Feeds:
Posts
Comments

Archive for the ‘பாரத பண்பாட்டில் சடங்கு சம்பிரதாயங்கள்’ Category

Barathmatha

1.எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

2-பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

3-செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

4-கிரானைட்(சலவைக் ஆண்டுகளுக்கு)கல்லால் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

7-உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)
8-1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

9-மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

10-உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

12-தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

14-உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

15-வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

16-அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுகிறார� �. 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).

17-5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

18-முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு
(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனர்

19-வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

20-உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

21-குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

22-நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

23-காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

24-முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

25-இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு(35 வயதுக்குட்பட்டவர� �கள் 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு
“நமது இந்தியா” தான்.

Read Full Post »

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் — ஆசை

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?  ஆசையிலும் நம்பிக்கயிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. துக்கத்துக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. ‘வேண்டும்ய என்றகிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. ‘போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழியெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக்கொள்கிறது. ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசன் ஆரம்பமாகிறது. சுயதரிசன் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசன் கண்ணுக்கு தெரிகிறது.

ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?

லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது. என் ஆசை எப்படி வளர்ந்ததன்று எனக்கே நன்றாகத் தெரிகிறது. சிறுவயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா” என்று ஏங்கினேன். கொஞ்ச நாளில் கிடைத்தது. மாதம் இருப்பத்தைய்து ரூபாய் சம்பளத்திலே ஒருபத்திரிகையில் வேலை கிடைத்தது.

ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.

“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.

அதுவும் கிடைத்தது. வேறொரு பத்திரகையில் பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று. அதுவும் கிடைத்தது. மனது ஐநூறுக்குத் தாவிற்று. அது ஆயிரமாக வளர்ந்தது. ஈராயிரமாகப் பெருகிற்று. யாவும் கிடைத்தன. இப்பொழுது நோட்டடிக்கும் உருமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!

எந்க கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.

‘இவ்வளவு போதும்’ என்று எண்ணுகின்ற நெஞ்சு, ‘அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?

அதுதான் இறைவன் லீலை!

ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன. குற்றங்களும், பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்க அனுபவங்கள் இல்லாமற் போய் விடுகின்றன.அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக்கண்டுபிடிக்க முடியாது. ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கா, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.

ஆசையை மூன்றுவிதமாப் பிரிக்கிறது இந்து மதம்.

மண்ணாசை!

பொன்னாசை!

பெண்ணாசை!

மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.

பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.

பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.

இந்த மூன்றில் ஓர் ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான்,பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது. பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல! “இருபது போதும்; வருவது வரட்டும்: போவது போகட்டும்: மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும். ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம். நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன். அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றாளிகளே. மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கியிருக்கிறது. சிறைச்சாலையில் இருந்து கொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான். ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.

அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை: நிலையற்ற பொருள்களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.

“பற்றுக பற்ற்ற்றான் பற்றினை அப்பறைப்

பற்றுக பற்று விடற்கு” – என்பது திருக்குறள்.

ஆசைகளை அறவே ஒழிக்கவேண்டியதில்லை.அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்? அதனால்தான் ‘தாமரை இலைத் தண்ணீர் போல்ய என்று போதித்தது இந்து மதம். நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு. பாபமும் குறைவு. ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால், நிம்மதி வந்து விடுகிறது. எதிர்பார்ப்பதைக் குறைத்துக்கொள்: வருவது மனதை நிறைய வைக்கிறது” என்பதே இந்துக்கள் த்த்துவம்.

எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?

லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன்மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிற தென்றால் ஓடுகிறானே,ஏன்?

அது ஆசை போட்ட சாலை.

அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையிலிருக்கிறது. போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்ந அப்போது அவனுக்கு தெய்வஞாபகம் வருகிறது. அனுபவங்கள் இல்லாமல, அறிவின்மூலமே, தெய்வத்தைக் கண்டு கொள்ளும்படி போதிப்பதுதான் இந்து மத்த்தத்துவம். ‘பொறாமை, கோபம்’ எல்லேமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான். வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுதும் வேலையை, இந்து மதம் மேற்கொண்டிருக்கிறது.

இந்து மதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல.

அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.

வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது. அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கேயல்லாமல் தன்னை வளர்த்து கொள்வதற்காக அல்ல. உலகத்தில் எங்கும் நிர்பந்தமாக, வெண்மையாக, தூய்மையாக, இருக்கிறது என்றதற்கு அடையாளமாகவே அது ‘திருநீறு’ பூச்ச் சொல்லுகிறது. உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமா இருக்கிறது என்பதற்காகவே, ‘குங்கும்ம்’ வைக்கச் சொல்கிறது. ‘இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது ‘மாங்கல்யம்’ சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒருபெண் கிளறிவிடக்கூடாது என்பதற்காகவே, அவளைத் ‘தலைகுனிந்து’ நடக்கச் சொல்கிறது.

கோவிலிலே தெய்வ தரிசன்ம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது. அதை மீட்க முடியாத பலவீன்னுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது. “பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி. கூடுமானவரை மனிதனைக் குற்றங்களிலிருந்து மீட்பதற்கு, தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம். அந்தக் குற்றங்களிலிருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.

இன்றைய இளைஞனுக்கு ஷேக்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்;ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப்போன பின்புதான் அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.

ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண மரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்து  மதம் என்பது வெறும் ‘சாமியார் மடம் ‘ என்ற எண்ணம் விலகிவிடும்.

நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள, உன் தாய் விடிவில் துணை வருவது இந்துமதம். ஆசைகளைப்பற்இ பரமஹம்சர் என்ன கூறுகிறார்? “ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களிஙல் அமிழ்ந்து விடாமல் இருக்க வேண்டும்” என்கிறார். “அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடிகொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது. அது போல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது” “விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகி விடுகிறது”. என்றார். அடக்கியாள்வதன் பெயரே வைராக்யம். நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.

நன்றி :- கவிஞர் கண்ணதாசன்

*****************

Read Full Post »

முட்டாள் தினமும், முட்டாள் கொள்கையும்.

 

நம் முன்னோர்கள் காலத்தை இயற்கையின் ஓட்டத்தை அனுசரித்தே வகுத்துவைத்தனர்.இதற்கு இயற்கை கணிதமுறை என்று பெயர்.

