Feeds:
Posts
Comments

Posts Tagged ‘baratham’

12189183_1025915864132622_9057793412933950991_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 7

ஜூன் 20, 1909.

லண்டனிலுள்ள இந்தியா ஹவுஸில் ஒரு திட்டம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது. இந்திய தேச விடுதலைக்காக ஒரு புரட்சி வீரன் அன்று ஒரு முக்கிய பணியை முன்னிட்டு வீர் சாவர்க்கருடன் சில முடிவுகளை எடுத்துக் கொண்டிருந்தான். புரட்சி வீரன் அமைதியாக திட்டத்தை விவரித்துக் கொண்டிருந்தான். சாவர்க்காரின் சம்மதத்தைப் பெற்றான். இறுதியில் ஜூலை ஒன்றாம் நாள் அந்தப் திட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. திட்டத்தின் படி அந்த புரட்சி வீரன் ஒரு ஆங்கிலேயரை கொலை செய்யும் கடமையை ஏற்றுக் கொண்டான்

இதன் பின்புலம் என்ன?

”இண்டியா ஹவுஸ்” என்பது வீர் சாவர்க்கரால் தேச பக்தியை ஒருங்கிணைப்பதற்கும், பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து போராடுவதற்க்காகவும் லண்டனில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. இதில் அனேகமாக லண்டனுக்கு பல்வேறு துறைகளில் கல்வி பயில வந்த தேச பக்தி மிகுந்த மாணவர்கள் உறுப்பினர்களாக இருந்து வந்தார்கள். இதனால் இண்டியா ஹவுஸ் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு ஒரு பெரிய அறைகூவலாகவே இருந்து வந்தது.

பிரிட்டிஷ் அரசும் தன் பங்குக்கு ஒரு அமைப்பை போற்றி வளர்த்து வந்தது. அது தேசிய இந்திய கூட்டமைப்பு என்ற பெயரில் லண்டனில் இயங்கி வந்தது. இதன் முக்கிய நோக்கங்களுள் ஒன்று லண்டனுக்கு கல்வி கற்க சென்ற இளைஞர்கள் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபடுவார்களேயானால் மூளை சலவை செய்து அவர்களை தேசபக்தியற்றவர்களாக செய்வதாகும். அதன் செயலாளர் எம்மா ஜோசஃபின் என்னும் அம்மையார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தக் அமைப்பின் அங்கத்தினர்களை மூளை சலவை செய்வதற்க்காக மூவர் அடங்கிய ஒரு கமிட்டியை உருவாக்கியிருந்தது. அந்தக் கமிட்டியின் முக்கிய உறுப்பினர் சர் வில்லியம் கர்ஸன் வைலி. கர்ஸன் வைலியின் தந்திரத்தினால் பல இந்திய இளைஞர்கள் இதயத்தில் குடியிருந்த இந்திய விடுதலை போராட்டம் என்ற மாயை விலகி தேசபக்தியை கைவிட்டனர். இதனால் கொதிப்படைந்தது ”இண்டியா ஹவுஸ்”.

அன்று அந்தத் திட்டம் வகுக்கப்பட்டதன காரணம் இதுவே. புரட்சி வீரன் எம்மா அம்மையாரை நட்பு செய்து கொண்டான். பின்னர் அவருடைய அமைப்பில் முழு உறுப்பினரானான். பின்னர் ஜூலை 1, 1909ல் தேசிய இந்திய கூட்டமைப்பு வருடாந்திர தினத்தை கொண்டாடுவதற்க்காக இம்பீரியல் இன்ஸ்டிடுயூட் ஜெஹங்கீர் ஹாலிற்கு வந்த கர்ஸன் வைலியை சுட்டுக் கொன்றான்.

விரைவில் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது பிரிட்டிஷ் அரசு. அவனும் அதையே விரும்பினான். காரணம், அப்பொழுதுதான் மேலும் பல இந்திய இளைஞர்கள் கொதிப்படைந்து தேச விடுதலைக்குப் போராட முன் வருவார்கள் என்பதே. அந்த புரட்சி வீரன் மதன்லால் திங்க்ரா.

நீதிமன்றத்தில் திங்க்ரா சொன்னான், ” என் தாய்நாட்டுக்காக நான் உயிரிழக்க போகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். நினைவில் கொள்ளுங்கள். எங்கள் காலம் விரைவில் வரும். என்னை காத்துக்கொள்ள நான் சொல்ல எதுவுமில்லை. எந்த ஆங்கிலேய நீதிமன்றத்திற்கும் என்னை கைது செய்யவோ, தண்டிக்கவோ அதிகாரமில்லை. அதனால்தான் வாதாட வக்கீல் வைக்கவில்லை.

ஜெர்மானியர்களை எதிர்த்து போராட உங்களுக்கு உரிமை உள்ளதென்றால் அதே உரிமை என்னாட்டுக்காக போராட எனக்கும் மிக அதிகமாகவே உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் எங்கள் மக்கள் 8 கோடி பேரை கொன்றதற்கும், ஆண்டுதோறும் 100,000,000 பவுண்டு நிகரான செல்வங்களை எங்கள் நாட்டிலிருந்து கொல்லை அடித்து செல்லும் உங்களை கொல்லும் கடமை எனக்கு இருக்கிறது.

எங்கள் தேசபக்தர்களை கொல்கிறீர்கள், ஒரு ஆங்கிலேயன் வாழ எங்கள் மக்கள் 3000 பேர் இரத்தம் சிந்த உழைக்க வேண்டியிருக்கிறது. உங்கள் எதிரியான ஜெர்மானியர்களை கொல்லும் ஆங்கிலேயன் வீரன் என்றால், எங்கள் எதிரியான உங்களை கொல்லும் நான் மட்டும் எப்படி குற்றவாளியாவேன் என்றான்.

Read Full Post »

12187685_1025411007516441_6111743954458650091_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 6

வந்தே மாதரம் (தாய் மண்ணே வணக்கம்) பாடல், பக்கிம் சந்திர சட்டர்ஜியினால் 1882-ல் “ஆனந்த மடம் “ நாவலில் எழுதப்பட்டது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனால் அத்தகைய தாராக மந்திரத்திற்கு பின்னனியில் நடந்தது என்ன ?

வங்காளத்தில் ஒரு மாவட்ட துணை ஆட்சியாளராகப் பணியில் இருந்த பக்கிம் சந்திர சட்டர்ஜி, தட்சிணேசுவரம் சென்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சியரிடம் ஆசி பெற்றார்.

சட்டர்ஜிக்கு ஆசி வழங்கிய பரமஹம்சர், ‘உனது பெயர் என்ன?’ என்று கேட்டார். ‘என் பெயர் பக்கிம் சந்திரர் ‘ என்று பதிளிலத்தார்.

வங்காள மொழியில் பக்கிம் என்றால் ‘வளைந்த’ என்று பொருள். வளைந்த சந்திரன். அதாவது ‘பிறைச் சந்திரன்’ என்று அர்த்தம்.

