக மாற்றினர்.
சுவாமி விவேகானந்தரின் நவராத்திரி
மேலை நாடுகளில் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக் கோடியை நாட்டிவிட்டு தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தர் ஐஸ் ஹவுஸில் ஒன்பது நாட்கள் (1897 பிப்ரவரி 6 -15 ) தங்கினார். பக்தர்களை சந்தித்தார், உரை யாடினர், இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி அவர்களை வீறுகொண்டு எழச் செய்தார். இளைஞர்கள் பாரதத்திருநாட்டின் மேன்மைக்கான பணிகளில் ஈடுபடுமாறு அறைகூவல் விடுத்து சொற்பொழிவுகள் செய்தார். வரத்து இந்தச் சொற்பொழிவுகள் ‘கொழும்பிலிருந்து அல்மோரா வரை’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளன.
ஆரம்பகால ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
ஒன்பது நாட்களை ஐஸ் ஹவுஸில் கழித்துவிட்டு கல்கத்தா புறப்படுவதற்கு முந்தின நாள் மாலையில் சென்னை அன்பர்கள் சிலர் சுவாமிஜியை சந்தித்து அவரது பணியை சென்னையில் தொடர்ந்து செய்வதற்கு நிரந்தர அமைப்பு ஒன்றை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். மகிழ்ச்சியுடன் அதற்கு இசைந்த சுவாமிஜி தமது சகோதரத் துறவியான சுவாமி ராமக்ரிஷ்ணானந்தரை 1897 மார்ச் இறுதியில் சென்னைக்கு அனுப்பி வைத்தார். சுவாமி ராமக்ரிஷ்ணானந்தர். ஆழ்ந்த சிந்தனையாளர், சிறந்த பண்டிதர், சொல்திறன் மிக்க பேச்சாளர். இவை அனைத்தையும் விட இறையனுபூதி பெற்ற துறவி. இவர் ஐஸ் ஹவுஸில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் முதல் தென்னிந்தியக் கிளையை ஆரம்பித்தார். இங்கே மடம் 10 ஆண்டுகள் செயல்பட்டது. 1906 – இல் இந்த கட்டிடம் ஏலத்தில் விடப்பட்டதால் மடம் மயிலாப்பூரில் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.
விவேகானந்தர் இல்லம்
பல்வேறு நபர்களின் கீழ் தொடர்ந்து மாறிய இந்தக் கட்டிடம் கடைசியாக தமிழ்நாடு அரசின் கீழ் வந்தது 1963 – இல் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாவின்போது ‘விவேகானந்தர் இல்லம்’ என்று பெயரிடப்பட்டது. இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் மற்றும் இந்திய ககாச்சாரப் பாரம்பரியம் பற்றிய நிரந்தரக் கன்னாட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்காக 1997 – இல் விவேகானந்தர் தாயகம் திரும்பிய நூற்றாண்டு விழாவின்போது அரசு சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு இந்த இல்லத்தை குத்தகைக்கு அளித்தது.
இந்த கண்காட்சியின் முதற்கட்டம்
இந்த கண்காட்சியின் முதற்கட்டப்பணிகள் நிறைவுற்று 1999 டிசம்பர் 20 – ல் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. கண்காட்சியின் இந்த முதற்கட்டத்தில் நான்கு பகுதிகள் உள்ளன.
பகுதி 1 : இந்திய கலாச்சாரப் பாரம்பரியம் (ஓவியங்கள்)
இந்தப் பகுதி கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது.மெசபட்டோமியா, எகிப்து, கீரிஸ், ரோம் நாகரீகங்கள் போல் அல்லாமல் இன்றும் வாழ்வது இந்தியக் கலாச்சாரம். இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு நிறைவாகத் தோன்றியவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அவரது தொர்ரம்வரை உள்ள இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய நிகழ்ச்சிகளும் மனிதர்களும் 43 அழகிய ஓவியங்களாக இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளன.இந்தியக் காலச்சாரத்திற்கு தமிழர் நாகரீகத்தின் பங்கு மிகப் பெரியதாகும். எனவே அதற்கென ஒரு தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேதங்கள், புராணங்கள், காவியங்கள் எல்லாம் இங்கே உயிரோவியங்கலாகத் திகழ்கின்றன. தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம்,மேற்கு வங்காளம் மற்றும் புது டில்லியைச் சேர்ந்த பல்வேறு ஓவியர்களும் கலைஞர்களும் இந்த ஓவியப்பகுதியை உருவாக்கியுள்ளனர்.