 ஒரு நாள் என்பது பூமியின் ஒரு சுழற்சியின் காலம்.ஒரு சுழற்சி இரவு,பகல் என்ற இருபொழுது கூடியது.ஒரு இரவும் பகலும் சேர்ந்தது ஒரு நாள்.நாழிகை,மணித்துளிகள் என பல்வேறு அளவு கொண்டாலும் இரவும் பகலும் பூமியின் சுழற்சியால் ஏற்படுவது இயற்கையே. அதுபோல் ஒரு மாதம் என்பது பதினான்கு வளர்பிறை நாளும், பதினான்கு தேய்பிறை நாளும்,பௌர்ணமி மற்றும் அமாவாசை ஒரு நாட்களும் சேர்த்து மொத்தம் முப்பது நாட்கள் கொண்டது ஒரு மாதம். இது பூமியை சந்திரன் சுற்றும் காலஅளவு. இவ்வாறு பன்னிரு முறை சந்திரன் பூமியை சுற்றியாவாறே பூமியும் சந்திரனும் சூர்யனின் வட்டப்பாதையை கடப்பது ஒருவருடம் எனப்படுகிறது.இதுவும் இயற்கை கணிதமே!

 சூரியனின் நீள்வட்ட பாதையில் பூமி வடக்கிலிருந்து தெற்காக பயணிப்பது தட்சிணாஅயனம்(தெற்கு அல்லது கீழ் நோக்கிய வழி) என்றும்,(ஆடிமாதம் முதல் கார்த்திகை வரை ),தெற்கிலிருந்து வடக்காக பயணிப்பது உத்ராஅயனம் (வடக்கு அல்லது மேல் நோக்கிய வழி)என்றும் பொருள்படும்.(மார்கழி மாதம் முதல் ஆனி வரை.)

 சூரியனின் நீள்வட்ட பாதையில் இரவு பகலும் சரியாக உள்ள கால அளவு சித்திரை மாதம் மற்றும் ஐப்பசி மாதம் சரியாக இருப்பதால் கோடைத் துவக்கத்தையே ஆண்டின் முதற்பாகமாக கொள்வது உலக வழக்காகிற்று.

கிரேக்க நாகரிக்கத்தில் அப்போலோ என்ற சொல் சூரியனை குறிக்கும். ஏப்ரல் மாதம் ஆண்டின் துவக்கமாக கொண்டனர்.பல்வேறு நாகரீகத்திலும் இந்த இயற்கை கணிதத்தை ஒட்டியே ஆண்டின் துவக்கமாக ஏப்ரல் அமைந்தது.16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயேபுத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது.

 பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.

 இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. ஏனெனில் ஏசு கிறிஸ்து டிசெம்பர் மாதம் 25ஆம் பிறந்ததால் அதன்பிறகு கிறிஸ்து ஆண்டு கணக்கிடப்படுவதால் இனி ஜனவரியே மாதமே தொடக்கமாக கொள்ளவேண்டும்.ஏற்றுகொள்ளாதவர்கள் முட்டாள்கள் என்றழைக்கப்பட்டனர்.இதுவே முட்டாள்கள் தின பிறப்பின் ரகசியம்.

 இன்றும் வருடத்தின் கடைசியாக (year ending) மார்ச் 31

உள்ளதை நீங்கள் அறிவீர்கள்.

Read Full Post »

ஆடி மாதம் வைக்கப்படும் கூழ்-???

 

நம்முடைய  முன்னோர்கள் உருவாக்கிய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் காரணங்கள் பல உண்டு..
அது போல், ஆடி மாதம் வைக்கப்படும் கூழிற்கும் காரணம் உண்டு.. தினத்தந்தி யின் ஆன்மீக இதழில் இருந்து…
சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுகிறது. அதன்படி ஆடி மாதத்தில் சூரியக் கதிர்கள் திசை மாறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர் காலமாக மாறுகிறது.. இத்தருணத்தில் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி..
அதன்படி ஆடி ஆடிமாதத்தில் சின்ன அம்மை, தட்டம்மை அதிக அளவில் பரவும். அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு கூழ் உற்றும் வழக்கத்தை கொண்டு உள்ளனர்.
இந்த கூழ் உடலை குளிர்விக்க கூடிய உணவு மற்றும் அருமருந்தும். இரும்பு சத்தும் ,கால்சியம், நார்ச்சத்து ஆகியவை இதில் உள்ளது..
அம்மைகளில் இருந்து காக்கும் கடவுளாக நாம் நம்புவது மாரியம்மனை. இவரை வணங்கி கூழ் உற்றுவதின் மூலம் அம்மை உஷ்ணத்தில் இருந்து காத்துக்கொண்டுள்ளனர்.  மேலும், கூழ் பானையை சுற்றி மஞ்சளும் வேப்பிலையும் வைப்பார்கள்.. இவையும் கிருமி நாசியே.. நோய் பரவாமல் தடுக்கும்.
 நம் முன்னோர்களின் பழக்கங்கள் ஏதும் கண்மூடித்தனமானது அல்ல. காரணங்களை அலசினால் விளக்கங்கள் ஆச்சரியமூட்டும்..
நன்றி தினதந்தி

Read Full Post »

வேதம் ஒரு புத்தகம் அல்ல !!!

தமிழில் வேதத்தை “எழுதாக் கிளவி” என்பார்கள். அதாவது வேதத்தை எழுதி வைத்துப் படிக்க  மாட்டார்கள். வேதத்தைப் பாராயணம் செய்வார்கள். சொல்லும் விதம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுக்கு கவனம் செலுத்துவார்கள். அப்படி உச்ச்சரிக்கபப்டும் ரிக் வேதத்தையே பாட்டாகப் பாடும்போது, இறைவனே நேரில் வருவான் என்பது வேதத்தின் சிறப்பு. இறைவனைக் கவர்வது, வேதக் கருத்தாக இருப்பின், ரிக் வேதம் சொன்னால் கூட இறைவன் வர வேண்டும். ஆனால் அதை சாம கானமாக  இசைக்கப்படும்போது, அந்த  கானத்துக்குத் தான் இறைவன் கவரப் படுகிறார் என்றால், அங்கே பொருள் முக்கியமல்ல, ஓசை நயமே முக்கியம் என்று தெரிகிறது. அமிர்த வர்ஷிணி போன்ற ராகங்கள் இசைக்கப் படும்போது, இயற்கையே கவரப்பட்டு, மழை பொழிகிறது என்று கேள்விப்படுகிறோம். ஆக, ஓசையானது  ஒருவித அதிர்வலைகளை ஏற்படுத்தி அதன் மூலம் வேண்டும் பலன்களைத் தருகிறது என்று தெரிகிறது.

வேதம் என்பது இயற்கையுடன் ஒன்றிய ஒரு விஞ்ஞானம். வேதத்தின் ஆதாரம் அதன் ஓசை நயத்தில் இருப்பதால்தான் அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். வேதம் சொல்வதை ‘வேத கோஷம்’ என்பார்கள். கோஷ்டியாக, கூட்டமாகச் சொல்ல வேண்டும். வேதத்தின் ஓசை நயத்தால், பலன் கிடைப்பதை அக்னி ஹோத்திரம் என்னும் ஹோமத்தைப் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சியில் அறிந்துள்ளனர்.