இதை கேட்ட பரமஹம்சர் சிரித்தபடி ” நீ…. வளைந்த சந்திரனா! ஆங்கிலேய அரசில் பணிபுரிபவன் தானே நீ! ஆங்கிலேயன் பூட்ஸ் காலால் மிதித்ததில் வளைந்து போய்விட்டாயா!” என்று கேட்டார்.

பரமஹம்சரின் வார்த்தைக் கேட்ட பக்கிம் சந்திரர் குறுகிப் போனார்; வருந்தினார். நேராக தம் வீடு வந்தவர், அந்நியரிடம் பணியாற்றுவது தமக்கு அவமானம் என உணர்ந்தார். உடனடியாகத் தமது துணை ஆட்சியாளர் பதிவியை ராஜினாமா செய்தார். பின்னர் தேச விடுதலைக்குப் பாடுபட்டார்.

அப்போது அவர் எழுதிய நூல்தான்’ஆனந்தமடம்’. அந்த நூலில்தான் ‘வந்தேமாதரம்’ பாடல் இடம் பெற்றுள்ள்ளது.

விடுதலை பெருநெருப்பை மூட்டிய வந்தேமாதரத்திற்கு முதல் பொறி கொடுத்தவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

Read Full Post »

12107953_1024411640949711_8074768904993930253_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 5

வந்தேமாதரம்..

நமது நாட்டின் தாரம மந்திரம் வந்தேமாதரம்! பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘ஆனந்தமடம்’ எனும் நாவலில் வந்தேமாதரம் இடம் பெறுகிறது. வந்தேமாதரம் என்றால் என் தாய்திருநாட்டை வணங்குகிறேன் என்று பொருளாகும். பாரத நாட்டை பாரத மாதாவாக, சரஸ்வதியாக, துர்க்கையாக, லட்சிமியாக வர்ணித்து பாடுகிறார்.

’தாயே! பாரதமாதா! நான் எந்தக் கோயிலுக்குச் சென்று வணங்கினாலும் அங்கே உன் எழில் வடிவத்தினையே காண்கிறேன்’ என்று பாடுகிறார். இந்தப் பாடலில் இருந்துதான் வந்தேமாதரம் என்ற சொல் உணர்ச்சிப் பிழம்பான கோஷமாக பிறந்தது. வந்தேமாதரம் என்ற கோஷத்திற்கு எவ்வளவு சக்தி இருந்தது என்பதனை, சுதந்திரப் போராட்ட வீரர் ம.பொ. சிவஞானம் மிக அருமையாக விளக்குகிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் போலீசார் தடியால் தாக்கும்போது ஒன்றிரண்டு அடிகளுக்கு மேல் தாங்கமுடியாத ஒருவர், அடிக்கு அடி வந்தேமாதரம் சொல்லும்போது அவரது உடலில் பத்துக்கு மேற்பட்ட அடிகளைத் தாங்கக் கூடிய சக்தி வந்துவிடும்’ என்பார். வந்தேமாதரம்! என்ற கோஷம், சுதந்திரப் போராட்ட வீரர்களிடையே மெய்சிலிர்ப்பையும் ஆவேசத்தையும் உருவாக்கியது. இளைஞர்கள் புன்முறுவலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிடவும் வெஞ்சிறையில் வாடவும் தைரியத்தைக் கொடுத்தது.

விண்ணைப் பிளந்தது வந்தேமாதரம்…

ஆயிரக்கணக்கான தேசபக்தர்களின் வீர முழக்கம் கேட்டு ஆவேசமடைந்தனர் ஆங்கிலேய அதிகாரிகள். “அடக்குங்கள் ஒடுக்குங்கள்” என்ற அவர்களின் உத்தரவையடுத்து போலீசார் ஆவேசத்துடன் கண்மூடித்தனமாக தேசபக்தர்களைத் தாக்கத் தொடங்கினர். எங்கு பார்த்தாலும் தலை உடைந்தும் விலா எலும்புகள் நொறுக்கப்பட்டும் கைகள் முறிக்கப்பட்டும் ரத்தம் சொட்ட சொட்ட மக்கள் காணப்பட்டனர். ஆனாலும் ஒவ்வொரு தடியடித் தாக்குதலுக்கும், எதிர்த்தாக்குதலாக அவர்களின் வந்தே மாதரம் இடி முழக்கமாக முழங்கிக் கொண்டிருந்தது. தேச பக்தர்களின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். வந்தே மாதரம் என்ற போர் முழக்கம் அந்த பகுதியையே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எதிர் கொண்ட அந்தக் கூட்டம் நொடிப்பொழுதில் தேசபக்தியின் உணர்வுகளை ஒருமுகமாக வந்தே மாதரம் என்ற மந்திரம் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. தேசபக்தர்கள் அடிக்கப்பட்டார்கள், உதைக்கப்பட்டார்கள், இருந்த போதும் கூட்டம் கட்டுக்கோப்பாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தது. தாக்குதலில் சாலையோர சாக்கடையில் விழுந்தவர்கள் தங்கள் வலியையும் பொருட்படுத்தாது மீண்டும் போராட்டக் களத்தில் எழுந்து வந்து நின்றனர். உள்ளத்தின் அடிப்பாகத்திலிருந்து சொல்லி வைத்தார் போல் ஒரே குரலில் அனைவரும் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று முழங்கிய கர்ஜனை விண்னைப் பிளந்தது. வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! பல ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த அவர்களின் சுதந்திர தாகம் சூறாவளி காற்றாக என கரையை புரட்டிக் கொண்டிருந்தது.

மேற்குவங்கத்தின் பாரிசால் வீதிகளில் எழுந்த இந்த சுதந்திர போர் முழக்கம், பாரத தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள ஒவ்வொரு இந்தியனின் உணர்வுகளை தட்டி எழுப்பியது. பாரிசால் வீதிகளில் முழங்கப்பட்ட வந்தே மாதரம் தேசமெங்கும் எதிரொலித்தது. நாடெங்கும் வந்தே மாதரம் வந்தே மாதரம் கோஷங்கள் விண்ணைப் பிளந்தது. வந்தே மாதரம் என்ற இடிமுழக்கம் கேட்டு ஆங்கில அரசு நிலை குலைந்தது. இந்த கோஷங்கள் அவர்களுக்கு பல விதமான அச்சங்களை தந்தது. ஆங்கில அரசு செய்வதறியாமல் திகைத்தது. அவர்கள் காதுகளில் திரும்ப திரும்ப எதிரொலித்துக் கொண்டே இருந்தது…………… வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வந்தேமாதரம் அன்று மட்டும் அல்ல, இன்றும் ஒவ்வொருவரின் நாடி நரம்புக்களை தட்டி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.