பகுதி 2 : சுவாமி விவேகானந்தர் (புகைப்படங்கள்)
இரண்டாம் தளத்தின் அரைவட்ட வடிவ வராந்தாவில் அமைந்துள்ளது இந்தப் பகுதி. சுவாமி விவேகானந்தரின் முதல் புகைப்படம் முதல் அவரது பல்வேறு தோற்றங்கள் அவர் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்கள், நிகழ்ச்சிகள். நபர்கள் ஆகிய 126 புகைப்படங்கள் இங்கே உள்ளன. அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் வேதாந்த சங்கம் இந்தப் படங்களை நன்கொடையாக அளித்துள்ளது. மிகத் துல்லியமாக அமைந்துள்ள இந்தப் புகைப்படங்கள் கண்களையும் குத்தியும் ஒருங்கே கவர்வனவாக உள்ளன. சுவர்களின் அழகிய பின்னணியில் பொறிக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் வீர உரைகள் காட்சியளிக்கின்றன.
பகுதி 3 : சுவாமி விவேகானந்தரின் அறை
இரண்டாம் தளத்தில் உள்ள ஓர் அறையில் சுவாமி விவேகானந்தர் தங்கி இருந்தார். அந்த அறை தற்போது தியான அறையாக உள்ளது. இந்த அறையில் ஒரு சில நிமிடங்களாவது அமர்பவர்கள் அழ்ந்த அமைதியையும் ஆன்மீக உணர்வையும் பெறுகிறார்கள்.
பகுதி 4 : புத்தக விற்பனை நிலையம்
சுவாமி விவேகானந்தரின் நூல்கள், புகைப்படங்கள், சிடி – டிவிடிகள் போன்றவை இங்கே விற்பனைக்கு உள்ளன.
விவேகானந்தர் இல்லத்திற்கு வரும் வழி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 5 கீ மீ எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 6 கீ.மீ தொலைவில் உள்ளது விவேகாந்தர் இல்லம். அரசு பேருந்துகளில் வருபவர்கள் ஐஸ் ஹவுஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். ரயிலில் வருபவர்கள் திருவல்லிக்கேணி ஸ்டேஷனில் இறங்கி நடந்துவர வேண்டும்.
நேரம்: தினமும் காலை 10.00 முதல் 12 .30 வரையிலும் மாலை 3 .௦௦ முதல் 7 .௦௦ வரை கண்காட்சி திருந்திருக்கும், கண்காட்சி மூடுவதற்கு அறை மணி நேரம் முன்னதாக டிக்கட் கொடுக்கும் இடம் மூடப்படும்.
கட்டணம்:
பெரியவர்களுக்கு : ரூ 2 /-
சிறியவர்களுக்கு (3 -12 வயது) : ரூ 1 /-
புதன் கிழமை விடுமுறை
கண்காட்சி பற்றிய குறும் படம் திரையிடப்படுகிறது.
வேண்டுகோள் இந்த கண்காட்சிக்கு வந்த இந்தியக் கலாச்சாரத்தைப்பற்றியும் சுவாமி விவேகானந்தரைப் பற்றியும் அறிந்து மகிழ்ந்த இந்தப் பணியில் எங்களுடன் ஒத்துழைத்து இதனை நிறைவு செய்ய எண்ணுகிறீர்களா?
முதற்கட்டப் பணிக்கு 65 லட்சம் ரூபாய் செலவாகியது இன்னும் 80 லட்சம் ரூபாய் இருந்தால்தான் மீதிப்பனிகளையும் நிறைவேற்றமுடியும்.எனவே உங்களால் இயன்ற நன்கொடையை அளியுங்கள்.
செக், டிராப்ட் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், விவேகானந்தர் இல்லம், சென்னை’ என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். 80 – ஜி வருமான வரி பிரிவின் கீழ் உங்கள் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.
விவரங்களுக்கு:
விவேகனந்தர் இல்லம் : 044 -2844 6188
ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம், மயிலாப்பூர் : 044 – 2462 1110
Email : srkmath@vsnl.com
Website : www.sriramakrishnamath.org