Feeds:
Posts
Comments

Archive for April, 2011

விவேகானந்தர் இல்லம்

  • காலவரையற்ற ஒரு பரம்பரையின் மகத்தான தொரு நினைவுச் சின்னம்

  • பாரதத்தின் தவப்புதல்வரான சுவாமி விவேகானந்தர் தங்கிய இடம்

  • சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தவம் இயற்றிய இடம்

  • சென்னை மெரினா கடற்கரையில் ஒரு வரலாற்றுச்சின்னம்

வாருங்கள்! இந்தியக் கலாச்சார பாரம்பரியம் வேதகாலத்திலிருந்து இந்த நிகழ்காலத்தில் விரிந்து மலர்வதைக் காணுங்கள்.

ஐஸ் ஹவுஸ்

ஐஸ் பாதுகாக்க இன்றைய நவீன வசதிகள் எதுவும் இல்லாத சுமார் 150 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து கப்பலில் ஐஸ் கட்டிகளைக் கொண்டுவந்து சென்னை மெரினாவிலுள்ள இந்தக்  கட்டிடத்தில் சேமித்து வைத்தார்கள். எனவே இந்தக் கட்டிடம் ‘ஐஸ் ஹவுஸ் ‘ என்ற பெயர் பெற்றது. காலப் போக்கில் நவீன வசதிகள் பெருகியதும் இவ்வாறு ஐஸ் சேமிக்க வேண்டிய நிலைமை இல்லாமல் போயிற்று. பின்னாளில் சென்னையில் பிரபல வழக்கறிஞர்களுள் ஒருவரான பிலிகிரி ஐயங்கார் இந்த கட்டிடத்தை வாங்கி, பழது பார்த்து நண்பரான நீதிபதி கெர்னன் என்பவரின் நினைவாக ‘காஸில் கெர்னன்’ என்று பெயரிட்டார். ஐஸ் சேமிப்பதற்கான ஒரு கிடங்கு போன்றிருந்த இந்தக் கட்டிடத்திற்கு ஜன்னல்களும் வட்ட வராந்தாக்களும் அமைத்து அதனை ஒரு வீடாக மாற்றினர்.

சுவாமி விவேகானந்தரின் நவராத்திரி

மேலை நாடுகளில் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக் கோடியை நாட்டிவிட்டு தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தர் ஐஸ் ஹவுஸில் ஒன்பது நாட்கள் (1897 பிப்ரவரி 6 -15 ) தங்கினார். பக்தர்களை சந்தித்தார், உரை யாடினர், இளைஞர்களுக்கு எழுச்சியூட்டி அவர்களை வீறுகொண்டு எழச் செய்தார். இளைஞர்கள் பாரதத்திருநாட்டின் மேன்மைக்கான பணிகளில் ஈடுபடுமாறு அறைகூவல் விடுத்து சொற்பொழிவுகள் செய்தார். வரத்து இந்தச் சொற்பொழிவுகள் ‘கொழும்பிலிருந்து அல்மோரா வரை’ என்ற நூலில் இடம் பெற்றுள்ளன.

ஆரம்பகால ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

ஒன்பது நாட்களை ஐஸ் ஹவுஸில் கழித்துவிட்டு கல்கத்தா புறப்படுவதற்கு முந்தின நாள் மாலையில் சென்னை  அன்பர்கள் சிலர் சுவாமிஜியை சந்தித்து அவரது பணியை சென்னையில் தொடர்ந்து செய்வதற்கு நிரந்தர அமைப்பு ஒன்றை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். மகிழ்ச்சியுடன் அதற்கு இசைந்த சுவாமிஜி தமது சகோதரத் துறவியான சுவாமி ராமக்ரிஷ்ணானந்தரை 1897 மார்ச் இறுதியில் சென்னைக்கு அனுப்பி வைத்தார். சுவாமி ராமக்ரிஷ்ணானந்தர். ஆழ்ந்த சிந்தனையாளர், சிறந்த பண்டிதர், சொல்திறன்  மிக்க பேச்சாளர். இவை அனைத்தையும் விட இறையனுபூதி பெற்ற துறவி. இவர் ஐஸ்  ஹவுஸில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் முதல் தென்னிந்தியக் கிளையை ஆரம்பித்தார். இங்கே மடம் 10 ஆண்டுகள் செயல்பட்டது. 1906 – இல் இந்த கட்டிடம் ஏலத்தில் விடப்பட்டதால் மடம் மயிலாப்பூரில் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டது.