”வந்தே மாதரம் என்போம்– எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்”

–பாரதி…

Read Full Post »

12189743_1023169424407266_7972276975650302072_n

காலத்தால் அழியா சுவடுகள்:- 4

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. அந்த இளைஞன் தான் குதிராம் போஸ்.

குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர்.

குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார் .

இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார்; உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவரும் சேர்ந்து அவர் வரும் வண்டியில் குண்டு வீசிவிட்டு தப்பி விட்டனர் ; அதில் இருந்தது அவரின் மனைவி மற்றும் மகள் அவரில்லை; இதை அறிந்து ஏகத்துக்கும் வருந்தினார் குதிராம் போஸ் .

அப்பாவிகளை எப்பொழுதும் கொல்வதில்லை எனும் கொள்கைகொண்டவர்கள் அவர்கள் .பிரபுல்லா அங்கேயே சுட்டுக்கொண்டு இறந்து விட வழக்கு விசாரணைக்கு பிறகு தூக்கு என ஆங்கிலத்தில் அறிவித்தார் நீதிபதி.

“ஏன் சிரிக்கிறாய் ?நான் சொன்னது புரிந்ததா ?”என கேட்க ,”நன்றாக புரிந்தது “என சொல்ல, இங்கு இருப்பவர்களுக்கு எதாவது சொல்ல வேண்டுமா என அவர் கேட்க ,”வேண்டுமானால் உங்களுக்கு எப்படி வெடிகுண்டு தயாரிப்பது என சொல்லித்தருகிறேன்” என சொல்லி ”என் வருத்தமெல்லாம் Majistrate Kingsford தண்டனைப் பெறாமல் தப்பிவிட்டான் எனபதே”. என அவன் சொன்ன பொழுது வயது பதினெட்டு தான் ! தூக்குதண்டனை விதிக்கபட்டு கையில் பகவத் கீதையுடன், வாய் “வந்தே மாதரம்” என முழங்க அவர் தூக்கிலிடபட்ட பொழுது பதினெட்டு வயது ஏழு மாதம் பதினொரு நாள் வயதான இளைஞன் அவர்…

அவர் தூக்கிலிடபட்ட பின் அவரின் அஸ்தியை பெண்கள் கொண்டு சென்று தங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாலில் கலந்து கொடுத்தார்கள். தேசபக்தி தங்கள் பிள்ளைகளின் ரத்தத்தில் பாயவேண்டும் என்பதற்காக அப்படி செய்தார்களாம் ! குதிராம் இறக்கிற பொழுது அவரின் சித்தி கருவுற்று இருந்தார். இப்படி ஒரு கவிதை எழுதி வைத்துவிட்டுப்போனார் குதிராம்.

“ஒருமுறை விடைகொடு அம்மா!
என் அருமை அம்மா!
நான் மீண்டும் பிறப்பேன்
சித்தியின் வயிற்றில்…
பிறந்தது நான்தான் என்பதையறிய
குழந்தையின் கழுத்தைப் பார்
அதில் சுருக்குக் கயிற்றின்
தடம் இருக்கும்”…..

அவனது மரணவேளையில் எப்படி இருந்தான் என்பதை அப்போதைய பத்திரிக்கைகள் வெளியிட்டன.

12 – 8 – 1908 அமிர்த பஜார் பத்திரிகை ‘குதிராமின் முடிவு’ என்ற தலைப்பிட்டு, பெரிய எழுத்துக்களில் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது. “மகிழ்ச்சி யோடும் புன்னகையோடும் அவன் மரணமடைந்தான்.அவன் தூக்கு மேடையை நோக்கி கம்பீரமாக நடந்து சென்றான். தலையில் கறுப்புத்துணியை மூடும் வரை அவன் மரணத்தை அலட்சியப்படுத்தும் புன்னகையோடு நின்றான்” என்று அப்பத்திரிகை, செய்தி வெளியிட்டது.

பெங்காலி என்ற பத்திரிகையின் நிருபர் எழுதுகிறார்: “நான்கு போலீசார் குதிராமை அழைத்துவந்தனர். அவன் விறைப்பாக நடந்து வந்தான். வேகமாய் நடக்கும்போதே எங்களைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான். அவனது தைரியமும், மிடுக்கும், மரணத்தைக் கண்டு அஞ்சாமையும் கண்டு எங்களுக்கு சிலிர்த்துவிட்டது.”

அந்த வெள்ளைக்கார நீதிபதிக்குத் தன்னால் விதிக்கப்பட்ட தண்டனையின் கடுமைபற்றி அந்தப் பையன் குதிராமுக்குப் புரியுமா என்ற சந்தேகம் வந்தது. ஏனெனில் தீர்ப்பைக்கேட்டு அவன் சந்தோசமாகச் சிரித்துக் கொண்டிருந்தான். அவனிடம் பயமோ, துயரமோ சிறிதும் தென்படவில்லை.

குதிராம், பிரபுல்லசாகிபின் தியாகம் வங்க இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற் படுத்தியது. அவர்களது தியாகத்தைப் போற்றும் பாடல்கள் புனைந்து மக்கள் பாடினர். விடுதலைப் போரில் வங்க மக்களை ஈர்த்ததில் இந்த இரு தியாகிகளும் புகழ்பெற்றனர். ‘வந்தேமாதரம்’ என்ற கோஷம் வங்கம் முழுதும் எதிரொலித்தது.

Read Full Post »

12066029_1022753674448841_5207711536653819889_n

காலத்தால் அழியா சுவடுகள் 3:

வீரமும், தியாகமும், தேசபக்தியும் தெரியாத நம் குழந்தைகளுக்கு இத்தகைய நிகழ்வுகளை சொல்லி தியாக சிந்தனையும் தேச பக்தியையும் வளர்ப்போம்.

கப்பல் ஓட்டிய சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்த ஆஷ் என்ற ஆங்கிலேய அதிகாரி,பதிவி உயர்வு பெற்ற திமிரில் தலைகால் தெரியாமல் நடந்தான். மக்களை அடக்குவதில் தனது அதிகாரத்தை தாறுமாறாகப் பயன்படுத்தினான். அடக்குமுறைகள் கொண்டு வந்து தேசபக்தர்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தான். அவன் பெயரை கேட்டதுமே மக்கள் நடுங்கும் நிலை.

ஒருமுறை இந்த கலெக்டர் ஆஷ் கொடைக்கானலுக்குப் புகை வண்டியில் சென்று கொண்டிருந்தான். அவ்வண்டி மணியாச்சி சந்திப்பில் நின்றது. அந்நேரம் ஆங்கிலேயர் போல் உடை அணிந்திருந்த ஒரு பாரதீய இளைஞர், ஆஷ் இருந்த பெட்டியினுள் புகந்தார். அவனுக்கு எதிரே போய் நின்று தன் கைத் துப்பாக்கியை எடுத்து அவன் நெஞ்சுக்கு நேரே நீட்டினார். அடுத்த கணம் துப்பாக்கிக் குண்டுகள் ஆஷின் நெஞ்சைத் துளைத்தன. மேலோரை வெஞ் சிறையில் வாட வைத்து நல்லோர் இதயங்களில் துயரத் தீயை வளர்த்த அக்கொடியோன் பிணமாக சாய்ந்தான்.