அதிராத்திரம் என்னும் ஹோமத்திலும் அப்படிப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிகள்  நடந்தன.

வேத மந்திரங்கள் சொல்லி நடத்தப்படும் யாகம் என்பதே, ஒரு விஞ்ஞானக் கூடத்தில் செய்யப்படும் பௌதிக அல்லது வேதியல் மாற்றம் போலத்தான். இன்னின்ன மாற்றம் அலல்து பலன் வேண்டுமென்றால், இன்னின்ன வகையில் ஹோமமும், வேத மந்திரம் ஓதப்படுதலும் வேண்டும் என்பதே வேதத்தின் ஆதார பயன். இந்த மந்திரங்களில் இந்திரன், வருணன், சூரியன், அக்கினி என்று பல பெயர்களும் வரும். அர்த்தம் என்று பார்த்தால் பல இடங்களிலும் கோர்வையாக அர்த்தம் இருக்காது. அங்கே அர்த்தத்துக்கு முக்கியத்துவம் இல்லை. ஓசை நயமோ, அதிர்வலைகளோ அல்லது அது போன்ற வேறு எதற்கோ தான் முக்கியத்துவம் இருக்கிறது. இந்து மதத்தை வழி நடத்திச் சென்ற மூன்று ஆச்சர்ய புருஷர்களும்  வேதத்தை எழுதி, அதற்குப் பொருள் சொல்லவில்லை. இதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. எழுதவும் இல்லை. தாங்கள்தான் அதைச் செய்த ஆசிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளவும்  இல்லை. ஏனென்றால் தியானத்திலும், தவத்திலும் அமிழும் போது தானாகவே அவர்கள் வாயில் புறப்பட்ட சொற்களே வேதம் ஆயிற்று. அவற்றை ஓதும் போது, இயற்கை முதல் இறைவன் வரை அனைத்துமே ஆட்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த ஓதுதல் சுய நலத்துக்ககச்க் செய்யப்படவில்லை. உலக நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வேதம் ஓதப்பட்டது. அதன் பொருள் அறிந்து அதை ஆராய்ச்சி செய்வது என்பது ஹிந்து மரபில் கிடையாது.

வேதம் சொல்லும் கருத்து என்னவென்று அறிந்து கொள்ள வேண்டும் என்றால், தவம் செய்தவர்களையும், ரிஷிகளையும், ஞானிகளையும் நாடிச் சென்று அவர்களிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். அப்படி எழுந்தது உபநிஷத்துக்கள். வேதம் சொல்லும் ஞானத்தை உபநிஷத்துக்கள் மூலமாகத் தான் அறிய முடியும். அப்படித்தான் அறிந்தனர். வேதம், உபநிஷத்துக்கள் ஆகிய இவை இரண்டுமே செவி வழியாக அறியப்படவே, இவற்றுக்கு சுருதி என்று பெயர். இவற்றை எழுதிப்  படிக்கவில்லை.

வேதம் ஓதுதலும், கட்டுப்பாடான தவ வாழ்கை மேற்கொள்ளுதலும், ஆத்ம ஞானம் தேடுவதற்கு உதவியது. லௌகீக விஷயங்களுக்கு அவை தேவை இல்லை. குறுந்தொகையில் (156) ஒரு பாடல் வரும். பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் என்னும் பாண்டிய சேனாதிபதி ஒருவர் அதைப் பாடியுள்ளார். அதில் தலைவன், தலைவியைப் பிரிந்து வருந்துவான். அப்பொழுது அங்கே ஒரு பார்ப்பனர் வருகிறார். கையில் புரச மரத்திலிருந்து எடுக்கப்பட்ட தண்டம் என்னும் கோலுடனும், கமண்டலத்துடனும், விரத உணவை உண்பவராகவும்  அந்தப் பார்ப்பனர் சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் தன் பிரிவாற்றாமைக்கு ஒரு வழி கேட்கலாமா என்று தலைவன் எண்ணுகிறான். அப்புறம் தோன்றுகிறது, இவரைக் கேட்டு என்ன பயன் என்று.தலைவன் சொல்லுகிறான், பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, உன்னுடைய எழுதாக் கல்வியில் என் பிரிவுத் துன்பத்துக்கு மருந்து இருக்கிறதா? இல்லையே! என்கிறான்.

ரிக் வேதத்தை ஆராய்ந்து எடுக்கப்பட்ட ஆரிய – திராவிடப் போராட்டத்தை நம்பும் நம் திராவிடத் தலைவர்கள், இந்தப் பாடலை மறந்தது ஏன்?வேதமே எழுதாத கல்வி.அந்தக் கல்வியில்  காதல், லௌகீகம் போன்றவற்றைப் பற்றி ஒன்றும் இல்லை.போரும், அதில் வெற்றியும் பற்றி இருந்தால் இந்த சேனாதிபதி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருப்பானா?அது ஆரிய – திராவிடக்  கதை  சொல்லியிருந்தால்,   தமிழர்கள் அதை அன்றே அறிந்திருக்க மாட்டார்களா?

வேதம் என்பது படித்துப் பொருள் சொல்ல அல்ல. அது கதைப் புத்தகமும் அல்ல.அது சரித்திரப் புத்தகமும் அல்ல, அதிலிருந்து நம் சரித்திரத்தைத்  தெரிந்து கொள்ள.தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருக்குறளே வேதம் எப்படிப்பட்டது, எதற்குப் பயன் படுவது என்பதற்குச் சாட்சி.பொய்யா மொழி என்று திருக்குறளைப் போற்றும் சங்கப் புலவர் வெள்ளி வீதியார், அது செய்யா மொழிக்கு  (யாராலும் இயற்றப்படாத வட மொழி வேதம் ) திரு வள்ளுவர் மொழிந்த பொருள் என்கிறார். (திருவள்ளுவ மாலை).அந்த செய்யா மொழியும் சரி, பொய்யா மொழியும் சரி, ஆரிய- திராவிடப்  போராட்டத்தைச் சொல்லவில்லை.   திருக்குறள் இந்திய சரித்திரம் பற்றிச்  சொல்லவில்லை.
அது போல வேதமும் சரித்திரப் புத்தகம் அல்ல.

வேதம் உதவுவது ஆத்ம ஞானத்துக்கு, இறைவனை அடைவதற்கு. 
அதைப் பிரித்து பொருள் சொல்வது என்பதை ஐரோப்பியரே செய்தனர்.