விவேகானந்தர் இல்லம்

பல்வேறு நபர்களின் கீழ் தொடர்ந்து மாறிய இந்தக் கட்டிடம் கடைசியாக தமிழ்நாடு அரசின் கீழ் வந்தது 1963 – இல் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாவின்போது ‘விவேகானந்தர் இல்லம்’ என்று பெயரிடப்பட்டது. இந்த இல்லத்தில் சுவாமி விவேகானந்தர் மற்றும் இந்திய ககாச்சாரப் பாரம்பரியம் பற்றிய நிரந்தரக் கன்னாட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்காக 1997  – இல் விவேகானந்தர் தாயகம் திரும்பிய நூற்றாண்டு விழாவின்போது அரசு சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு இந்த இல்லத்தை குத்தகைக்கு அளித்தது.

இந்த கண்காட்சியின் முதற்கட்டம்

இந்த கண்காட்சியின் முதற்கட்டப்பணிகள் நிறைவுற்று 1999 டிசம்பர் 20 – ல் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. கண்காட்சியின் இந்த முதற்கட்டத்தில் நான்கு பகுதிகள் உள்ளன.

பகுதி 1 : இந்திய கலாச்சாரப் பாரம்பரியம் (ஓவியங்கள்)

இந்தப் பகுதி கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது.மெசபட்டோமியா, எகிப்து, கீரிஸ், ரோம் நாகரீகங்கள் போல் அல்லாமல் இன்றும் வாழ்வது இந்தியக் கலாச்சாரம். இந்தியக் கலாச்சாரத்தின் ஒரு நிறைவாகத் தோன்றியவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர். அவரது தொர்ரம்வரை உள்ள இந்தியக் கலாச்சாரத்தின் முக்கிய நிகழ்ச்சிகளும் மனிதர்களும் 43 அழகிய ஓவியங்களாக இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ளன.இந்தியக் காலச்சாரத்திற்கு தமிழர் நாகரீகத்தின் பங்கு மிகப் பெரியதாகும். எனவே அதற்கென ஒரு தனிப்பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேதங்கள், புராணங்கள், காவியங்கள் எல்லாம் இங்கே உயிரோவியங்கலாகத் திகழ்கின்றன. தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம்,மேற்கு வங்காளம் மற்றும் புது டில்லியைச் சேர்ந்த பல்வேறு ஓவியர்களும் கலைஞர்களும் இந்த ஓவியப்பகுதியை உருவாக்கியுள்ளனர்.

பகுதி 2 : சுவாமி விவேகானந்தர் (புகைப்படங்கள்)

இரண்டாம் தளத்தின் அரைவட்ட வடிவ வராந்தாவில் அமைந்துள்ளது இந்தப் பகுதி. சுவாமி விவேகானந்தரின் முதல் புகைப்படம் முதல் அவரது பல்வேறு தோற்றங்கள் அவர் சம்பந்தப்பட்ட பல்வேறு இடங்கள், நிகழ்ச்சிகள். நபர்கள் ஆகிய 126  புகைப்படங்கள் இங்கே உள்ளன. அமெரிக்காவில் உள்ள செயின்ட் லூயிஸ் வேதாந்த சங்கம் இந்தப் படங்களை நன்கொடையாக அளித்துள்ளது. மிகத் துல்லியமாக அமைந்துள்ள இந்தப் புகைப்படங்கள் கண்களையும் குத்தியும் ஒருங்கே கவர்வனவாக உள்ளன. சுவர்களின் அழகிய பின்னணியில் பொறிக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் வீர உரைகள் காட்சியளிக்கின்றன.