அந்த இளைஞன் அங்கிருந்து மின்னலென மறைந்து பயணிகள் கழிவறையில் புகுந்து துப்பாக்கியின் விசையைத் தட்டினான். அதிலிருந்த தெறித்த குண்டுகள், அவன் தலையைச் சிதற வைத்தன. இவ்வாறு அவ்விளைஞன் நாட்டுக்காக தன்னையே மாய்த்துக் கொண்டான். அவன் தான் வாஞ்சிநாதன்.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மிணி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன். ஆனால், அவரை வாஞ்சி என்றே அனைவரும் அழைத்துள்ளனர். செங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த வாஞ்சி, திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும்போது பொன்னம்மாளுடன் திருமணம் நடந்தது. தொடர்ந்து, புனலூர் வனத்துறையில் பணியாற்றினார் வாஞ்சி. ஆங்கிலேய அரசாங்கத்தை எதிர்த்து நாடெங்கும் நடத்தப்பட்ட போராட்டம் உச்சத்தை அடைந்திருந்த நேரம். அந்த நேரத்தில், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோரின் மேடைப் பேச்சுகளால் திருநெல்வேலி பகுதியில் சுதந்திர இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இவற்றால் ஈர்க்கப்பட்ட வாஞ்சியும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு தன்னை இந்த தேசத்திற்காக தியாகம் செய்தான்.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவ சமுதாயம் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து வகுப்புகளிலும் பாடத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய மண்ணில் சிந்திய ரத்தத்தின் வலிமையை மாணவ சமுதாயம் அறிய முடியும்.

Read Full Post »

12193705_1022358431155032_2458426635633520101_nகாலத்தால் அழியா சுவடுகள் 2 :-

‘சிவமும் பிள்ளையும், இல்லாவிட்டால் இந்தப் பாரதி வெறும் குருடன்’ என்று பாரதி புகழ்ந்த இருகண்கள் வ.உ.சி. என்ற கப்பலோட்டிய தமிழனும், சுப்பிரமணிய சிவாவும்.

‘எனது ஜாதி பாரத ஜாதி, எனது மதம் பாரதிய மதம், என் வழிபடு தெய்வம் பாரத மாதா’ என்று பாரத மாதாவுக்கு ஆசிரமம் அமைத்து, ஊர் ஊராகப் பிரசாரம் செய்து நாட்டுப்பற்றை ஊட்டி வளர்த்து 47-ல் நாம் விடுதலை பெற 41 வயதிலேயே வீரமரணம் எய்திய சிவா என்ற சுப்பிரமணிய சிவாவை மறக்க முடியுமா?

ஒருபுறம் வறுமை, மறுபுறம் தொழு நோய் என்ற இருபுறத் தாக்குதலுக்கு அஞ்சாமல், தேச பக்திக்கனலை மூட்டி அந்த தியாக வேள்வியில் கற்பூரமாகக் கரைந்த சுப்பிரமணிய சிவா, பிரிட்டிஷ் அரசுக்கு அடிமடியில் கட்டிய நெருப்பாகவே இருந்தார்.

4.10.1884 வத்தலகுண்டு நாகமய்யர் நாகலட்சுமி அம்மாளின் மகனாக சுப்பிரமணியன் அவதரித்தார். 12 வயது வரை மதுரையில் வாசம். பின் ஊட்டுப்புறை (ஏழை அந்தணப் பிள்ளைகளுக்கு உணவு தந்து படிக்க உதவும் கேரளத்துச் சத்திரம்)யில் திருவனந்தபுரத்தில் தங்கினார். கோவை புனித மைக்கேல் கல்லூரியில் ஒரு வருடம் படிப்பு. 1899-ல் மீனாட்சியை மணந்தார்.

லார்டு கர்சான் (பாரதி வாக்கில் கர்சான் குரங்கு) வங்காளப் பிரிவினைத் திட்டம் கொணர்ந்தபோது வங்கம் மட்டுமல்ல இந்திய தேசமே கிளர்ந்தெழுந்தது. வறுமை ஓர்புறம் வாட்ட தேசப்பற்று மறுபுறம் இழுக்க, தேச பக்திக்கனல் மூண்டபோது வயிற்றுத்தீயைப் பொருட்படுத்தினாரா சுப்ரமண்யம்? ’ இல்லை.

லால், பால், பால் (லாலா லஜபத்ராய், பாலகங்காதர திலகர், விபின் சந்திபால்) என்ற முத்தலைச் சூலம் ஆங்கிலேயரை எதிர்த்து நின்றது. திருவனந்தபுரத்தில் இளைஞர்களைத்திரட்டிய சுப்பிரமணியம், ‘தர்ம பரிபாலன சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். திருவாஞ்கூர் சமஸ்தானம் அவரை அங்கிருந்து விரட்டிற்று. 1908-ல் தூத்துக்குடி வந்தார். வ.உ.சி என்ற வேளாளன் (உபகாரி என்ற பொருள்) நாட்டு விடுதலை, தொழிலாளர் நலன் என்ற இரண்டையும் இருகண்களாகக் கொண்ட சுப்பிரமணியத்திற்கு அடைக்கலம் தந்தார்.

இந்தியர்களைக் கூலி என்பர் ஆங்கிலேயர். அதிலும் தூத்துக்குடி கோரல் மில்லில் வேலைபார்த்த நமது சகோதரர்கள் கூலிக்காரர்களோடு கூட இல்லை. வாழ்நாள் அடிமைகள் என்று ஆங்கில அரசும் அதிகாரிகளும் நினைத்தனர். காலை 6 முதல் மாலை 6 மணி வரை வேலை. விடுமுறை கிடையாது. உணவு இடைவேலை இல்லை, ஊதியமோ மிகமிகக்குறைவு. சிறு தவறுக்கும் பிரம்படி பலமாக உண்டு.

வந்தனர் சிவமும் பிள்ளையும். போலீஸ் அதிகாரி பத்மநாப ஐயங்காரும் தன்வேலையைத்துறந்து இவர்களுடன் கை கோர்த்தார். துவங்கியது வேலை நிறுத்தம். சிவா 1908, பிப்ரவரி 23-ல் பேசிய உரை ரகசிய போலீஸ் மூலம் ஆங்கில அரசுக்குப் போனது.ஆண்டுதோறும் இவ்வளவு தொகை இந்தியாவிலிருந்து போகிறது. நீங்கள் வேலை நிறுத்தம் செய்தால் ஐரோப்பிய முதலாளிகளின் நிதி நிலை மோசமாகும்.” என்றெல்லாம் எடுத்துச் சொன்னார் சிவா. ‘இயந்திரங்களுக்கு ஊறு செய்வது சரியில்லை. அறப்போராட்டம் வேலை நிறுத்தமே! என்று சுப்ரமண்யசிவா சொன்னது மூவாயிரம் வேலையாட்களின் மனதில் பதிந்தது’ என்றெல்லாம் ரகசியபோலீஸ் அறிக்கை அனுப்பியது.