அவர்களுக்கு இந்திய சரித்திரம் வேண்டுமென்றால், புராண இதிகாசங்களை நாடி இருக்க வேண்டும். அவை தெள்ளத் தெளிவாக நம் பழைய சரித்திரத்தைக் கூறுகின்றன. அவற்றில் இந்த ஆங்கிலேயருக்கும் ஐரோப்பியருக்கும் சுவாரசியம் இல்லை. வேதம் என்பது குறிப்பிட்ட  வாழ்க்கை முறைகளைப்பின்பற்றுபவர்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நியதியை உடைத்து அவர்கள் அதைப் படித்ததினால் வந்த வினை இன்றும் நம்மை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது, காரணமில்லாமல் அந்த நாளில் அப்படிப்பட்ட  நியதிகள் போடவில்லை என்று புரிகிறது. நல்லவன் கையில் வேதம் அமிர்தம். அதுவே சுயநலமிக்க வல்லவன் கையில் ஒரு அம்பாகி விடுகிறது

Read Full Post »

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்


             கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

நன்றி: http://www.tamilhindu.net/

****************

Read Full Post »

இந்து மதம் – கேள்வி பதில்

 

ஹிந்துத்துவம் என்பது என்ன?

பதில் : “யாரும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஹிந்துத்துவம். “நீ வேறு, உன்னை அழிப்பதே எனது கடவுள் எனக்கு சொல்லிக் கொடுத்தது” என்று சொன்னால் அந்த கூட்டம் ஹிந்துத்துவத்திற்கு எதிரானது. மனிதநேயத்தின் இன்னொரு பெயர் ஹிந்துத்துவம்.

ஹிந்து மதம் எப்போது தோன்றியது?

பதில் : எப்போது மனிதன் சிந்திக்கத் துவங்கினானோ அப்போதே.

ஹிந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள் இருக்கின்றன? ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவில்லை?

பதில் : ஒரே தெய்வம் என்று ஏன் இருக்கவேண்டும்? எல்லையில்லா இறையை நமது புரிதலுக்கேற்ப புரிந்து கொள்கிறோம். அந்த புரிதல் ஆளுக்காள் மாறுபடும் அல்லவா? எல்லா பாதைகளும் நம்மை இறைவனிடமே அழைத்துச் செல்கின்றன. எந்த தெய்வத்தை வணங்கினாலும் நாம் இறையையே வணங்குகிறோம் என்பதே நமது ஹிந்துநெறியின் அடிப்படைக் கொள்கை. இதுவே நம்மை மிகவும் சகிப்புத்தன்மையுள்ளவர்களாகவும், அமைதியையும், அன்பையையும் கொண்டிருக்கும் அற்புதமான சமுதாயமாகவும் வைத்திருக்கிறது. எப்போதெல்லாம் ஒரே கடவுள் என்ற கருத்து மக்களிடையே பரவுகிறதோ, உடனடியாக அந்த மக்கள் கூட்டம் அசுர சக்தியாக மாறி, மற்றவர்களை அழிக்க துவங்கிவிடுவதை நாம் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது.

சிறுதெய்வ வழிபாடு என்பதை ஹிந்து மதம் ஏற்றுக்கொள்கிறதா?

பதில் : ஆம். அதிலென்ன சந்தேகம். சிறு தெய்வ வழிபாடு நமது வழிபாட்டு முறையின் பிரிக்கவியலா அங்கம்.

புராணங்கள் உண்மையா பொய்யா?

பதில் : உண்மை. பல சமயங்களில் அவற்றில் உயர்வு நவிற்சியும், சில கதைகளும், கற்பனைகளும் கலந்திருக்க வாய்ப்புண்டு. புராணம் என்றாலே சரித்திரம் என்றுதான் அர்த்தம்.

புண்ணியம் – பாவம் என்பது என்ன?

பதில் : நல்லது செய்தால் புண்ணியம். கெட்டது செய்தால் பாவம்.

மகாபாரதம் கூறுகிறது –

श्रूयतां धर्मसर्वस्वं श्रुत्वा चैव अवधार्यताम् ।

परोपकार: पुण्याय पापाय परपीडनम् ॥

ஸ்ரூயதாம் தர்ம ஸர்வஸ்வம், ஸ்ருத்வா சைவாவதார்யதாம் |

ப்ரோபகார: புண்யாய, பாபாய பரபீடனம் ||

“தர்மத்தின் சாரம் முழுவதையும் கூறுகிறேன், கேள், கேட்டு அதன்படி நட. பிறருக்கு நன்மை செய்தல் புண்ணியம். பிறருக்கு தீமை செய்தல் பாவம்”

தர்மம் என்பது எது?

பதில் : இயல்பாக இருப்பது தர்மம். இயல்பை மாற்றி ஆசையின், கோபத்தின், மனமாச்சர்யங்களின் உந்துதலால் செய்பவை எல்லாமே அதர்மமாகும்.

ஏன் நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்? தீயவர்கள் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்கிறார்கள்?

பதில் : நல்லது , கெட்டது குறித்த myopic பார்வையே இது குறித்த கேள்வியை எழுப்புகிறது. நாமெல்லாம் ஒரு பெரும் பிரபஞ்சத்தின் அங்கங்கள். இங்கே செய்யும் செயல்கள் பலன்களை தருவதற்கு காலம் பிடிக்கின்றன. இந்த சுழற்சியில் கெட்டது செய்துவிட்டு தப்புபவர்கள் நரக நிலையிலோ அல்லது அடுத்த பிறவியொலோ தமது தீய செயல்களுக்கான பலன்களை அனுபவிக்கின்றார்கள்.

சோதிடம் உண்மையா?

பதில் : உண்மைதான் என்று அனுபவப்பட்ட பலர் சொல்கிறார்கள். உண்மையில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது.

“சாமி” வந்து விட்டது என்று ஆவேசம் வந்து ஆடுபவர்களை நம்பலாமா?

பதில் : அது ஆவேசம் வந்து சாமி என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது.

தீமிதித்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்றவை தேவைதானா?

பதில் : மற்றவர்களை தீயில் தள்ளாதவரை, மற்றவர்களை குத்தாதவரை – நம்மை வருத்தி இறைவனை அடைய முயற்சிக்கும் முயற்சிகளில் என்ன தவறு இருக்கிறது?

ஹிந்து என்றால் உண்மையில் என்ன அர்த்தம்?

பதில் : இயல்பானவர்கள் என்றர்த்தம்.

Read Full Post »

மாரியம்மன் கோவில் திருவிழாவில் வேப்பிலைக் கொடி கட்டுவது ஏன்?

குப்புசாமி: நம்ம ஊரு மாரியம்மன் கோவில் திருவிழான்னா கொயேற்றத்துடன் தொடங்கும். வேளாங்கன்னி கோவில்லயும் கொடியேத்துவாங்க.

அப்புசாமி:  கொடின்னா கட்சிக்கொடி மாதிரி துணிக்கொடியா? அம்மன் கோவில் கொடின்னா வேப்பிலை கட்றத தானே சொல்லுவாங்க.