பகுதி 3 : சுவாமி விவேகானந்தரின் அறை

இரண்டாம் தளத்தில் உள்ள ஓர் அறையில் சுவாமி விவேகானந்தர் தங்கி இருந்தார். அந்த அறை தற்போது தியான அறையாக உள்ளது. இந்த அறையில் ஒரு சில நிமிடங்களாவது அமர்பவர்கள் அழ்ந்த அமைதியையும் ஆன்மீக உணர்வையும் பெறுகிறார்கள்.

பகுதி 4 : புத்தக விற்பனை நிலையம்

சுவாமி விவேகானந்தரின் நூல்கள், புகைப்படங்கள், சிடி – டிவிடிகள் போன்றவை இங்கே விற்பனைக்கு உள்ளன.

விவேகானந்தர் இல்லத்திற்கு வரும் வழி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 5  கீ மீ எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து 6 கீ.மீ தொலைவில் உள்ளது விவேகாந்தர் இல்லம். அரசு பேருந்துகளில் வருபவர்கள் ஐஸ் ஹவுஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். ரயிலில் வருபவர்கள் திருவல்லிக்கேணி ஸ்டேஷனில் இறங்கி நடந்துவர வேண்டும்.

நேரம்: தினமும் காலை 10.00  முதல் 12 .30 வரையிலும் மாலை 3 .௦௦ முதல் 7 .௦௦ வரை கண்காட்சி திருந்திருக்கும், கண்காட்சி மூடுவதற்கு அறை மணி நேரம் முன்னதாக டிக்கட் கொடுக்கும் இடம் மூடப்படும்.

கட்டணம்:

பெரியவர்களுக்கு : ரூ  2 /-
சிறியவர்களுக்கு (3 -12  வயது) : ரூ 1  /-

புதன் கிழமை விடுமுறை

கண்காட்சி பற்றிய குறும் படம் திரையிடப்படுகிறது.

வேண்டுகோள் இந்த கண்காட்சிக்கு வந்த இந்தியக் கலாச்சாரத்தைப்பற்றியும் சுவாமி விவேகானந்தரைப் பற்றியும் அறிந்து மகிழ்ந்த இந்தப் பணியில் எங்களுடன் ஒத்துழைத்து இதனை நிறைவு செய்ய எண்ணுகிறீர்களா?

முதற்கட்டப் பணிக்கு 65 லட்சம் ரூபாய் செலவாகியது இன்னும் 80 லட்சம் ரூபாய் இருந்தால்தான் மீதிப்பனிகளையும் நிறைவேற்றமுடியும்.எனவே உங்களால் இயன்ற நன்கொடையை அளியுங்கள்.
செக், டிராப்ட் ‘ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், விவேகானந்தர் இல்லம், சென்னை’ என்ற பெயருக்கு எடுக்க வேண்டும். 80 – ஜி வருமான வரி பிரிவின் கீழ் உங்கள் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு உண்டு.

விவரங்களுக்கு:


விவேகனந்தர் இல்லம் : 044  -2844 6188
ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம், மயிலாப்பூர் : 044 – 2462  1110
Email : srkmath@vsnl.com
Website : www.sriramakrishnamath.org

Read Full Post »

நாம் அனைவரும் கட்டாயம் வாக்களிப்போம். வெறிபெற வாய்ப்பு இருக்கின்ற வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற என்னத்தை விட்டுவிட்டு கொள்கைப் பயப்புள்ள நாட்டு நலனில் கவனம் செலுத்தக்கூடிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்போம்.