1908 பிப்ரவரி 27-ல் வேலைநிறுத்தம் தொடங்கியது. முதன் முதலாக நடந்த வேலைநிறுத்தம் இது எனலாம். தூத்துக்குடி சப்கலெக்டர் ஆஷ்துரை எத்தனையோ வழிகளில் தடுத்தும் வந்தேமாதரம் கோஷத்துடன் போராட்டம் வலுவடைந்தது. மக்களின் ஆதரவு நிதியுடன் போராட்டம் வெற்றியடைந்தது. (9 நாளிலேயே; அதுவும் தொழிற்சங்க இயக்கம் வலுவடையாத காலத்திலேயே சிவா, வ.உ.சி பத்மநாப ஐயங்கார். மூவருடைய உழைப்பும் எத்தகையதாக இருந்திருக்கும்!)

9.3.1908 விபின் சந்திரபால் விடுதலை பெற்றதைக் கொண்டாட பாரதி, வ.உ.சி, சிவா, பத்மநாபன் ஆகியோர் கூட்டங்கள் நடத்தினர். வீரவுரைகள் ஆற்றிய சிவா, வ.உ.சி. மார்ச் 12-ல் கைதாயினர். ‘தலைவர்களை விடுதலை செய்’ என்று மக்கள் முதன் முதலாக அரசியல் வேலைநிறுத்தம் செய்தனர். 7.7.1908-ல் நீதிபதி பின்ஹே, வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் சுப்பிரமணிய சிவாவுக்கு 10 வருடக் கடுங்காவல் தண்டனையும் அளித்தார்.

1915 மே 15-ல் சுப்பிரமணிய சிவாவின் மனைவி மீனாட்சி காசநோயால் இறந்தார். முழு சன்யாசியானார் சிவா. 1921-ல் செட்டிநாட்டுக் காரைக்குடியில் பாரதமாதா ஆசிரமம் நிறுவினார். 1921 நவம்பர் 17-ல் கைதானார். இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் விடுதலை பெற்று, பாரதமாதா ஆசிரமத்தை உயிர்ப்பித்தார். திரு.வி.க தனது நவசக்தியில் அறிக்கை வெளியிட்டு தாய் நாட்டுச்சேவைக்கு பொது வாழ்வில் நாட்டமுள்ள தொண்டர்கள் தேவைஎன்று எழுதினார்.

‘வந்தேமாதரம், அல்லாஹு அக்பர்’ இரண்டும் இருபுறம் அச்சிடப்பட்டு பாப்பாரப்பட்டி பாரதாமாதா ஆசிரம பிரதிக்ஞைப் பத்திரம் வெளியானது. தருமபுரி பாப்பாரப்பட்டி நண்பர்கள் பேருதவி செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது. சின்னமுத்து முதலியார், தீர்த்தகிரி முதலியார், ஆகியோரை நல்ல நண்பர்களாகப் பெற்றிருந்த சிவா ஸ்வதந்திரானந்தர் என்ற பெயருடன் காவியுடை உடுத்தி பாரதமாதா கோவில் கட்டத் திட்டமிட்டார்.

மே 1 1923-ல் தோழர் சிங்காரவேலு செட்டியார், சப்பிரமணியசிவா, கிருஷ்ணசாமி சர்மா இவர்கள் முதல் முதலாகத் தொழிலாளர் தினம் என்ற மே தினத்தைக் கொண்டாடினர். சென்னையில் செங்கொடி முதல் முதலில் ஏற்றப்பட்டது.

‘அந்தணர் என்போர் அறவோர்’ இது வள்ளுவர் பிற உயிர்கள் வாழத் தான் முனைந்து பாடுபட்ட அந்தணர் சிவா. நூலாசிரியர் பத்திரிகை ஆசிரியர். தொழிற்சங்கம் இல்லாமலேயே பாட்டளிகளை ஒன்றாக்கியவர்.பொதுவுடைமைவாதி. தனித் தமிழில் கட்டுரை எழுதுவோருக்கு 5 ரூபாய் பரிசு என்று 1915-லேயே அறிவித்த தனித்தமிழ்ப் பற்றாளர். ‘ஒன்று எங்கள் ஜாதியே’ என்று திருமூலர் வழியில் நடந்த சித்தர். எந்த நேரமும், பாரத விடுதலை, பாரத மாதா வழிபாடு என்று வாழ்ந்த அப்பழுக்கற்ற துறவி.

-இன்னும் வீரத்துறவி சுப்பிரமணிய சிவா குறித்து எவ்வளவோ எழுதலாம்.

நாட்டு விடுதலைக்குப் பேச்சு, எழுத்து, இதழியல், நாடகம், நடிப்பு என்ற பல துறையிலும் தொண்டு செய்த சுப்பிரமணிய சிவம் அடுத்தடுத்த சிறைவாசம், தன் உடல்நலத்தைக் கவனிக்காமல் ஈடுபட்ட விடுதலைப் போராட்டம், வறுமை இவற்றால் நோயுற்றார்.

22.7.1925-ல் மதுரையிலிருந்து சுந்தரபாரதி என்ற சீடருடன் புறப்பட்டு பாப்பாரப்பட்டி நண்பர்களைக் காணவந்து அடுத்தநாளே (23.7.1925) அதிகாலை 5 மணிக்கு பாரதமாதா ஆசிரமத்தில் உயிரை நீத்தார்.

தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி சென்று அந்தத் தூய வீரத்துறவி சிவாவின் சமாதியைக் கண்டு தொழுது, ‘பாரத் மாதா கீ ஜய்’ என்று சொல்லிவிட்டு வரலாமே!

Read Full Post »

12108875_1021966531194222_4681583889223314664_nகாலத்தால் அழியா சுவடுகள்-1

வீரமும், தியாகமும் நிறைந்ததுதான் பாரதத்தின் வரலாறு அத்தகைய வரலாற்றை நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்போம். பாரத தாயின் தவபுதல்வர்களின் வீரவரலாறு மற்றும் அவர்களது தியாகத்தை எடுத்துசொல்லும் அளவிற்கு தொடர்பதிவாக பதிவிட இருக்கிறேன். பல்வேறு இணையதளங்களில் இருந்தும் மற்றும் புத்தகங்களில் இருந்தும் எடுத்து போடுகிறேன். ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். முதல் பதிவாக வ.உ.சிதம்பரனார் பற்றி பதிவிடுகிறேன்.