குப்புசாமி: அங்க தான் இந்து தர்மமும் நம்ம ஆன்மீகத்தின் தாத்பர்ய மகிமையும் நிக்குது அப்பு. வேளாங்கன்னி மாதா கோவில்ல கொடியேற்றம்ன்னு சொன்னா மாதா சின்னம் பொறிச்ச துணிய கொடியா ஏத்துவாங்க. ஆனா மாரியம்மன் கோவில் கொடின்னா வேப்பிலையை வரிசையா கயிற்றில கட்டி ஊர் முழுசும் கட்டுவாங்க. அதுக்கு அறிவியல் பூர்வமான அர்த்தம் இருக்கு. ஆனா துணிய கொடியா ஏத்துனா அதுல ஒரு விஷயமும் இல்ல.

அப்புசாமி: புரியும் படியா சொல்லேன்.

குப்புசாமி: அப்பு.. நம்ம பாரத நாடு மக்கள் கூட்டம் கூட்டமாக கிராமம் கிராமமாக வாழ்ந்து வந்த பிரதேசம். இங்கே எல்லாமே இயற்கை தான். அறிவியல் மருத்துவம்ன்னு எல்லாத்தையுமே இயற்கையோடு ஒன்றாகவே கலந்து வாழ்ந்திருக்காங்க. அப்படித்தான் கோவில்களும் திருவிழாக்களும். ஒரு கிராமத்தில அம்மன் கோவில் திருவிழான்னா எப்ப வரும்?

 அப்புசாமி: வருஷத்துக்கு ஒருவாட்டி..

 குப்புசாமி: எந்த மாசம்?

 அப்புசாமி: ஆடி மாசம்.

 குப்புசாமி: ஏன் ஆடி மாசத்துல கொண்டாடறாங்க:

 அப்புசாமி: நீயே சொல்லேன்..

 குப்புசாமி: ‘மாரி’ ன்னா மழைன்னு அர்த்தம். ஆடிப்பட்டம் தேடி விதைன்னு சொல்வாங்க. விதை விதைச்சுட்டா போதுமா?. மழை வேனாமா? விவசாயிகளெல்லாம் பாடுபட்டு ஆடிப்பாடி விதை விதைச்சாலும் விதைச்ச நெல்லு அரிசியா கொட்டி அடுப்புல பொங்கனும்னா அந்த பருவத்துல மழை வந்தா தானே முடியும். அதனால மழை வரணும்னும் நல்ல விளைச்சல் கிடைக்கனும் னும் வேண்டிகிட்டு மழையைக் கொண்டு வரும் தேவதையாக அம்மனை வேண்டி ‘மாரி’ யைக் கொண்டுவா மாரி அம்மான்னு கும்பிடறாங்க. இந்த வேண்டுதலை ஒழுங்கா நிறைவேத்தினா, ஐப்பசி மாசம் அடை மழை பெய்யும். இப்படி பருவம் தப்பாம மழை பெஞ்சா நல்லா விளைச்சல் கிடைச்சு, நிறைய அறுவடை பண்ணி தை மாசம் பொங்கல் வெச்சு மழைகொடுத்த அம்மனுக்கு படையல் பண்ணி போடுவாங்க. இப்படி மழைகொடுக்கற தெய்வத்த ‘பருவம் தப்பாம எங்கள காப்பாத்து தாயேன்னு’ சொல்லி கும்பிடத்தான் சரியா ஆடி மாசம் விதை விதைக்கும் காலத்துல மாரியம்மனுக்கு விழா எடுத்து கும்பிடறாங்க.

 அப்புசாமி: அடேங்கப்பா! மாரியம்மன் திருவிழால இவ்வளோ விஷயம் இருக்கா? சரி வேப்பிலை கொடி ஏன் கட்றாங்க?

 குப்புசாமி: அங்க தான் நம்ம மக்கள் இயற்கை வைத்தியத்திலும் அறிவியல் நுண்ணறிவிலும் எவ்வளவு புத்திசாலியா இருந்திருக்காங்கன்னு தெரியுது. விளக்கமா சொல்றேன் கேளு!

 வேப்பிலை ஒரு கிருமிநாசினி. பல வியாதிகளைப் போக்கும் அருமருந்து. வெளிநாட்டுக்காரணே வேப்பிலைக்கு பேட்டன்ட் உரிமை வாங்கி வெச்சு நம்மள அடிமையாக்கப் பாத்தான். ஆனா ஏற்கனவே இந்தியால வேப்பலை வெச்சு நம்ம ஆளுங்க நிறைய ஆராய்ச்சி பண்ணின ஆதாரம் இருந்ததால, அதக்காட்டி அந்த உரிமையை ரத்து பண்ண முடிஞ்சுதுன்னா பாரேன். அந்தளவு மருத்துவ குணமுள்ளது வேப்பிலைன்னு நம்முன்னோர்கள் தெரிஞ்சுதான் வெச்சிருக்காங்க.

பத்து நாள் திருவிழா துவங்கறதுக்கு முன்னாடியே ஊரெல்லாம் தமுக்கடிச்சு அம்மன் கோவில் விஷேசத்த அறிவிப்பாங்க. திருவிழா துவங்கும் நாளுக்கு முன்னாடி ஊரெல்லாம் வேப்பிலை கொடியைக் கட்டுவாங்க. வேப்பிலையைக் கொப்போட பறிச்சு கயிற்றில சரம் மாதிரி கட்டி ஊரில் உள்ள எல்லா தெருக்களிலும் கட்டி வெப்பாங்க. கொடியேத்தின நாள் முதலா யாரும் ஊருக்குள்ள வரக்கூடாது. ஊருக்குள்ள இருந்து யாரும் வெளிய போகவும் கூடாது.

அப்புசாமி: இதென்னப்பா கட்டுப்பாடு? பத்து நாளும் யாரும் வெளிய போகாம இருப்பாங்களா?

குப்புசாமி: கண்டிப்பா இருப்பாங்க அப்பு. ஏன்னா எல்லா கிராமத்திலேயுமே ஒரே காலத்துல இந்த திருவிழா நடக்கறதனால எல்லாரும் அவங்கவங்க ஊர்லயே தங்கிடுவாங்க. அப்படி வேற ஊர்ல மாட்டிக்கிட்டாலும் அந்த ஊரைவிட்டு திருவிழா முடியற வரைக்கும் வரமாட்டாங்க.

அப்புசாமி: அப்படியா? ஏன் இவ்வளோ கட்டுப்பாடு?