இலவசங்களை கண்டு மயங்கி உங்கள் வாக்கினை அடகு வைக்காதீர்கள். இலவசங்களால் உங்கள் வாழ்க்கை வளர்ச்சி அடையாது. திராவிட அரசியல் கட்சிகள் உங்களை பிச்சைக்காரர்களாகக் கருதுவதால்தான் இலவசங்களைக் கொடுத்து எமர்ரப் பார்க்கின்றன. இலவசப் பொருட்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது தெரியுமா? குடிப்பதற்கு நல்ல குடிநீர் தர முடியாத ஆட்சியாளர்கள் தெருவெங்கும் மதுபானக் கடைகளைத் திறந்துவிட்டு இளைஞர்களையும் உழைக்கும் மக்களையும் பெரும் குடிகாரர்களாக  மாற்றி பல குடும்பங்களை அழித்து அதன் மூலம் வருகின்ற வருமானத்தில் இருந்துதான் இலவசங்களைத் தந்து மக்களை எமாற்றி வருகின்றனர்.

வாக்களிக்கும் முன்பாக

மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு பெரும்பான்மையினராக இருந்து வருகின்ற ஹிந்துக்களுக்கு  தொடர்ந்து துரோகம் இழைப்பதுதான் மதர்சார்ப்பின்மை பேசி வருகின்ற அரசியல் கட்சியினர், ஆட்சியாளர்களின் வாடிக்கையாகிவிட்டது. ஹிந்துக்கள் ஜாதி, மொழி, மாகாணம், அரசியல் போன்ற காரணங்களால் பிரிந்து கிடப்பதுவே  இதற்க்கு காரணமாகும்.

இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்த சிறுபான்மை   இனத்தவர் ஓட்டுகளைப் பெறுவதற்காக அவர்களின் சட்ட விரோதமான முறையற்ற கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றப் போட்டிப் போடுகின்றன. ஹிந்துக்களின் நியாயமான கோரிக்கைகளைக்  கூட ஏற்றுக் கொள்வது கிடையாது.

மதமாற்றம் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். உலகில் வேறு எந்த நாட்டிலும் ஆசைகாட்டி பணம் கொடுத்து அச்சுறுத்தி மதமாற்றம் செய்திட முடியாது. ஹிந்துக்களை மதமாற்றம் செய்து நாட்டினைக் கைப்பற்றிட அன்னிய சக்திகள் சதித் திட்டம் தீட்டி பணத்தை வாரி இறைத்து வருகின்றன. ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும்வரைதான் மதசார்பின்மை பற்றியெல்லாம் பேசிட முடியும்.

ஹிந்து ஆலயங்களை மீட்டிடுவோம்

மதசார்பற்ற அரசு என்று சொல்லிக்கொண்டே ஹிந்து ஆலயங்களின் சொத்துக்களையும், வருமானங்களையும்,பக்தர்கள் அளித்திடும் காணிக்கைகள் உட்பட அனைத்தையும் அரசு எடுத்துக்கொள்கிறது.
ஆலயங்களில் எல்லாவற்றுக்கும் கட்டணம் வசூளிக்க்கப்படுவது அதிகரித்து  வருகிறது. ஆலயங்கள் பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. நமது முன்னோர்கள் எக்காலத்திலும் ஆலயங்களில் பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் தடையின்றி நடைபெற்று வருவதற்காக அறக்கட்டளைகளை உருவாக்கி நிலத்தை எழுதி வைத்தனர். ஆலயங்கள் நமது தொன்மையான பண்பாட்டினை நமக்கு நினைவுபடுத்தி மக்களை நல்வழிப்படுத்தி வந்துள்ளது. ஹிந்து ஆலயங்களுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் நாத்திக அரசியல்வாதிகளின் சொத்துகளாக மாற்றப்பட்டுவிட்டது.

பொதுக் காரியங்களுக்கு எல்லாம் ஹிந்துக் கோவில்களின் நிலங்களை மட்டும் கையகப்படுத்தி எடுத்துக்கொள்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆலய நிலங்கள் யார் அனுபவத்தில் இருந்து வருகிறதோ அவைகளை அவர்களுக்கே சொந்தமாக்குவோம் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. இதே போன்ன்று சர்ச், மசூதி சொத்துக்களையும் செய்திடுவோம் என்று சொல்லக்கூடிய துணிச்சல் ஏன் அக்கட்சிக்கு வரவில்லை?
சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காது என்கிற அச்சம் தான் காரணம். கிறிஸ்துவ, இஸ்லாமிய மதவழிபாட்டுக் கூடங்கள் அனைத்தும் இன்று அவர்கள் கையிலேயே இருந்து வருகிறது. ஆனால் ஹிந்து ஆலயங்கள் மட்டும் அரசின் கைகளில் சிக்கி சீரழிந்து வருகிறது. ஏன் இந்த இழிநிலை?