”வந்தேமாதரம்” என்று முழுங்குவதா குற்றம்? “வந்தேமாதரம், என்பதன் பொருள்தான் என்ன?” எமது தாய்நாட்டை வாழ்த்துகிறோம், தலையார வணங்குகிறோம்’ என்பது அன்றோ?” தாய்நாடு வாழ்க’ என்று முழுங்குவது குற்றமானால் அந்தக் குற்றத்தை எங்கள் இறுதிமூச்சு இருக்கும்வரை செய்து கொண்டேயிருப்போம். தாயகத்தை வாழ்த்துவது ஈனச் செயலன்று என கலெக்டர் விஞ்சுவுக்கு தக்க பதிலடி கொடுத்தார் வ.உ.சி. செக்கிழுக்க நேர்ந்தது பற்றி வீரச் சிதம்பரனார் விம்மி அழவில்லை. பின் எப்படித்தான் அந்த துன்பத்தைச் சகித்திருப்பார்? எண்ணெயாடும் செக்கை சுற்றுவதா அவர் எண்ணிட வில்லை. மாறாக சுதந்திர அன்னையின் திருக்கோயிலை வலம் வருவதாக கற்பனை செய்து கொண்டார். கற்பனா சக்தி படைத்த கவிஞரல்லவா அவர்?

என் மனமும் என்னுடலும் என் சுகமும் என் அறமும் என் மனையும் என் மகவும் என் பொருளும் என்னறிவும் குன்றிடினும் யான் குன்றேன் கூற்றுவனே வந்தாலும் வென்றிடுவேன் காலால் மிதித்து. துன்பங்கள் அடுத்தடுத்துத் தொடர்ந்து வந்த போதிலும் அவர் கலக்க மடையவில்லை என்பதையே அவரது இக்கவிதை காட்டுகிறது.
தமது இறுதிக்காலத்தில் அவர் காண விரும்பியது சுதந்திரம்; கேட்க விரும்பியதெல்லாம் பாரதியாரின் பாடல்கள்; வணங்க விரும்பியது தேசபக்தர்களின் கூட்டத்தை!

Read Full Post »

Barathmatha

1.எண்முறையையும், பூஜ்யத்தையும் கண்துபிடித்த நாடு.

2-பூஜ்யத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி ஆரியபட்டர் பிறந்துவளர்த்த பூமி.

3-செஸ் விளையாட்டு கண்டுபிடிக்கபட்ட நாடு.

4-கிரானைட்(சலவைக் ஆண்டுகளுக்கு)கல்லால் கட்டபட்ட உலகின் முதல்ஆலயம்(தஞ்சை பிரகிதீஸ்வர்ர்)உள்ள நாடு.

5- உலகில் மிக அதிகமான ஆட்களை வேலைக்கு அமர்த்தும் இரயிவே அமைப்பு உள்ள நாடு.

6- உலகில் அதிகமான தபால் நிலையங்கள் உள்ள நாடு.

7-உலகின் முதல் பல்கலைகழகம் உருவாக்கப்பட்ட நாடு (கி.மு.700இல்)
8-1896-ம் ஆண்டுவரை வைரம் கிடைத்த ஒரே நாடு.

9-மனித குலத்திற்கு மருத்துவக் கல்விமுறையை முதன் முதலாக ஆறிமுகப்படுத்திய நாடு.

10-உலகின் மிக உயரமான பெய்லி பாலத்தைக் கொண்டுள்ள நாடு.

11- உலகின் மிகப் பழமையான, தொடர்சியான கலாச்சரம் கொண்டுள்ள நாடு.

12-தனது கடந்த பத்தாயிரம் ஆண்டு வரலாற்றில் எந்த நாட்டையும் ஆக்ரமிக்காத நாடு.

13- உலகின் மிகப் பெரிய ஐனநாயக நாடு.

14-உலகில்இன்றுவரை தொடர்த்து மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பழமையான நகரைக் கொண்டுள்ள நாடு.

15-வேளாண்மைக்காக முதலில் கட்டப்பட்ட நீர் தேக்கத்தைக் கொண்டுள்ள நாடு.

16-அறுவை சிகிச்சை முதலில் நடத்தப்பட்ட நாடு(சுசுரூந்தா அறுவை சிகிச்சையின் தந்தை என அழைக்கப்படுகிறார� �. 2600 ஆண்டுகளுக்கு முன்னதாக அவரும்,அவருடைய விஞ்ஞானிகளும் கண்புரை சிகிச்சை,செயற்கை உறுப்பு,எலும்புமுறிவுகள்,சிறுநீரக கற்கள், மூளை அறுவை சிகிச்சைக் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்).

17-5000 ஆண்டுகளுக்கு முன்னதாக அநேக கலாச்சாரங்கள் காடுகளில் வாழும் நாடோடி மக்களின் கலாச்சாரமாக இருந்த வேளையில் மிகப் பழமையான நாகரிகத்தை உருவாக்கிய நாடு.

18-முக்கிய 4 மதங்கள் பிறந்த நாடு
(இந்து,புத்தம் ,சைனமதம்,சீக்கியம் .உலக மக்கள் தொகையில் 25 விழுக்காடு மக்கள் இவற்றைப் பின்பற்றுகின்றனர்

19-வன்முறையின்றி ஜனநாயகத்தைப் பெற்ற நாடு.

20-உலகில் விஞ்ஞானிகளையும்,பொறியியல் வல்லுனர்களையும் அதிகமாக கொண்டுள்ள இரண்டாவது நாடு.

21-குளியல் அறைகளை முதலில் கட்டிய நாடு(ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன்னர்).

22-நல்ல மிளகாயும், மாங்கனியும் முதலில் பயிர் செய்த நாடு.

23-காய்கறிகளைப் பயிர் செய்வதற்கான எண்ணம் உதித்த நாடு.

24-முதலில் மருத்துவனை கட்டிய நாடு (ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர்).

25-இளையோரை அதிகமாக கொண்டுள்ள நாடு(35 வயதுக்குட்பட்டவர� �கள் 1.71 விழுக்காட்டினர் .அதாவது 74 கோடியே 20 இலட்சம் பேர்.ஒவ்வோர் ஆண்டும் 22 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பிறக்கின்றனர்). ஆண்டுகளுக்கு

மேலே கூறப்பட்ட அத்தனை பெருமைகளுக்கும் சொந்தமான நாடு
“நமது இந்தியா” தான்.

Read Full Post »

பாரதமே உயிர்த்தெழு

               உங்கள் நாட்டிலுள்ள மூலப் பொருட்களை பயன் படுத்தி அயல் நாட்டினர் பணமாக குவிக்கிறார்கள். நீங்களோ பொதி சுமக்கின்ற கழுதைகளைப் போல் அவர்களின் மூட்டைகளை சுமக்கிறீர்கள். இந்தியாவின் மூலப் பொருட்களை இறக்குமதி செய்து , தாங்கள் அறிவை பயன் படுத்தி பெரிய பணக்காரர்கள் ஆகிறார்கள். நீங்களோ உங்கள் புத்தியை பூட்டி வைத்து விட்டு , உங்கள் சொத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்து விட்டு , சோறு சோறு என்று பரிதாபமாக அலைகிறீர்கள்!..