குப்புசாமி: காரணம் இருக்கு அப்பு! திருவிழான்னா மக்கள் எல்லோரும் ஒரே இடத்துல கூடுவாங்க இல்லயா? கூட்டம் கூடும்போது அங்கே தொற்றுக்கிருமிகள் பரவ நிறைய வாய்ப்பிருக்கு. திருவிழா சமயம் மக்கள் கூட்டமா கூடற எடத்துல ஊர்க்காரர் ஒருவர் வெளியெ போய் ஏதாவது தொற்று நோய் கிருமியோட ஊருக்குள்ள வந்திட்டா கூட்டத்தோட கலந்து அத்தனை பேருக்கும் ஒரேயடியா வியாதி வந்து மக்கள் எல்லாருமே நோய்வாய்ப்பட நேரும். அதே நேரம் வெளியூர்லருந்து ஒருத்தன் புதுசா வந்தாலும் அதே பயம் தான். அதனால தான் அம்மன் கோவிலுக்கு கொடியேத்திட்டா யாரும் ஊரைவிட்டு போகக்கூடாதுன்னும் ஊருக்குள்ள புதுசா யாரும் வரக்கூடாதுன்னும் உத்தரவு போடுவாங்க.

அப்படி நோய்க்கிருமி எதுவும் அண்டக்கூடாதுன்னும், கிறுமிகள் பரவுவத தடுக்கவும் தான் கூட்டமா மக்கள் கூடும் திருவிழா தினத்துக்கு முன்னாடியே ஊரெல்லாம் வேப்பலையால சுத்தி தொற்றுக்கிருமிகள் அண்டாம பாத்துக்கறாங்க.

அப்புசாமி: ஓகோ! நம்ம அரசியல் வாதிங்க மீட்டிங் போட்டா மாநகராட்சி சார்புல ரோடு சைடுல முழுசும் பிளீச்சிங் பவுடரோ குளோரிங் பவுடரோ எதோ ஒன்னு தூவுவாங்களே அது மாதிரியா?

குப்புசாமி: அப்புடீன்னு தான் வெச்சுக்கோயேன். இன்னும் கேளு.. திருவிழா துவங்கும் முன்னாடி எல்லாருடைய வீட்டுலயும் வேப்பிலையை வாசலில் தோரணமா கட்டுவாங்க. வீட்டுக்கு உள்ளேயும் சாமிபடத்தில் வேப்பிலை மாலைய போட்டு வைப்பாங்க. எல்லோருடைய வீட்டிலும் சாணத்தால் மெழுகி சுவர்களில் மஞ்சள் பூசி வைக்கப்பட்டிருக்கும். ஆக ஊர் தொடங்கி தெரு மற்றும் வீடு வரைக்கும் வேப்பிலை, பசுஞ்சானம், மஞ்சள் ன்னு மருந்துகளாலேயே நோய்க்கிருமிகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு வளையத்தை உண்டு பண்ணிடறாங்க. சுத்தத்துக்கான இத்தனை ஏற்பாடுகளை பண்ணிட்டு அதுக்கப்புறம் தான் திருவிழா தொடங்கும். மக்கள் விரதம் இருந்து கூட்டம் கூட்டமா கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து , தீ மிதித்து, கூழ் காய்ச்சி பிறருக்கும் கொடுத்து பிரார்தனைகளை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு வீட்டுக்கு போவாங்க.

ஆக இன்னைக்கும் அம்மன் கோவில் திருவிழாக்கள்ல வேப்பிலை கொடியேத்தி இயற்கையின் துணை மாறாம நாம கொண்டாடறோம்.

இப்படி சுத்தத்தின் காரணமா வேப்பிலையைக் கட்டி கொடியேத்தறதுக்கு இருக்கற அர்த்தம் மாதாவோட சின்னத்த வெச்சு கட்சிக்கு கொடியேத்தற மாதிரி ஒரு துவைச்சுப்போட்ட துணியை கம்பத்துல கட்டி ஏத்தறதுல இருக்கான்னு நீயே சொல்லு.

அப்புசாமி: அம்மன் கோவில் திருவிழாக்கு கொடியேத்தறதுங்கற சம்பிரதாயத்துக்கு இத்தனை அறிவியல் பூர்வமான அர்த்தம் இருக்கான்னு இப்ப தான் தெரியுது குப்பு!

குப்புசாமி: பின்ன, இந்து தர்மம்ங்கறது வெறும் அடையாள மதமா என்ன?

அது மனோவியலும் அறிவியலும் பகுத்தறிவும் சேர்ந்த ஒரு வாழும் தர்மம்..! சரிதானே! இந்து தர்மத்தின் தத்துவங்களிலும் சம்பிரதாயங்களிலும் உள்ள உள்ளர்த்தங்களை தெளிவா புரிஞ்சிக்கிட்டா இதை அப்படியே காப்பியடிச்சு வேற ரூபத்தில எத்தனை மதம் வந்தாலும் இந்து தர்மத்திற்கு நிகராக அதனால நிற்க கூட முடியாது. அதனால தான் இதை ஸநாதன தர்மம்னு சொல்றோம். அதாவது நிரந்தரமான தர்மம்.

அப்புசாமி: எல்லாம் சரிதான்… ஆனா திருவிழாவோட கடைசி நாள்ல இளசுகள்ளாம் ஒருத்தர் மேல ஒருத்தர் மஞ்சத்தன்னி ஊத்தி விளையாடுவாங்களே அதைப்பத்தி சொல்லாம முடிக்கிறியே..!

குப்புசாமி: அதுக்கும் அர்த்தம் இருக்கு. மஞ்சள் நோய்க்கிருமிகளை விரட்டும் மருத்துவ தன்மை கொண்டது. உதாரணமா எல்லோரும் மஞ்சளால் செய்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்கிறோம் தானே..

அப்புசாமி: ஆமாம். அது ஏன்?

குப்புசாமி: நெற்றியின் மஞ்சள் மேல படும் காத்து நம் முகத்தை சுத்தியே இருக்கும். அதனால நாசித்துவாரம் வரை ஒரு பாதுகாப்பு வளையம் போல துர் கிருமிகளை மஞ்சளின் சக்தி அண்டவிடாது. நோய்க்கிருமிகள் இல்லாத சுத்தமான காத்தை நாம் சுவாசிக்க அது உதவும். அந்தளவுக்கு சக்தி உள்ள மருத்துவ குணம் கொண்டது மஞ்சள்.

கூட்டமான இடத்துக்கு வந்து மக்கள் கலைஞ்சு போகும் போது யாருக்காவது அவங்களுக்கே தெரியாம ஏதாவது நோய் தொற்று இருந்து அது மத்தவங்க வீட்டு வரைக்கும் பரவிடக்கூடாதே! அதனால திருவிழா முடிஞ்சி திரும்பி போகும் நாள்ல எல்லோர் கால்கள்லேயும் மஞ்சள் தண்ணிய ஊற்றி உடல் மேலும் மஞ்சள் தண்ணீரை தெளிச்சி நோயில்லாம வீட்டுக்குப் போங்கன்னு அனுப்பி

வைப்பாங்க.