சாலை விரிவாக்கம், வளர்ச்சிப் பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகர்ருகின்றோம் என்கிற பெயரில் நூறாண்டுகளுக்கும் மேலாக மக்கள் வழிபாட்டு வந்த கோவில்கள் பல இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. ஆனால் இஸ்லாமிய, கிருஸ்தவ மதத்தவர் ஆக்கிரமித்துக் கட்டியிருக்கின்ற, கைவசம் வைத்திருக்கின்ற இடங்களை அப்புறப்படுத்துங்கள் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அவைகள் அப்படியே இருந்து வருகின்றன. இதற்கெல்லாம் ஹிந்துக்களிடையே ஹிந்து உணர்வு அறுப்பாய் இருப்பதுதான் காரணமாகும். இந்தைழிநிலையை அகற்றிட தேச பக்தியும் தெய்வபக்தியும் உள்ள அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கவும். ஆலயங்களை நிர்வகிக்க தனி வாரியம் ஏற்படுத்திட முன் வருகின்ற கட்சிக்கே வாக்களிப்போம்.

ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொன்றில் சுண்ணாம்பு

மத்தியில் ஆட்சி செய்து வருகின்ற காங்கிரஸ் கட்சி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சிறுபான்மையினர் முன்னேற்றம் என்கிற பெயரில் ஹிந்துக்களுக்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் சொத்தில் சிருபன்மையினருக்கே முன்னுரிமை என்று சொன்ன பிரதமர் அவர்களுக்கு அபரிமிதமான சலுகைகள் அறிவித்து மக்களின் வரிப் பணம் ஒரு சாரர்களுக்கே போய்க்கொண்டு இருக்கிறது.
துவக்கப் பள்ளியில் இருந்து உயர் கல்வி உட்பட சிறுபான்மை இன மாணவர்களுக்கு மட்டும் ஏராளமான நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் கல்வி கற்றிட மிகக் குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் துவங்க கடன் வழங்குவதில் அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.ஏன் ஹிந்துக்களில் ஏழைகள் வறுமையில் வாடுபவர்கள் இல்லையா? பெரும்பான்மை மக்களாகிய ஹிந்துக்களின் கடும் உழைப்பினால் அரசிற்கு வருகின்ற வரிப் பணத்தினை சிறுபான்மையின மாணவர்களுக்கு மட்டும் வழங்குவதுதான் மத சார்ப்பின்மையா? அனைவரையும் சரி சமமாக நடத்துவதுதான் மதசார்பின்மை. சிறுபான்மையினரை தாஜா செய்வது கிடையாது.

பரதத்தின் மணி மகுடமாகத் திகழ்ந்து வருகின்ற காஷ்மீரைக் காத்திட, அயோத்தியில் ஸ்ரீராமபிரனுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைத்திட  ஆதரவு தருபவர்களுக்கு வாக்களிப்போம். அதிகரித்து வருகின்ற பயங்கரவாதத்தினை முற்றிலும் அழித்தொழித்திட, நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வந்திட, நாட்டு மக்கள் அனைவரும் போற்றி வணங்கிடும் பசு வதை செய்யப்படுவது முற்றிலுமாக தடை செய்திட முன்வருபவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.

