சுவாமி சுகபோதானந்தா
தெளிவு பெற்ற ஓர் ஆன்மீக குரு. “LIFE” (Living in Freedom & Enquiry Programme) மற்றும் YPL(Yogic Linguistic Programming) முறைகளை உருவாக்கியவர். பழுத்த வேதாந்த அனுபவம் கொண்ட மேலாண்மை குரு.
சுவாமிஜி இங்கிலாந்தில் அத்தாட்சி பெற்ற NPL முறை பயிற்சியாளராக இருந்தவர். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய போதனா முறைகளில் ஆழ்ந்த ஞானம் உண்டு. மகத்தான பாரம்பரிய ஆசான்களிடம் பயின்ற இவருக்கு அதிநவீன மேலாண்மை உத்திகளுடன் தொடர்ந்து வரும் தொடர்பு உண்டு. முன்னணி தொழிலகங்கள், தங்கள் அதிகாரிகளுக்காக “IN HOUSE WORKSHOP” நடத்த இவரை அழைக்கிறார்கள். சுவாமிஜியின் “LIFE” என்றபெயரில் புகழ்பெற்ற SELF DEVELOPMENT PROGRAMME துணை கொண்டு கூட:டாண்மைத் துறையில் பலரும், ஏராளமான பொதுமக்களும் பலன் அடைந்திருக்கிறார்கள். கூட்டாண்மைத்துறைக்கென்றே விசேசமாக HARMONY & CREATIVITY AT WORK என்ற முறையை சுவாமிஜி அமைத்திருக்கிறார். தியான முறையில் அறிவியல் கண்ணோட்டம் பற்றி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இளைஞர் முகாம்களை நடத்தி வருகிறார்.
இவற்றைத்தவிர, சுவாமிஜியின் ஊக்குவிப்புடன் வழிகாட்டுதலுடனும் பிரசன்னா டிரஸ்ட், ஆதரவற்ற குழந்தைகளுக்காக பிரசன்ன ஜோதி என்ற அனாதை இல்லமும் நிர்குண மந்திர் என்ற தியானப்பயிற்சி நிலையமும் நடத்தி வருகிறது.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற இவரது புத்தகம் முன்பு எப்போதும் கண்டிராத சாதனை படைத்திருக்கிறது. அதன் ஒலிவடிவத்தை இங்கே தருகின்றோம்.
குரல் கொடுத்தவர்:- “நிழல்கள்” ரவி
I have learned looking at life differently in Tamil. I felt it was such a great. I have learnt many times but I felt every time as new. It was a first step to change my life. It worked as a sweeper to clean my mind. I have no words to explain about it. Thanks a lot to sugabodhanandha.