     

              சோம்பலும் கயமையும் வஞ்சகமும் இந்த நாட்டையே மூடிக் கொண்டிருகின்றன. அறிவுள்ள ஒருவன் இவற்றை எல்லாம் பார்த்துகொண்டு அமைதியாக இருக்க முடியுமா ? அவன் கண்களில் நீர் பெருகாதா ? சென்னை . மும்பை . பஞ்சாப் , வங்காளம் என்று எங்கே பார்த்தாலும் வாழ்க்கைத் துடிப்பு இருப்பதற்கு அடையாளத்தை என்னால் காண முடியவில்லை. படித்தவர்கள் என்று உங்களை நினைத்து கொண்டிஇருக்கிரர்கள்! என்ன மண்ணாங்கட்டியைப் படித்து விட்டிர்கள் ? மற்றவர்களின் கருத்துகளை திருப்பிச் சொல்லக் கற்றிருக்கீர்கள்! அயல்மொழியில் படித்து , மனப்பாடம் செய்து உங்கள் மூளையை நிரப்பி கொண்டு .சில பட்டங்களை வாங்கிக் கொண்டிஇருக்கிரர்கள்! சீ, சீ இதுவா படிப்பு ? உங்கள் படிப்பு பின் லட்சியம் என்ன ? ஒரு குமாஸ்தா வேலை அல்லது ஒரு கேடு கெட்ட வக்கீல் , அதிகம் போனால் குமாஸ்தா வேலையின் பரிணாமமான ஒரு துணை நீதிபதி – இதுதானா!..

                    ஒரு முறை கண்களை திறந்து பார் . பொன் விளையும் பூமியான இந்த பாரத திரு நாட்டில் ஒருபிடி உணவிற்காக மக்கள் அல்லாடும் பரிதாபமான நிலை பார் . உங்கள் படிப்பால் இந்த பரிதாப குரல்களின் தேவை நிறைவேறுமா ? ஒரு போதும் நிறைவேறாது. மேலை விஞ்ஞானத்தின் உதவியோடு பூமியை நன்றாக உழுது , உணவு பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் ஒருவனின் கீழ் கைகட்டி வேலை பார்த்தல்ல , உங்கள் சொந்த முயற்சியால் புதிய வழிகளை கண்டுபிடிப்பதன் முலம் இதைச் செய்ய்ங்கள். இப்படி தங்களுக்கு வேண்டிய உணவையும் தாங்களே ஈட்டிக் கொள்வதற்காகத்தான் அவர்கள் ரஜோ குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று நான் போதிக்கிறேன்..

இளமையிலிருந்து  நாம் பெறுவது எதிர்மரையனா கல்வி. நாம் உதவாக்கரைகள் என்றே நாம் கற்று வருகிறோம் . நமது நாட்டில் பெரிய மனிதர்கள் எல்லாம் பிறந்தார்கள் என்பது நமக்கு தெரியாது. உடன்பாட்டு முறையிலான கல்வி எதையும் பெற வில்லை . கைகளையும் கால்களையும் எப்படி பயன் படுத்துவது குட நமக்குத் தெரியாது . ஆங்கிலயேர்களின் ஏழு தலைமுறை முன்னோர்கள்   ஒன்று விடாமால் படித்தோம் ; ஆனால் நமது முன்னோர்கள் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது; பலவினத்தை கற்று கொண்டோம்  . வெல்லப்பட்ட இனமான நாம் பலவினர்கள் , சுததிரமாக ஏதும் செய்யா முடியாதவர்கள் என்று கற்று கொண்டோம். இந்த நிலையில் சிரத்தை எப்படி போகுமால் இருக்கும் ? சிரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் ; தனம்பிக்கை மறுமலர்ச்சி   பெற வேண்டும் . அப்போது நமது நாட்டின் பிரச்சனைகள் எல்லாம் தாமாக படிப்படியாக தீர்ந்து போகும்.

பிச்சைக்காரனின் குறை ஒரு நாளும் தீராது, நீங்கள் கேட்பதை எல்லாம் அரசாங்கம் தந்து விடுவதாக வைத்து கொள்ளவோம். பெற்ற அவற்றை பேணி காக்க மனிதர்கள் எங்க இருகிறார்கள் ? எனவே முதலில் மனிதர்களை உருவாக்குங்கள் . மனிதர்களே வேண்டும் . சிரத்தை இல்லாமால் மனிதன் எப்படி உருவாக  முடியும் .

உடன்பாட்டுக் கருத்தக்களை மட்டுமே மக்களுக்கு நாம் தர வேண்டும் . எதிர் மறையான கருத்துகள் மனிதனை பலவீனம் படுத்தும் . எங்கே பெற்றோர்கள் எப்போது பார்த்தாலும் பிள்ளைகளை படிக்குமாறு வற்புறுத்தி கொண்டுயருகிரார்கள் ,  இவர்களால் எந்த பயனும் இல்லை ,முட்டாள்கள் , மடையர்கள் என்று திட்டி கொண்டு இருகிறார்கள் அந்த பிள்ளைகள் பின்னல் அது போலவே ஆகி விடுகிறார்கள் …

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மனவலிமையை வளர்க்குமோ,விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன் சொந்தக்காலில் நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்வி தான் நமக்குத் தேவை. மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி. அறிவு வளர்ச்சிக்கு ஒரேயொரு வழிதான் உண்டு. அதுதான் மனதை ஒருமுகப்படுத்துதல். கல்வியின் இலட்சியமே மனதை ஒருமுப்படுத்துவதுதான்.“

கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

Read Full Post »

பாரதம்

காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுப்பட்டதும் பல நாடுகள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளன. நமக்கு மிகவும் அண்மையில் உள்ள நாடுகளான பர்மாவும் சிலோனும் உதாரணங்கள்.பர்மா தனது பெயரை மியான்மர் என்று மாற்றிக் கொண்டுவிட்டது. சிலோன் தனது பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்றிக் கொண்டது.

அந்நியர்களால் அடிமைப் படுத்தப்பட்டு சுரண்டப்படுவதற்கு நெடுங்காலம் முன்பிருந்தே தான் ஒரே நாடாக இருந்ததை உலகத்தின் முன் நிருபித்துக் காட்டிவது; உலக அரங்கில் ஒரு நாடாகக் தன்னை நிலைநாட்டிக் கொள்வது – இவைதான் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியாக அமைந்த அடிப்படைக் காரணம். இத்தகைய ஒரு நடவடிக்கையின் மூலம் அவை தங்களது தனித்தன்மையைப் பறைசாற்றிக்கொள்ள விரும்பின. வேரைக் கண்டுபிடித்து, நிலத்தைச் சுத்தம் செய்துகொடுத்து, வேர் நன்கு பிடித்து வளர வழிசெய்து கொடுப்பது – இதுதான் இந்த இரண்டு நாடுகளிலுமே நடை பெற்றுள்ள விஷயம். நியுசிலாந்து கூட இப்படிதான். அது தனக்குச் சூட்டப்பட்ட ஆங்கிலப் பெயரை வீசி எறிந்துவிட்டு தனது சொந்த மொழியிலிருந்து ஒரு பெயரை வைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறது.