கைலாஷ் மானசரோவர் சென்றுவர எவ்வித சலுகையையும் அரசு ஹிந்துக்களுக்கு வழங்குவதில்லை. ஆனால் ஹஜ் யாத்திரை சென்று வருகிறவர்களுக்கு பல நூறுகோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வாரி வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வரவும் நிதி உதவி செய்து தரப்படுகிறது.
ஹிந்து மதத் தலைவர்கள், மடாதிபதிகள், சன்யாசிகள்,துறவியர்கள் மீது அபாண்டப் பழியினைச் சுமத்தி ஹிந்து விரோத ஊடகங்கள் சிலவற்றின் உதவியுடன் அவதூறுப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஒரிசாவில் மலைவாழ் ஹிந்துக்களிடையே 50 வருடங்களாக தொண்டாற்றி வந்த சுவாமி லஷ்மணானந்தா அவரது ஆஸ்ரமத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பொய்க் குர்ரசாட்டுகளைப் பரப்பி ஹிந்து சன்யாசிகள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

நமது நாட்டின் துண்டாட நினைத்திடும் சீனாவின் குள்ள நரித் தந்திரத்திற்கு ஒத்துழைக்கும் மாவோவாதிகள், நக்சலைட்டுகளின் வன்முறையை தடுத்து நிறுத்திட வேண்டும். அதற்கு தேசிய வாதிகளின் கை அரசியல் ரீதியாகப் பலப்பட வேண்டும்.

வாக்களிக்க வேண்டியது நமது கடமை. நமது கையில் இருக்கின்ற வாக்கினைக் கொண்டு மாபெரும் மாற்றத்தினை கொண்டு வர முடியும். அந்த விலை மதிப்பற்ற வாக்கினை பெரும் ஊழலில் ஈடுப்பட்டு நாட்டின் சொத்தினை கொள்ளை அடித்து வைத்திருக்கின்ற அரசியல்வாதிகள் அளித்திடும் கையூட்டிற்கு வலை போய் விடாதீர்கள். நமது வாக்கினை விற்பது தேச துரோகமாகும்.

தேர்தலில் வக்களிக்ப்பதற்காக ஊழல்வாதிகள் அளித்திடும் லஞ்ச பணத்தினை வாங்கிக் கொண்டு விலை மதிப்பற்ற உங்களின் வாக்கினை வீணடிக்காதீர்கள்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்றாகும்.ஆனால் ஹிந்து வாக்கு வங்கியின் சக்தியினை அரசியல்வதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் உணர்த்திட வேண்டியது நமது கடமையாகும். எனவே தேசபக்தர்கள், நாட்டின் ஒற்றுமையை விரும்புவர்கள், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்தொழித்திட வேண்டும் என்று கருதுகின்றவர்கள் அனைவரும் மறவாமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது அவசியம்.


வந்தே மாதரம்!

பாரத்  மாதா கீ ஜய்!

ஜெய்  ஹிந்த் !

Read Full Post »