இதுக்காக அவரவர் வீட்டிலிருந்து தங்கள் பங்குக்கு எல்லோரும் மஞ்சள் கரைத்து

வருவோர் போவோர் மீது தெளிக்கும் போது, சிலர் கோபப்படலாம். அதனால அவரவர்க்கு முறையுள்ளவர்கள் மீது மட்டும் மஞ்சள் தண்ணீர் தெளியுங்கள் ன்னும், தேவையில்லாமல் யாருடைய கோபத்திற்கும் ஆளாகிவிட வேண்டாம்ன்னு சொல்லி ஆரம்பிச்சதை, முறைப்பையன் முறைப்பெண் மீது தெளிக்கனும், முறைப்பெண் முறைப்பையன் மீது மஞ்சத்தண்ணி ஊத்தணும்னு காலப்போக்கில மாத்திப் புரிஞ்சிக்கிட்டாங்க. அதனால் மஞ்சத்தண்ணி ஊத்தறது விளையாட்டு நிகழ்சி மாதிரி ஆகிப்போச்சு! இப்போ புரியுதா, மாரியம்மண் கோவில் திருவிழான்னா என்னான்னு?

அப்புசாமி: குப்பு! இவ்வளவு அர்த்தமுள்ள பண்டிகையைப் பத்தி தெரிஞ்சுக்காம கூட்டத்துல நிக்கறதுக்கு சங்கடப்பட்டே நான் இவ்வளோ நாளா அம்மன் கோவில் திருவிழால கலந்துக்காம போய்ட்டேனே! அடுத்த மாரியம்மன் திருவிழால வேப்பிலை கொடி கட்டுற வேலைய நானே செய்யப்போறேன். சரி…நேரமாயிடிச்சு, போற வழியில ஆத்தாவ வேண்டிக்கிட்டே வீடு போய்ச்சேர்றேன்.

அப்புசாமி இடத்தை காலி செய்ய, குப்புசாமி பெருமூச்சுடனும் சிறு முணுமுணுப்புடனும் திண்ணையில் சாய்ந்தார் …

நன்றி: http://hayyram.blogspot.in/2010/09/blog-post_19.html

Read Full Post »

கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்ன?

சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு.

அது ஒரு பங்குச்சந்தை வியாபார நிறுவனமாக இருந்ததால் மார்க்கெட்டிங் வேலை மிக முக்கியமானதாக இருந்தது. பங்குச்சந்தை மார்க்கெட்டிங் என்றால் சாதாரனம் இல்லை. உங்களிடம் இருக்கும் பணத்தை நீங்கள் முழித்திருக்கும் போதே உங்கள் சட்டைப்பையிலிருந்து எடுத்து நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும்.

இது குளோப்ளைசேஷன் மூலமாக வந்த புதிய வியாபார உத்தி. அது ஒரு புறம் இருக்கட்டும்.

தொழிலாள‌ர்களுக்காக நடத்தப்படும் இந்த வகுப்பில் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும், உடலைப் பேணிப் பாதுகாக்கவும் சில விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். அதில் ஒன்று அதி டென்ஷனாகவே வாழும் நாம் மனதை எப்படி அமைதிப்படுத்திக் கொள்வது என்பதற்க்கு ஒரு புதிய முறையைக் கற்றுக் கொடுத்தார்.

இதை அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லி ஒரு ஆங்கிலேயரின் பெயரைச் கூறினார். மனோவியல் ரீதியாக அவர் கொடுக்கும் இந்தப் பயிற்ச்சி நல்ல பலனைக் கொடுத்தது என்றும் கூறி அதை செய்யச் சொன்னார்.

அவர் சொன்னதாவது:

முதலில் கண்களை மெதுவாக மூடிக்கொள்ளுங்கள்.

உங்கள் வாயால் இப்பொழுது மெதுவாகச் சொல்லுங்கள்…ஆங்கிலத்தில் துவங்கினார்..

மை ஐஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை நோஸ் ஆர் ரிலாக்ஸ்!

மை மௌத் இஸ் ரெலாக்ஸ்!

மை ஹான்ட்ஸ் ஆர் ரிலாக்ஸ்!

என்று ஒவ்வொரு பாகத்தையும் வாயால் சொல்லி மனதால் ரிலாக்ஸ் படுத்தினார்.

இவற்றை சொல்லி முடித்து விட்டு இப்பொழுது கண்களை மெதுவாக திறங்கள். இப்பொழுது உங்கள் மனதும் உடலும் ரிலாக்ஸாக இருக்கிறதா? என்று எல்லோரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார்.

பிறகு நிகழ்ச்சி பற்றி எல்லோரிடைய கருதையும் கேட்டார்.

என் முறை வந்தது. நான் சொன்னேன்…”சார் இது என்ன பிரமாதம் இதை நான் குழந்தைப் பருவம் முதலே செய்து கொண்டிருக்கிறேனே!” என்றேன்.

ஆச்சரியத்துடன் பார்த்த அவர் “அது எப்படி? எனக்குத் தெரிந்த வரை இது புதிய மனோவியல் முறை! இதை எப்படி நீங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே செய்ய முடியும்” என்று கேட்டார்.

நான் சொன்னேன் “சார் நீங்க என்னவெல்லாம் சொன்னீர்களோ அது அனைத்தும் நான் சிறு வயது முதலே சொல்லும் கந்தர் சஷ்டி கவசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அவயவம் விடாமல் தியானிக்கும் பயிற்ச்சியை அது ஆன்மீக ரீதியாக மிக அருமையாக கொடுக்கிறது” என்றேன்.

மிகவும் ஆர்வமாக இதைக் கேட்ட அவர் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயனைப் பற்றி விளக்கமாக சொல்லச் சொன்னார்.

நானும் சொல்லத் துவங்கினேன்.

கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வோரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.

உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்.

கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க‌!

விதிச்செவி இரண்டும் வேலவர் காக்க‌!

நாசிகளிரண்டும் நல்வேல் காக்க‌!

பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க‌!

கன்னமிரண்டும் கருனைவேல் காக்க‌!

என் இளங்கழுத்தை இனியவேல் காக்க‌! .

என்று இப்படியே உடலில் ஒரு அங்கம் விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.

இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து கவனிக்கிறது.

இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில் நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின் சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.

மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப் போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா. இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில் செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.

இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை முறையாகவும் இருக்கிறது.

கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.

இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும் மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில் பாதிப்பு ஏற்படாதா என்ன?

கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் ச‌ரிசெய்யும் வேலையை செய்து கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக கூறினார்கள்.

இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படிப்பதில் மனோவியல் ரீதியான‌ நன்மைகள் உள்ளன.

ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில் எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவு மடையர்களுக்கு இது புரிவது சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட இருப்பதில்லை என்பதே உண்மை.

ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும் பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் சொல்கிறேன் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்”. இவ்வாறு சொன்னவுடன் பயிற்சியாளர் மிகவும் மகிழ்ந்து என்னைப் பாராட்டினார்.

அவரும் கந்தர் சஷ்டி கவசம் படிப்பதில் உள்ள நன்மைகளை ஏற்றுக் கொண்டார். நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால் தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!

காக்க காக்க கனகவேல் காக்க!

நோக்க நோக்க நொடியில் நோக்க!

இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்

*******

Read Full Post »

பக்தியோகம்

பக்தியை ஒரு முக்கோணத்துடன் ஒப்பிடலாம் . அதன் ஒவ்வொரு கோணம் பக்தியை பிரிக்க முடியாத பண்பை குறிக்கிறது. முன்று கோணம் சேராமல் எந்த கோணம் இருக்க முடியாது .அது போல் பின்வரும் முன்று கோணங்கள் இல்லமால் பக்தி இருக்க முடியாது …

முதல் முக்கோணம்  அன்பு வியாபார பொருள் அல்ல என்பதாகும் . எதாவது விதத்தில் பிரதிபலனில் நாட்டம் இருக்குமானால் அங்கு உண்மையான அன்பு இருக்க முடியாது .அது வெறும் கொடுத்தல் வாங்குதல் வியாபாரம் .நாம் செலுத்தும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் பிரதிபலனாக கடவுளிடம் ‘அது வேண்டும் ‘ ‘இது வேண்டும் ‘ என்ற எண்ணம் இருக்குமானால் உண்மையான பக்தி வளர முடியாது .தாங்கள் விரும்பிய பலன் கிடைக்கவில்லை என்று அவர்கள் இறைவனை வழிபடுவதை நிறுத்தி விடுவார்கள் என்பது சர்வ நிச்சியம் .உன் அன்பிற்கு பிரதியாக எதையும் கேக்காதே …

உதாரணம் : அழகிய இயற்கை காட்சி ஒன்றை கண்டு அதில் மனத்தை பறிகொடுக்கிறாய். அதற்காக அதனிடம் ஏதோனும் வெகுமதி எதிர்பார்க்கிறையா? இல்லையே ! அது அந்த காட்சியும் உன்னிடம் எதையும் கேட்பதில்லை .அந்த காட்சி உனக்கு பேரானந்தத்தை தருகிறது , உன் உள்ளத்தில் தேங்கி கிடக்கும் மனப் போரட்டங்களை தணிக்கிறது , உன்னை அமைதியில் திளைக்கச் செய்கிறது ,அந்த நேரத்தில் உன்னை எங்கோ ஓர் உயர் உலகிகிருக்கு இட்டு செல்கிறது.உன்னை தெய்விக பரவசத்தில் ஆழ்த்துகிறது .உண்மை அன்பின் இந்த இயல்புதான் நமது முக்கோணத்தில் முதல் கோணம் .

இரண்டவாது  கோணம் அன்பு பயம் அறியாதது. பயத்தின் காரணமாக இறைவனை வழிபடுகிறார்கள். தண்டனை கிடைக்கும் என்று பயத்தினால் இவர்கள் இறைவனை  வழிபடுகிறார்கள் இவர்களுக்கு இறைவன் ஒரு கையில் சாட்டையும் , மற்றோரு கையில் செங்கோலும் ஏந்திருக்கும்  பெரியதொரு உருவம். அவரது கட்டளைக்கு அடிபணியமால் போனால் சாட்டை அடி கிடைக்கும் என்று நடுங்குகிறார்கள்  இவர்கள்.மனத்தில் எதாவது பயம்  இருக்கும் வரை அன்பு எப்படி வரும்? பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு !.

உதாரணம் : ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று  கொண்டுருக்கிறரால். அவளை பார்த்துப் ஒரு நாய் குரைக்கிறது அவள் பயந்து போய் அருகில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சம் புகுகிறரால். மறு நாள் அதே தாய் தன் குழந்தை  உடன் சென்று  கொண்டுருக்கிறரால். திடிரென்று ஒரு சிங்கம் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் என்ன செய்வாள் ? சிங்கத்தின் வாயில் தன்னை  அர்ப்பனித்தாவது குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா ? அன்பு எல்லாம் பயங்களையும்  வெல்கிறது ..

முன்றாவது கோணமாக இருப்பது, அன்புக்கு போட்டி கிடையாது என்பது தான் . இதுவே பக்தனின் மிக உயர்ந்த லட்சியம். நாம் நேசிப்பவர் மிக உயர்ந்த லட்சிய புருஷராக இல்லாவிட்டால் நமக்கு அவர் மிது உண்மையான அன்பு தோன்றாது. தவறனவர்களிடம்  தவறான வழியில் பலர் அன்பு செலுத்தலாம். அனால் அன்பு செலுத்துபனை பொறுத்தவரையில், அவனால் மிக அதிகமாக நேசிக்கப் படுபர் அவனுக்கு மிக உயர்ந்த லட்சியமாகவே விளங்குகிறார். ஒருவன் தனது இலட்சியத்தை மிக மிக தாழ்ந்தவனிடம் காணலாம் ;மற்ற ஒருவன் மிக மிக உயர்ந்தவனிடம்  காணலாம். எப்படி இருந்தாலும் தனக்கு லட்சியமாக இருபவரை  மனிதன் ஆழ்ந்து நேசிக்கிறான்.

உதாரணம் : காதல் கண்ணிற்கு அட்டக்கருமையனவலும் அழகிய சிகரமாக தெரிவாள் என்று சொல்லப்படுவது உண்மைதான் . முன்றாம் மனிதனுக்கு அவள் அப்படித் தெரிய மாட்டாள் ; அந்தக் காதலனின் காதல்  தவறான இடத்தில செலுதபடுவதாக தெரியும் . ஆனால் காதலனோ காதலிடம் அழகின் சிகரத்தையே காண்கிறான். ஒருபோதும் அட்டக்கருப்பை  காண்பதில்லை.  அழகோ , அழகற்றதோ  எதுவாயினும் சரி , நம் அன்பிற்கு பொருள் நமது இலட்சியங்கள் உருவாகி செயல்படும் மையங்கள் ஆகின்றன . மக்கள் பொதுவாக எதை வழிபடுகின்றனர்? பராபக்தனின் லட்சிய உச்சியாக விளங்கும்  முழு முதற் கடவுளை அல்ல , அல்லவே அல்ல. ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி, அவரவர் உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதைதான் ஒவ்வொருவரும் வழிபடுகின்றனர். ஒவ்வொருவரும் தனது இலட்சியத்தை புறவுலகில் கொண்டு வந்து அதன் முன் மண்டிய்ட்டு வணங்குகின்றனர்.

Read Full Post »

Older Posts »