நமது நாட்டுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கலாம் உருவத்திலும் மக்கள் தொகையிலும் எவ்வளவு சிறியவை இந்த நாடுகள் ! சரித்திரத்தில் பார்த்தால், இவை ரொம்பவும் புதிய நாடுகள். கலாசாரத்திலோ, இவை ரொம்பவும் புதிய நாடுகள்.கலாசாரத்திலோ, இவை இளமையானவை. உடன்படுபவைகளைவிட முரன்பவைகல்தான் எக்கச்சக்கமாக உள்ளன.ஆனால் இந்த நாடுகள் எல்லாம் தங்களது தேசிய ம உறுதியைக் காட்டின.பாவப்பட்ட “நாம்” மட்டும் இன்னமும் “இந்தியா”வை விடுகிற வழியைக் காணோம். என்னே பரிதாபம்! “நாற்பதுகளில் ‘தேசிய சுதந்திரம்’ என்ற ஒரு மாபெரும் சகாப்தத்தையே துவக்கி வைத்து நாம் தான்” என்று நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொல்லும்போது இந்த வேதனை மிகவும் அதிகரிக்கிறது.

சுதந்திரம் பெற்ற அனைத்து நாடுகளிலுமே நம் நாடு தான் மிகப் பழமையானது. ஆனால் நமது அரசியல் நிர்ணய சபையானது நமது அரசியல் சாசனத்தை வரையருப்பதர்காகக் கூடியபோது அதன் நிர்மான கர்த்தாக்கள் நமது தாய்நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டார்கள் (India That is Bharat )  மீண்டும் அதே மனநிலை. ‘இந்தியா என்பது ஒரு நாடாக உருவாகிக் கொண்டு வருகிறது” என்று கருத்தும் அதே மனநிலை நீடித்தது. இந்த நாட்டின் அமரத்துவம் வாய்ந்த தேசியத் தன்மை முழுமையாக மறக்கப்பட்டுவிட்டது.
அவர்கள் மனதில் ஆதிக்கம் செலுத்திவந்ததெல்லாம் 18 ஆம் நுற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவிய அரசியல் ரீதியான தேசியம்தான். அது ,நெப்போலியன் தனது எல்லைகளை விருத்தி செய்துகொண்டே போனதற்கு எதிராக ஏற்பட்ட வெறும் அரசியல் ரீதியான எதிர்மறை விளைவு மட்டுமே. எனவே பாரதம் என்ற புனிதமான பெயரை – ஆழ்ந்த பொருள் செறிந்த புனிதப் பெயரை – தொன்றுதொட்டு நமது எல்லா இலக்கியங்களிலும் எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக குறிப்பிடப்பட்டு வரும் பாரதம் என்ற அந்தப் பெயரை, அவர்களால் தரிசனம் செய்யமுடியவில்லை. சஈனப்படைஎடுப்பு சமயத்தில், ‘இமயமலைக்குத் தெற்கே அமைந்துள்ள நிலப்பரப்பு முழுவதும் பாரதம்தான்’ என்பதை உலகத்திற்கு நிலைநாட்டுவதற்காக, டாக்டர் ராதாகிருஷ்ணன் ,

“உத்தரம் யத் சமுத்திரஸ்ச ஹிமாத்ரேஸ் சைவ தக்ஷிணம்
வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர ஸந்ததி”

என்ற வரிகளைச் சுட்டிக் காட்டினார்.

இந்தியா

ஆனால் நமது அரசியல் சாசனம் நிர்ணயிக்கப்பட்ட வேளையில், நிர்வாகத்தில் அமர்ந்திருந்தவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ள ‘சந்தேகத்துக்கு இடமேயில்லாத இந்த வரையறையை அறியாதவர்களாய் இருந்துள்ளனர். இது ஒன்றே போதுமான தாயிற்றே! பெயர்ப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்குமே இது! என்ன பெயர் வைப்பது என்ற விவாதத்திற்கு இடமே ஏற்பட்டிருக்காதே ! ஆனாலும் ஏனோ அவர்கள் இருட்டிலே தட்டுத் தடுமாறி நடந்து, குருடன் தடவித்தடவித் படிப்பதுபோல “இண்டியா தட் ஈஸ் பாரத்” என்று படித்தார்கள்.

சரி. இதன் பொருள் என்ன? நமது நாட்டின் பெயர் இந்தியா, பாரதம் என்று அழைக்கப்படும். இதுவே, பாரத் தட் ஈஸ் இண்டியா என்று இருந்தால் ? நமது நாட்டின் பெயர் பாரதம்; இதை இந்தியா என்றும் அழைப்பார்கள் என்று பொருள்படும் அல்லவா! இந்த இரண்டில், இரண்டாவதாகச் சொல்லப்பட்டதுதான் கொஞ்மாவது அறிவுபூர்வமாக இருந்திருக்கும். ஆனால் அது நடைபெறவில்லை. காரணம் சிந்தனைக் குழப்பம்; தேசியம் பற்றிய இரவல் வாங்கப்பட்ட கருத்துக்கள். நல்லவேளை, இண்டியா தட் வாஸ் பாரத் (இந்தியா அதாவது பரதம் என்று இருந்தது) என்று இவர்கள் போடாமல் பார்த்துக் கொண்டதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இண்ட், இண்டியா, இண்டிகா போன்ற எல்லாம் வெளியாட்கள் சிந்து நதிக்கு அப்பால் இருந்து கொண்டு  நமக்கு இட்டபெயர்கள். ஆனால் நமக்கு நாமே வைத்துக்கொண்ட, இன்றும் வைத்துக்கொண்டிருக்கிற – பெயர் பாரதம். ஆகா இந்த இரண்டில் எது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்? கண்டிப்பாக, பிந்தையதுதான். ஆனால் அந்தக் கண்ணோட்டம் இல்லை. அதன் விளைவுதான் இன்றைய குழப்பநிலை.

இஸ்ரேலியர்களின் முக்கியமான செயல் ஒன்றை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது நமக்கு அறிவூட்டுவதாய் அமையும்.அவர்கள் சுதந்திரம் பெற்ற நாடாக ஆனா அதேவேகத்தில், புவியியல், வரலாற்று நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார்கள். பத்திரிகை நிருபர்கள் இதன் காரணத்தைக் கேட்டபோது, ” எங்கள் நாடு புராதனமான நாடு. இதை நாங்களும் எங்கள் குழந்தைகளும், உலகமும் ஏற்றுக் கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்று பதில் கூறினார்கள்.

Read Full Post »