பிரார்த்தனா

நமஸ்தே ஸதா  வத்ஸலே மாத்ருபூமே

த்வயா ஹிந்துபூமே ஸுக(ம்) வர்த்திதோஹம்

மஹாமங்கலே புண்யபூமே த்வதர்த்தே

பதத்வேஷ காயோ நமஸ்தே நமஸ்தே

ப்ரபோ  ஶக்திமன் ஹிந்துராஷ்ட்ராங்கபூதா

இமே ஸாதரந் த்வான் நமாமோ வயம்

த்வதீயாய கார்யாய பாத்தா கடீயம்

ஶுபாமாஶிஷந்  தேஹி தத்பூர்தயே

அஜய்யாஞ்ச விஶ்வஸ்ய தேஹீஶ ஶக்திம்

ஸுஶீலஞ் ஜகத்யேன  நம்ரம் பவேத்

ஶ்ருதஞ்சைவயத்கண்டகாகீர்ண மார்கம்

ஸ்வயம் ஸ்வீக்ருதன்நஸ் ஸுகங்காரயேத்

ஸமுத்கர்ஷ நிஷ்ரேய  ஸஸ்யைக முக்ரம்

பரம் ஸாதனன்  நாம வீரவ்ரதம்

ததந்தஸ்  ஸ்புரத்வக்ஷயா த்யேய நிஷ்டா

ஹ்ருதந்தஹ் ப்ரஜாகர்து தீவ்ராநிஶம்‌

விஜேத்ரீ ச நஸ்  ஸம்ஹதா கார்ய சக்திர்

விதாயாஸ்ய தர்மஸ்ய ஸம்ரக்ஷணம்‌

பர(ம்) வைபவன்  நேதுமேதத்‌ ஸ்வராஷ்ட்ரம்

ஸமர்தா  பவத்வாஶிஷா தே ப்ருஶம்

பாரத்  மாதா கீ ஜய்!

குறிப்பு:

ஶ – இந்த எழுத்தை, ஸ.ஷா இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட வகையில், நாக்கை, ஓரளவு மடக்கி உச்சரிக்க வேண்டும்.

AUDIO DOWNLOAD

 

Read Full Post »

சுவாமி விவேகானந்தர், தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்னுடைய சீடர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து சில பகுதிகள் இவை:

1. சென்னையிலிருந்துதான் புதிய ஒளி எழுந்து இந்தியா முழுவதும் பரவியாக வேண்டும். இந்த நோக்கத்தை மேற்கொண்டு நீங்கள் உழைத்து வர வேண்டும். அறிவாற்றலும் தூய்மையும் மிக்க ஒரு நூறு இளைஞர்கள் முன் வாருங்கள். நாம் இந்த உலகையே மாற்றி அமைக்கலாம்.

2. சென்னையைப் பற்றி எனக்கு எப்போதுமே மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவையே மூழ்கடிக்க இருக்கும் மிகவும் பெரிய ஓர் ஆன்மிகப் பேரலை, சென்னையிலிருந்தே கிளம்பி வரப் போகிறது. இந்த நம்பிக்கை எனக்கு உறுதியாக இருந்து வருகிறது.

3. சுயநலமற்றவர்களாகவும், முழு ஆற்றலையும் கொண்டு தேச முன்னேற்றத்திற்கு உழைக்கக் கூடியவர்களாகவும் – உயிர் போகும்வரையிலும் பாடுபடத் தயாராக இருப்பவர் களாகவும் உள்ள எத்தனை பேரை சென்னை தந்துதவ தயாராக இருக்கிறது?

4. எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இறைவன் நமது சார்பில் இருக்கிறான் என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே தைரியமுள்ள என் இளைஞர்களே! முன்னேறிச் செல்லுங்கள்!
சென்னை மக்களாகிய உங்களிடம் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

5. நீங்கள் உண்மையில் என் குழைந்தைகள் என்றால், எதற்கும் பயப்படமாட்டீர்கள். சிங்கங்கலாகத் திகழ்வீர்கள். இந்தியாவையும் உலகம் முழுவதையும் நாம் விழித்தெழச் செய்ய வேண்டும்.கோழைத்தனம் கூடவே கூடாது.
உயிரே போவதானாலும் நேர்மையுடன் இருங்கள்.

6. நமது நாட்டிற்கு வீரர்களே தேவைப்படுகிறார்கள். வீரர்களாகத் திகழுங்கள்! என் நம்பிக்கை எல்லாம் சென்னையிடமே இருக்கிறது. தாங்கள் பணியைத் செய்து முடிப்பதற்கு நெருப்பில் குதிக்க வேண்டியது அவசியமானால், அப்படியே செய்வதற்கும் என் குழைந்தைகள் தயாராக இருக்க வேண்டும்.

7.தைரியம் மிக்க என் இளைஞர்களே! நீங்கள் அனைவரும் மத்தான காரியங்களைச் சாதிப்பதற்குப் பிறந்தவர்கள் என்று நம்புங்கள்.

8. வாழ்நாள் குறுகியது. ஒரு பெரிய காரியத்தின் பொருட்டு அதைத் தியாகம் செய்துவிடுங்கள்! நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு வேலை செய்யுங்கள்! வேலை செய்யுங்கள்!

Read Full Post »